இலங்கை தமிழக குரல்

இலங்கை தமிழக குரல் media, news, sports new, forin news , entertainment, new information

மின்சாரம் இல்லாமல் இருந்த ஆலயத்திற்கு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் சூரிய மின் விளக்கு.!மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்...
06/10/2025

மின்சாரம் இல்லாமல் இருந்த ஆலயத்திற்கு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் சூரிய மின் விளக்கு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமையப்பெற்ற 37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை கிராமத்தில் நாற்பது வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்ட நாகதம்பிரான் ஆலயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (03) போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக உப தவிசாளர் த.கயசீலன் அவர்களினால் ஆல தலைவரிடம் சூரிய மின் விளக்கினை வழங்கிவைத்தனர்.

சூரிய மின்விளக்கினை போரதீவுப்பற்று பிரதேசசபை மின்னியலாளர்களினால் உடனடியாக ஆலயத்தில் பொருத்தப்பட்டன.

37ஆம் கிராமம் புது முன்மாரிச்சோலை நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில் 30 குடும்பங்கள் இருந்ததாகவும் மின்சாரம் இல்லாமல் காட்டு யானையின் அட்டகாசத்தினால் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாகவும் எமது ஆலயத்திற்கும் அன்டிய பகுதிக்கு மின்சாரம் இல்லாமல் நாற்பது வருடங்களுக்கு மேலாகின்றன இதனை பெற்றுத்தரக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களிடம் பெற்று தர கோரி இருந்தோம் .

அவர் எங்களுடைய ஆலயத்திற்கு மிகவிரைவில் பெற்றுத்தருவதாக கோரிஇருந்தார்.
என ஆலய தலைவர் தெரிவித்தனர்.

நேற்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக உபதவிசாளர் த.கயசீலன் அவர்களினால் சூரிய மின் விளக்கு ஆலயத்திற்கு வழங்கப்படு உடனடியாக பிரதேசசபையின் மின்னியலாளர்களின் உதவியோடு மின் விளக்கு ஆலயத்திற்கு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

(ரஞ்சன்)

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு.!மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள் மிகு ஸ்ரீ பத்திரக...
06/10/2025

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு.!

மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மனின் சக்தி விழாவின் முக்கிய நிகழ்வான தீக்குழிக்கு நடப்படும் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு நேற்று (05) பக்திபூர்வமாக இடம் பெற்றது .

பெரியபோரதீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அம்பாள் பழுகாமம் ஊடாக திக்கோடை கிரமத்தை அடைந்து அங்கே வீரகம்பம் வெட்டும் வைபவம் நேற்று மிகவும் பக்திபூர்வமாக இடம் பெற்றன.

மாலை வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வும் நடைபெற்றதுடன்
(07.10.2025 )ஆம் திகதி பகல் சக்தி மகாயாகமும் நோர்ப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்று மாலை கங்கை நீராடல் நிகழ்வு நடைபெறும்.

அன்னைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தீ மூட்டும் நிகழ்வு நடைபெறும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ (08.10.2025)ஆம் திகதி காலை 8.00மணிக்கு தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று நண்பகல் 12.00மணிக்கு வாழி பாடுதல் கொடியிறக்கம் என்பன நிகழ்வுகள் இடம்பெற்று இவ்வாண்டு சக்திப் பெரு விழா இனிதே நிறைவுபெறும்.

🌟எங்கள் வாழ்வை செதுக்கிய சிற்பிகளே,எதிர்காலத்தின் வழிகாட்டிகளே!எமது தேசத்தின் முதுகெலும்பாகவும், அறிவுச் சமூகத்தின் ஆணிவ...
06/10/2025

🌟எங்கள் வாழ்வை செதுக்கிய சிற்பிகளே,
எதிர்காலத்தின் வழிகாட்டிகளே!

எமது தேசத்தின் முதுகெலும்பாகவும், அறிவுச் சமூகத்தின் ஆணிவேராகவும் விளங்கி, எங்களுக்கு அறிவையும், நம்பிக்கையையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என் உள்ளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் கல்வித் தரத்தை சார்ந்தே உள்ளது. எமது மாணவர்களுக்கு வெறும் புத்தகக் கல்வியை மட்டுமன்று, நன்னடத்தை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு மற்றும் தேசப்பற்று ஆகிய உன்னத பண்புகளையும் போதித்து, அவர்களை உலகறியும் தலைவர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு என்றும் மகத்தானது.

