Samurdhi FM Tamil

Samurdhi FM Tamil Tamil program about Samurdhi related news and event.

13/08/2025

12/08/2025
27/07/2025

பெண் ஆளுமை விருதைப் பெற்ற றிகாஸா ஷர்பீன்!

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆளுமை மற்றும் திறமைகளைப் பாராட்டிய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி, அவருக்கு பெண் ஆளுமை என்ற விருதையும் வழங்கி கௌரவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவருக்கான இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் விடய அபிவிருத்தி உத்தியோகத்தராக (CBO's) ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் நியமனம் பெற்று, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இணைக்கப்பட்ட 5 வருட சேவைக் காலத்தினுள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக ஏழை மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகத்திற்கும், சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பிக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்க காரணமான அமைந்த சிறந்ததொரு ஆளுமைப் பெண்ணாக இன்றுவரை திகழ்து வருகிறார்.

குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் ஏழைக் குடும்பங்களுக்கு தனவந்தர்களினதும், அவரின் சொந்த நிதிகளைக் கொண்டு ரமழான் காலங்களில் ரமழான் பொதிகளை சமுர்த்தி பிரதேச அமைப்பினூடாக வழங்கி வைத்தார்.

எமினன்ஸ் தனியார் கல்வி நிறுவனத்தினூடாக ஆங்கில மொழி மற்றும் கணினி கற்கை நெறிகளை புலமைப் பரிசிலாகப்பெற்று பிரதேசத்திலுள்ள 30 ஏழை மாணவ, மாணவிகளுக்கு சமுர்த்தி பிரதேச அமைப்பினூடாக வழங்கி வைத்தார்.

இத்திட்டங்களால் அம்பாறை மாவட்ட சமுர்த்தி முன்னேற்றக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், ஏனைய பிரதேச செயலக கூட்டங்களிலும் சாய்ந்தமருது சமுர்த்தி பிரதேச அமைப்பின் பெயரை முன்ணுதாரனமாக பேசுவதற்கு காரணமாக திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவ்வருடம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்ட "போதைப்பொருள் எதிர்ப்பு தினமும், கொடி விற்பனையும்" வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்த தனது பொறுப்பிலுள்ள 53 சமுர்த்தி சமுதாய அமைப்புக்களையும் ஊக்கப்படுத்தி மாவட்ட மட்டத்தில் கொடி விற்பனையில் அதிகூடிய நிதிகளை சேகரித்து முதலிடம் பெற வழிவகுத்த ஆளுமையுள்ள ஒருவராகும்.

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி சமுதாய அமைப்புக்களிலுள்ள பெண்களை ஒன்றுதிரட்டி "போதையற்ற மருதூர்" எனும் தொனிப்பொருளில் "போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு" மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான "போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு" போன்ற வேலைத்திட்டங்கள் ஊடாக பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பற்றி விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஒரு அத்தியாயத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் தனது பொறுப்பிலுள்ள 53 சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கும் டிஜிடல் அடையாள அட்டையினை வழங்கும் திட்டத்தினூடாக மாவட்டத்தில் யாருமே செய்யாத வேலைத்திட்டமாக மாற்றியதுடன் இதனை ஏனைய பிரதேச செயலகங்களும் பின்பற்றுமளவுக்கு அந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தக் காரணமாக அமைந்துளார்.

இவ்வாறான பல்வேறுபட்ட தூரநோக்கு சிந்தனைகளுடன் தனது பொறுப்புக்களையும் தான்டி செயற்பட்டு வருகின்ற இளம் உத்தியோகத்தரின் ஆளுமையுள்ள செயற்பாடுகளை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி பாராட்டியதுடன், பெண் ஆளுமைக்கான விருதையும் வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thanks: News day
https://www.facebook.com/share/164pmdxUQM/

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 18 - 35 வயதிற்குட்பட்ட, இளைஞர் யுவதிகளுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில்...
18/07/2025

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 18 - 35 வயதிற்குட்பட்ட, இளைஞர் யுவதிகளுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான - தொழிற் பயிற்சியின் பொருட்டு 50000 புலமைப் பரிசில்களை வழங்கும் - Next Sri Lanka - வேலைத் திட்டம்.

இதற்கான பதிவுகளை www.nextsrilanka.lk என்ற இணையதளத்தில் மேற்கொள்ள முடியும்.

Next Sri Lanka is a national platform connecting youth with government career guidance, skills development, and employment opportunities. Officers can manage youth registrations, assign career paths, and organize career key tests, while youth can register and access opportunities for personal and professional growth.

*வவுனியா பிரதேச செயலகத்தின் பிரதேச பண்பாட்டு விழா - 2025, பண்பாட்டு ஊர்திப் பவனியும் இன்று நடைபெற்றது.*பண்பாட்டு ஊர்திப்...
18/07/2025

*வவுனியா பிரதேச செயலகத்தின் பிரதேச பண்பாட்டு விழா - 2025, பண்பாட்டு ஊர்திப் பவனியும் இன்று நடைபெற்றது.*

பண்பாட்டு ஊர்திப் பவனியில் பங்கு பற்றிய, சமுர்த்தி வங்கி சின்னப்புதுக்குளம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகள் ஆசிக்குளம்-244 ஆகியோருக்கு மனதார வாழ்த்துக்கள்...

