Citizen Media Network

Citizen Media Network நம் சமூகத்திற்கான பயணம்
நடுநிலையான பாதை

உலகில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு அறியப்ப்டுத்துவதோடு ,மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும்வரைபோராடும் மக்கள் வேந்தன் உங்கள் #சிடிஸின்_ மீடியா

 #கல்முனை விசேட அதிரடிப்படையால் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான  சந்தேக நபரிடம்   விசாரணை!பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்ட...
09/10/2025

#கல்முனை விசேட அதிரடிப்படையால் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான சந்தேக நபரிடம் விசாரணை!

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதன்கிழமை(8) இரவு தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஐஸ் 1 மில்லி 50 மில்லி கிராம் குறித்த 37 வயது சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதுடன் கைதானவர் நீண்ட காலமாக போதைப்பொருளை பழ விற்பனையாளர் போன்று விற்பனை செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.சமந்த டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி ரத்னவீர அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என் குலதுங்கவின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 #யாழ். அணையா விளக்கு தூபி உடைப்பு!யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் ...
09/10/2025

#யாழ். அணையா விளக்கு தூபி உடைப்பு!

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜீன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர்.

 #ஓய்வு வாழ்த்து  எம்.பீ.எம். றஷீட் (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)நிந்தவூர் பிரதேச சபையின் வருமானப் பிரிவின் பிர...
09/10/2025

#ஓய்வு வாழ்த்து எம்.பீ.எம். றஷீட்
(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)

நிந்தவூர் பிரதேச சபையின் வருமானப் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
திரு. M.B. அப்துல் றஷீட் அவர்கள், 60 வயது பூர்த்தியடைந்த நிலையில் நேற்றைய தினம், 25 ஆண்டுகால அரச சேவையினை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.

இவர் 2000ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளராக அரச சேவையில் இணைந்து கொண்ட இவர்,
இறக்காமம் பிரதேச செயலகம், கல்முனை சுகாதார சேவைகள் திணைக்களம், கல்முனை கட்டிட திணைக்களம் ஆகிய இடங்களில் கடமையாற்றியதுடன், 2016ஆம் ஆண்டிலிருந்து நிந்தவூர் பிரதேச சபையில் தனது அர்ப்பணிப்பும், நேர்மையும், ஒழுக்கமும், அன்பும் கலந்த பணியாற்றலால் அனைவரின் மனதிலும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவராவார்.

அவரது சிறந்த சேவையினையும், அவரது உதவும் மனப்பான்மையினையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (08) பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி அவர்களின் தலைமையில் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து நிந்தவூர் பிரதேச சபை சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் கெளரவத்தினையும் அளித்தனர்.

 #உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் இன்றைய விலைப்பட்டியல்!பேலியகொடை மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்...
09/10/2025

#உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் இன்றைய விலைப்பட்டியல்!

பேலியகொடை மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 230 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

உள்ளூர் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 280 ரூபாய் வரையிலும், இந்தியன் பெரிய வெங்காயம் 120 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தம்புள்ளை பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 350 ரூபாய் வரையிலும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 #பழைய வெல்லஸ்கட்டு நிந்தவூர் _24 வீதியினூடாக செல்லும் அல் ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலை வீதியினை புனரமைப்புச் செய்யும்...
09/10/2025

#பழைய வெல்லஸ்கட்டு நிந்தவூர் _24 வீதியினூடாக செல்லும் அல் ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலை வீதியினை புனரமைப்புச் செய்யும் பணிகள் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி அவர்களினால் (08) முன்னெடுக்கப்பட்டது .

இதில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான எம்.சம்சுன் அலி, எம்.ஏ.றசீன் மற்றும் எம்.ஜே.ஜுவைரியா மற்றும் சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், வேலை மேற்பார்வையாளர் என அனைவரும் களத்தில் முன்னின்று பணிகளை கண்காணிப்புச் செய்தனர்.

 #நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பு!நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும், தற்போது சம்மாந்துறை பிரதேச சபையின் செ...
08/10/2025

#நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும், தற்போது சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்ற, எம்.கே.எம்.முஹம்மட் சேர் அவர்கள் எதிர்வரும் 15.10.2025 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளமையினால், அவரின் சேவைக்காலத்தினை பாராட்டி நிந்தவூர் பிரதேச சபையின் சார்பில் சபையின் தற்போதைய செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 #பேருந்து கட்டணத்தை செலுத்த புதிய முறை!எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்...
08/10/2025

#பேருந்து கட்டணத்தை செலுத்த புதிய முறை!

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த புதிய கட்டண முறை ஆரம்பத்தில் டிக்கெட் இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 #நிந்தவூர் கமு/கமு/அல் -மஷ்ஹரின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் 2025சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் நிந்தவூர் கமு/ கமு...
08/10/2025

#நிந்தவூர் கமு/கமு/அல் -மஷ்ஹரின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் 2025

சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் நிந்தவூர் கமு/ கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 07.10.2025 செவ்வாய் கிழமை பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் Al-haj A.C. Haamithu sir அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆளணியினர் அனைவரும் இனிப்பு வழங்கி பாடசாலைக்கு வரவேற்கப்பட்டதுடன் மாணவிகளால் பூமாலை அணிவிக்கப்பட்டு Band வாத்தியத்துடன் பூத்தூவி ஆராதனை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஆசிரியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான உள்ளக விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

