24/06/2026
🏆⚽ படுவான் சமர் – பருவம் 16 ⚽🏆
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று வரும் மிகப்பிரமாண்டமான உதைபந்தாட்ட தொடரான "படுவான் சமர் – பருவம் 16" இன் இறுதிநாள் நிகழ்வு, கழகத்தின் தலைவர் திரு. கபில்ராஜ் அவர்களின் தலைமையில் குமரகுரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்வி, கலை மற்றும் கலாச்சார செயலாளர் திரு. சந்திரசேகரன் மணிசேகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 36 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று போட்டியிட்ட இத்தொடரில், தமது சொந்த மண்ணில் உற்சாகமாக விளையாடிய ஈஸ்வரா விளையாட்டு கழகம் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி முதலாம் இடத்தைப் பெற்று சாம்பியன் மகுடத்தை தனதாக்கியது. 🏆✨
🥇 முதலாம் இடம் – ஈஸ்வரா விளையாட்டு கழகம், கொக்கட்டிச்சோலை🥈 இரண்டாம் இடம் – வைரவர் விளையாட்டுக்கழகம், பட்டிப்பளை🥉 மூன்றாம் இடம் – விநாயகர் விளையாட்டுக்கழகம், முதலைக்குடா
கொக்கட்டிச்சோலை என்ற வளர்ந்து வரும் தனித்தமிழனின் நகரத்தை மேலும் வளமானதாக்கும் நோக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பல முக்கிய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தார். அந்த பங்களிப்புகளுக்கான நன்றியுணர்வின் அடையாளமாக, ஈஸ்வரா விளையாட்டு கழகம் தனது முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு அவரை தொடர்ந்து அதிதியாக அழைத்து கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
படுவான் சமர் – பருவம் 16, கொக்கட்டிச்சோலை மண்ணின் விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு பொன்னான அத்தியாயமாக பதிவாகியுள்ளது. ❤️⚽🏆