Ceylonqknews

Ceylonqknews News media
(1)

💻 *Certificate in Web Development – 100% FREE!*🚀 இப்போது உங்கள் கனவுகளை Coding மூலம் நனவாக்கலாம்!இணைய உலகத்தில் உங்கள் இ...
30/10/2025

💻 *Certificate in Web Development – 100% FREE!*

🚀 இப்போது உங்கள் கனவுகளை Coding மூலம் நனவாக்கலாம்!

இணைய உலகத்தில் உங்கள் இடத்தை உருவாக்கிக்கொள்ள இது தான் சரியான நேரம்!

*பணமே வேண்டாம்!*
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் – 100% Free!

இந்த Golden Chance எல்லோருக்கும் வராது… மிஸ் பண்ணாதீங்க!

✅ Limited seats – Apply Now!
🌐 Learn HTML, CSS, JavaScript & more!
📚 Course Duration: 3 Months

📞 For Registration:
📱 Call / WhatsApp: 076 161 3232

💥 *இது ஒரு வாய்ப்பு அல்ல, ஒரு துவக்கம்!*
இப்போதே Join பண்ணுங்க & உங்கள் Future-ஐ Design பண்ணுங்க!*

29/10/2025

தரம் 4,5ல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்தக்கூடிய நுண்ணறிவு வகுப்புகளை நவம்பர் மாதம் முழுவதும் இலவசமாக நடாத்துகின்றார்கள் .lk

உங்கள் பிள்ளைகளின் கற்றல் திறனை மேம்படுத்த இன்றே tutora.lk உடன் இணைத்துக் கொள்ளுங்கள்…

மேலதிக தகவல்களுக்கு - 074 410 3533

அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கே எ ஹமீட் நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி ம...
27/10/2025

அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கே எ ஹமீட்

நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை!

நமது நாட்டில் வாழும் 37 இலட்சம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் அஸ்வெசும திட்டம் மக்களுக்கு பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் சமுர்த்தி அமைச்சுக்கும், உலக வங்கி பணிப்பாளருக்கும் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது நாட்டில் இதுவரை அபிவிருத்தி திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களின் ஆலோசனைகளைப் பெற்றே முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக திடீர் என இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு ரூபா 300 கொடுப்பனவு வழங்கப்பட்டு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக்கோட்டின் வாழும் 550 மக்கள் அஸ்வெசும திட்டத்தில் தங்களை இணைக்குமாறு பிரதேச செயலாளருக்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.

எனவே, அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல்களை மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கி அது தொடர்பான விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்து அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களை அஸ்வெசும திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு கூட்டம் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் 22.10.2025ல் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நமது நாட்டின் ஒரு பிரஜை பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவரின் வருமானம், செயற்பாடுகள் எல்லாவற்றையும் கிராம சேவகர் பிரிவு ரீதியாக கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கின்றனர். வழமைக்கு மாறாக அஸ்வெசும திட்ட பயனாளிகளை தெரிவு செய்வதற்கு திடீரென இளைஞர் குழுவினை நியமித்ததினால் சரியான தகவல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை அஸ்வெசும திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மேல்முறையீடு கடிதங்களை கொடுத்துள்ளனர். எனவே, அஸ்வெசும திட்டத்தின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் அஸ்வெசும திட்ட பயனாளிகளுக்கு பணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த திட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் சிறிய கிராமங்களில் அஸ்வெசும திட்டப் பயனாளிகள் எல்லோரையும் ஒன்றிணைத்து தொடர்ந்தும் அவர்களின் வாழ்வாதாரம் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கி திட்டமிடல் பணிப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களையும் அழைத்து அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல்கள், பயிற்சி பட்டறைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல வீடுகள் சேதம்.!மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (24) மாலை வீசிய கடும் காற்ற...
24/10/2025

மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல வீடுகள் சேதம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (24) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர், ஏறாவூர்ப்பற்று, போரதீவுப்பற்று செயலகப் பிரிவுகள் அடங்களாக பல இடங்களில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று (24) மாலை பலத்த காற்றுடன் மழைபெய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடுமையான காற்று காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாக வீதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

ஆரையம்பதியில் உள்ள மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு அருகிலிருந்த மைதான ஸ்ரேடியம் காற்றினால் ஆரையம்பதி வாகன தரப்பிடத்திற்கு மேல் விழுந்த காரணத்தினால் வாகன தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் செந்தில் தெரிவித்தார்.

இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர் சேத்துக்குடா போன்ற பகுதிகளில் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் வீதிகளில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதடைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலைச்சோலை மற்றும் மைலம்பாவெளி, சிவபுரம் ஆகிய பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான சேத விபரங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

(ரஞ்சன்)

 #மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வரும் வழியில் BIM 7861 எனும் இலக்கம் உடைய மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ள...
22/10/2025

#மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வரும் வழியில் BIM 7861 எனும் இலக்கம் உடைய மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது ... பைக்கில் வந்தவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார் ...

