Rks தமிழ்

Rks தமிழ் செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News

இரு புனிதஸ்தலங்களுக்கான சேவையில் மன்னர் சல்மானின் தாராளமும், இளவரசரின் நவீன முன்னேற்றமும்..!✍️ எஸ். சினீஸ் கான்மன்னர் சல...
14/11/2025

இரு புனிதஸ்தலங்களுக்கான சேவையில் மன்னர் சல்மானின் தாராளமும், இளவரசரின் நவீன முன்னேற்றமும்..!

✍️ எஸ். சினீஸ் கான்

மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வழிநடத்தலும்,
இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களின் பார்வைமிக்க தலைமைத்துவமும் சேர்ந்து, புனித ஹரம்களைப் பேணும் புனிதப் பணியில் சவூதி அரேபியாவை உலகம் பாராட்டும் உன்னத நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.

இரு புனிதஸ் தலங்களுக்கு சேவை செய்வது, சவூதி அரசின் வரலாற்றுப் பொறுப்பாக மட்டுமல்ல, அது அவர்களின் இதயப் பணி என்று மன்னர் சல்மான் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா உருவாகிய நாள் முதல், இந்தச் சேவையை தமது மிக முக்கியமான கடமையாகக் கருதி தலையாய முன்னுரிமையுடன் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

மன்னரின் இந்த அறிவிப்பு, ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் நோக்கங்களுக்காக உலகின் அனைத்தூ திசைகளிலிருந்தும் வரும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களின் ஆன்மீகப் பயணத்தை எளிதாக்குவதில், பாதுகாப்பான மற்றும் அமைதியான அனுபவத்தை வழங்குவதில் சவூதி அரேபியா கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களின் “பார்வை 2030” (Vision 2030) திட்டத்தின் கீழ், இரு புனிதத் தலங்களிலும் நடைமுறையில் உள்ள பிரம்மாண்ட விரிவாக்கப் பணிகள், நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள், யாத்ரீகர்கள் வசதிக்கான ஸ்மார்ட் சேவைகள் ஆகியவை சவூதி அரேபியாவை உலகின் முன்னோடியான ஆன்மீக மையமாக மாற்றியமைத்துள்ளன.
யாத்ரீகர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும், ஆன்மிக பூரணத்துடன் தங்கள் வழிபாட்டை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் நோக்கில், தங்குமிடம், போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அனைத்து துறைகளிலும் உலகத் தரச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோர் வழிநடத்தும் இச்சேவை ஒரு அரசுப் பொறுப்பாக அல்ல,
அல்லாஹ்வுக்கான ஒரு புனிதமான அமானிதமாக எடுத்துச் செல்கின்ற உண்மையான இஸ்லாமிய முன்னோடித்துவத்தின் சின்னமாக திகழ்கிறது.

நீதித்துறையின் மேம்பாட்டை பிரதிபலிக்கும் உலக நீதி மாநாட்டை நடாத்தும் சவூதி!எழுத்து: காலித் ரிஸ்வான்சவூதி அரேபியாவின் பட்...
11/11/2025

நீதித்துறையின் மேம்பாட்டை பிரதிபலிக்கும் உலக நீதி மாநாட்டை நடாத்தும் சவூதி!

எழுத்து: காலித் ரிஸ்வான்

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் அவர்களின் வழிகாட்டலுக்கமைய சவூதி நீதி அமைச்சு, இரண்டாவது சர்வதேச நீதி மாநாட்டை, இம்மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில் ரியாத் நகரில் நடாத்தவுள்ளது.
இம்மாநாட்டுக்காக சர்வதேச சட்ட நிபுணர்கள் மற்றும் நீதித்துறை வல்லுனர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இம் மாநாட்டில், நீதிபதிகள், சட்ட அறிஞர்கள் மற்றும் 40 நாடுகளிலிருந்து வரும் சட்டவல்லுனர்கள் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள், நீதித்துறை செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

