Rks தமிழ்

Rks தமிழ் செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர், அல்லாஹ் முன் பதிலளிக்க வேண்டிய நாள் வரும். அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.சுயேட்சை ...
06/04/2025

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர், அல்லாஹ் முன் பதிலளிக்க வேண்டிய நாள் வரும். அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான் ஆதங்கம்.

முஸ்லீம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜானதிபதியை முஸ்லீம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் புரிந்து
கொள்ள வேணடும். என அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஒட்டக சிவிங்கி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு வின் முதன்மை வேட்பாளர் றுக்சான்
நேற்றய மக்கள் சந்திப்பின் போது தெரிவி்த்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்த
காலம் இருந்து இதுவரை முஸ்லீம்கள் மீதான புறக்கணிப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

கிழக்கு மாகாண சபையில் ஆரம்பித்த புறக்கணிப்பு அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கான இடம் தரப்படாமல் அதன் பின்னர் அணைத்து விடயங்களிலும்
முன்னுக்கு பின் முரண்பாடான போக்குடன் அரசு நடந்து கொண்டு வருவதனால்
மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அண்மையில் இஸ்ரேல் நாட்டிற்க்கு எதிராக றுஸ்தி எனும் இளைஞன் ஸ்டிகர் ஒட்டினார் என்பதற்காக 90 நாட்கள் பயங்கரவாத தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே வேளை பாலஸ்தீன மண்ணில் குண்டு மழை பொழிந்து உடல்கள் சிதறுகின்ற காட்சிகளையும் ஓலங்களையும் காண்கிறோம் பயங்கரவாதியான கொலைகாரனுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை கைது செய்யததன் ஊடாக இந்த நாட்டின் முஸ்லீம்களை அரசு கேவலப்படுத்தி இருக்கின்றதா?

எம்மை இன்னும் முட்டாள்களாக்க திசை காட்டி முனைவது எதற்காக என புரியவில்லை?

ஓரின சேர்க்யைாளர்களது விடயம்
இஸ்லாமிய திருமண சட்டத்தின் மீதான காய்நகர்த்தல் என்பனவும் முஸ்லீம்கள் மீதான இஸ்லாத்தின் மீதான பாரிய முரண்பாடான செயற்பாடாகும்.

எனவே இவை தொடர்பில் தேர்தலுக்காக அல்ல படைத்த அல்லாஹ் விடமும் நாம் திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்பதனால் பதில் சொல்ல வேணடி வரும் என செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மக்களுக்காக களம் காண்கிறோம் – நமக்காக நாம் ஆவோம்!அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் எமது சுயேச்சை அணியானது, ...
04/04/2025

மக்களுக்காக களம் காண்கிறோம் – நமக்காக நாம் ஆவோம்!

அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் எமது சுயேச்சை அணியானது, வேட்புமனு தாக்கல் செய்த தினத்திலிருந்து இதுவரை, தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்புமனு நிராகரிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியான வழக்கு தீர்ப்புகள் காரணமாக எந்தவிதமான பிரச்சார நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இன்று 2025.04.04, தேசிய காங்கிரஸின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதனால், தேர்தலில் போட்டியாளர்களின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!

எமது சுயேச்சை அணியின் தேர்தல் கொள்கை, நோக்கங்கள், மற்றும் மக்களுடன் மேற்கொள்ளும் பயணம், எந்தவிதமான அரசியல் தொடர்புமின்றி, மக்களிடையே நேரடியாக முன்வைக்கப்படும்.

மனித நேயம் நிறைந்த, சமூகத்தை நேசிக்கும் இளைஞர்களாக, உங்கள் முன்னே வருகின்றோம்.

உங்கள் ஆசியையும் ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கிறோம்!

அன்பு மிகு வாக்காளர் பெருமக்களே,
M.M றுக்சான் தலைமையிலான சுயேட்சை குழு 1-ஐ ஆதரிப்போம்!

வாக்களிப்போம் – சரித்திரம் படைப்போம்!

