11/04/2026
*நீங்கள் செய்யும் ஒரு தர்மம் ஆச்சரியமான விளைவை ஏற்படுத்தலாம்*
ஆபிரிக்கக் கண்டத்தில் பல மில்லியன் மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக இருந்து உழைத்தவர் அப்துர் ரஹ்மான் அஸ்ஸமீத் அவர்கள். அவர் தன் வாழ்வில் நடைபெற்ற இந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார்.
ஒரு சமயம் நான் ஆபிரிக்காவில் ஒரு வைத்தியசாலைக்கு சென்று இருந்த போது ஓர் அப்பாவியான பெண் அங்கிருந்த ஒரு மருத்துவரிடம் ஏதோ ஒன்றைக் கேட்டு அடம் பிடிப்பதை அவதானித்தேன்.
அந்தப் பெண்ணுடைய பிடிவாதம், கவலை என்பவற்றை அறிந்து கொண்ட நான் வைத்தியரிடம்; *அவளது விடயம் என்ன?* என்று கேட்டேன்.
அதற்கு அந்த வைத்தியர்: *இந்தப் பெண்ணுடைய குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது, அது உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இறந்து விடும் நிலையில் உள்ளது*
என்றாலும் அந்த பெண் *மாதாந்தம் தங்களிடமிருந்து உதவி பெறும் பட்டியலில்* *அவளது இந்தப் பிள்ளையையும் சேர்த்து விட வேண்டும்* என்று பிடிவாதமாக வேண்டுகிறாள் என்றார்.
ஆனால் *அந்தக் குழந்தையை எமது பட்டியலில் சேர்ப்பதில் பிரயோசனம் கிடையாது. எமக்கு அந்த பணத்தை மற்றவர்களுக்காக ஒதுக்க முடியும்* என்று மருத்துவர் என்னிடம் குறிப்பிட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் அந்த தாய் என்னை உற்று நோக்கிக் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது நான் என்னுடைய மொழி பெயர்ப்பாளரிடம்; *அவளுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேளுங்கள்* என வினவினேன்.
பின் அவள் வேண்டுவது மிகவும் குறைவான தொகைப் பணம் தான் என்பதை அறிந்து கொண்டேன். பிறகு அதனை *என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து நான் அவளுக்கு கொடுக்கின்றேன்* என்று வாக்களித்தேன்.
பிறகு நான் அவளுக்கு *இதோ ஒரு வருடத்துக்கு அவசியமான தொகை பணம் இருக்கிறது என்று அவளிடம் கொடுத்தேன். பின் அந்தப் பணம் நிறைவடைந்து விட்டால் எனது உதவியாளர் உனக்குத் தேவையான பணத்தைத் கொடுப்பார் எனக் கூறிவிட்டு ஒரு காசோலையில் அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத் தொகையை ஒப்பமிட்டு கொடுத்தேன்.*
அப்போது அந்த பெண் என்னுடைய கையை முத்தமிடுவதற்கு ஆசைப்பட்டாள், நான் தவிர்ந்து கொண்டேன்.
சம்பவம் நடந்து நாட்கள், வாரங்கள், மாதங்கள், பல வருடங்கள் கழிந்து சென்றன. இந்த சம்பவத்தை நான் முழுமையாக மறந்து விட்டேன்.
*அந்தக் குழந்தை மருத்துவர் கூறியது போல் மரணித்து விடும் என்றே அப்போது நினைத்தேன். என்றாலும் நான் உண்மையிலேயே அந்த தாயுடைய உள்ளத்தை சந்தோஷப்படுத்தவே அந்தப் பணத்தை கொடுத்தேன்* என்று கருதிக் கொண்டேன்.
அந்தப் பெண் அச்சமயத்தில் அண்மையில் இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண்ணாக இருந்தாள்.
இந்த சம்பவத்தை நான் முற்றாக மறந்திருந்தேன்.
சுமார் 12 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்காவில் நான் எனது காரியாலயத்தில் ஒரு நாள் இருக்கின்ற போது ஓர் ஊழியர் என்னிடம் வந்து;
*அங்கே ஓர் ஆப்பிரிக்கத் தாய் உங்களை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள், அவள் பல தடவைகள் இங்கு உங்களைத் தேடி வந்திருக்கிறாள்* என்று குறிப்பிட்டார்.
பின் நான் அந்தத் தாயை அழைத்து வருமாறு வேண்டினேன்.
அப்போது அங்கு அந்தத் தாயுடன் அழகான ஒரு சிறுவனும் வந்திருந்தான்.
நான் உண்மையிலே அவர்கள் யார் என்று அப்போது அறியவில்லை.
என்னை நோக்கி வந்த அந்தத் தாய் என்னிடம்; *இவன் என்னுடைய மகன் அப்துர் ரஹ்மான், அவன் இப்போது அல்குர்ஆனை மனனமிட்டு விட்டான். நபியுடைய ஹதீஸ்களில் அதிகமானவற்றை மனனம் செய்திருக்கின்றான். அவன் இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்ற ஒரு அழைப்பாளனாக உங்களோடு இருக்க விரும்புகின்றான்* என்று குறிப்பிட்டாள்.