சவுதி அரேபிய நீதி அமைச்சர் கலாநிதி வலீத் அல்-சமாஅனி கருத்துத் தெரிவிக்கையில் “இம் மாநாடு, நீதித்துறைத் தரத்தை உயர்த்துதல், வழக்குகள் துரிதமாக தீர்க்கப்படுதல், மற்றும் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அறிவு, அனுபவம் மற்றும் புதுமையான நடைமுறைகளைப் பகிர்வதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் எட்டு உயர்மட்டக் கலந்துரையாடல்களுக்கான அமர்வுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள், நீதித்துறையின் நவீனமயமாக்கல், நீதிமன்றங்களில் டிஜிட்டல் மாற்றம், மற்றும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதில் தரநிலைகளின் பங்கு போன்ற முக்கிய தலைப்புகளை ஆராயவுள்ளனர்.

மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாநாடு சவுதி அரேபியாவின் நீதித்துறைச் சீர்திருத்தங்களில் இடம் பெற்றுள்ள முக்கிய முன்னேற்றங்களை மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் நீதித்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்ள உதவும் எனவும் தெரிவித்தனர்.

இம் மாநாடு, நீதியும் சட்ட ஆட்சியும் சார்ந்த உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சவுதி அரேபியாவின் முயற்சிகளில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இது, சர்வதேச உரையாடல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான மையமாக சவூதி உருவாகி வரும் சிறப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக  #சட்டத்தரணி எம் ஐ இர்பான் கடமையேற்பு...!! #நிந்தவூர் பிரதேச சபையின் பதில்  #தவ...
10/11/2025

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக #சட்டத்தரணி எம் ஐ இர்பான் கடமையேற்பு...!!

#நிந்தவூர் பிரதேச சபையின் பதில் #தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம் ஐ இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர் எம் ஏ எம் றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ் சிஹாப்தீன், உட்பட பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Congratulations 👏 🎉

 #நுஜா ஊடக அமைப்பின் 21 ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டம்  #நுஜா ஊடக அமைப்பின் 21 வது பொதுத் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கா...
08/11/2025

#நுஜா ஊடக அமைப்பின் 21 ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டம்

#நுஜா ஊடக அமைப்பின் 21 வது பொதுத் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒலுவில் மஷாலா கார்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வில் 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்படுவதுடன் கெளரவிப்பும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

🕋 ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கான சவுதி அரேபியாவின் நவீன தொழில்நுட்பப் புரட்சி..!✍️எஸ். சினீஸ் கான்.புனித மக்கா மற்ற...
05/11/2025

🕋 ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கான சவுதி அரேபியாவின் நவீன தொழில்நுட்பப் புரட்சி..!

✍️எஸ். சினீஸ் கான்.

புனித மக்கா மற்றும் மதீனாவை நோக்கி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மேற்கொள்ளும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள், இப்போது சவுதி அரேபியாவின் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியினால் மேலும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாறியுள்ளன.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்சௌத் அவர்களும், இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மத் பின் சல்மான் அவர்களும் தலைமையேற்று முன்னெடுத்து வரும் “விஷன் 2030” திட்டத்தின் கீழ், புனித யாத்திரையின் ஒவ்வொரு படியிலும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், யாத்ரீகர்களின் ஆன்மீகப் பயணம் நவீனத்தன்மை, வசதி மற்றும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது.

1️⃣ ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் - “நுசுக்” (Nusuk)

யாத்ரீகர்களின் முழுப் பயண அனுபவத்தையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் “நுசுக்” தளம், விசா விண்ணப்பம், பயணத் திட்டமிடல், தங்குமிட ஏற்பாடு மற்றும் உம்ரா அனுமதி போன்ற 120-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது.
இதன் மூலம் யாத்ரீகர்கள் தங்கள் புனிதப் பயணத்தை வீட்டிலிருந்தே திட்டமிட்டு, வெளிப்படையாக சேவைகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.

2️⃣ செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கூட்ட முகாமைத்துவம்.

