Youths TV தமிழ்

Youths TV தமிழ் எமது முகநூல் பக்கத்தை LIKE SHARE செய்யுங்க?

07/07/2025

🔴Live - Thaikkanager Hitters Jersey Lunch Event

Addalaichenai Premier League 2025

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ...
06/07/2025

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள், தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் அமைச்சு சார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

மாகாண சபை முறைமையில் காணப்படும் ஒருசில சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்.

குறுகிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு செயற்பட்டால் அது நிர்வாக கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே மாகாண சபை முறைமை குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுகவீனமுற்ற - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவை - அவரது ஏறாவூர் இல்லத்துக்கு சென்று சுகம் விசாரித்தார் அகில இலங்கை மக்கள்...
05/07/2025

சுகவீனமுற்ற - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவை - அவரது ஏறாவூர் இல்லத்துக்கு சென்று சுகம் விசாரித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்.

அருகில் - கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர்.

அம்பாறையில் முழு சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் வென்றாலும் பரவாயில்லை. மக்கள் காங்கிரஸ் வெல்லக்கூடாது என்பதில் உறுதியுடன்...
05/07/2025

அம்பாறையில் முழு சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் வென்றாலும் பரவாயில்லை. மக்கள் காங்கிரஸ் வெல்லக்கூடாது என்பதில் உறுதியுடன் செயற்பட்டு அதில் வெற்றி கண்டவர் மேயர் அதாஉல்லாவாகும். அதாஉல்லா மினிஸ்டரை எப்போதும் நம்ப முடியாது என்று அடிக்கடி சொல்பவர் ரிசாட் பதியுதீன் MP ஆகும். நேற்றைய நிகழ்வில் இருவரினதும் இரட்டை முகம்.

சம்சுடீன் அரூஸ்.

இன்னா அடிக்கிற வெயிலுக்கும் பத்துவைக்கும் ஒரு சட்டப்படி மலாய் குல்பி சாப்பிட்டா சும்மா வெடிலாய் இருக்கும்.Chill Cafe Akk...
04/07/2025

இன்னா அடிக்கிற வெயிலுக்கும் பத்துவைக்கும் ஒரு சட்டப்படி மலாய் குல்பி சாப்பிட்டா சும்மா வெடிலாய் இருக்கும்.

Chill Cafe Akkaraipattu

இந்தியாவில் பிரசித்தி பெற்ற குல்பி ஐஸ் (KULFI) தற்போது கிழக்கில் முதன் முறையாக அக்கரைப்பற்றில் பெறலாம் 30 வருட அனுபவம் கொண்ட இந்திய குஜராத்தியர்களினால் தயாரிக்கப்படுகின்ற தரமான குல்லி ஜஸ் சுவையோ சுவை ஒரு ருசித்தால் பல முறை ருசிக்கத்தோனும்.

ஐந்து வகையான குல்பிகளை பெறலாம்.

அத்திப்பழம் ஐஸ்கிரீம்.
தேங்காய் ஐஸ்கிரீம்.
குங்குமம் மற்றும் பாதாம் ஐஸ்கிரீம்.
கோப்பி ஐஸ்கிரீம்.
தூரியன் ஐஸ்கிரீம்.
அலிப்பேர ஐஸ்கிரீம்.
பாணிப்பூரி
புல்ஜார் சோடா
மசாலா சாய்
இவ்வாறு மேலும் 18 வகை ஐஸ்கிரீம் வகைகளை CHILL CAFE இல் உண்டு மகிழ முடியும்...

நேரம் : 10.00 Am- 11.00 Pm

CHILL CAFE AKKARAIPATTU



Hot Line - 0779901980
📲 WhatsApp - 0752866675
📌 Address: 2/B,Main street , Akkaraipattu.

Chill Cafe
077 990 1980
https://maps.app.goo.gl/FyrB2zi4y7vuj8dE6

#பாணிப்பூரி #ஜஸ்கிரீம் #அக்கரைப்பற்று #அதிகம்_பகிருங்கள்

அக்கரைப்பற்றில் இயங்கும் சாய் வண்டியில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் :0779901980/0752866675
02/07/2025

அக்கரைப்பற்றில் இயங்கும் சாய் வண்டியில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் :0779901980/0752866675

ஜூலை மாத லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லைமாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் வ...
01/07/2025

ஜூலை மாத லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி,

12.5kg: ரூ. 3,690 இற்கும்
5kg : ரூ. 1,482 இற்கும்
2.3kg : ரூ. 694 இற்கும் விற்பனையாகிறது.

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே (வயது 82 )இன்று காலமானார்.
30/06/2025

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே (வயது 82 )இன்று காலமானார்.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக ஆ.தர்மதாச  தெரிவு செய்யப்பட்டுள்ளார் வாழ்த்துக்கள்.
30/06/2025

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக ஆ.தர்மதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வாழ்த்துக்கள்.

இலங்கையில் பிரதேச சபை தவிசாளர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் மற்...
29/06/2025

இலங்கையில் பிரதேச சபை தவிசாளர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை.