❌🦒❌

40 ஆண்டு கால நிர்வாக சேவையில்  ஜனரஞ்சகம் கொண்டவர் கோபாலரத்தினம் ஆட்டம்..., பாட்டம்...கொண்டாட்டம்...!அரசு நிர்வாக சேவை அத...
03/04/2025

40 ஆண்டு கால நிர்வாக சேவையில் ஜனரஞ்சகம் கொண்டவர் கோபாலரத்தினம்

ஆட்டம்..., பாட்டம்...கொண்டாட்டம்...!
அரசு நிர்வாக சேவை அதிகாரி ஒருவரின் புதுமை புகுத்தலை கண்டு வியந்து போனவர்கள் ஏராளம். நிர்வாகம் என்பது ஆற்றல் வாய்ந்த பெருங்கலை என்பதை நிரூபித்தவர் தம்பி மூத்ததம்பி கோபாலரத்தினம்.

40 ஆண்டுகாலம் அரச நிர்வாகப் பணியை கட்டி இழுப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. கல்லில் நார் உரிக்கும் சாதனைப் பயணம் அது. தொழிற்சங்கப் போராட்டங்கள் ; இனங்களின் அதிகாரப் போட்டிகள் ; ஊழியர்களின் பதவிகளுக்கான கயிறு இழுப்புகள்...... உட்பட சகல முரண்பாடுகளையும் மென்போக்கில் கையாண்டு நிர்வாக கட்டமைப்புகளில் சுமூகநிலையை ஏற்படுத்தி - சமூக நன்மதிப்பை தனதாக்கிக் கொண்டவர் கோபாலரத்தினம்.

"நிர்வாகி என்பவர் ஒரு நிபுணரை விடவும் அதிக ஆற்றல் வாய்ந்த பாத்திரமாகும். ஒரு நிறுவனத்தை ( அரசு / தனியார் ) சீரிய வழியில் வழி நடத்தும் முக்கிய பொறுப்பு நிர்வாக அதிகாரியிலேயே தங்கி இருக்கிறது.அவர்கள் பொதுவாக தகவல்தொடர்பு, அதிகாரத்துவம், சட்டப்பூர்வத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் சிக்கல்களை நிர்வாக அதிகாரிகளே கையாளுகிறார்கள்." இவ்வாறு மேற்குலக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வரையறைகளுக்கும் அப்பால், தன்னை அர்ப்பணித்து ஈடுபடுத்திக் கொண்ட முழுமையான ஓர் அதிகாரியாக திகழ்ந்தவர் கோபாலரத்தினம்.. பட்டதாரி கற்கையை பூர்த்தி செய்து, ஆசிரியர் துறைக்குள் புகுந்த இவர், இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் ( SLAS ) முதன்மை தரத்தில் சித்தி அடைந்தவர்.

கிழக்கு மாகாணத்தில் - குச்சவெளி, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி, திருக்கோயில் உட்பட பல்வேறு பிரதேச செயலகங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர்,நிர்வாக நடைமுறைகளில் புதுமைகளைப் புகுத்திய பெருமைக்குரியவர்.

நிர்வாகத்தை பொறுப்பேற்று உயர் அதிகாரியாக இவர் பணிபுரிந்த பிரதேச செயலகங்களில் எல்லாம், சிக்கலில் இருந்த மக்கள் பிரச்சினைகள் அனைத்துக்கும் சுமுகமாக தீர்வு காணப்பட்ட விதம் , பொது நிர்வாக அமைச்சுக்கே ஆச்சரியம் அளித்தது.

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இவர் பணியாற்றிய காலம் அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியின் பொற்காலம் என்று கூறுவதில் மிகையில்லை. இவருடைய நிர்வாகத் திறமைக்கு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தலை சிறந்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கு, மாவட்ட நிர்வாக பொறுப்பு ஒன்று வழங்கப்படவில்லை என்பது பெரும் குறையாகவே என்னால் பார்க்க முடிகிறது. இதற்கு அரசியலின் கோரக்கரங்களும் அதன் சித்து விளையாட்டுக்களும் பின்புலம் என்பதை நான் அறிவேன்.என்றாலும், இலங்கையின் திறைசேரியின் மேலதிக பணிப்பாளராக கோபாலரத்தினம் நியமனம் பெற்ற போது, இலங்கை திருநாட்டின் தேசிய நிதி நிர்வாகத்திலும் தான் யார் என்பதை அடையாளப்படுத்தியவர். திறைசேரி என்பது மத்திய வங்கியின் கீழ் செயல்படும் நிதிக் கட்டமைப்பை கையாளும் பிரிவு.