“பசீர்” (Baseer) மற்றும் “ஸவாஹெர்” (Sawaher) போன்ற நவீன AI அமைப்புகள் ஆயிரக்கணக்கான கேமராக்களின் உதவியுடன் யாத்ரீகர்களின் நடமாட்டத்தை நேரடி முறையில் கண்காணிக்கின்றன.
இதன் மூலம் அதிக நெரிசல் ஏற்படும் பகுதிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு படைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.
மேலும், பல மொழிகளில் பேசும் ரோபோக்கள் மஸ்ஜித் அல் ஹராம் மற்றும் மஸ்ஜித் நபவியில் வழிகாட்டுதல், மத விளக்கங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குகின்றன.

3️⃣ ஸ்மார்ட் ஹஜ் அட்டை மற்றும் மருத்துவ வசதிகள்.

ஒவ்வொரு யாத்ரீகருக்கும் வழங்கப்படும் ஸ்மார்ட் ஹாஜ் அட்டை, அவர்களின் டிஜிட்டல் அடையாளமாகச் செயல்படுகிறது. இதில் தனிப்பட்ட விவரங்கள், தங்குமிட விவரங்கள், மருத்துவ வரலாறு போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
NFC தொழில்நுட்பம் மூலம் தொலைந்துபோன யாத்ரீகர்களை கண்டறியவும், அவசரகாலங்களில் மருத்துவ உதவியை உடனடியாக வழங்கவும் இது பெரிதும் உதவுகிறது.
மேலும், ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் யாத்ரீகர்களின் உடல் நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.

4️⃣ “மக்காவுக்கான வழி” (Road to Makkah) திட்டம்.

பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளின் யாத்ரீகர்களுக்காக அறிமுகமான இந்த முன்னோடித் திட்டம், பயணத்தை சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பே எளிதாக்குகிறது.
விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் அவர்கள் புறப்படும் நாட்டிலேயே முடிவடைந்துவிடுவதால், யாத்ரீகர்கள் ஜித்தா அல்லது மதீனாவை அடைந்ததும் நேரடியாக தங்கள் தங்குமிடங்களுக்குச் சிரமமின்றி, தாமதமின்றி செல்ல முடிகிறது.

5️⃣ நுசுக் டிஜிட்டல் வாலட் (Nusuk Wallet).

யாத்ரீகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட உலகின் முதல் சர்வதேச டிஜிட்டல் வாலட் இது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுகின்றன.

இந்த அனைத்து முயற்சிகளும் சவுதி அரேபியாவின் விஷன் 2030 இலக்கை நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றமாக விளங்குகின்றன.
மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்களின் தொலைநோக்கு சிந்தனை, புனித யாத்திரையின் அனுபவத்தை உலகளவில் புதிய தரத்திற்கு உயர்த்தியுள்ளது எனலாம்.

விபுலாந்தர் பிறந்த மண்னான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 நூருல் ஹுதா உமர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர்...
05/11/2025

விபுலாந்தர் பிறந்த மண்னான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

நூருல் ஹுதா உமர்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்னான கிழக்கு மாகாணம் காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (04) நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த கலாசார விழாவில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யுனெஸ்கோவின் புத்தாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ரியாத் மற்றும் மதீனா நகர்எழுத்து- காலித் ரிஸ்வான்சவூதி அரேபியாவின...
04/11/2025

யுனெஸ்கோவின் புத்தாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ரியாத் மற்றும் மதீனா நகர்

எழுத்து- காலித் ரிஸ்வான்

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் மதீனா நகரங்கள் யுனெஸ்கோவின் புத்தாக்கங்களுக்கான நகரங்களின் வலையமைப்பில் (UCCN) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தியை அந
நாட்டுக் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் இளவரசர் பத்ர் பின் அப்துல்லாஹ் பின் பர்ஹான் அறிவித்துள்ளார். இது சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் புத்தாக்கத்துறை வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

யுனெஸ்கோவின் 2025ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளின் முடிவுகளுக்கமைய ரியாத் நகரானது “வடிவமைப்பின் நகரம்” (City of Design) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ள அதே நேரத்தில் மதீனா நகர் “சமையல்கலை நகரம்” (City of Gastronomy) எனவும் பெயர்பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, புத்தாக்கத் துறையில் சவூதியின் உலகளாவிய செல்வாக்கை வலுப்படுத்துவதோடு, புதுமை மற்றும் கலாச்சாரம் சார் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் விஷன் 2030 இலக்குகளுடன் ஒருங்கிணைகிறது.

