Ceylonqknews

Ceylonqknews News media
(1)

05/09/2025

எல்ல #வெல்லவாய பஸ் விபத்தின் #புதிதாக கிடைத்த துயரக் காணொளி.....✍️

தயவு செய்து யாரும் யாருக்கும் மனம் நோகும் படி கூட கதைக்க வேண்டாம் அடுத்த நொடி நிச்சயமற்ற வாழ்க்கை இது... 😭

05/09/2025

நடைபெற்று வரும் மாகான மட்ட போட்டியில் #அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக 18
வயதிற்கு உட்பட்ட 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில்
JM.RIFATH முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாகாணத்தில் சாதித்த அக்/அல்- அர்ஹம் பாடசாலை மாணவர்கள் !மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கி...
05/09/2025

மாகாணத்தில் சாதித்த அக்/அல்- அர்ஹம் பாடசாலை மாணவர்கள் !

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட 4×100 m அஞ்சல் ஓட்டத்தில் அட்டாளைச்சேனை அர்ஹம் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களை இரவு பகலாக பயிற்றுவித்த ஆசிரியர் Y.A.Wajith அவர்களுக்கும் அதிபர் பிரதி அதிபர் ஆசிரியர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை சமூகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு   கலந்துரையாடல்கே எ ஹமீட் ஶ்ரீலங்கா முஸ்லி...
31/08/2025

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்

கே எ ஹமீட்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் (MMC), கட்சியின் சூறா சபை செயலாளர் அல்ஹாஜ் யூ.எம். வாஹிட் (Rtd. ADE), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினர் சப்ராஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். முஸ்மி, பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ. மாபிர், மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 16/09/2025 ம் திகதி மாலை 4.00 மணியிலிருந்து நிந்தவூர் அல்-அஸ்றக் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும், மறைந்த கட்சியின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். அப்துல் மஜீத் அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் விஷேட கூட்டம்கே எ ஹமீட் அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் விஷேட கூட்டம் ...
30/08/2025

விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் விஷேட கூட்டம்

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் விஷேட கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான், அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் தலைவர் எஸ்.எல். தாஜுதீன் ( ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்), அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர்கள், நடுவர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான திட்ட வரைபுகள் இக்குழுவினரால் தயாரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

28/08/2025

Arafian Legends jersey launching ceremony

சம்புக்களப்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சல்வீனியாவை துப்புரவு செய்ததை வைத்துக் கொண்டு சம்புக்களப்பு வடிச்சலை நிறைவ...
28/08/2025

சம்புக்களப்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சல்வீனியாவை துப்புரவு செய்ததை வைத்துக் கொண்டு சம்புக்களப்பு வடிச்சலை நிறைவு செய்தது போன்று பேசுவது கவலைக்குரிய விடயமாகும்..!

கே எ ஹமீட்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு

ஒவ்வொரு வருடமும் சம்புக்களப்பில் வந்தடையும் சல்வீனியாவை அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களம் துப்பரவு செய்வது வழமையாகும். இதனை வைத்து சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் நிறைவு செய்தது போன்று பேசுவது கவலைக்குரிய விடயமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நேற்று (27.08.2025) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

சம்புக்களப்பு வடிச்சல், அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் நீண்டகாலமாக நீர் வடியாமல் தடைப்பட்டிருந்தன. இவ்வடிச்சல் திட்டத்திற்காக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கிழக்கு மாகாண சபை அமைச்சராக பதவி வகித்த நானும் இத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக இரண்டு லெஜர் சம்புக்களப்பு வடிச்சல் தோண்டுவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கி வடிச்சல் திட்டத்தினை ஆரம்பித்ததுடன் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தடைகளை நீக்கியது மாத்திரமல்லாது 5000 தென்னை மரங்களை தறித்து அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினோம். இதனால் இன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வெள்ள காலத்தில் நீர் வழிந்தோடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியினால் இரண்டு வருடங்களுக்கு முன் சம்புக்களப்பு (தில்லையாறு) அகலமாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா இதுவரையும் செலவு செய்யாத நிலமை தோன்றியுள்ளது. இது தொடர்பாக நான் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இரண்டு தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரையும் இந்த நிதியினை செலவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் 76 வருட காலமாக சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என தெரிவிப்பது குறித்து தான் கவலையடைவதாகவும், அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது என்பதற்காக வரலாறுகளை மறந்து பேசுவதை பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி உடன் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எங்களின் அரசியல் பாதையில் அபிவிருத்தி பணிகளை யார் செய்தாலும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் என்.பி.பி அரசாங்கத்திற்கு அம்பாறை மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை அளித்துள்ளனர். ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முடிந்தளவு செய்திருக்கின்றோம். ஆதம்பாவா (எம்.பி)அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வேகமாக இயங்கி பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்துவிட்டு எங்களால் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து ஆதம்பாவா எம்.பி எங்களை விட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு பூர்த்தி செய்தால் நாங்களும் அவரை வாழ்த்துவோம்.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் குரல்களால் மக்களுக்கான நல்ல பணிகள் சில நடைபெற்று வருகின்றன.

