Netrikkan நெற்றிக்கண்

Netrikkan நெற்றிக்கண் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்தின் முதலாம் நாள் நிகழ்வொழுங்குகாலை 10.00 ம...
22/06/2025

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதி கோரும்
அணையா விளக்கு போராட்டத்தின் முதலாம் நாள் நிகழ்வொழுங்கு

காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்படும். தீபத்தினை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் உறவினர், மத தலைவர்கள் ஏற்றிவைப்பர்

இரண்டாவது நிகழ்வாக மலர்வணக்கம் இடம்பெறும்

மூன்றாவது நிகழ்வாக மத தலைவர்களின் ஆத்மவுரை இடம்பெறும்

மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பு இடம்பெறும்

இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடல் இடம்பெறும்.

சந்தியில் நின்று சர்வதேசத்தை அழைக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வாருங்கள்.

இன்றைய தினம் (21.06.2025தனது முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் A330-200 விமான சேவைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின...
21/06/2025

இன்றைய தினம் (21.06.2025தனது முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் A330-200 விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சமீபத்தில் இணைகப்பட்ட விமானமான ஏர்பஸ் A330-200 விமானம் இன்று தனது முதல் வர்த்தகப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலைத்தீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது என்பது குறிப்பிடதக்கது.

தம்புள்ளை -கண்டி பிரதான வீதியில் 58வது மைல் கல் அருகே முச்சக்கர வண்டியும் பாரவூர்த்தியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் ...
21/06/2025

தம்புள்ளை -கண்டி பிரதான வீதியில் 58வது மைல் கல் அருகே முச்சக்கர வண்டியும் பாரவூர்த்தியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளார்கள்.

புத்தளம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 27வயது யுவதி ஒருவர் வைத்தியசாலை குளியலறையில் சிசுவை பிரசிவித்து யாரு...
21/06/2025

புத்தளம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 27வயது யுவதி ஒருவர் வைத்தியசாலை குளியலறையில் சிசுவை பிரசிவித்து யாருக்கும் தெரியாமல் வீசியுள்ள நிலையில் குறித்த நபர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளர்

பதுளையின் துன்ஹிந்த பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்...
21/06/2025

பதுளையின் துன்ஹிந்த பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21/06/2025

பதுளையில் இன்று(21) மாலை பஸ் விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது.

பதுளையின் துன்ஹிந்த பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21/06/2025

மலையக மக்கள் தமக்கான சொந்த நில உரிமை கோரி இன்று(21) ஹற்றனில் ஆர்ப்பாட்டம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன  வின்  ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன...
21/06/2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன் படுத்தப் பட்டதாக அநுராதபுரம் எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத்தலைவர் பி. வி. லக்ஸ்மன் ஜெயவர்த்தன
இந்த முறைப்பட்டை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது அதன் அடிப்படையில் WTI  ரகம் (பீப்பாய்) -74.93 அ. டொலராகவு...
21/06/2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது அதன் அடிப்படையில்
WTI ரகம் (பீப்பாய்) -74.93 அ. டொலராகவும்
பிரெண்ட் ரகம்-(பீப்பாய்)-77.01 அ. டொலராகவும்பதிவாக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று கல்முனை பிரதான வீதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈட...
21/06/2025

அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று கல்முனை பிரதான வீதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜீலை 25ம் திகதி வரைக்கும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந் துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

20/06/2025

செம்மணி புதைகுழியின் நீதிக்கான போராட்டம்…!

20/06/2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் அமர்வு வாகரை பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (20) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.

19 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் தவிசாளர் தெரிவானது எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்ற வாக்கெடுப்பு கோரல் இடம்பெற்றது.

அதில் திறந்த வாக்கெடுப்புக்கு சார்பாக 08 உம், இரகசிய வாக்கெடுப்புக்கு 11 ஆதரவு கோரினர்.

அதன் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு கோரப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் பல்கோஸ் மோகனராசா அவர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் அவர்களும் முன்மொழியப்பட்டனர்.

இரகசிய வாக்கெடுப்பு மூலம் 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் க. தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டார். 07 உறுப்பினர்கள் எதிரான வாக்குகளை செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் பிரதித்தவிசாளர் தெரிவு கோரப்பட்டது. அதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரனும், இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.

அதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன், பிரதித்தவிசாளராக சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார். ஒரு உறுப்பினர் நிராகரித்து வாக்கினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan நெற்றிக்கண் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan நெற்றிக்கண்:

Share

Category