தமிழ் letter

தமிழ் letter Our Channel discusses the Current Political Trends, Social Issues, Sports, Entertainment and all the interesting news feeded with Truth... Truth and Truth Only
(1)

குச்சவெளி பிரதேச உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது!அபு அலா உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு கு...
21/09/2025

குச்சவெளி பிரதேச உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது!

அபு அலா

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டம் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி இன்று வரை குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்றது.

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் எ.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிநாள் இந்நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கான சான்றிதழ்களை தவிசாளர் எ.முபாறக் வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் சேவையில் சுற்றுச் சூழல், கிராம மட்ட பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரித் திட்டம், ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார அனுமதிப் பத்திரம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளுடன் வழிகாட்டல்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக, குச்சவெளி பிரதேச சபைக்குட்ட 87 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம், மதஸ்தளங்களுக்கான உபகரணங்கள், வியாபாரப் பத்திரங்கள், மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான சான்றிதழ் மற்றும் கிண்ணங்கள், சிறு கைத்தொழில் முனைவோருக்கான வியாபார அனுமதிப்பத்திரங்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் தீர்க்கப்படாத பல்வேறுபட்ட பரச்சினைகள் கடந்த பல வருடங்களாக இருந்து வந்து. இப்பிரச்சினைகளில் பலவற்றை உள்ளூராட்சி வார நிகழ்வு நாட்களில் தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களும், வியாபாரிகளும், சிறு கைத்தொழில் செய்வோர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இதனை அமுல்படுத்தி செயற்பட்ட அரசுக்கும், குறிப்பாக தவிசாளர் ஏ.முபாறக் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்(எம்.எஸ்.எம்.ஸ...
21/09/2025

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய களநிலவரம் களப் பரிசோதனைகள், அதனுடைய குறைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ திடீர் விஜயமொன்றை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அக்கரைப்பற்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க, இந்தத் தரிசிப்பு இடம்பெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, முதன்மை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் பார்வையிடப்பட்டதோடு, வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் தற்போதைய சவால்கள், மனித மற்றும் பௌதீக வளப் பிரச்சினைகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.

நிர்வாகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட புதிய கிளினிக் தொகுதியின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டம் குறித்தும், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, கல்முனை தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா,மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!எழுத்து: கலித் ஹமூத் அ...
21/09/2025

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

அமைதி மதிப்புகளுக்கா உலக ன உலகளாவிய அர்ப்பணிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வின் மதிப்புகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை புதுப்பிக்கவும், உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அடித்தளங்களை நிறுவுவதற்குமான சந்தர்ப்பமாகும்.

இந்த நாளில், உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுகளை மேம்படுத்துவதற்காக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படுகின்றன. இவற்றில் முன்னணியில் நிற்கும் சவூதி அரேபிய அரசு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் உரையாடல், மனிதாபிமான மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மதிப்புகளை ஆதரிக்கும் அமைதிக்கான குரலாக எப்போதும் இருந்து வருகிறது.

சவூதி அரேபிய அரசின் வரலாற்று ரீதியான முன்முயற்சிகள்:
சவூதி அரேபியா, அது நிறுவப்பட்டதிலிருந்து, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாக உரையாடல் மற்றும் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அது, 2002ஆம் ஆண்டில் அரபு அமைதி முன்முயற்சியை தொடங்கியது, இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடைவதற்கான அடிப்படை கட்டமைப்பாக இன்றும் திகழ்கிறது. மேலும் 1989ஆம் ஆண்டில் தாயிஃப் உடன்படிக்கை லெபனானுக்கு நிலைத்தன்மையை மீட்டெடுத்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது, இது அமைதியான தீர்வுகளை ஆதரிப்பதில் அரசின் ஆரம்பகால பங்கை பிரதிபலிக்கிறது.