தங்கள் வாழ்க்கை முழுவதும் அறிவொளியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்ட ஆசிரியர்களின் பணி ஈடு இணையற்றது. இவர்களின் உன்னத தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் இந்நாளில் நாம் மனதாரப் போற்றுகிறோம்.

எமது ஆசிரியர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் தங்கள் புனிதப் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

-- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித் தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம்  பொது நூலகத்தில் சிறுவர் தின நிகழ்வு !
01/10/2025

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம் பொது நூலகத்தில் சிறுவர் தின நிகழ்வு !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் சிசு மீட்பு; 17 வயது திருமணமாகாத பெற்றோர் கைது !
01/10/2025

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் சிசு மீட்பு; 17 வயது திருமணமாகாத பெற்றோர் கைது !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மலேசிய Geomatika பல்கலைக் கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதியாக (Authorized International Representative) ஏ....
01/10/2025

மலேசிய Geomatika பல்கலைக் கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதியாக (Authorized International Representative) ஏ.எம்.ஜெமீல் நியமனம்.!

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – சமூக செயற்பாட்டாளர் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!சிறுவர்கள...
30/09/2025

சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – சமூக செயற்பாட்டாளர் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் சமூக செயற்பாட்டாளர்,அரசியல் செயற்பாட்டாளர் மர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போதிலும் இவற்றையும் தாண்டி போதைப்பொருள் பாவனையும் அதன் ஊடுருவலும் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளமை யாவரும் அறிந்ததே. எனவே எதிர்கால தலைவர்களான இன்றைய சிறார்களை செப்பனிடவும் அவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்பதற்கும் நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், கல்விக்கூடங்களுக்கும் இருக்கின்றது. அதேபோல் பெற்றோர்இ இருக்கும் சூழல் குடும்ப நிலைமை நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.

எனவே நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களைச் சுற்றியுள்ள பொறுப்புதாரர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களாயின் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை எதிர்பாரக்கலாம்!

அது போன்றே எமது வாழ்வியலை செம்மைப்படுத்தி தமது வாழ்வின் பல அனுபவங்களை எமக்கான முன்னுதாரணங்களாக அன்பளிப்புச் செய்தவர்கள் முதியவர்கள். அவர்களை மதித்து, கனம்பண்ணி அவர்களின் இறுதிக்காலங்களை சந்தோசமாக மனமகிழ்வுடன் களிக்க எம்மாலான அனைத்தும் பணிகளையும் வீட்டிலும் சமூகத்திலும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைவீரென கூறி ‘மகத்துவம் மிக்கதோர்சிறுவர்கள் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக  வாய்மூல கேள்விகளை தொடுத்தார்.கே எ ஹமீட் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...
28/09/2025

இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக வாய்மூல கேள்விகளை தொடுத்தார்.

கே எ ஹமீட்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிந்டடுமா சுனில் செனவி கேள்வி?

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

01. பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சட்டவிரோத ‘சபாத் இல்லம்’ என்ற நிறுவனம் இயங்கி வருவது குறித்து அமைச்சர் அறிவாரா?
அமைச்சரின் பதில்:- ஆம்

02. அந் நிறுவனம் எவ்வளவு காலமாக செயல்பட்டு வருகிறது?

அமைச்சரின் பதில்:- பொத்துவில் பிரதேச செயலாளரினால் பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

03. அது அமைந்துள்ள காணி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது?

அமைச்சரின் பதில்:-
சபாத் இல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் காணி, முஸ்லிம் ஒருவரிடமிருந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் விலைக்கு பெற்றுக்கொண்டிருக்கிறார்.
தனியார் காணியில் அது அமையப்பெற்றுள்ளது என பொத்துவில் பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

04.அந்நிறுவனம் பலத்த பாதுகாப்புடன் இயங்குவதால் உள்ளூர் மக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளதை அறிவாரா?

அமைச்சரின் பதில்:-
அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் மேலதிக விபரங்களை பெறலாம்

மற்றைய பிரச்சினை தொடர்பாக இங்கு கேட்கப்பட்டுள்ளது அது பற்றிய அறிக்கை எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

05. இந்நிறுவனத்தை அகற்றுவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

அமைச்சரின் பதில்:-
ஆம்.
அங்கு சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் சட்டவிரோதமான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறுமானால் அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். ரெஸ்ட்டுடன்(Restaurant) தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி பெற்றுள்ளதனால் சட்டவிரோதமான மத செயற்பாடுகளை முற்றாக நிறுத்துமாறு தெளிவாக கூறியுள்ளோம். மீறினால் நீதிமன்றம் செல்வோம்.

