BATTI TODAY

BATTI TODAY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BATTI TODAY, Media/News Company, Batticaloa.

Our coverage is comprehensive and insightful, encompassing a gamut of topics that include hard-hitting political interviews, news and human interest stories, issue-based investigations and analyses.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் புதிய மைல்கல்மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டம...
09/10/2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் புதிய மைல்கல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவருக்கு இடப்புற கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியர் நதுன் மொஹோட்டி மற்றும் அவரது குழுவால் குறித்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தில்  கிழ...
09/10/2025

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண மட்ட சிறார்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். ஆர். ஹசந்தி தலைமையில் வெபர் மைதானத்தில் இன்று (09) இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜெ.எஸ்.அருள்ராஜ் கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாண ஆரம்ப பிரிவிற்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் கே.ஜெயவதன் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் எற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

வலய மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கான கிழக்கு மாகாண போட்டியில் 17 வலயத்தினைச் சேர்ந்த 1836 மாணவர்களும் 153 அணிகள் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்காட்டவுள்ளனர்.

வேகமாய் தடைதாண்டி ஓடுதல், நின்று நீளம் பாய்தல், தட்டம் பாய்தல், முழங்கால் ஊன்றி பந்து எறிதல், தாம்பு தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

இதன் போது சிறார்களின் கண்கவர் நடனங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கைக்கமைய  ஹுதா பள்ளிவாயல் வீதியில் சேதமடைந்த...
09/10/2025

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கைக்கமைய ஹுதா பள்ளிவாயல் வீதியில் சேதமடைந்து காணப்பட்ட வடிகான் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் நேரடிக்கண்காணிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வடிகான் சேதமடைந்து மண், குப்பை, கூழங்கள் நிறைந்து கழிவுநீர் வடிந்தோட முடியாத நிலை
காணப்பட்டமையினால் பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், பள்ளிவால்களுக்கு செல்வோர் எனப்பல தரப்பினரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதனைக்கருத்திற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதா தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளர் நேரடியாகப் பார்வையிட்டு புனரமைப்புப் பணிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், வடிகான் புனரமைப்புப்பணிகள் வேகமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

தனது கோரிக்கையை கவனத்திற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளருக்கு பிரதேச மக்கள் சார்பில் பிரதேச சபை உறுப்பினர் நன்றி தெரிவித்ததுடன், குறித்த வடிகானை புனரமைக்க முயற்சி மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினருக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

09/10/2025

மட்டக்களப்பு மாவட்ட வலயங்களின் முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரிவிழாமட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலயத்தின் நவராத்தி...
01/10/2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரிவிழா

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி பூசையின் ஏழாம் நாள் பூசை (29) திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றுவரும் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தின் வடிவமான துர்க்கைக்கும், அடுத்துவரும் மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்கள் கல்வியின் வடிவமான சரஸ்வதிக்கும் விழா எடுத்து விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும்.

ஒன்பது நாள் நிறைவுபெற்று பத்தாம் நாள் விஜயதசமியாகும், அன்றைய தினம் ஏடு தொடங்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் இடம்பெற்ற பூசை நிகழ்வில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு பொங்கலிட்டு, பிரசாதம் படைத்து விஷேட பூசை இடம்பெற்றதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலக கட்டடத் தொகுதியின் வரவேற்பு பீடத்திற்கு அருகில் ஆன்மீக சொற்பொழிவு, நடன கலைஞர்களின் அழகிய நடனங்கள் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றததுடன், இதன்போது கண்கவர் நடன நிகழ்வுகளை வழங்கிய நடன கலைஞர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஆலய பிரதம குரு ஆகியோரினால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்புஎம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.இலங்கையின் நீண்ட ...
26/09/2025

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கையின் நீண்ட வரலாற்றிலும் அண்மைய தேசிய அபிவிருத்தியிலும் சீனா ஒரு முதன்மையான மூலோபாயப் பங்காளியாகத் திகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் இரு நாடுகளின் வரலாற்று மற்றும் கலாசாரத்தொடர்புகள், நவீன காலத்தில் பொருளாதார முதலீடுகள் மற்றும் பாரிய உட்கட்டமைப்புத்திட்டங்கள் மூலம் ஆழமடைந்துள்ளன.