சர்வதேச மத்தியஸ்த முயற்சிகளில் சவூதி அரேபியாவின் வகிபாகம்:
சர்வதேச அளவில், யெமென் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பல நெருக்கடிகளில் நம்பகமான மத்தியஸ்தராக சவூதி அரேபிய அரசு செயல்பட்டது. மனிதாபிமான மத்தியஸ்தங்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் மூலம் ரஷ்ய-உக்ரேனிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் திறம்பட பங்களிப்புச்செய்தது, அமைதி என்பது தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டிய மூலோபாய தேர்வு என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சந்திப்புக்கள்:
சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருதரப்பு மத்தியஸ்தத்துடன் நின்றுவிடவில்லை, மாறாக அமைதியை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சண்டிகாப்புக்களுக்கு தலைமை தங்குவது வரை விரிந்து சென்றது.

• 2017 ஆம் ஆண்டு ரியாத் அரபு-இஸ்லாமிய-அமெரிக்க உச்சி மாநாடு, இது 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவுடன் ஒன்றிணைத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.

• 2020 ஆம் ஆண்டு, G20 குழுவிற்கு சவூதி அரேபியா தலைமை வகித்தது, இங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் மற்றும் சுகாதார பாதுகாப்பை அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

• 2023 ஜெட்டா அரபு உச்சி மாநாடு, இது அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியது மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் ஜெட்டா அரபு உச்சி மாநாட்டை நடத்தியது, இம்மாநாடு அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியதோடு பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் உக்ரேனிய நெருக்கடி தொடர்பான ஜெட்டா சர்வதேச சந்திப்புக்களை நடாத்தியது, இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இச்சந்திப்புக்கள் அமைதியான தீர்வுகளுக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.

• 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரியாத் நகரில் அமெரிக்க-ரஷ்ய அமைதி உச்சி மாநாட்டை நடாத்தடியாது, இங்கு ரஷ்ய-உக்ரேனிய போர் வெடித்ததிலிருந்து முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது ரஷ்ய அதிகாரிகள் சந்தித்ததுக்கொண்டனர். அங்கு இரு தரப்பும் தூதரக பணிகளை தொடர்வதற்கும் உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்தனர், இது பெரும் சக்திகளுக்கிடையே தொடர்புக்கான தளமாக சவூதி அரேபியாவின் வகிபாகத்தில் சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

• பாலஸ்தீன பிரைச்சினைக்கு அமைதித்தீர்வு மற்றும் இரு-அரசு தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான உயர்மட்ட சர்வதேச மாநாடு, இந்த மாநாடு நியூயார்க்கில் இவ்வாண்டு ஜூலை 28-29 ஆம் திகதிகளில் சவூதி அரேபிய அரசு மற்றும் பிரான்சின் கூட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் விளைவாக செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகள் இந்தப்பிரகடனத்துக்குச் சார்பாக 142 நாடுகள் வாக்களித்தன.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் அரசின் முயற்சிகள்:
மிதமான மையம் (மர்கஸ் இஃதிதால்) மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இஸ்லாமிய இராணுவ கூட்டணியின் தலைமை போன்ற முன்முயற்சிகள் மூலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களிடையே உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் சவூதி அரேபியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதை அது உறுதிப்படுத்துகிறது, இது சர்வதேச மட்டத்தில் அமைதியான மற்றும் நிலையான சூழலை ஏற்படுத்திடுவதற்குப் பங்களிக்கிறது.

பல்வேறு துறைகளில் சவூதி அரேபியாவின் முயற்சிகள், சர்வதேச உச்சி மாநாடுகள் மற்றும் மன்றங்களின் தலைமைத்துவத்துடன் சேர்ந்து, அமைதி என்பது தற்காலிக தேர்வு அல்ல, மாறாக அதன் தேசிய மற்றும் இராஜதந்திர அடையாளத்தின் ஒரு பகுதியை உருவாக்கும் நிலையான செய்தி என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை ! நூரு...
21/09/2025

ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை !

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய நிலையில் உள்ளது. இது தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அறிவித்தும் பயனில்லை என அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

அரச நிறுவனங்கள் அமுல்படுத்தும் வழமையான வேலைத்திட்டங்களுக்கு தனது பெயரை வைக்க முந்தியடிக்கும் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வராமை அவர்களின் இயலாமையை காட்டுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பெண்கள் மதரஸா, கலாச்சார மண்டபம், பள்ளிவாசல், பொது விளையாட்டு மைதானம், பல்வேறு அரச காரியாலயங்கள், முக்கிய திணைக்களங்கள், பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு ஆகியன உள்ள இந்த பிரதேசத்தின் பிரதான பாதை முற்றாக சிதைவடைந்து பாவனைக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க பல்வேறு அரச காரியாலயங்களை மக்கள் நாடியும் இதுவரை பொருத்தமான தீர்வு கிட்டவில்லை.

இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொண்டு தீர்வை பெற்றுத்தருமாறு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்களிடமும், உரிய அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

தவிசாளர் உவைஸ் தலைமையில்   அட்டாளைச்சேனை கோணாவத்தை - 08பொதுமையவாடி சிரமதானம்...!!!(றியாஸ் இஸ்மாயில்)வளமான நாடும் - அழகான...
21/09/2025

தவிசாளர் உவைஸ் தலைமையில் அட்டாளைச்சேனை கோணாவத்தை - 08
பொதுமையவாடி சிரமதானம்...!!!

(றியாஸ் இஸ்மாயில்)

வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்' என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று (20) பொது பயன்பாட்டு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை -08 கோணாவத்தை பொது மையாவாடியை மேம்படுத்தும் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டாரத்தின் பிரதேச சபை
உறுப்பினர் IL.அஸ்வர்சாலிஹ் HNDE,BA,
MBA பங்கேற்புடன் இச் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

​இந்த முயற்சியில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கௌரவ பாரூக் நஜீத், கௌரவ பிரதேச சபையின் உறுப்பினர்களான IA.ஸிறாஜ், AL.பாயிஸ்(ADE) SIA.றியாஸ் பிரதேச சபையின் செயலாளர் LM.இர்பான், கிராம அபிவிருத்தி சங்கம் அட்டாளைச்சேனை கோணாவத்தை தலைவர் அதிபர் MIM.றியாஸ், அட்டாளைச்சேனை -08
சனசமூக நிலைய பதில் தலைவர் KA.
ஹமீட், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் SMM.அமீன் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் கழகங்களி
ன் உறுப்பினர் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

​பொது மையாவாடி என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொது இடம். ஆகவே இதை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நம் அனைவரின் கடமையாகும்.

சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு -2025✍️மஜீட் ARM​2025 செப்டம்பர் 20 இன்று, சம்ம...
20/09/2025

சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு -2025

✍️மஜீட் ARM

​2025 செப்டம்பர் 20 இன்று, சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் சந்தை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

​சிறுவர்களின் திறமைகளையும், ஆளுமையையும் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்தது.

​இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக தேசிய பாடசாலையின் அதிபர் அல் A.R.M.உவைஸ் , Z.M. நிஸ்வி (I.S.A), மற்றும் அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் பணிப்பாளர் U.L.M. சலாஹுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

​மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரின் உற்சாகமான பங்கேற்புடன் இந்த நிகழ்வு பெரும் வெற்றியைப் பெற்றது.

சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையில், அடுத்த கல்வியாண்டு 2026-க்கான புதிய மாணவர் அனுமதி விண்ணப்பங்கள் இப்போது கோரப்படுகின்றன.

தவிசாளர் உவைஸ் உறுப்பினர்கள் அன்ஸில் மற்றும் நியாஸ் அக்கரைப்பற்றில் கெளரவிப்பு சொக்கோ நிறுவனத்தின் சர்வதேச விருது விழா  ...
20/09/2025

தவிசாளர் உவைஸ் உறுப்பினர்கள் அன்ஸில் மற்றும் நியாஸ் அக்கரைப்பற்றில் கெளரவிப்பு

சொக்கோ நிறுவனத்தின் சர்வதேச விருது விழா அக்கரைப்பற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைப்பெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் தேசமாணி ஏ.ஜே.றியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பல்வேறு பட்ட ஆளுமைமிக்கவர்கள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில்.மற்றும் ஏசி நியாஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்கே எ ஹமீட்  அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்...
20/09/2025

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கே எ ஹமீட்

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் பாராளுமன்றச் சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (20.09.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம்.ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பரபரக்கும் அரசியல் களம் - மஹிந்த+ கோட்டாபய திடிர் சந்திப்பு - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) தனது சகோதரரு...
19/09/2025

பரபரக்கும் அரசியல் களம் - மஹிந்த+ கோட்டாபய திடிர் சந்திப்பு -

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இன்று மதியம் தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடல், குடும்ப விவகாரங்கள் குறித்தும் மேலும், தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் சில விவாதங்கள் நடந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுடன் மதிய உணவையும் உண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, கோட்டாபய ராஜபக்ஷ கொழும்புக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்பெ...
19/09/2025

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் "ஓயாத புயலும் சாயாத மரமும்" எனும் நூலும் இதன் போது வெளியீட்டு வைக்கப்பட்டது.