06. இந்நிறுவனம் குறித்து பொத்துவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதா?

அமைச்சரின் பதில்:-
ஆம், பொத்துவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் நேற்று கலந்து கொண்ட நமது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் உரையாற்றும்போது, இஸ்ரேல் அரசினால் காசா மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டின் அதிகாரத்தையும் செயல் துறையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறினார்.

மேலும் , ஆட்சியாளர்களின் கடமை , மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும். பலஸ்தீன தனி நாடு கோரிக்கையை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்கிறது என்று கூறியதற்காக இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு உதுமாலெப்பை எம்பி நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் பலஸ்தீன தனி நாட்டு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் போது நமது நாட்டின் முக்கிய அமைச்சரான கௌரவ விமல் ரத்னநாயக்க அவர்கள் இலங்கை - பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவு சங்கம் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

மேலும் உரையாற்றுகையில், பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலின் சட்ட விரோதமான கட்டடத்தை மூட வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் பொத்துவில் பிரதேச சபையிலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன் பிரதியினை இவ் உயரிய சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

கலாசார அமைச்சராகிய நீங்கள் நீதியாக, நியாயமாக செயற்படுவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயலுக்கு அண்மையில் இஸ்ரேலின் இவ்விடம் அமைந்துள்ளது என்பதனை நன்கு அறிவீர்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரி...
26/09/2025

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பவுள்ளார்.

கே எ ஹமீட்

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சட்டவிரோத ‘சபாத் இல்லம்’ என்ற நிறுவனம் இயங்கி வருவது குறித்து அமைச்சர் அறிவாரா?

மேலும், அந்த நிறுவனம் எவ்வளவு காலமாக செயல்பட்டு வருகிறது, அது அமைந்துள்ள நிலம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதையும் விளக்குவாரா?

அந்நிறுவனம் பலத்த பாதுகாப்புடன் இயங்குவதால் உள்ளூர் மக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளதை அறிவாரா?

இந்நிறுவனத்தை அகற்றுவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

இதுகுறித்து பொத்துவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதா? இல்லையென்றால் ஏன்?

என பல்வேறு கேள்விகளை அமைச்சரிடம் இன்று முன்வைக்கவுள்ளார். இது தொடர்பாக அமைச்சரினால் வழங்கப்படவுள்ள விளக்கம் பெறும் எதிர்பார்ப்பினைப் பெற்றுள்ளது

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கு...
23/09/2025

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும்.

கே எ ஹமீட்

கிழக்கு மாகாண ஆளுநரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு (22.09.2025) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமல்லெப்பை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய மின்சாரம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்திற்கென தனியான வீடமைப்பு அதிகார சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் .என கோரிக்கையை அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அட்மிரல் மொஹான் விஜய விக்ரம அவர்களிடம் முன்வைத்து இலங்கையில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளிலும் தனியான வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வீடமைப்பு அதிகார சபையை 2014ம் ஆண்டு உருவாக்கினோம்.

2014ம் ஆண்டு திரைசேரியினால் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் 132.69 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கனிசமான மக்களின் வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 2025ம் ஆண்டு வீடமைப்புத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 132.69 மில்லியன் நிதியினை ஆளும் கட்சியினரின் சிபாரிசுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இந்த செயற்பாடு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும், கிழக்கு மாகாண சபையின் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் கட்சி பேதத்திற்கு அப்பால் செயற்படுத்தப்பட வேண்டும் அல்லது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முன்வைக்கும் திட்டங்களை வைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேட்டுக் கொண்டதுடன், விரைவில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை குறித்து பாராளுமன்றத்தில் பேசவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீண்டகாலமாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறைக்கும், நிறைவு செய்யப்படாத பாடசாலைக் கட்டிடங்களையும் நிறைவு செய்யும் செயற்பாடுகளுக்கு 2026ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அடுத்த வருடத்திலிருந்து (2026) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளில் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறை மற்றும் நிறைவு செய்யப்படாத கட்டிடங்கள் தொடர்பாகவும் முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பதிலளித்தார்

கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்கே எ ஹமீட்...
22/09/2025

கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்

கே எ ஹமீட்

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு புதிய பஸ்களை வழங்குவதுடன், தற்காலிகமாக கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விஷேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேசங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு புதிய பஸ்களை வழங்குமாறும், சென்ற அரசாங்க காலத்தில் தற்காலிகமான முறையில் கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும். இது தொடர்பாக நான் பாராளுமன்றத்திலும் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும், இலங்கை போக்குவரத்து சபைத் தலைவரிடமும் கோரிக்கை விடுத்தேன். சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கான இடங்கள், அதற்கான வசதிகள் எல்லாம் இருப்பதனால் மீண்டும் சம்மாந்துறையில் டிப்போவை இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விஷேட கூட்டம் 20.09.2025 ஆம் திகதி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பது தொடர்பான விளக்கங்களை வழங்குமாறும் கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளர் திரு. விஜித்தவை அமைச்சர் பிமல் ரத்னாயக்க பணித்தார். இது விடயமாக விளக்கமளித்த கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் திரு. விஜித்த கல்முனைக்கும் சம்மாந்துறைக்கும் இடையில் 7 கி.மீ தூரம் உள்ளதாகவும் சம்மாந்துறை முஸ்லிம் பள்ளிவாசல் சம்மாந்துறை டிப்போ தொடர்பாக கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை சம்மாந்துறையில் 82 ஆயிரம் மக்கள் வாழும் பிரதேசமாகும், சம்மாந்துறை பிரதேசம் நகரமாக மாறி வரும் இக்கால கட்டத்தில் தற்காலிகமான முறையில் இணைக்கப்பட்ட சம்மாந்துறை டிப்போவை சம்மாந்துறக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் சம்மாந்துறை டிப்போவுக்கான இடம், காணி, கட்டிடங்கள் உள்ளதாகவும், இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலாளரை விளக்கங்களை தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து விளக்கமளித்த சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, தற்காலிகமான முறையில் கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவுக்கான சகல வசதிகளும் உள்ளதாகவும், சம்மாந்துறை மக்கள் போக்குவரத்துக்கு சம்மாந்துறை டிப்போ மிக முக்கியமானது என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ சம்மாந்துறை மக்களின் போக்குவரத்துக்கு அவசியமான டிப்போவை சம்மாந்துறைக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்சினை உள்ளது? எனவே, மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, சம்மாந்துறை டிப்போவை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா சம்மாந்துறை டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதனால் சம்மாந்துறை டிப்போ அதிக வருமானம் ஈட்டும் டிப்போவாக மாறும் எனவும் மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கல்முனையில் தற்காலிகமான முறையில் இணைக்கப்பட்டுள்ள சம்மாந்துறை டிப்போவினை மீண்டும் சம்மாந்துறைக்கு கொண்டு வருவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுப்பதனாலும், சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை டிப்போவுக்கான வசதிகள் உள்ளதென தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம் பள்ளிவாயல் கடிதம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையை தொடர்பு கொண்டு கடிதத்தினை பெற்று சம்மாந்துறை டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் வீரமுனை ஊரின் பெயர்ப் பலகையை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நட்டப்பட்டதனை சிலர் உடைத்துள்ளதாகவும் எனவே, வீரமுனை பெயர்ப் பலகையை நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ இனவாதம் இல்லாத ஆட்சி இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் ஊரின் பெயர் பட்டியல் பலகை நட முடியாத நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், இது தொடர்பாக வீரமுனை பெயர்ப் பலகையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை சம்மாந்துறை - வீரமுனை பிரதேச மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் இது தொடர்பாக அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் (PC), தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எம்.ஏ. சுமந்திரன் (PC) ஆகியோர்கள் இரு சமூகங்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாகவும் சம்மாந்துறை - வீரமுனை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதாகவும் எனவே இப்பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபே விக்ரம தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமித்து இக்குழுவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர், தவிசாளர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், தவிசாளர் கலந்துரையாடி இப்பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார். வீரமுனை - சம்மாந்துறை விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபே விக்ரம தலைமையில் விஷேட குழு நியமிக்கப்பட்டு இது தொடர்பான அறிக்கையினை பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது

திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழாகே எ ஹமீட் மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்ப...
22/09/2025

திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா

கே எ ஹமீட்

மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா மூதூர் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரி, மூதூர் சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர், மூதூர் பிரதேச முஸ்லிம் விவாக பதிவாளர் எம்.வை.லாபீர் அவர்களின் தலைமையில் (21.09.2025) மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப், மூதூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.செல்வரத்திணம், கின்னியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிறாஜ், கின்னியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கணி மற்றும் உயர் அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது 9A சித்திகளை பெற்ற 200 மாணவர்கள், அல் குர்ஆனை மனனம் செய்த 100 ஹாபிழ் மாணவர்கள், 2025ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் 30 உயர் அதிகாரிகள், சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Address

Addalachenai

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை தமிழக குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share