பிரதேச சபை தவிசாளர் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள்
பிரதேச சபை தவிசாளர் ஒரு அரச அதிகாரி என்பதால், அவருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனம் அரச சேவையுடன் தொடர்புடைய பணிகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். பொதுவான விதிமுறைகளின்படி, வாகனப் பயன்பாடு பின்வரும் சந்தர்ப்பங்களில் அமையும்:

* அதிகாரபூர்வ கடமைகள்: சபை தொடர்பான கூட்டங்கள், ஆய்வுகள், திட்டப்பணிகளை மேற்பார்வையிடுதல், மக்கள் சந்திப்புகள், அரசாங்க உத்தியோகபூர்வ நிகழ்வுகள் போன்றவற்றிற்கு செல்வதற்கு.

* அலுவலக மற்றும் வீடு இடையேயான பயணம்: தவிசாளரின் உத்தியோகபூர்வ பயணத் தேவைகளுக்காகவும், அவரது அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான போக்குவரத்துக்கும் வாகனம் பயன்படுத்தப்படலாம். இதற்கான தூர எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணமாக, 50 கிலோமீட்டர் தூரத்துக்குள்).

* அவசர தேவைகள்: பொதுமக்களின் அவசர தேவைகள், இயற்கை அனர்த்தங்கள், அல்லது அவசர சேவைகளுக்காக சபை சார்ந்த பணிகளில் ஈடுபடும்போது வாகனம் பயன்படுத்தப்படலாம்.
அரச வாகனப் பயன்பாடு தொடர்பான சுற்றறிக்கைகளில், வாகனம் மற்றும் எரிபொருள் ஒதுக்கீடு, அதற்கான பதிவேடுகள் (Logbook) பேணுதல், பராமரிப்புச் செலவுகள் போன்ற விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட எரிபொருள் அளவு மாதாந்தம் வழங்கப்படும்.

அதிகார துஷ்பிரயோகம் எவ்வாறு கணிப்பிடப்படுகிறது?

அரச வாகனம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என பின்வரும் சந்தர்ப்பங்களில் கருதலாம்:

* தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்துதல்: உத்தியோகபூர்வ கடமைகள் தவிர்ந்த, தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகள், ஷாப்பிங், சுற்றுலா போன்றவற்றுக்கு அரச வாகனத்தைப் பயன்படுத்துதல்.

* ஓட்டுநரை தனிப்பட்ட பணிக்கு பயன்படுத்துதல்: உத்தியோகபூர்வ வாகனத்தின் ஓட்டுநரை தவிசாளரின் தனிப்பட்ட வேலைகளுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களின் பயணங்களுக்குப் பயன்படுத்துதல்.

* எரிபொருள் துஷ்பிரயோகம்: அனுமதிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைவிட அதிகமாகப் பயன்படுத்துதல், அல்லது தனிப்பட்ட வாகனங்களுக்கு அரச எரிபொருளைப் பயன்படுத்துதல்.

* சட்டவிரோத செயற்பாடுகள்: வாகனம் சட்டவிரோத செயல்களுக்காக அல்லது அதிகாரபூர்வமற்ற நபர்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுதல்.

* பதிவேடுகளைப் பராமரிக்காமை: வாகனத்தின் பயணத் தூரம், எரிபொருள் பாவனை, பயண நோக்கம் போன்றவற்றை உரிய முறையில் Logbook-ல் பதிவு செய்யாமை அல்லது தவறான தகவல்களைப் பதிவு செய்தல்.
துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடு
அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக நீங்கள் கருதினால், அதைப் பற்றி முறைப்பாடு செய்ய சில வழிகள் உள்ளன. பொதுமக்கள் இவ்வாறான விடயங்களை பின்வரும் நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தலாம்:

* பொலிஸ்: அரச வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துவது போன்ற துஷ்பிரயோகங்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தின் 1997 அவசர இலக்கத்திற்கோ அல்லது 118 என்ற இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம்.

* மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்: பிரதேச சபைகள் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு எழுத்துமூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யலாம்.

* ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption): பாரிய துஷ்பிரயோகங்கள் அல்லது ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த ஆணைக்குழுவிடம் முறையிடலாம்.
இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

 ின் பணிப்பாளராக ஷானி அபேசேகர  நியமனம்..குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி ...
28/06/2025

ின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்..

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மு.கா தேசியப்பட்டியல் எம்.பியாக ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வாசித் நியமனம்.!ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்...
28/06/2025

மு.கா தேசியப்பட்டியல் எம்.பியாக ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வாசித் நியமனம்.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையை சுழற்சி முறையில் வழங்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் எம்.எஸ் அப்துல் வாஸித், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கு இணஙக சத்தியப்பத்திரம் ஒன்றை அப்துல் வாஸித் கையெழுத்திட்டு செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் இன்று கையளித்தார்.

இதையடுத்து அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் செயலாளர் நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நுவரெலியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Youths TV தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Youths TV தமிழ்:

Share