நூலின் முதற்பிரதியை முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீதின் மனைவி மற்றும் மகன் ஹக்கானி மஜீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூலாசிரியர் நபீல் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 20 ஆவது நினைவு தினப் பேருரையை 2020ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நிகழ்த்தியிருந்தேன். இன்று அன்னாரது 25ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவுப் பேருரை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த ரவூப் ஹக்கீமுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களும் நெருடல்களும் தொடர்ந்தும் நிலவி வருகிற காலத்தில் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தடவையாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெரும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். புட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் நீத்துப் பெட்டி அல்ல, (குழல் புட்டு) எமது சமூகங்களின் உறவு என்றுமில்லாதவாறு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையால், அந்த தலைப்பிலேயே இந்த நினைவுப் பேருரையை ஆற்றலாம் என்று எண்ணினேன். அதுவே பெருந் தலைவர் அஷ்ரபுக்குச் செய்யும் உயரிய அஞ்சலியாகவும் கருதுகிறேன்.

தமிழ்-முஸ்லிம் உறவு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் உயிர் வாயு (oxygen) போன்றது. முழு நாட்டின் சூழ்நிலைக்கும் இது பொருத்தமானது. என்றாலும் ,அதன் வெற்றியோ, தோல்வியோ கிழக்கிலே, அதுவும் அம்பாறை மாவட்டத்திலேயே நிச்சயப்படுத்தப்படும் என்பதை பெருந்தலைவர் அஷ்ரப் நன்கு அறிந்திருந்தார். தமிழ் பேசுகிற முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். ஆனால், அதே சமயத்தில் தமிழ் மக்களோடு பின்னிப்பிணைந்த ஓர் அடையாளத்தையே அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு.