குறிப்பாக, சீனாவின் 'ஒரு பட்டை ஒரு சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative - BRI) இலங்கையின் புவியியல் அமைப்பைச்சாதகமாகப் பயன்படுத்தி, பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை இங்கு முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.

1. உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத்திட்டங்கள்

சீனாவின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக முகப்பையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானவை.

அ. கொழும்புத்துறைமுக நகரம் (Colombo Port City)

கொழும்புத் துறைமுக நகரம், இலங்கையின் அபிவிருத்தியில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாரிய முதலீட்டையும், பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும்.

*திட்டத்தின் நோக்கம்:

கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தையொட்டி 269 ஹெக்டேர் கடற்பரப்பை நிலமாக மீட்கும் (Land Reclamation) இந்த மெகா திட்டம், சர்வதேச நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழிநுட்ப மையங்களைக்கொண்ட சிறப்புப்பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) உருவாக்கப்படுகிறது.

*சீனப் பங்களிப்பு:

இத்திட்டத்தில் ஆரம்ப முதலீடு சுமார் $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நிலத்தை மீட்கும் மற்றும் கட்டுமானப்பணிகளில் பிரதானமாகச் சீன அரசு நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) ஈடுபட்டுள்ளது.

* ஒப்பந்தச்சாரம்:

முதலீட்டுக்கு ஈடாக, மீட்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி CHEC நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

* எதிர்பார்க்கப்படும் தாக்கம்:

இது பூர்த்தி செய்யப்படும் போது, துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற பிராந்திய நிதி மையமாகச் செயற்பட்டு, கணிசமானளவு அந்நிய முதலீட்டையும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ. ஹம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port)

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச கடல்வழி வர்த்தகப்பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும்.

* திட்டச்சவால்:

இத்துறைமுகம் இலங்கையின் சொந்தக் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் கட்டுமானத்திற்கான பாரிய சீன வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாததால் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளானது.

* சீனப்பங்களிப்பு:

கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, 2017ம் ஆண்டு, துறைமுகத்தின் 70% பங்கு சீன அரசு நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.

* பொருளாதார விளைவு:

துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனம் ஏற்றதன் மூலம், அது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

இ. ஏனைய உள்கட்டமைப்புத்திட்டங்கள்

மேற்கூறிய பிரதான திட்டங்கள் மட்டுமன்றி, சீனா இலங்கையின் பல முக்கிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பங்களித்துள்ளது.

* நெடுஞ்சாலைகள்:

தென் அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway - E01) மற்றும் ஏனைய முக்கிய வீதி அபிவிருத்திகள்.

* துறைமுக முனையங்கள்:

கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் (South Container Terminal) கட்டுமானப் பணிகள்.

* கட்டிடங்கள்:

கொழும்பிலுள்ள தாமரைக்கோபுரம் (Lotus Tower) போன்ற முக்கிய அடையாளச்சின்னங்கள்.

2. அரசியல், வர்த்தகம் மற்றும் தூதரகப்பணிகள்

பொருளாதாரத் திட்டங்களுக்கப்பால், சீனா பல ஆண்டுகளாக இலங்கையுடன் நெருக்கமான அரசியல் மற்றும் வர்த்தக உறவைப் பேணி வருகிறது.

அ. அரசியல் உறவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு

* வர்த்தகப்பங்காளி:

சீனா, இலங்கையின் பிரதான வர்த்தகக்கூட்டாளிகளில் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை, ஆடை போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.

* கடன் உதவி:

அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்குக் கடன் மறுசீரமைப்பு வழங்குவதில் சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்டு வருகிறது.