இதேபோல, கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பொறுப்புகளை சுமந்தவர் கோபாலரத்தினம். இவரது திறமை கண்ட கிழக்கு மாகாண ஆளுநர்கள் - திருமதி அனுராதா ஜஹம்பதி , செந்தில் தொண்டமான், தற்போதைய ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோர் மாகாண சபையின் பேரவை செயலாளர் பொறுப்பு உட்பட பல்வேறு உச்ச பொறுப்புகளை இவரிடம் கையளித்திருந்ததானது, நிர்வாக திறமைக்கு கிடைத்த நற்சான்றுகளாகவே நம்மால் பார்க்க முடியும். மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய இவர், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக கடமை ஏற்று தீர்க்க முடியாமல் காலம் காலமாக இழுபட்டு வந்த பிரச்சனைகளுக்கெல்லாம் நேர்த்தியான தீர்வுகளை கண்டார் என்பதை நான் அறிவேன்.

உண்மையில், நிர்வாக விடையங்களை கையாளுவதில் இலங்கையில் ஒரு புதுமையான அதிகாரியாகவே இவரை அடையாளம் காண முடிகிறது. நிர்வாகத்தை முதன்மைப்படுத்தி செயல்படும் ஒருவருக்கு personality - தனித் தன்மையான பண்பு இருக்க வேண்டும். இதனை குண நலனோடு சேர்ந்த ஆளுமை என்று கூட கூறலாம். திரு.கோபாலரத்தினத்திடம் இந்த முழுமையை நான் கண்டேன்.

முத்துப்பல் தெரியும் அவரது சிரிப்பும், முறுக்கி விடப்படாத மீசைக்கட்டும், ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வசீகர தோற்றமும் இவரது திறன் விருத்திக்கு பக்கபலம் சேர்த்தது. இன்னும் ஒரு விடயத்தையும் இவரிடம் கண்டேன். பிரித்தாளும் தந்திரத்தால் - Divide and Rule - எதனையும் சாதிக்க முடியாது என்பதை நிரூபித்து இருப்பவர் கோபாலரத்தினம். அலுவலகப் பணியாளர்களை எல்லாம் தன்னுடைய அரவணைப்பால் வெற்றி கொண்டு, திறன் அபிவிருத்தியை நிரூபணமாக்கி இருப்பவரும் இவர்தான்.
அதிகாரிகளையும் அலுவலகப் பணியாளர்களையும் மகிழ்ச்சியோடு வழிநடத்துகின்ற திறமை இவருக்கே உரித்தானது.

ஒன்று கூடல்கள் , ஆட்டம்.. பாட்டம்... மகிழ்ச்சி... என்பது இவரது சாமர்த்தியமான அணுகுமுறை. பாடுவதிலும் ஆடுவதிலும் இவரும் ஒரு வல்லவர் என்பதை ஊழியர்களோடு சேர்ந்தே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளும் சிறந்த பண்பை
இவரிடந்தான் காண முடியும்.

தன்னோடு பணியாற்றும் ஊழியர்களின் அடியாழத்தை தேடி வீடு சென்று, ஊழியர் நலம் பேணுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இப்படி ஒரு நிர்வாக அதிகாரியை நான் இலங்கையில் கண்டதே இல்லை.
ஊழியர்களை பிரித்தாளும் தந்திரத்தை அடியோடு ஒதிக்கித் தள்ளிவிட்டு - அவர்களோடு அவர்களாக இருந்து பணிகளை செய்யும் அணுகுமுறை, சாத்தியமானது என்பதை நிரூபித்து காட்டியிருக்கும் தம்பி கோபாலரத்தினம் இலங்கை நிர்வாக சேவைக்கு சிறந்ததொரு உதாரண புருஷர். தலை சிறந்த ஒரு நிர்வாக அதிகாரியின் சமூகப் பணி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

க.குணராசா.
தினகரன் -வாரமஞ்சரி, 'ஒருவன்' பத்திரிகைகளின்
முன்னாள் பிரதம ஆசிரியர்

இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை(எஸ்.எம்.அறூஸ்)இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்  ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழ...
31/03/2025

இறக்காமத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை

(எஸ்.எம்.அறூஸ்)

இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழுகை இறக்காமம் குளக்கரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.கே.அப்துல் ரஊப் மௌலவி பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இன்று நோன்புப் பெருநாள் தொழுகை - பொது மைதானம் அக்கரைப்பற்று
30/03/2025

இன்று நோன்புப் பெருநாள் தொழுகை - பொது மைதானம் அக்கரைப்பற்று

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்க...
27/03/2025

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைவு..