ஒன்று, தாய்மொழி என்கிற ஆழமான அடையாளம் தமிழ் பொதுவுடமை என்ற கவிதையிலே மாரட்டின் லூதர் கிங் ஐப் போல கனவொன்று கண்டேன் என்று ஆரம்பித்து ஏழுதிய கவிதையிலே அஷ்ரப் இதை எவ்வளவுக்கு அழுத்திக் கூறியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, தான் ஒரேயொரு ஆங்கிலக் கவிதை எழுதியதாகவும் ஆனால், சமூகத்துடன் எனது தாய் மொழியான தமிழில் தொடர்பு கொள்வது எனக்குப் பெரும் நிம்மதியைத் தருகிறது என்றும் எழுதியிருக்கிறார். அரசியல் கண்ணாடியூடாகப் பார்த்தாலும் உலகெங்கும் மொழி என்பதே அரசியல் ஆட்புலங்களை நிர்ணயம் செய்கிறது என்பது புலப்படும். உலக வரைபடத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகளை அவதானித்தால் இது தெளிவாகத் தெரியும். ஐரோப்பா இதற்கு நல்ல உதாரணம். தாய்மொழி அடிப்படையிலேயே சகல நாடுகளும் பிரிந்திருக்கின்றன. தனித்தனி நாடுகளாகப் பிரியாவிட்டாலும் சுவிட்ஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சமஷ்டி அலகுகள் மொழி அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன. எமது அண்டை நாடான இந்தியாவிலும் மொழிவாரியான மாநிலங்கள் (linguistic states) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அலகுகள் அமைந்துள்ளன. இதற்கான காரணத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சமுக வாழ்விற்கு மொழி இன்றியமையாதது. ஒரு மொழி இல்லாமல் ஓர் அரசியல் அலகாக இயங்க முடியாது. மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி சம்பாஷித்து கலந்துரையாடி தங்களைத் தாங்களே ஆள்வதையே ஜனநாயகம் என்கிறோம். இதைச் செய்வதற்கு மொழி இன்றியமையாதது. மொழிபெயர்ப்போடு செய்யப்படும் கலந்துரையாடலையும் ஒரே மொழியில் நிகழும் சம்பாஷனையையும் ஒப்பிட முடியாது. அதுவும் ஆட்சி அதிகார விடயங்களில் மொழிபெயர்ப்பில் தங்கியிருப்பது ஆபத்தில் கூட முடியலாம். இலங்கை நாட்டில் இரண்டு தாய்மொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆகவே, அரசியல் அலகுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்தப் பிரதான பிரிவு முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவது தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டிலே எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ் - முஸ்லிம் என்ற இரு சமுகங்களைச் சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள். அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படியாக நாம் சேர்ந்து இயங்கும்போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்த நாட்டின் ஆட்சி முறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டுமென்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ஒரு சுயாட்சி தமிழ் அரசும் ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சி யாப்பில் நோக்கம் என்ற தலைப்பின் கீழ் விதி 2 இலேயே கூறியுள்ளது. சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் தர்மலிங்கத்தின் நினைவு நாளில் நான் கூறியபடி 1971ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் எமது கட்சியின் மாதிரி அரசியல் யாப்பை முன் வைத்த போதும், இதே எண்ணத்தின் அடிப்படையிலே ஐந்து சமஷ்டி அலகுகளாக நாடு பிரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஐந்தும், தெற்கு, மேற்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், வட மத்திய வட மேல் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், மத்திய பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், வட, வட கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், தென்கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம் என்றும் இருந்ததை நான் நினைவுபடுத்தியிருந்தேன். இதே கோட்பாட்டின் அடிப்படையிலேதான் பெருந்தலைவர் அஷ்ரபுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பின்னைய நாட்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் ஒரு தெரிவாக தென்கிழக்கு அலகு இருந்தது. அதைக் குறித்து அஷ்ரப் தினகரன் வாரமஞ்சரிக்கு 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கொடுத்த நேர்காணலில் இப்படிக் கூறியிருக்கிறார்.

அஷ்ரப், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலே அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் அதைப் பெற்றுத் தருவான் என்று முழங்கியது எவரும் அறிந்ததே. ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியபோது அவர் அந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்று பயணிக்க ஆரம்பித்தார். இன்று தமிழ் மக்களும் அவர்களது தலைவர்களும் அதே நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறர்கள். இதிலே விசித்திரமான உண்மையொன்று என்னவென்றால், அந்த தேர்தலுக்குப் பின் ஜே.ஆர்.ஜயவர்த்தன தமிழர் விடுதலைக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் வடக்கு கிழக்கில் 50% இற்கு குறைவானதால் தனி நாட்டுக்கான ஆணை கிடைக்கவில்லை என்று கூறியபோது, அமர்தலிங்கம் கிழக்கிலே முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளிலும் புத்தளத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வியுற்றிருந்தாலும், அங்கு பெற்ற 26,496 மொத்த வாக்குகளையும் சேர்த்து 50%ஐ தாண்டியதாகக் காட்டியிருந்தார். இதிலேயும், தொகுதிகளிலே தோல்வியுற்றிருந்தாலும், அஷ்ரபின் பிரசாரத்தின் பலனாகவே எமக்கான ஆணையைக் காட்டக் கூடியதாக இருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.

2000 ஆகஸ்ட் 3ஆம் திகதி சந்திரிகா அம்மையார் பெயரில் இல்லாவிட்டாலும் உள்ளடக்கத்தில் சமஷ்டியை ஒத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை பிரேரித்த போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கிற வரைக்கும் பேசுமாறு பணிக்கப்பட்டு 5 1/2 மணி நேரம் அஷ்ரப் உரையாற்றியதை எவரும் மறக்க முடியாது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தால் இன்று அப்படியான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளடங்களான ஆட்சி முறை இருந்திருக்கும்.