ஆ. சீனத்தூதரகத்தின் செயற்பாடுகள்

இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மற்றும் மக்கள் மட்ட உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கியப் பணிகளை ஆற்றுகிறது.

* கொள்கை ஒருங்கிணைப்பு:

இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாயக் கூட்டணிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்தல்.

* மனிதாபிமான உதவி:

அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்குவதில் முக்கியப் பங்காற்றுதல்.

* கலாசாரப்பரிமாற்றம்:

புலமைப்பரிசில்கள் (Scholarships) வழங்குதல் மற்றும் சீனக்கலாசார நிகழ்ச்சிகள், கலை விழாக்களின் மூலம் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதல்.

* குடியினர் பாதுகாப்பு:

இலங்கையில் பணி புரியும், வாழும் சீனக்குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு மிக முக்கியமானதும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திறனைப் பலப்படுத்துவதுமான ஒரு அங்கமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய முதலீடுகள், இலங்கையைப் பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் நிதி மையமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.

இந்த உறவு எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நாட்டின் 76வது founding day நேற்று (25) கெழும்பு City of Dream ஹோட்டலில் இடம்பெற்றது.

(சீன மக்கள் குடியரசின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு பிரசுரமாகும் கட்டுரை)

காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் மற்றுமொரு மாபெரும் சாதனை..........................................................
26/09/2025

காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் மற்றுமொரு மாபெரும் சாதனை................................................................

எமது பாடசாலையை சேர்ந்த மாணவன் AA.Abdullah Aaris , Robotics and Innovation போட்டியில் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றதுடன் Gold Medal மற்றும் 25,000 பணப்பரிசில் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் Robotic - productive & industry - Portable finger print Machine இனை தனது புத்தாக்கமாக சமர்ப்பித்து தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இந் நிகழ்வானது இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கமயில் இடம்பெற்றதுடன் பிரதமர் ஹரினி அமரசூர்ய அவர்களும் கலந்து கொண்டார். மேலும் இம்மாணவர் கடந்த மாதம் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது பாடசாலையை சேரந்த மற்றுமொரு மாணவன்
MJ.Shameeh தனது புத்தாக்கத்தினை மற்றுமொரு பிரிவில் சமர்ப்பித்து மாகாண ரீதியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு Merit மற்றும் 5000 ரூபா பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்றவர் யானை தாக்குதலில் உயிரிழப்புமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேன...
26/09/2025

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்றவர் யானை தாக்குதலில் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய வேதம் பூலாக்காடு கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினத்தன்று காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடி சென்ற போது அந்த பகுதியில் யானை தாக்குதலில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், மற்றும் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர்...
25/09/2025

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பாடசாலைக்கான அதிபர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிபர் எம். அப்துல் ஸலாம்க்கான நியமனக் கடிதம் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சஹ்துல் நஜீமால் வழங்கப்பட்டது.

அப்துல் ஸலாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியிலும் கற்றார். அதன் பின்னர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முதல் தொகுதியினராக கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்து விஞ்ஞானப் பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தேசிய கல்வி நிறுவகத்தில் விஞ்ஞான கல்விமாணி பட்டத்தைப் பூர்த்தி செய்தார். இந்நிலையில் இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இச்சேவையில் தரம் 3 இற்கு நியமனம் பெற்றார். அதன் பின்னர் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து தற்போது முதுகலைமாணி கற்கை நெறியினை கற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவரது இளமைப்பருவத்திலிருந்து ஆங்கில மொழியில் ஒரு அலாதியான விருப்புக் கொண்டவராக காணப்பட்டமையினால் தனது சுய தேடலின் மூலம் ஆங்கிலத்தில் உச்ச புலமை கொண்ட ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் சிறுபராயம் முதல் கிரிக்கெட், காற்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் காணப்படுகிறார். இவரது ஆங்கில புலமை காரணமாக மேற்படி விளையாட்டுக்களின் விதிமுறைகள் தொடர்பான சிறந்த அறிவினையும் தெளிவினையும் பெற்றிருந்தார். அத்தோடு கணிணியில் சிறப்புத் தேர்ச்சி உடையவராகவும் உள்ளார்.