மேலும் ஆளணியினர் அனைவரும் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர்களுக்கான அன்பளிப்புக்கள் பாடசாலையின் SDEC இனால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் Mr. MLM. Mutharris sir அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mr. ULM. Saajith sir, மற்றும் PSI coordinator Mrs. MI. Najimunnisa அவர்களும் விஷேட அதிதிகளாக பாடசாலை SDEC உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 #அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பி. முஹம்மட் றஷீட் (வஹாப்)நிந்தவூர் பிர...
08/10/2025

#அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பி. முஹம்மட் றஷீட் (வஹாப்)

நிந்தவூர் பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக, 10 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய திரு. எம்.பி. முஹம்மட் றஷீட் அவர்கள் இன்று தனது 25 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் தனது அரச சேவைப் பயணத்தை இரண்டாயிரம் ஆம் ஆண்டில், முகாமைத்துவ உதவியாளராக இறக்காமம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்தார். அங்கிருந்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், அதன் பின்னர் கல்முனை கட்டிட திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தார்.

அவர் தனது சேவைக்காலத்தில் நேர்மை, நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை இணைத்து சேவை செய்த ஒருவர், நிந்தவூர் பிரதேச சபையின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் இன்றியமையாத பங்களிப்பை வழங்கியவர்.

சேவை நாடியாக பிரதேச சபைக்கு வரும் தன்னூர் மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கான தேவைகளை முன்நின்று நிறைவேற்றிக் கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டவர்.

இவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘ #வீதிப் பாதுகாப்பு செயற்றிட்டம் 2025-2026’ புத்தகம் மற்றும் 6 பாரிய வீதி விபத்துக்கள் குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத...
08/10/2025

‘ #வீதிப் பாதுகாப்பு செயற்றிட்டம் 2025-2026’ புத்தகம் மற்றும் 6 பாரிய வீதி விபத்துக்கள் குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்திற்கு

பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அண்மையில் (25) பாராளுமன்றத்தின் நூலகத்திடம் கையளிக்கப்பட்டன. இதற்கமைய ‘வீதிப் பாதுகாப்புச் செயற்றிட்டம் 2025-2026’ என்ற புத்தகம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்களினால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேரவிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற 6 பாரிய வீதி விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்றத்தின் நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

இதற்கு அமைய, 2025.09.04ஆம் திகதி எல்ல – வெள்ளவாய வீதியில் கி.மீ 23 – கி.மீ 24 மைல் கல்லுக்கு இடையில் 24/6 மதகிற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்து, 2025.06.21ஆம் திகதி பதுள்ளை – மஹியங்கனை வீதி திம்பிரிகஸ்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து, 2025.05.11ஆம் திகதி நுவரெலியா – கண்டி வீதியில் கெரடியல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து, 2024.11.01 ஆம் திகதி பதுளை – மஹியங்கனை வீதியில் அம்பகஹஓயவில் நடந்த வீதி விபத்து, 2023.01.20ஆம் திகதி நுவரெலியா - ஹட்டன் வீதியில் ரடெல்ல - சோமர்செட் மாற்று வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து, 2020.01.06ஆம் திகதி பசறை – மதுல்சீம வீதியில் மதுல்சீமை நோக்கி 06வது மைல்கலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இடம்பெற்ற வீதி விபத்துக் குறித்த அறிக்கைகளே இவ்வாறு பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

 #அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில்,  20 தமிழ், சிங்கள குடும்பங்களுக்கான திருமண வைபவம் நேற்று...
08/10/2025

#அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில், 20 தமிழ், சிங்கள குடும்பங்களுக்கான திருமண வைபவம் நேற்று (07) வவுனியா நகர சபை மண்டபத்தில், கட்சியின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்துமுஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டுள்ளதுடன், பிரதான பேச்சாளராக மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி Dr. வென். வலவகன்குணவெவ கலந்துகொண்டார்.

 #உலகப்புகழ் பெற்ற அஸ்ஹர் பல்கலைக்கழக ஹதீஸ் கலைப் பேராசிரியர்  அஷ்ஷைஃக் டாக்டர் அஹ்மத் அம்ர் ஹாஷிம் அவர்கள்."நான் இறந்து...
08/10/2025

#உலகப்புகழ் பெற்ற அஸ்ஹர் பல்கலைக்கழக ஹதீஸ் கலைப் பேராசிரியர் அஷ்ஷைஃக் டாக்டர் அஹ்மத் அம்ர் ஹாஷிம் அவர்கள்.

"நான் இறந்து என்னை கபனிட்ட பிறகு கஃபதுல்லாஹ்வின் கிஸ்வாவின் ஒரே ஒரு துண்டையாவது எனது கஃபனுக்குள் வைக்க வேண்டும்."
என வஸிய்யத் செய்திருந்தார்கள்.

நேற்றைய (07) தினம் அவர் இறையழைப்பை ஏற்றார்கள்.
இன்னாலில்லாஹி.

மதீனா முனவ்வரா நகரில் ஒரு முக்கிய பிரமுகரிடம் இருந்து கிஸ்வா ஒரு துண்டை வாங்கி வந்து அவரின் கஃபனுக்குள் அவரின் வஸிய்யத் படி வைக்கப்பட்டது. சூரா யாஸீன் முழுவதுமாக அச்சிடப்பட்ட துணியால் அவரின் உடலை சுற்றப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முனைவர் முஜீபுர்ரஹ்மான் சிராஜி

Address

106 APC Road Ninthavur 6
Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen Media Network:

Share