உருயவரின் குடும்பத்தினரிடம் தகவல் சென்றடைய, இயலுமானவர்கள் இந்த பதிவினை பகிரவும்

21/10/2025

மினி சூறாவளி காரணமாக அட்டாளைச்சேனை 06 ம் பிரிவு பொது வையாவடியின் மதில் சேதம்...!!!

சீரற்ற வானிலை காரணமாக அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள 6ம் பிரிவு வையாவடி ஒரு பகுதி முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  சாய்ந்தமருது இளைஞ்சர் அமைப்பாளராக  பாமி மன்சூர் நியமனம்.கே எ  ஹமீட் சமகால மற்று...
21/10/2025

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது இளைஞ்சர் அமைப்பாளராக
பாமி மன்சூர் நியமனம்.

கே எ ஹமீட்

சமகால மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மருதமுனை பிரதேச ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் சரோ தாஜுதீன் அவர்களின் தலைமையில் நேற்று (20.10.2025) திங்கட்கிழமை மாலை மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பல பிரதேசங்களுக்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
இளைஞ்சர் அமைப்பாளர்கள் கட்சியினால் நியமிக்கப்பட்டனர் அதன் பிரகாரம் சாய்ந்தமருது இளைஞ்சர் அமைப்பாளராக முஹம்மட் மன்சூர் முஹம்மட் பாமி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்களும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,கட்சியின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன்,கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் மற்றும் கட்சி உயர்பீட உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்

சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு!கல்முனை மாநகர சபையின் முன்னாள...
20/10/2025

சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு!

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில், சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

கட்சியினுடைய செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் , பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முதுநபீன் முஷாரப், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் ,மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அமைப்பினர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்வு கே எ ஹமீட் கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் கா...
17/10/2025

காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்வு

கே எ ஹமீட்

கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக ஆலங்குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் (17.10.2025) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நஹீஜா முஸக்கிர், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி, ஆலங்குளம் மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.முனாஸ், ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.எல்.ஹம்ஸாத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், எஸ்.ஐ.றியாஸ், றகுமானியா வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.முனாஸ், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் தொழினுட்ப உத்தியோகத்தர் எம்.ஐ.ஜவாத், றகுமானியா வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.ஏ.பமீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ.அன்சார்(Rtd.Pr) மற்றும் ஆலங்குளம் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் வளத்தட்டுப்பாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, சேதமடைந்துள்ள பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாகவும் றகுமானியா வித்தியாலய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை ஆலங்குளத்தில் சுகாதாரத் திணைக்களத்தால் நிர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இடமாற்றம் செய்தல், ஆலங்குளம் பிரதேசத்தின் வீதிகள், வடிகான்கள், ஆலங்குள பல்தேவை கட்டிடத்தின் தொடர் வேலையை நிறைவு செய்தல், இடைநிறுத்தப்பட்ட அக்கரைப்பற்றிலிருந்து சம்புநகர் ஊடாக ஆலங்குளம் வரை பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் ஆலங்குள மக்களால் முன்வைக்கப்பட்டன.

இத்தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களும் இணைந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையும், திணைக்களங்களின் தலைவர்களும், ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயம், ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை, ஆலங்குளம் மத்திய மருந்தகம், ஆலங்குள பல்தேவைக் கட்டிடம், ஆலங்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆடைத்தொழிற்சாலை கட்டிடம் என்பவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

17/10/2025

#விபத்து வரும் முன் #உயிர்களை பாதுகாப்போம் #காப்போம்...

#அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் #நிந்தவூர் பிரதேசத்திற்கும் #ஒலுவில் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள #பாலம் #உடைந்தால் அதனூடாக தினந்தோறும் பயணிக்கும் பயணிகளுக்கும் அருகாமையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழ மாணவர்களும் பல அஷோகோரியத்தை எதிர்கொண்டனர்... அதன் பின் அதற்கு அருகாமையில் தற்காலிக பாலம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது...
தற்காலிக பாலம் தற்போது பழுதடைந்து நிலையில் காணப்படுவதனால் விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இந்தப் பாலம் பிரதான பாதையில் அமைந்துள்ளதால் தினந்தோறும் போக்குவரத்து நடைபெறுகின்றது... இதனை கவனத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக சீர் செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்..

💔 🇵🇸🥹 மனதை உலுக்கும் காட்சி: இஸ்ரேல் தடுப்பு முகாமில் கொல்லப்பட்ட பாலஸ்தீன கைதிஇஸ்ரேலிய தடுப்பு முகாமில் உயிரிழந்த ஒரு ப...
16/10/2025

💔 🇵🇸🥹 மனதை உலுக்கும் காட்சி: இஸ்ரேல் தடுப்பு முகாமில் கொல்லப்பட்ட பாலஸ்தீன கைதி

இஸ்ரேலிய தடுப்பு முகாமில் உயிரிழந்த ஒரு பாலஸ்தீன கைதியின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருப்பது, அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டும் விதமாக மனதை பதறவைக்கும் படமாக வெளிவந்துள்ளது.

இந்தக் காட்சி, பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற சித்திரவதை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

16/10/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Addalaichenai
Akkaraipattu
32350

Alerts

Be the first to know and let us send you an email when Ceylonqknews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylonqknews:

Share