தந்தை செல்வா என்று நாம் அன்போடு அழைக்கும் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எமக்கு மட்டும் தலைவரல்ல. பெருந் தலைவர் அஷ்ரபுக்கும் தந்தை செல்வாதான் தலைவர், அதற்கு அஷ்ரப் தந்தை செல்வா பற்றி 'நான் எனும் நீ' நூலில் எழுதிய கவிதைகள் அதற்குச் சான்று.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவார்கள். பல தடவைகளில் கல்முனை போன்ற தொகுதிகளில் தேசிய கட்சிகளின் இரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடையில் பலத்த போட்டி ஏற்பட்டால் எமது கட்சிக்காரர்கள் தந்தை செல்வாவிடம் வந்து இந்தத் தடவை நாம் தமிழர் ஒருவரை நிறுத்தினால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் போது தமிழர் வெல்ல வாய்ப்பு உண்டு என்று கூறுவார்களாம். ஆனால், அவரோ அதற்கு ஒருபோதும் இணங்கினதில்லை. அது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. வென்றாலும் தோல்வியுற்றாலும் ஒரு முஸ்லிமையே நிறுத்த வேண்டும் என்று கூறுவார். தமிழ் பேசும் மக்களாக ஒன்றாகப் பயணித்தாலும், இரு சமூகங்களினதும் தனித்துவத்தை மதித்து அதற்கு இடமளித்து இணைந்து செய்கிற பயணமாக அது இருக்க வேண்டும். இணைந்து செயற்படுவது அத்தியாவசியம். ஆனால், அந்த இணைவு பரஸ்பரம் எமது தனி அடையாளங்களை மதித்து அவற்றை வெளிப்படுத்துகிற விதமான அலகுகளையும் நாம் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

தனியான பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் போது வெட்டுப் புள்ளியின் விகிதாசாரத்தை 12.5% இலிருந்து 5% ஆக மாற்றிய பெருமை முற்று முழுதாக பெருந் தலைவர் அஷ்ரபையே சாரும். ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேசி பெரும் அழுத்தம் கொடுத்து அந்த மாற்றத்தை அரசியலமைப்பில் ஏற்படுத்தியவர். இது சிறுபான்மைக் கட்சிகளுக்கு மட்டுமல்ல. சென்ற வருடம் வரை சிறு கட்சியாக இருந்த ஜே.வி.பி. இற்கும் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அந்த மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் தான் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவே முடிந்தது. அப்படி உள் நுழைந்தமையால் தான் இன்று ஆட்சிபீடம் ஏறக்கூடியதாக இருந்திருக்கிறது. இந்த விடயத்திலும் வேறு பல விடயங்களிலும் அஷ்ரப் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேரம் பேசுவது குறித்து பல பாடங்களை எங்களுக்குப் புகட்டிச் சென்றிருக்கிறார். இது விசேடமாக தமிழ் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்று, எதிர்காலத்தில் தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இதற்கு பெருந்தலைவர் அஷ்ரபினதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினதும் தீர்க்கதரிசனமான கடந்தகால செயற்பாடுகள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அந்த முன் மாதிரிகளை பின்பற்றினாலேயே தமிழ் - முஸ்லிம் உறவின் மூலமாக எமது இரண்டு சமூகங்களினதும் இருப்பை நாம் உறுதி செய்வது மட்டுமன்றி, எம்மை நாமே ஆளக்கூடிய ஆட்சி முறையை இந்த நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆப் பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், எம்.எஸ் அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக், தேசிய காங்கிரஸ் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் தவிசாளர்கள், பிரதித்தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் - பொலிஸ் அறிவிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் ...
19/09/2025

5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் - பொலிஸ் அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் 02 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையின் போது, ​​பிஹிம்பியகொல்லேவ பகுதியில் இன்று 138 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு்ள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் ஒரு அச்சுப்பொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 42 வயதுக்குட்பட்ட ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு(எம்.எஸ்.எம்.ஸாகி...
18/09/2025

கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் அழைப்பின் பேரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உட்பட வைத்தியர்கள், வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மூன்று மாடிகளைக்கொண்ட இக்கட்டிடமானது சுகாதார அமைச்சின் சுமார் 150 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் வைத்தியசாலையின் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை தான் எடுப்பதாகத் தெரிவித்ததோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் உறவாடி, அவர்களது நலன் தொடர்பாக விசாரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Address

NO 132 Central Road Addalaichenai 15
Akkaraipattu
32350

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் letter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ் letter:

Share

Category