ரியாத்: வடிவமைப்பின் தலைநகரமாக உருவெடுக்கும் நகர்

சவூதியின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆணையம் முன்னெடுத்த ரியாத் நகரத்தின் பரிந்துரையானது, கட்டிடக்கலை, நகர திட்டமிடல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பை உள்ளடக்கிய நகரத்தின் மாறும் உயர் புத்தாக்க சுற்றுச் சூழல் அமைப்பை வெளிப்படுத்தியது.

அவ் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி சுமையா அல்-சுலைமான், இந்த அங்கீகாரத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் “இது சவூதி அரேபியாவின் ரியாத் நகரை புத்தாக்கம் கலந்த அபிவிருத்திக்கான ஒரு உலக மாதிரியாக மாற்றும் கனவை பிரதிபலிக்கும் வரலாற்றுச் செயல்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ரியாத் நகரத்திற்கான இவ் அங்கீகாரமானது, நவீனத்தை ஊக்குவிப்பது, உள்ளூர் திறமையை ஆதரிப்பது மற்றும் புத்தாக்க வடிவமைப்புக்களை நிலைத்த நகர்புற வளர்ச்சியில் ஒருங்கிணைப்பது போன்ற அம்சங்களை முன்னெடுக்கும் தேசிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு திட்டத்தால் பெற்றுத் தரப்பட்டது என தெரிவித்தார்.

மதீனா: புத்தாக்கத்தை சந்திக்கும் சமையல் பாரம்பரியம்

மதீனா, ‘சமையல் கலைப் புத்தாக்க நகரம்’ என்ற வகையில் இந்த வலையமைப்பில் இணைந்துள்ளது, சவூதியின் புரைதா நகரத்திற்கு பிறகு இப் பிரிவில் அங்கீகாரம் பெற்ற இரண்டாவது சவூதி நகராக மதீனா திகழ்கிறது. சவூதி சமையல் கலை ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்ட இப்பரிந்துரை, பல நூற்றாண்டுகளாக கலாச்சார பரிமாற்றம் மற்றும் விவசாயத்தின் மூலம் உருவான நகரத்தின் வளமான உணவு பாரம்பரியத்தை வலியுறுத்தியது.

சவூதி அரேபியாவின் முதல் சமையற் பொருள் சந்தையான ‘சூக் அத்-தப்பாஹா’ எனும் சந்தைக்கு மதீனா தாயகமாகும். இது உள்ளூர் சமையல் கலைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் இணைத்து, நிலைத்திருக்கக்கூடிய சமையல் துறை சார் தொழில்களை ஊக்குவிப்பதோடு பாரம்பரிய சமையல் குறிப்புகளை பாதுகாக்கவும் செய்கிறது.

குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், இந்தப் புதிய இணைப்புடன் சேர்த்து, யூனெஸ்கோ படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பில் சவூதி அரேபியாவின் ஐந்து முக்கிய நகரங்கள் உள்ளடங்குகின்றன, அவை பின்வருமாறு:

அல்-அஹ்சா (2015)– கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை
புரைதா (2021) – சமையல் கலை
தாஇப் (2024) – இலக்கியம்
ரியாத் (2025) – வடிவமைப்பு
மதீனா (2025) – சமையல் கலை

2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுனெஸ்கோ படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பானது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 350 நகரங்களை உள்ளடக்கியுள்ளதோடு, நிலைத்த நகர வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் புத்தாக்கத் திறனும் கலாச்சாரமும் என்பதனை ஊக்குவிக்கிறது.