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினரும்,அமைப்பாளரும்,பொதுத்தேர்தல் வேட்பாளரும்,தொழிலதிபருமான AK . அமீர் இன்று 27.03.2025(வியாழக்கிழமை) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாரளமன்ற உறுப்பினரும் சட்ட முதுமானியுமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதுடன்,எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளரும்,கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான MS. உதுமாலெப்பை MP மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் தேசிய பொருளாலர் றஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான AC.சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ALM.அலியாரும் மற்றும் அமீர் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தின்  வருடாந்த இப்தார் நிகழ்வு (சர்ஜுன் லாபீர்,தில்சாத் பர்வீஸ்,ஏ.எச்.எம் ஹாரீஸ்)அம்பாறை மாவட்ட செ...
24/03/2025

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்,தில்சாத் பர்வீஸ்,ஏ.எச்.எம் ஹாரீஸ்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் நேற்று (24) நடைபெற்றது.

சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி சஹ்றான் ஹஸன்(அன்வாரி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் திகவாபி விகாராதிபதி பேதி வேல சந்தானந்த நாயக்க,கல்முனை சிவஸ்ரீ க.வி பிரமின் குருக்கள்,அம்பாறை மேதடிஸ் ஆலய அருட் தந்தை ரோகான் அப்பு காமி
உட்பட மத போதகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர், பிரதம கணக்காளர் ஏ.எம்.எம் மஹ்ரூப்,பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரீஸ, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயளாலர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள்,பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் பொலிஸ் மற்றும் இரானுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு மாவட்ட செயலக முஸ்லிம் மஜ்லிஸின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லோயா ஆற்றுப் பிரிவின் யல போகத்திற்கான(சிறுபோகம்) ஆரம்ப கூட்டம்(சர்ஜுன் லாபீர்)கல்லோயா ஆற்றுப் பிரிவின் யலபோக(சிறுபோகம...
19/03/2025

கல்லோயா ஆற்றுப் பிரிவின் யல போகத்திற்கான(சிறுபோகம்) ஆரம்ப கூட்டம்

(சர்ஜுன் லாபீர்)

கல்லோயா ஆற்றுப் பிரிவின் யலபோக(சிறுபோகம்) நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று(19) திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சிறுபோகத்திற்கான விதைப்புகாலம்,நிர்விநியோகம்,பயிர்காப்புறுதி, விதைக்கும் நெல்லினம்,மாடுகளை அப்புறப்படுத்தல்,கிளை வாய்க்கால் துப்பரவு,போன்ற விடயங்களுக்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்தில் கல்முனை நீர்பாசன திணைக்கள பிரிவில் 13263 ஏக்கர் காணிகளும்
அக்கரைப்பற்று நீர்பாசன காரியாலயத்தில் வீரயடி பிரிவில் 4558 ஏக்கர் காணிகளும், சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 22218 ஏக்கர் காணிகளும் இம்முறை சிறுபோக விவசாய செய்கைக்காக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.டி.எம் இர்பான்,இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் ரஸ்ஸான்(நளிமி) ,நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியிலாளர்கள்,கமநல திணைக்கள உயர் அதிகாரிகள்,விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,உரக் கூட்டுத்தாபன அதிகாரிகள்,நெல் ஆராய்ச்சி திணைக்கள உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள்
ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவர், அதன் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத்...
19/03/2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இலங்கை நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில் ஃபுளோரிடா அருகே கடலில் இறங்கியது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்  -  அட...
18/03/2025

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

- அட்டப்பள்ளத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஆதம்பாவா எம்.பி தெரிவிப்பு

அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த (16) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் ஏ.எல்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஆதம்பாவா எம்.பி.தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கு வகிக்கிறது. நெல்லை அரிசியாக மாற்றி இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் வழங்கும் அரிசி உற்பத்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.

நாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சகல வழிகளிலும் பெரும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர். அவர்கள் நாட்டுக்குரிய வர்த்தகர்களாக மாத்திரமில்லாமல் உற்பத்திகளை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும்.

இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று எமது நாடும் மாற்றமடையும்.இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு...(சர்ஜுன் லாபீர்)சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார...
17/03/2025

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு...