DSD/HO/02/Ad/01/சம்பளம்2025/06/20அனைத்து மாவட்ட செயலாளர்/மாவட்ட சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகங்கள்/மாவட்ட சமுர்த்தி ப...
23/06/2025

DSD/HO/02/Ad/01/சம்பளம்
2025/06/20

அனைத்து மாவட்ட செயலாளர்/
மாவட்ட சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகங்கள்/
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்கள்,
பிரதேச செயலாளர்கள்,
பிரதிப் பணிப்பாளர்கள்/உதவி பணிப்பாளர்களுக்கும்.

*சம்பள முரண்பாடுகள் பற்றிய விபரங்களை கண்டறிதல் தொடர்பாக*

இத்திணைக்களத்தில் ஒவ்வொரு படித்தர பதவிகளிலும் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களினது சம்பள முரண்பாடுகள் பற்றி கண்டறிவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

02.அக் குழுவுக்கு அனுப்பி வைப்பதற்காக தங்களது மாவட்டத்திலே சம்பள முரண்பாடுகளுடன் காணப்படும் உத்தியோகத்தர்களினது விபரங்களுடன் தங்களது கருத்துக்கள், முன் மொழிவுகளுடன் உரிய குழுவின் தலைவரான மேலதிக பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) பீ.கே.எஸ்.சுவோதினி அவர்களுக்கு மிக விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவாய் அறியத்தருகின்றேன்.

CD.களுஆரச்சி,
பணிப்பாளர் நாயகம்.

Translated By:-
MA.RlYAS (SDO)
Irkkamam.

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்குதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.
21/06/2025

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்குதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

06/06/2025

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

"வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் - போதையிலிருந்து மீண்டெழுங்கள்" - 2025 தொனிப் பொருளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தில் கூடிய நிதியினை சேகரித்த கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சமுர்த்திப் பணிப்பாளர் திரு எவ்.சி. சத்தியசோதி தலைமையில் இன்றைய தினம் (05.06.2025 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், கொடி தின நிதி சேகரிப்பில் 2023 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், 2024 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமையானது சிறப்பான விடயம் எனவும்,கொடி தினத்தில் சேகரிக்கப்பட்ட நிதியினை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், சிறுவர்களுக்கான கல்வி உதவி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மக்களுக்கான சேவைகளை உயர்ந்தளவில் வழங்க வேண்டும் எனவும், எமது முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் திரு. க. கணேஷ் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது "அரச சேவையாற்றுவதற்கான இவ் அரிய சந்தர்ப்பம் கடவுளால் தரப்பட்டுள்ளது - அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறுவதை அரசாங்க அதிபர் ஞாபகப்படுத்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையினை வினைத்திறனாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கி வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், கிராம மட்டத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நேரடியாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுவருதனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வலுவூட்டல் செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொடி தினத்தில் அதிக நிதி சேகரித்த உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பானது ஏனைய உத்தியோகத்தர்களையும் உற்சாகப்படுத்த தூண்டும் என்பதால் குறுகிய நாட்களில் ஒழுங்கு செய்யப்படுத்தப்பட்டதாகவும் எனத் தெரிவித்து, சமுர்த்தி வேலைத் திட்டங்கள் ஊடாக வறுமையினை ஒழிக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு கொடி தினத்தில் அதிக நிதியினை மாவட்ட ரீதியில் சமுதாய அடிப்படை அமைப்பினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் - முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட கோப்பாய் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செ. சிவகுமார் அவர்களுக்கும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. அ. யூட்சன் அவர்களுக்கும், மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. கோ. கருணாகரன் அவர்களுக்கும், நான்காவது இடத்தினை பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி சி. றஞ்சினி அவர்களுக்கும், ஐந்தாவது இடத்தினை பெற்றுக்கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி இ. அன்ரனற் ஜொலிற்றா அவர்களுக்கும் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் அரசாங்க அதிபரால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.மேலும், 15 பிரதேச செயலக ரீதியாக அதிக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 128 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தித் திணைக்கள கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்

1995 ஆம் ஆண்டு சிறு குழந்தையாகப் பிறந்த சமுர்த்தி இயக்கத்தின் 30 வது ஆண்டு நிறைவை, களுத்துறை, பலாத்தொட சமுர்த்தி சமுதாய ...
18/04/2025

1995 ஆம் ஆண்டு சிறு குழந்தையாகப் பிறந்த சமுர்த்தி இயக்கத்தின் 30 வது ஆண்டு நிறைவை, களுத்துறை, பலாத்தொட சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் உத்தியோகத்தர்கள் ஒன்றாகக் கொண்டாடிய தருணம்.
By: Samurdhi Media Kaluthura District.

உலக வங்கி நிதிமூலம் சமுர்த்தி சமூக வலுவூட்டல் வேலை திட்டத்தின் பொருட்டு குடும்ப அபிவிருத்தி திட்டம் (FDP) தொடர்பான 1வது ...
17/04/2025

உலக வங்கி நிதிமூலம் சமுர்த்தி சமூக வலுவூட்டல் வேலை திட்டத்தின் பொருட்டு குடும்ப அபிவிருத்தி திட்டம் (FDP) தொடர்பான 1வது வேலைத்திட்டமானது நானாட்டான் பிரதேச செயலப் பிரிவிற்குட்பட்ட கற்கிடந்த குளம் கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், சிரேஷ்ட முகாமையாளர் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இத்திட்டத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
By: Samurdhi Bank Murunkan

Address

Battaramulla

Opening Hours

10:00 - 12:00

Telephone

+94778312930

Alerts

Be the first to know and let us send you an email when Samurdhi FM Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samurdhi FM Tamil:

Share