சவூதி அரேபியாவின் இவ் அங்கீகாரமானது, உலகளாவிய கலாச்சாரப் புதுமை மற்றும் புத்தாக்கத்துறையில் அதன் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி - 2025✍️ எஸ். சினீஸ் கான்எதிர்வரும் நவம்பர் 9 முதல் 12 வரை சவூதி அரேபியா தனது ஐந்தாவது ஹஜ் ...
04/11/2025

ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி - 2025

✍️ எஸ். சினீஸ் கான்

எதிர்வரும் நவம்பர் 9 முதல் 12 வரை சவூதி அரேபியா தனது ஐந்தாவது ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சியை “மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் ஜித்தா சூப்பர்டோம் (Jeddah Superdome) அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த சர்வதேச நிகழ்வு, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தினால் (Ministry of Hajj and Umrah) ஏற்பாடு செய்யப்படுவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் பயணிகளை சேவையாற்றும் முறைமைகளை மேம்படுத்துவதில் சவூதி அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த உயரிய முயற்சி, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவூதி அரேபியாவின் மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் கருணைமிக்க தலைமையிலும், இளவரசர் முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் புதுமைமிக்க பார்வையிலும் முன்னெடுக்கப்படுகிறது. இவர்களின் புத்திசாலித்தனமான வழிநடத்தல் மற்றும் Vision 2030 இலக்குகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பு, ஹஜ் மற்றும் உம்ரா துறையை உலக தரத்துக்கு உயர்த்தியுள்ளது.

இந்த மாநாடு, ஹஜ் சேவைகள் துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய தீர்வுகளை ஆராயவும் ஒரு மேடை அமைக்கிறது. மேலும, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் ஹஜ் பயண அனுபவத்தின் தரத்தை உயர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

மொத்தம் 52,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் 13 துறைகளிலிருந்து 260-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சுற்றுலா, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 95 சர்வதேச நிபுணர்கள் 80 கலந்துரையாடல்கள் மற்றும் 60 பணிமனைப் பயிற்சிகளில் பங்கேற்று, எதிர்கால சவால்களுக்கு 100-க்கும் மேற்பட்ட புதுமையான தீர்வுகளை முன்வைக்க உள்ளனர். 150000 மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இந்நிகழ்வில் சில முக்கிய புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறது. அவற்றில் “E’asha-thon” எனப்படும் உணவு விநியோக முறைமையை நவீனப்படுத்தும் திட்டம், “Humanizing the Holy Sites” எனும் புனித இடங்களில் பயணிகளுக்கான வசதிகளை மனிதநேயமான முறையில் மேம்படுத்தும் முயற்சி, மற்றும் “Sustainable Solutions” எனும் சுற்றுச்சூழல் நட்பு ஆற்றல், சீரான வள மேலாண்மை போன்ற நிலைத்தன்மை முயற்சிகள் அடங்கும்.

மேலும், “Innovation Zone” பகுதியில் 15 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் கூட்ட நெரிசல் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் தொடர்பில் கலந்துரையாடப்படும்.

மாநாட்டின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இவை ஹஜ் துறையில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, சேவைத் தரம், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மாநாடு மூன்று முக்கிய கருதுகோள்களை மையமாகக் கொண்டுள்ளது - டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation), செயல்முறை முகாமைத்துவம் (Smart Management) மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மை (Operational Sustainability).

இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் Vision 2030 மற்றும் Pilgrim Experience Program இலக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் ஹஜ் பயணத்தை மேலும் எளிதாக்கி, பாதுகாப்பானதும் ஆன்மீகத்தன்மையுடனும் ஆக்குவது இதன் பிரதான நோக்கம்.

“மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி, மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் ஆகியோரின் முன்னோக்கிய பார்வை, தலைமைத் திறன், மற்றும் புனித ஹஜ் பயணத்தின் அனுபவத்தை உயர்த்தும் அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் உலகளாவிய ஆன்மீக மற்றும் தொழில்நுட்பச் சந்திப்பாக அமைய உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம்: சவூதி அரேபியாவும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில் அதன் செயலுறு வகிபா...
23/10/2025

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம்: சவூதி அரேபியாவும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில் அதன் செயலுறு வகிபாகமும்.

