Citizen Media Network

Citizen Media Network நம் சமூகத்திற்கான பயணம்
நடுநிலையான பாதை
(1)

உலகில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு அறியப்ப்டுத்துவதோடு ,மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும்வரைபோராடும் மக்கள் வேந்தன் உங்கள் #சிடிஸின்_ மீடியா

15 மாவட்டங்களில் டெங்கு நோய் பெருகும் 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிக...
27/05/2025

15 மாவட்டங்களில் டெங்கு நோய் பெருகும் 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக நுளம்புகள் பெருக்கக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்போது, வீடுகள், பாடசாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கட்டுமான தளங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள், மத ஸ்தலங்கள் உள்ளிட்ட 28,824 கட்டடங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,470 இடங்களில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவல் அதிகரித்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

The playoffs battles are set! 🤩Get ready for the final frontier 🙌  |
27/05/2025

The playoffs battles are set! 🤩

Get ready for the final frontier 🙌

|

 #இதுவரை 1,100 கிலோகிராம் உப்பு துறைமுகத்திலிருந்து விடுவிப்பு!இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1100kg உப்பு இதுவரையில் துறை...
27/05/2025

#இதுவரை 1,100 கிலோகிராம் உப்பு துறைமுகத்திலிருந்து விடுவிப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1100kg உப்பு இதுவரையில் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட உப்பு தட்டுப்பாட்டை அடுத்து 170, 000kg உப்பினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையில் அடுத்த வாரம் மேலுமொரு தொகை உப்பு நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன் அதனை சந்தைக்கு விநியோகித்தன் பின்னர் உப்புக்கான தட்டுப்பாடு நீங்கும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 #புனித மக்காவில் நாளை (28) புனித துல்ஹஜ் ஆரம்பம்!
27/05/2025

#புனித மக்காவில் நாளை (28) புனித துல்ஹஜ் ஆரம்பம்!

 #யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்..!யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில...
27/05/2025

#யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்..!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்றைய தினம் (27.05.2025) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.

இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அரசாங்க அதிபரிடம் கெளரவ அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபர் கொண்டுவந்தார்.

 #அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று 27.05.2025 நடைபெற்றது.இந்நிகழ்வில் அம்பாற...
27/05/2025

#அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று 27.05.2025 நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது. மீனவர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் களவெடுப்பதற்கு அமைய, விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பாக பேசி, இம்மீன் கொள்ளையை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எ. ஆதம்பாவாவினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை ஆராயப்பட்டு, அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை உடனடியாக ஜனாதிபதிக்கும் மீன்பிடி அமைச்சிக்கும் அதுபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மீன் கொள்ளை தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம் பெறப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டதோடு, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் நெறிப்படுத்தலின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படையினர், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

எமது மீனவர்களின் மற்றுமொரு பிரச்சினையான கடல் அரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததோடு, கல்முனை பிரதேசத்தில் உள்ள கடலரிப்புக்குள்ளான பிரதேசங்களில் உடனடியாக கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கற் தடைகளை ஏற்படுத்துவதற்கு அவ்வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் துளசிதாசன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, மீனவர்களும் கலந்து கொண்டு கௌரவப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

 #கராத்தே போட்டியில் பிரகாசித்த எம்.எஃப். ஸைனப்!நூருல் ஹுதா உமர் சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International...
27/05/2025

#கராத்தே போட்டியில் பிரகாசித்த எம்.எஃப். ஸைனப்!

நூருல் ஹுதா உமர்

சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International Martialarts Association-Srilanka Branch) யினால் நடத்தப்பட்ட 3வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்- 2025 (3rd Open international Karate Championship-2025) ஆனது 24.05.2025ம் திகதி இலங்கை தென்கிழக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் (புவியியல் துறை விசேட) மூன்றாம் ஆண்டு மாணவியான எம்.எஃப். ஸைனப், பங்கேற்று சீனியர் கட்டா பெண் நிலை முதலாம் பிரிவில் 1 வது இடத்தையும், சீனியர் குமிட் பெண் பிரிவில் 2 வது இடத்தையும் பெற்றார்.

 #கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் MP…கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, தூரப் பிரதேசங்களு...
27/05/2025

#கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் MP…

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம் நேரடியாக வலியுறுத்தினார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

தூரப் பிரதேசங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியைகள் எதிர்கொள்ளும் மொழி மற்றும் பிரயாண அசௌகரியங்களை கிழக்கு மாகாண ஆளுநருக்கு விரிவாக இதன்போது எடுத்துரைத்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய ஆளுநர், இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 #களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது எதிர்மறைக் கரு...
27/05/2025

#களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

எதிர்மறைக் கருத்துக்களை வீரமாகக் கருதும் சமூகத்திற்கு பதிலாக, மற்றவர்களின் பெறுமதிகளை மதிக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.
- ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக, களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹெலேனா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் பணியாட்டொகுதிப் பிரதானி, பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.

மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு, சபாநாயகர் பதவிப் பிரமாணம் மற்றும் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்துடன் ஆரம்பமானது.