(சர்ஜுன் லாபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17) மிக விமரிசையாக நடைபெற்றது.

சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எல்.எம் பஷீர்(மதனி)மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம் நெளசாத்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம் மாஹீர்,முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எம்.எம் மஹ்ரூப்,பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரீஸ,பிராந்திய நீர்பாசன திணைக்கள.பொறியியலாளர் ஆர்.வேல்கஜன்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர்,அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள்,பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஹ்மத் பவுண்டேசனினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு===============================(எம். என்.எம்.அப்ராஸ், ஏ.எல். எம்.சி...
17/03/2025

ரஹ்மத் பவுண்டேசனினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
===============================
(எம். என்.எம்.அப்ராஸ், ஏ.எல். எம்.சினாஸ்,எம்.எம்.ஜபீர்)

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் புனித ரமழான் மாதத்தில் பொதுமக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்குகின்ற நிகழ்வு
கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் பவுண்டேசனின் கல்முனை தலைமைக்காரியாலயத்தில் நேற்று(16)
இடம்பெற்றது.

இவ் வாழ்வாதார உலர் உணவு பொதிகளை சீ.எஸ். டப்ளியு. எம்.ஏ (CSWMA) மற்றும் வை.எம்.எம்.ஏ (YWMA )யின் அனுசரணை வழங்கியதுடன் மற்றும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை அல் ஹிக்மா நலன்புரி அமைப்பினரும் வழங்கியிருந்தது

இதன் போது பொது மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் பொது மக்களுக்கு வழங்கி வைத்தத்துடன் அத்துடன் அங்கு இடம் பெற்ற நிகழ்வில் உலர் உணவு பொருட்கள் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் தனது நன்றியினை இதன் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

இந் நிகழ்விற்கு முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். நிஷார் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜெய்ஷான் மற்றும் உலமாக்கள்,பவுண்டேசனின் உறுப்பினர்கள் பயனாளிகள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

" மெத்தோமோனியா"  இது ஒரு வகை உளவியல் நோய் அறிகுறி. சுமார் 80% மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கப்படிருப்பதாக ஆய்வுகள் கூறுகி...
17/03/2025

" மெத்தோமோனியா" இது ஒரு வகை உளவியல் நோய் அறிகுறி. சுமார் 80% மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கப்படிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தனக்கு ஒரு பெறுமதியான புதையல் ஒன்று அல்லது பெரும் தொகை பணம் நிறைந்த பை ஒன்று கிடைக்கும் என்று கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டே இருப்பார்கள். அந்தப் பணம் கிடைத்ததும் அதனை எப்படி செலவழிக்க வேண்டும், என்ன என்ன வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

உங்களுக்கும் இந்த நோய் இருக்கிறதா..?

✍ தமிழாக்காம் / Imran Farook

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் - 2025பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்படுதல்..
16/03/2025

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் - 2025
பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்படுதல்..

இந்தப் படம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது.இன்று நாம் வானத்தில் பறந்து கொண்டிருக்கலாம். ஆனால், நாளை நம்மைத...
16/03/2025

இந்தப் படம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது.

இன்று நாம் வானத்தில் பறந்து கொண்டிருக்கலாம். ஆனால், நாளை நம்மைத் தூக்கிச் செல்ல தரையில் யாராவது தேவைப்படுவார்கள்.

எனவே எப்பொழுதும் பணிவாக இருங்கள், மனிதர்களை நேசியுங்கள், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை விதையுங்கள்.

நீங்கள் எவ்வளவு பெரிய பறக்கும் பொருளாக இருந்தாலும், ஒருபோதும் பறக்க முடியாத ஒன்று ஒரு நாள் உங்களைச் சுமந்து செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்குக் கீழே உள்ளவர்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். முடிந்தால் அவர்களை மேலே கொண்டு செல்லுங்கள், ஆனால் எப்பொழுதும் அவர்களைக் கீழே தள்ளாதீர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்றி முறையில் வழங்கப்படும் - முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு...ஸ்...
15/03/2025

பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்றி முறையில் வழங்கப்படும் -

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் நலீம் அவர்கள் தன்னுடைய பதவியை ராஜினாமாச் செய்தது முஸ்லிம் கா ங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகும்.இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான்கு மாதங்களுக்குள் ராஜினாமா செய்த வரலாற்றில் இது முதல் தடவையாகும்

இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கம் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்றி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்து உங்களையும் உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

முதலில் இறைவனை நன்றியுடன் புகழ்ந்தவனாக , என்னை நம்பி கட்சியின் தலைமையால் ஒப்படைக்கப்பட்ட ஒரு தேசிய ரீதியான மக்கள் பிரதிந...
14/03/2025

முதலில் இறைவனை நன்றியுடன் புகழ்ந்தவனாக ,

என்னை நம்பி கட்சியின் தலைமையால் ஒப்படைக்கப்பட்ட ஒரு தேசிய ரீதியான மக்கள் பிரதிநிதி எனும் பொறுப்பினை எனக்கு அங்கீகாரம் வழங்கிய எனது மண்ணின் மக்களுக்கும் , கட்சிக்கும் மீள சமர்ப்பணம் செய்த ஒரு வரலாற்று பெருமையை இந்த உயரிய சபையில் நிறைவேற்றிய ஒருவனாக!

தன் பதவியை தக்க வைக்கவும் , தன்னை நிலை நிறுத்தவும் வைக்கப்பட்ட விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காற்றிலே பறக்க விட்டு , அற்ப சலுகைகளை எதிர்பார்த்து கட்சிக்கும் , பிறந்த மண்ணுக்கும் , தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் தலை குனிவை உண்டாக்கி சென்றோர் வரிசையில் நானும் சேராது எடுத்த அமானிதத்தை சொற்ப காலம் என்றாலும் அதனை சரிவர நிறைவேற்றிய மக்கள் பிரதிநிதியாக தலை நிமிர்ந்து இந்த உயரிய சபையில் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.

பதவி ,பணம் ,அற்ப சலுகைகள் என்பன இறைவனை அஞ்சும் ஒரு உறுதியான அரசியல் கொள்கையும் ,நேர்மையும் ஊழல் ,சுரண்டல் அற்ற தெளிவான பாதையை கொண்டவனுக்கு தேவையற்ற ஒன்றாகும் என்பதை வாக்களித்த எனது மாவட்ட மக்களுக்கு , தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு சிறந்த கீர்த்தி மிகு செய்தியை இந்த ராஜினாமா ஊடாக சொல்லி இருக்கிறேன் ,
அரசியல் பதவிகளில் கிடைக்கும் ஊதியம் சலுகைகள் என்பன என்னை வாக்களித்து அங்கீகரித்த மக்களுக்கு உரித்தான ஒன்றாகும் அதனை துளியும் எனக்காக பாவிக்காமல் அந்த சம்பளத்தை மக்களுக்கு வழங்கும் நடைமுறையை 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியாக பின்னர் ஏறாவூர் நகர சபை தவிசாளராக இருந்து முன்னெடுத்து வந்ததுடன் நான் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் நடைமுறைப்படுத்தி இருக்கிறேன்.

இறைவனுக்கு நன்றி செலுத்தும் அதே வேளை என்னை நம்பிய கட்சிக்கும் , தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் , அதற்காக பாடுபட்ட என் அத்தனை கள செயற்பாட்டு உறவுகளுக்கும் , நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், உங்களால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை குறுகிய காலம் என்றாலும் சிறப்பாக மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காகவும் சமூக நலன் கருதிய முன்னெடுப்புக்களுக்காவும் சிறப்பாக பயன்படுத்தி உள்ளேன் என்ற ஆத்ம திருப்தியுடன் விடைபெற்று கொள்கிறேன்-

இப்புனித நாளில் யாரும் களங்கம் சொல்லி விடும் அளவு இல்லாத ஒரு பயணத்தை முன்னெடுத்த ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னில் சரி கண்டால் உங்கள் பிரார்த்தனைகளில் என்னை இணைத்து கொள்ளுங்கள் -

இறைவன் அனைவருக்கும் அருள் புரிவாயாக !

என்றும் மக்களுக்கான பணியில்

M.S. நளீம் -
தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் ,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மாவடிப்பள்ளி - காரைதீவு பிரதான வீதி Mavadipalli ➡️ Karaitivu 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
14/03/2025

மாவடிப்பள்ளி - காரைதீவு பிரதான வீதி
Mavadipalli ➡️ Karaitivu 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

Address

182/3 2/3 Common Road Akkaraipattu/16
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rks தமிழ்:

Share