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 24 ஆம் திகதி அன்று, உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்த நாள், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதற்கும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பை நிறுவிய, 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே அமைதி மற்றும் புரிதலின் மதிப்புகளை மேம்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உறுப்பு நாடுகளுக்கு நினைவூட்டுவதற்கும் இந்த நாள் உதவுகிறது.

சவூதி அரேபியா, இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினராக இணைந்ததிலிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை ஆதரிப்பதில் ஒரு முன்னணி நாடாகத் திகழ்ந்து வருகிறது. மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இடம்பெறும் பாகங்களில் மனிதாபிமான மற்றும் நிவாரண பங்களிப்புகள் மற்றும் குறிப்பாக வளரும் நாடுகளில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்புகளை உறுதியான யதார்த்தமாக மாற்றுவதற்கு சவூதி அரேபியா எப்போதும் முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியானது, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய கொள்கைகளுக்கான சவூதி அரேபியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் இது, பொதுவான சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்புதான் சிறந்த வழி என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு சிறந்த செய்தியுமாகக் கருதப்படுகிறது.

மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதன் மூலம் நேரடி மனிதாபிமான பங்களிப்புகள், உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரை ஆதரிப்பது உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் சவூதி அரேபியாவின் முயற்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும், வறுமை, பசி மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பங்கேற்பதன் மூலமும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சவூதி அரேபியா நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

மேலும், மக்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வின் மதிப்புகளை ஊக்குவிப்பதிலும், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் போன்ற பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்புச் செய்கிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் விஷன் 2030 உடன் இணங்கிச்செல்கின்றன. இது சவூதி அரேபியாவின் மனிதாபிமான மற்றும் சர்வதேச வகிபாகத்தின் முக்கியத்துவத்தையும் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் நேர்மறையான மற்றும் நிலையான தாக்கத்தை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளையும் வலியுறுத்தி நிற்கின்றன.

மனிதகுலத்திற்கு மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கு சர்வதேச கூட்டுச் செயற்பாடே சிறந்த வழி என்பதை சவூதி அரேபியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கான அதன் அர்ப்பணிப்பு வெறும் கோஷம் மட்டுமல்ல, மாறாக அனைத்து ஐ.நா. முயற்சிகள் மற்றும் திட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்பதன் மூலமும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் சர்வதேச தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதும், ஒரு நடைமுறைச் செயற்பாடாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென்பது, கூட்டு சர்வதேச சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்நிலையில், சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீவிர பங்காளியாக அதன் தலைமைப் பங்கைத் தொடர்ந்தும் செய்துவருகிறது. உலகளாவிய மட்டத்தில், அமைதி, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பங்களிப்புச்செய்யும் அதேவேளை நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் புரிதலும் அனைத்து மனிதகுலத்திற்கும் மிகவும் நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் என்பதை எப்போதும் உறுதிப்படுத்துகிறது.

🔸 “The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்!இன்று (20), C...
20/10/2025

🔸 “The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்!

இன்று (20), Cinnamon Life - City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

“சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக,”
“The Y Personality of the Year 2025” என்ற விருதை இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

-- ஊடகப் பிரிவு

ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் ஆகியோருக்கு விருது  !தமிழன் பத்திரி...
19/10/2025

ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் ஆகியோருக்கு விருது !

தமிழன் பத்திரிகையின் விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதையும் தமிழன் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர், ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் இவ்வாண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

ஊடகப்பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் "குரு விருதுகள் சீஸன் 02" விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிஸாம் ஏ.பாவா தலைமையில் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்ற போதே இந்த விருதுகளை பெற்றுள்ளனர்.

குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இவ்விருது வழங்கல் விழாவில் மயோன் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயோன் எடுகேஷன் எய்ட் தலைவர் எம்.எம்.றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும், வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் என்.எம்.சப்னாஸ், டொப் பிரிண்டிங் நிறுவன பணிப்பாளர் எம்.ஐ.எம்.மர்லியாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் இந்த விருது வழங்கல் விழாவில் விவரணம், சுகாதாரம், சுற்றாடல் எழுத்தாளர்,மனிதாபிமான உரிமை தொடர்பான ஊடகவியலாளர்கள், வானொலி அறிவிப்பாளர்கள், விளையாட்டு செய்தி அறிக்கையாளர், சிறந்த இளம் யூடியுப்பாளர்கள், கட்டுரை எழுத்தாளர், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறுபட்ட துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சவூதி அரேபியாவின் அளப்பரிய பங்கு..! எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இல...
16/10/2025

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சவூதி அரேபியாவின் அளப்பரிய பங்கு..!