நான் ஆச்சரியத்தோடு ஏன் இந்த வேண்டுதலை என்னிடத்தில் ஆசைப்படுகின்றீர்கள் என்று கேட்டேன்.
அப்போது அந்தச் சிறுவன் குறுக்கிட்டு என்னிடம் அழகான அரபு மொழியில் *இஸ்லாம் இல்லாது இருந்தால் நான் உண்மையிலே வாழ்ந்திருக்க மாட்டேன், உங்களுக்கு முன்னால் நான் இப்போது இருக்க மாட்டேன், என்னுடைய தாய் நீங்கள் செய்த உதவி பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறாள், என்னுடைய சிறுவயதில் எனது அனைத்து செலவுகளையும் நீங்கள் தான் பொறுப்பெடுத்தீர்கள்.*
*இப்போது நான் உங்களுக்கு கீழே இருந்து தஃவாப் பணி செய்ய விரும்புகின்றேன், நான் அரபு மொழியை கற்று இருக்கிறேன், ஆப்பிரிக்க மொழியையும் அறிவேன், நான் உங்களோடு ஓர் அழைப்பாளனாக இருக்க விரும்புகின்றேன், எனக்கு உணவு மாத்திரம் போதுமானது, நான் அல்குர்ஆன் ஓதுவதை நீங்கள் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் என்று சொல்லிவிட்டு அவன் சூரா பகராவின் சில வசனங்களை ஓத ஆரம்பித்தான்.*
அப்போதான் 12 வருடங்களுக்கு முன்னர் அன்று நடந்த சம்பவம் எனது ஞாபகத்துக்கு வந்தது.
உயிர் பிழைக்காது என்று வைத்தியர் கூறிய அந்தக் குழந்தை தான் இந்தச் சிறுவன் என்பதை அறிந்து கொண்டேன்.
பின்னர் அப்துர் ரஹ்மான் ஸமீத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
*அந்த தாய் அவளுடைய பிள்ளையை என்னிடத்தில் ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். அவள் என்னுடைய பெயரையே அவளது குழந்தைக்கும் சூட்டியிருக்கிறாள்*
*உண்மையிலே இந்த சம்பவத்தை நான் அறிந்த போது எனக்கு ஏற்பட்ட சந்தோசத்துக்கு அளவு கிடையாது, நான் அப்படியே அழுது கொண்டே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக சுஜூதில் விழுந்து விட்டேன்* என்றார்
மேலும் அவர்
*ஒரு மிகச் சிறிய தொகைப் பணம் ஓர் உயிரை வாழ வைக்கின்றது, நாம் விரும்புகின்ற ஒரு அழைப்பாளனை உருவாக்கி இருக்கின்றது* என்று அவர் கூறி ஆச்சரியப்பட்டார்.
அந்தச் சிறுவன் இப்பொழுது ஆபிரிக்காவிலே மிகவும் பிரபலமான ஓர் இஸ்லாமிய அழைப்பாளராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவராக மாறி இருக்கின்றார்.
*அறிந்து கொள்வோம்!*
மிகச் சிறிய ஒரு தர்மம் மனிதர்களை எவ்வளவு மாற்றம் காணச் செய்கின்றது, பல போது நாங்கள் தர்மங்களை புறக்கணிக்கின்றோம். சிறிய தர்மத்தை அட்பமாக கருதுகின்றோம். அல்லாஹ் நாடினால் ஒரு தர்மத்தை கொண்டு மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துவான். எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்.
*ஒரு மனிதரை உருவாக்குகின்ற தர்மத்தை கொடுங்கள் அதனால் ஒரு சமூகத்தை உங்களால் உருவாக்க முடியும்*
அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள் *நீங்கள் எந்த ஒரு தர்மத்தையும் அட்பமானதாக கருத வேண்டாம்.*
ஒரு விசுவாசி செய்கின்ற தர்மத்துக்கு அல்குர்ஆன் ஓர் உதாரணம் குறிப்பிடுகின்றது.
*அது பூமியிலே நடப்படுகின்ற ஒரு விதை போன்றதாகும். அந்த விதை ஏழு கதிர்களை உருவாக்குகின்றது. அந்த ஒவ்வொரு கதிரிலும் 100 விதைகள் உருவாகின்றன. அதனை அல்லாஹ் நாடினால் பல மடங்காக ஆக்கிக் கொடுப்பான்.*
*இதனால் ஒன்று 700 ஆக மாறுகின்றது. அல்லாஹ் நாடினால் அதனை 1400 அல்லது 2100 அல்லது அதனைவிட அதகிமானதாக மாற்றலாம்.*
நம்பிக்கையோடு தர்மம் செய்யுங்கள், நான் செய்கின்ற தர்மம் சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் தர்மம் செய்யுங்கள்.
அல்லாஹ் எண்ணங்களை அறிவான்.
இந்த செய்தி உங்கள் உள்ளத்தை தொட்டால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த செய்தியை அறிந்து இன்னொருவர் தர்மம் செய்யலாம். அதனால் ஒரு மனிதன் உருவாகலாம். ஓர் ஏழையின் வறுமை நீக்கப்படலாம்.
நாங்கள் நினைக்காத ஆச்சரியமான விளைவுகள் பல வருடங்களுக்குப் பிறகும் நடக்கலாம்.
11 04 2026
Sheikh Dr Zihan