புதிய அரசாங்கம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், புதிய அரசியல்வாதிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். எனவே, புதிய அரசியல்வாதிகளும் கவனமாக செயல்பட வேண்டும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பது பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், அரச உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாகும். அபிவிருத்திக் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்றும் செயற்பாடுகள் இனிமேல் நடைபெறக்கூடாது எனவும், அரசியல் பேசுவது என்றால் மக்கள் மத்தியில் மேடை அமைத்து நாம் பேசுவோம் எனவும் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம், தீகவாபி விளையாட்டு மைதானம், ஒலுவில் விளையாட்டு மைதானம், பாலமுனை ரக்பி விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் விளையாட்டு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, தீகவாபி பிரதேசங்களுக்கான மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் நான் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆளுநர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே, பிரதேச செயலகம் மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பான செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதுடன், எதிர்காலத்தில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்களை இவ் மாஸ்டர் பிளேன் (Master Plan) ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

அட்டாளைச்சேனை அஷ்ரப் வீதியின் மிகுதிப் பணிகள், 12 கிராமிய பாலங்கள் அமைத்தல், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை OPA வீதியினை வீதி அதிகார சபைக்கு பாரம் கொடுப்பதுடன் கல்முனையில் இருந்து ஒலுவில், சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனை ஊடாக அக்கரைப்பற்றுக்கு புதிய பஸ் சேவையினை ஏற்படுத்துவதுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 11 வட்டாரங்களில் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒலுவில் பொண்ணன்வெளிக் காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விபரங்களை பெற்றுவிட்டு அம்பாறை கச்சேரியில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொண்ணன்வெளி காணி இழந்தவர்கள் முறையிடலாம் என ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆதம்பாவா (எம்.பி) அவர்கள் கூறுவது தவறான விடயமாகும். அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொண்ணன்வெளி காணி இழந்தவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டு விட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு இது தொடர்பான விபரங்களை அனுப்பி வையுங்கள். பொண்ணன்வெளி காணி தொடர்பான விடயங்களை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிய யாரும் இல்லையெனில் என்னால் அடுத்த அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவினை சமர்ப்பிக்க முடியும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.கே எ ஹமீட்   நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ...
28/08/2025

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

கே எ ஹமீட்

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.அஸ்பர், நிந்தவூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கே எ ஹமீட்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களி...
27/08/2025

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (27.08.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

27/08/2025

ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியிலிருந்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வழங்குவதற்கு காணி சீர்திருத்தக் குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹால் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலை சந்தித்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கே எ ஹமீட்  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி அவர்களி...
25/08/2025

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கே எ ஹமீட்

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (25.08.2025) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் இ.ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தியது...
22/08/2025

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கே எ ஹமீட்

(22)ம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி. உரையாற்றுகையில்….

இன்றைய தினம் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள ஆகிய இரு தேசிய இனங்களே உள்ளன என்று குறிப்பிட்டனர். ஆனால், முஸ்லிம் இனத்தவர்களை எவரும் நினைவுபடுத்தவில்லை,” என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “தமிழ் இனத்தவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்களும் எங்கள் முஸ்லிம் சமூகமும் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றிற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், இனவாத பேச்சுகளை இவ் உயரிய சபையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும்” என உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தினார்.

Address

Addalaichenai
Akkaraipattu
32350

Alerts

Be the first to know and let us send you an email when Ceylonqknews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylonqknews:

Share