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

ஆண்டுதோரும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது, உடவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கும், உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்குமான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பம் உணவு என்பது ஒரு அன்றாடத் தேவை மட்டுமல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமை, சமூக ஸ்திரத்தன்மை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் தூண் என்பதை வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.

சவூதி அரேபியாவின் "விஷன் 2030 " இன் முக்கிய குறிக்கோள்களில், உணவுப் பாதுகாப்பை அடைந்து கொள்வதும் ஒன்றாகும். மேலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் வளர்ச்சி மற்றும் மனிதாபிமானக் கொள்கையின் முன்னுரிமையாகும்.

சமீபத்திய ஆண்டுகளில், 2030 ஆம் ஆண்டுக்குள் விவசாயத்தில் நீர் திறனை 50 சதவீதம் அதிகரிப்பது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் துல்லியமான விவசாயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், உணவுப் பொருட்களின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்தல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத் திட்டங்களில் சவூதி அரேபியா முதலீடு செய்துள்ளது.

சவூதி அரேபியா தேசிய உணவுப் பாதுகாப்பு உத்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல அடிப்படை விவசாயப் பொருட்களில் தன்னிறைவை அடைவதையும், பல்வேறு மற்றும் நிலையான உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் விவசாய முதலீடுகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய நன்கொடை வழங்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா விளங்குகிறது. அதன் உதவிகள் அமெரிக்கா டொலர் $130 பில்லியனுக்கும் அதிகமானதாகும். இதில் பெரும்பகுதி மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மூலம் உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் (FAO) இணைந்து, விவசாயிகளை ஆதரிப்பதற்கும், வளர்முக நாடுகளில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், மோதல்கள் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கூட்டுத் திட்டங்களை இந்த மையம் செயல்படுத்தியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா நம்புகிறது. எனவே, சவூதி அரேபியாவில்10 பில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்ட "சவூதி பசுமை முயற்சி" மற்றும் பிராந்தியத்தில் 50 பில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்ட "மத்திய கிழக்கு பசுமை முயற்சி" போன்ற முக்கிய முன் முயற்சிகளை அது தொடங்கியுள்ளது.

இந்த முயற்சிகள் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பங்களிக்கின்றன. அவ்வாறே, உலகளாவிய உணவு நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பங்களிப்புச்செய்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், சவூதி அரேபியாவின், உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் அதன் சர்வதேச பங்காளிகளுடனான நெருங்கிய ஒத்துழைப்பானது, மிகவும் நியாயமான, நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட உலகளாவிய உணவு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பசியை ஒழிப்பது என்பது ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த விருப்பங்களுக்குத் தேவையான ஒரு கூட்டுப் பொறுப்பாகும். உணவு என்பது மனித கண்ணியத்தின் அடித்தளமாகும், மேலும் அதில் முதலீடு செய்வது அனைத்து மனிதகுலத்தின் எதிர்காலத்தில் செய்யப்படும் ஒரு முதலீடாகும்.

முடிக்குரிய இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் வலியுறுத்துவதுபோல், அனைத்து மனிதகுலத்திற்கும் வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக மக்களின் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்போது மட்டுமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்.

இது மிகவும் சமமான, நிலையான மற்றும் ஊட்டமளிக்கப்பட்ட உலகத்தை உருவாக்குவதற்கான அதன் நடைமுறை மற்றும் மனிதாபிமான உறுதிப்பாட்டின் மூலம் இன்று சவூதி அரேபியாவினால் உருவகப்படுத்தப்பட்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.

Address

182/3 2/3 Common Road Akkaraipattu/16
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rks தமிழ்:

Share