விஞ்ஞானப் பாட ஆசிரியராக 1995 ஆம் ஆண்டு கல்முனை சாஹிறாக் கல்லூரியில் நியமனம் பெற்ற இவர் இப்பாடசாலையில் சிறந்த விஞ்ஞானப் பட ஆசிரியராக மிளிர்ந்தார். இப்பாடசாலையில் சுமார் 22 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு இருந்த ஆங்கிலப் புலமை, கணிணி மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பான அறிவும் தேர்ச்சியும் இப்பாடசாலையின் பல்வேறுபட்ட துறைகளுக்குப் பொறுப்பானவராக நியமனம் பெறுவதற்கு வழிவகுத்தது. இதனடிப்படையில் சாஹிராக் கல்லூரியின் கணிணிப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் மாணவர்களுக்கு கணிணி டிப்ளோமாக் கற்கை நெறிகளை மாலை நேரத்தில் நடாத்தி பாடசாலையினால் சான்றிதழ்களும் வழங்குவதற்கு வழிசெய்தார். அந்தவகையில் பாடசாலையின் கணிணிக் கூடத்தை ஒழுங்கமைக்கப்பட்ட ரீதி்யாகப் பயன்படுத்தி இப்பிராந்திய மாணவர்களின் கணிணிக் கல்விக்கு வித்திட்டார். அத்தோடு விளையாட்டுக்களில் அவருக்கு இருந்த நிறைவான அறிவினால் சதுரங்கம் என்ற விளையாட்டு இப்பிராந்தியத்தில் அறியப்படாமல் இருந்த காலத்தில் இப்பாடசாலை மாணவர்களை அவ்விளையாட்டில் பயிற்றுவித்து பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கு வழியமைத்தார். எந்த பொறுப்பினையும் பின்னிற்காமல் ஏற்கும் ஆளுமை கொண்ட இவர் பாடசாலையின் சாரணர் மற்றும் விளையாட்டுக்களுக்கும் காத்திரமான பங்கினை ஆற்றி இருந்தார்.

இலங்கை சாரணர் இயக்கத்தின் சிஎல்ரி பதவியினை வகிக்கும் அப்துல் ஸலாம் தேசிய சாரணர் பயிற்சிக் குழுவின் உறுப்பினராகவும் செயற்படுகின்றார். அத்தோடு அகில இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் இரண்டாம் நிலை நடுவராக 2002 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை செயற்பட்டார்.

இலங்கை அதிபர் சேவையில் 2016ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம், சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் வித்தியாலயம் மற்றும் கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பிரதி அதிபராகவும் இறுதியாக ஒரு வருடகாலம் கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலய அதிபராகவும் கடமையாற்றினார்.

பல்துறைப் புலமையும் சிறந்த ஆளுமையும் கொண்ட இவர் கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்றிருப்பது இப்பிரதேச மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரை காணவில்லை மக்கள் கடும் விசனம் தெரிவிப்புமட்டக்களப்பு கல்முனை...
25/09/2025

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரை காணவில்லை மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில்; அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் கூரைத் தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாகவும் இந்த பஸ்தரிப்பு நிலையம் கூரை இல்லாமல் இருப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கண் இல்லையா என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் மேற் கூரைக்கு பிளாஸ்ரிக் கண்ணாடியிலான கூரை உடைந்து முற்று முழுதாக இல்லாமல் போயுள்ளது. இந்த நிலையில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிக்கமுடியாது பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பஸ் தரிப்புக் கூரை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இல்லாமல் போயுள்ளது. இருந்தும் இதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் இதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காது என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? மக்களின் வரிப்பணத்தில் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இந்த உத்தியோகத்தர்கள் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களுக்கு சேவை செய்யாது யாருக்காக வேலை செய்கின்றனர்?என கடும் விசனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Address

Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATTI TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share