Youths TV தமிழ்

Youths TV தமிழ் எமது முகநூல் பக்கத்தை LIKE SHARE செய்யுங்க?

01/10/2025

உங்கள் பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதா?

🔴 ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் - தந்தை கைது...!விசாரணையில் திருக்கி...
30/09/2025

🔴 ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் - தந்தை கைது...!

விசாரணையில் திருக்கிடும் விடயங்கள் அம்பலம் -

– யூ.எல். மப்றூக் –

ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது.

இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை – அவரின் சின்னம்மா (தாயின் இளைய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்;

உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சை அளிக்கப்படாமையினால், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்த நிலையில் ஒலுவில் வைத்தியசாலைக்கு குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்தே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர்.

அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

30/09/2025

ஒலுவில் கைவிடப்பட்ட குழந்தையின்
பெற்றோர்கள் கைது?

விரிவான தகவல் விரைவில்...

உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ இடம்பெறும் வைபவங்களுக்கு வரும் விருந்தினர்களை புதுச்சுவையுடன் உபசரித்திடுங்கள். ஏலம், Hot C...
29/09/2025

உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ இடம்பெறும் வைபவங்களுக்கு வரும் விருந்தினர்களை புதுச்சுவையுடன் உபசரித்திடுங்கள். ஏலம், Hot Chocolate, தேநீர், கோப்பி என நால்வகை சுவைகளில் கிடைக்கப்பெறும். அனைவரையும் உபசரித்திட ஏதுவான Vending Machineகளும் உண்டு.

Contact :0779901980

சமுர்த்தி முகாமையாளராக கடமைபுரிந்து  ஓய்வு பெற்றுச் செல்லும்  M.C.M.தஸ்லீம்....விவசாய விஞ்ஞான பட்டதாரியான அவர் 1995 ம் ஆ...
29/09/2025

சமுர்த்தி முகாமையாளராக கடமைபுரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் M.C.M.தஸ்லீம்....

விவசாய விஞ்ஞான பட்டதாரியான அவர் 1995 ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரினால் புதிதாக கொண்டுவரப்பட்ட " சமுர்த்தி"
அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக சமுர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தராக உள்வாங்கப்பட்டு
தனது 30 வருட அரச சேவைக்காலத்தில்
வலய, வங்கி முகாமையாளர்,
கருத்திட்ட முகாமையாளர்,
முகாமைத்துவப் பணிப்பாளர்,
தலைமைபீட சமுர்த்தி முகாமையாளர்
என தனக்கு வழங்கபபட்ட அத்தனை சமுர்த்தி முகாமையாளர்களுக்காக எல்லா பதவிகளையும் மிக நேர்த்தியாகவும் திறமையாகவும் கடயமயாற்றிய
சிரேஷ்ட பதவிநிலை சிறந்த உத்தியோத்தராகவே
அவர் பார்க்கப்படுகிறார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
பிரதேச செயலாளர் T.M.M. அன்சார், கௌரவ அதிதிகளாக உதவி பிரதேச செலளார் ராஷித் எஹ்யா , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.M. தமீம் , கணக்காளர் A.B.அப்துர் ரஹ்மான என பலரும் கலந்து கொண்டனர்.

அவரது ஓய்வுகாலம்
இறைதிருப்தி நிறைந்த, ஆரோக்கியமான வாழ்வாக அமைய வல்ல இறைவனை பிராத்தித்து வாழ்த்துகின்றோம்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி   தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.க...
29/09/2025

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர், பூகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து இன்று (29) பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.

மேலும் கல்முனை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டார்.

பாறுக் ஷிஹான்

29/09/2025

🚀✨ The Sky Reveals the Future of Education!
📍 Pebbles Campus – Opening Soon!
From vision to reality, witness the beginning of a new era in learning. 🎓🏫

🛑🏏♥️Blitz Champions Trophy 2025 – Season 1 🏏✨CONGRATULATIONSBLITZ SPORTS CLUB
29/09/2025

🛑🏏♥️Blitz Champions Trophy 2025 – Season 1 🏏✨
CONGRATULATIONS
BLITZ SPORTS CLUB

27/09/2025

போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்க கிழக்கு மாகாணத்துக்கான பொலிஸ் விசேட தொடர்பு இலக்கம்:
071 859 2640

26/09/2025
ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக விளையாட உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளி...
26/09/2025

ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக விளையாட உள்ளது. இதுவரை 41 ஆண்டுகளில் 17 முறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன என்பது தான் ஆச்சரியம்.

1984 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசிய கிண்ண தொடர், 41 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இந்த போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடைபெறுவது வழமை, இதுவரை 17 முறை விளையாடப்படுள்ளது, ஆனால் ஒருமுறையேனும் இரு அணிகளும் இறுதிப்போடியில் விளையாடவில்லை.

இந்த ஆசிய கிண்ண தொடரின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும் ஒரு போட்டி விளையாடும் பொழுது எப்படி எல்லாம் பிரச்சனை வந்தது, ஆனால் கடவுளின் நியதியை பாருங்கள் மூன்று முறை திரும்ப திரும்ப இருவரையும் எதிர்கொள்ள விட்டுள்ளது.

25/09/2025

BLITZ CHAMPIONS TROPHY

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Youths TV தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Youths TV தமிழ்:

Share