Citizen Media Network

Citizen Media Network நம் சமூகத்திற்கான பயணம்
நடுநிலையான பாதை
(1)

உலகில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு அறியப்ப்டுத்துவதோடு ,மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும்வரைபோராடும் மக்கள் வேந்தன் உங்கள் #சிடிஸின்_ மீடியா

8 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிSL 'A' vs IND 'A | Match Update 🏏IND 'A'                               277/6Ruturaj Gaikw...
09/06/2026

8 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி
SL 'A' vs IND 'A | Match Update 🏏

IND 'A' 277/6
Ruturaj Gaikwad 101 (114)
Tilak Varma 60 (97)
Vaibhav Sooryavanshi 14 (12)
Priyansh Arya 32 (32)

பந்துவீச்சில்...
Mohamed Shiraz 2/67
Chamika Karunaratne 1/46
Wanuja Sahan 1/35

Sri Lanka 'A' 269 (48.5 ov)
Sahan Arachchige 74 (72)
Niroshan Dickwella 47 (45)
Sadeera Samarawickrama 46 (51)

பந்துவீச்சில்...
Arshad Khan 2/24
Ayush Badoni 2/46
Vipraj Nigam 2/46


 #தொழிலிட வன்முறைகளுக்கு எதிரான'C190' உடன்படிக்கையைஅங்கீகரித்தது இலங்கை!சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2026 ஜூன் 01 முதல் ...
09/06/2026

#தொழிலிட வன்முறைகளுக்கு எதிரான
'C190' உடன்படிக்கையை
அங்கீகரித்தது இலங்கை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2026 ஜூன் 01 முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்று வரும் 114ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் ஓரங்கமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கில்பர்ட் எப். ஹூங்க்போவை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த மரியாதை நிமித்தமாக நேற்று (08) சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, அமைச்சர் நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததுடன், இவ்விடயங்களில் ILO-வின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோரினார்.

மேலும், தொழிலிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ILO-வின் “C190: Violence and Harassment in the World of Work” உடன்படிக்கையை இலங்கை அண்மையில் அங்கீகரித்துள்ளதையும், அதனை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள எமது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மீன்பிடித் துறையில் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில் ILO-வின் “C188: Work in Fishing” உடன்படிக்கையை அங்கீகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் இலங்கை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் தொழிலாளர் சமூகத்திற்காக கண்ணியமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த பணிச்சூழலையும் உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஹூங்க்போ அவர்கள், இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பையும் அண்மைய உடன்படிக்கை அங்கீகாரத்தையும் பாராட்டியதுடன், இத்துறைகளில் ILO தொடர்ந்தும் தொழில்நுட்ப உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதியளித்தார்.

 #உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியதுஉணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை...
09/06/2026

#உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்வதற்கென எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆயத்தங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல்-நினோ நிலைமையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு முகம்கொடுத்ததைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) ஏ.எல்.கே. விஜேமான்னகே, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆரச்சி ஆகியோரும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

UPDATE: சரண குணவர்தன சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது...
09/06/2026

UPDATE: சரண குணவர்தன சிறைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட போது...

09/06/2026

இலங்கை A அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மட் ஷிராஸின் துல்லியமான பந்துவீச்சுத் திறமை...

09/06/2026

#நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 2026 இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு

நேரலையாக...

 #புதிய_அதிபர்  #மற்றும்  ிபர்கள்  #நியமனம்நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் முஹம்மட் ...
09/06/2026

#புதிய_அதிபர் #மற்றும் ிபர்கள் #நியமனம்

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை அனுபவம் கொண்ட இவர், கல்வி, நிர்வாகம் மற்றும் மாணவர் வழிகாட்டல் துறைகளில் சிறந்த அனுபவத்தையும் திறமையையும் கொண்டவராக அறியப்படுகிறார். இவரது நியமனம் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் நியமனம் மற்றும் அறிமுக நிகழ்வு கல்லூரியின் கூட்ட மண்டபத்தில், கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். ரஸீன் அவர்களின் தலைமையில், நிர்வாக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் 2026.06.07ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ நீதிபதி அல்-ஹாபிழ் அப்துல்லாஹ் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

மேலும், கல்லூரியின் பொருளாளர் அல்-ஹாஜ் ஏ. ஆதம் பாவா (பொறியியலாளர்), செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள், புதிய அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கல்லூரியின் கல்வி மேம்பாடு, ஒழுக்கக் கட்டமைப்பு, நிர்வாக வலுவூட்டல் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அத்துடன், உப அதிபர்களுக்கான கடமைப் பட்டியல்களும் கையளிக்கப்பட்டன. புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கலந்துகொண்ட அனைவரும் புதிய அதிபர் அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்களையும் உப அதிபர்களையும் அன்புடன் வரவேற்று, அவர்களது பணிகள் வெற்றிகரமாக அமையவும், கல்லூரி கல்வி மற்றும் ஆன்மீகத் துறைகளில் மேலும் முன்னேற்றம் காணவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல் நூருல் ஹுதா உமர்ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு...
09/06/2026

#ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல்

நூருல் ஹுதா உமர்

ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  University Park இன் Open Week 2026: மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு ஜூன் 11 முதல் 14 வரைA/L பரீட்சையை நிறை...
09/06/2026

University Park இன் Open Week 2026: மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு ஜூன் 11 முதல் 14 வரை

A/L பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உயர்கல்வி தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில், ICST University Park தனது Open Week 2026 நிகழ்வை ஜூன் 11 முதல் 14 வரை வளாகத்தில் நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் ICST வளாகத்தை நேரில் பார்வையிடுவதுடன், பல்வேறு கற்கைநெறிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால கல்விப் பாதைகள் குறித்து விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

நிகழ்வின் போது, Computing, Engineering Technology, Business Management உள்ளிட்ட துறைகளில் வழங்கப்படும் கற்கைநெறிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுவதுடன், அனுபவமிக்க விரிவுரையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வளாக வசதிகள், கற்றல் சூழல், ஆய்வுகூடங்கள் மற்றும் மாணவர் சேவைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.

உயர்கல்வி தொடர்பான சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும் இந்த Open Week நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளுமாறு ICST University Park அழைப்பு விடுத்துள்ளது.

📅 தேதி: ஜூன் 11 - 14, 2026

📍 இடம்: ICST University Park, புனானை

📞 தொடர்புக்கு: 0743 444 444

🌐 இணையதளம்: icst.edu.lk

*உங்கள் எதிர்காலத்திற்கான சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - ICST Open Week 2026.*

 #இலக்கை எட்டுமா இலங்கை அணி?278 ஓட்டங்கள் வெற்றி இலக்குIND 'A                           277/6Ruturaj Gaikwad           1...
09/06/2026

#இலக்கை எட்டுமா இலங்கை அணி?
278 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

IND 'A 277/6
Ruturaj Gaikwad 101 (114)
Tilak Varma 60 (97)
Vaibhav Sooryavanshi 14 (12)
Priyansh Arya 32 (32)

பந்துவீச்சில்...
Mohamed Shiraz 2/67
Chamika Karunaratne 1/46
Wanuja Sahan 1/35

Address

106 APC Road Ninthavur 6
Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen Media Network:

Share