எதிர்மறை கருத்துக்களை வீரமாகக் கருதும் சமூகத்திற்குப் பதிலாக, மற்றவர்களின் விழுமியங்களை மதிக்கும் சமூகத்தை பாடசாலைகள் மூலம் கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார சுட்டிக்காட்டினார். இது ஒரு பொறுப்புள்ள குடிமகனை உருவாக்கும் என்றும், குடிமக்கள் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

உடல், உள மற்றும் சமூகம் என்ற வகையில் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தைரியமாக முகங்கொடுக்கக் கூடிய, சவால்களை எதிர்கொள்ளத் தயங்காத சந்ததியை பாடசாலையின் ஊடாக உருவாக்க வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற எதையும் பயமின்றி 'இல்லை' ,'முடியாது' என்று சொல்வதற்குப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் இலங்கை வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல் என்பன அதனைத் தொடர்ந்து இடம்பெற்றன.

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க மற்றும் ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரி அதிபர் ஆர்.கே. குணதிலக்க மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 #இந்திய சுரங்கத்துறை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; முதலீடுகள், ஒத்துழைப்பு வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள் குறித்து ஆராய்வ...
27/05/2025

#இந்திய சுரங்கத்துறை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; முதலீடுகள், ஒத்துழைப்பு வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள் குறித்து ஆராய்வு!

இந்திய அரசின் சுரங்க அமைச்சு தலைமையிலான பிரதிநிதிகள் குழு சுரங்கங்கள் மற்றும் கனியவளத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மே 20 - 22 வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியைச் சந்தித்த , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனியவள நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனியவளத் துறையில் பெறுமதிசேர் கூட்டு

முஇந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

மே 20 - 22 வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியைச் சந்தித்த இப் பிரதிநிகள் , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனியவள நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனியவளத் துறையில் பெறுமதிசேர் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுதல் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சதீஷ் சந்திர துபே மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே கனியவளத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து 2025 பெப்ரவரி 15 அன்று புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2025 மார்ச் 10 அன்று இந்திய அரசின் சுரங்க அமைச்சகச் செயலாளருக்கும், இலங்கை அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்பாட்டு தோற்றப்பாடுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்வதற்காக இப்பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள முக்கிய சுரங்க வளாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

 #விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பி...
27/05/2025

#விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவு!

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார்.

அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 #சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்!(எம்.எஸ்.எம்.ஸாக...
27/05/2025

#சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்கான வைபவம் நேற்று (26) திங்கட்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்காத்தானி தலைமையில் தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது தூதுவர் தனது உரையில், இந்த திட்டத்திற்காக இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுக்கும், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். உலகம் முழுவதிலுமிருந்து வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு, குறிப்பாக நட்பு நாடான இலங்கையிலிருந்து இம்முறை வரும் புனிதப் பயணிகளுக்கு சவூதி அரசாங்கம் வழங்கும் மிகுந்த அக்கறையையும் கவனத்தையும் பாராட்டினார்.

இந்த நன்கொடைத் திட்டத்தில் பங்கேற்க ஹஜ் புனிதப் பயணிகளின் தெரிவு கவனமாகவும் துல்லியமாகவும் செய்யப்பட்டதாக தூதவர் சுட்டிக்காட்டினார். இக்குழுவில் இலங்கையைச் சேர்ந்த பல்துறை அறிஞர்கள், இமாம்கள், கல்வியாளர்கள், ஊடகத்துறை சார் பிரபலங்கள், சமூகத்தின் முன்னணி நபர்கள், மற்றும் முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்குகின்ற ஆண்களும் பெண்களும் அடங்குகின்றனர். இந்த கௌரவ அன்பளிப்பானது அவர்களின் பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும், எதிர்காலத்தில் அவர்களது சேவைக்கான ஊக்கமாகவும் அமைகிறது.

இந்தப் புனிதத் திட்டத்தில் பங்கேற்பது ஹஜ் கிரியை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரிய ஆன்மிக வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும், நம்பிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார். ஹஜ் புனிதப் பயணிகள் தங்கள் தாய் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்றும், சவூதி அரேபிய அரசாங்கம் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு வழங்கும் இந்த உயர் சேவை மற்றும் முழுமையான பராமரிப்பு பொறுப்புடன் தாய்நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நாட்டை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தவும், தங்கள் நடத்தை மற்றும் நெறிமுறைகள் மூலம் இலங்கை முஸ்லிம்களின் கௌரவமான விம்பத்தை தொடர்ந்தேர்ச்சையாக கையிலேந்திக் கொள்ளுமாறும் , ஹஜ் புனிதப் பயணிகளுக்கான அரசின் அளப்பரிய முயற்சிகள் மற்றும் சேவைகளின் தன்மையை வெளிப்படுத்தும் உண்மையின் குரலாக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, ஹஜ் பயணமானது பயணிகள் அனைவருக்கும் வெற்றியை அளிக்கவும், அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்பவும் வேண்டும் என்றும் தூதுவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.

Address

106 APC Road Ninthavur 6
Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen Media Network:

Share