BATTI TODAY

BATTI TODAY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BATTI TODAY, Media/News Company, Batticaloa.

Our coverage is comprehensive and insightful, encompassing a gamut of topics that include hard-hitting political interviews, news and human interest stories, issue-based investigations and analyses.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வுமட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு...
26/06/2025

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று(26) நடைபெற்றது. தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிறிநாத் சபையோர் அரங்கில் அவதானித்துக் கொண்டிருந்தார்.

இச்சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு நிமிடம் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது பிரதிநிதிகள் தமது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தமது வட்டாரங்களில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.

இச்சபையின் சீரான நடவடிக்கைகளுக்காக தொழில் நுட்பம், அனர்த்த முகாமைத்துவம், சுற்றாடல், நிதி விவகாரம், வீடமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் ஆலோசனை ஆகிய விடயங்களைக் கையாள்வதற்காக மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி படுகொலையைக் கண்டித்து இச்சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடங்கிய மகஜர் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது.

இச்சபையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 18 வட்டாரங்கள் மற்றும் பட்டியல் ஆசனங்கள் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட 32 உறுப்பினர்கள் ஏறாவூப்பற்று பிரதேச சபையில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சி- 13 ஆசனங்கள், தேசிய மக்கள் சக்தி-5 பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்- 4 உறுப்பினர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தலா இரண்டு உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய அணிகள் இச்சபையில் ஐந்து ஆசனங்களைக் கொண்டுள்ளன

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம்அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்க...
26/06/2025

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

தவிசாளர் தெரிவின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மாஹிரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நளீமும் போட்டியிட்ட நிலையில், 14 வாக்குகளைப் பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தவிசாளராக தெரிவானார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நளீமுக்கு ஆதரவாக 7 வாக்குகள் கிடைக்க்பெற்றது.

இதன் போது, உப தவிசாளராக வினோகாந் தெரிவு செய்யப்பட்டார்.

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு !..............................................   .....................
26/06/2025

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு !.............................................. ...................

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட அவர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குழந்தைகளிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் 5 பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு உள்ளாகி வருவதாக தெரியவந்துள்ளது.

குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக சுகாதார நிபுணர் தினுஷா பெரேரா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.

செம்மணியில் அமைச்சர் சந்திரசேகரனை தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம்- கனகரஞ்சினி................... .  ........................
26/06/2025

செம்மணியில் அமைச்சர் சந்திரசேகரனை தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம்- கனகரஞ்சினி................... . ......................................

செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

நேற்று(25) யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரட்க்கை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர்.

அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்புக் கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல்......................................
26/06/2025

திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல்.............................................

மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால் இன்று புதன்கிழமை (25) பிற்பகல் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த திருடன் அவனது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் 01.30 மணியளவில் அவனை கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று அவனை கைது செய்ய முற்பட்டனர்.

இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிசார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் 24 மணி நேர அடையாள  வேலை நிறுத்தம்ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்...
26/06/2025

ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம்

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று(26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.



அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.



மேலதிக நேரக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்தே இவ் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.



மேலும், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை இதன் காரணமாகவே குறித்த போராட்டம் முன்னனெடுக்கப்படைகிறது.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் மச்சான்- மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்...
25/06/2025

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் மச்சான்- மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து தாக்குதல்........................................

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இதுபற்றி தெரியவருவதாவது,
மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்கா வயலுக்கு சென்றுஅங்கு சம்பவதினமான இரவு 10.00 மணியளவில் வாடியில் தங்கியிருந்துள்ள நிலையில் மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து மனைவியின் சகோதரியின் ககணவர் மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடவியல் பிரிவினர்; வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பெரும் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு.............................................
25/06/2025

முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு............................................. . ................ . .

மட்டக்களப்பு திருகோணமலை வீதி மெதடிஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீதி பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவரை முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று(25) உயிரிந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.





வந்தாறுமூலை களுவங்கேணியைச் சேர்ந்த 33 வயதுடைய புண்ணியமூர்த்தி புஸ்பாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





கடந்த திங்கட்கிழமை (23) திகதி காலை 10.00 மணியளவில் திருகோணமலை வீதியில் உள்ள மெதடிஸ் தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீதிக் கடவை வெள்ளைக் கோட்டின் ஊடாக பாதசாரி ஒருவர் துவிச்சக்கரவண்டியைக் கடக்க முற்பட்டபோது வேகமாக பிரயாணித்த முச்சக்கரவண்டி மோதியதையடுத்து படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதிகளை கைது செய்தனர்.



இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.





இந்த நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்தவர் சிகிச்சைப்பலனின்று இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.





இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக அமைக்க நடவடிக்கை .................................................
25/06/2025

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக அமைக்க நடவடிக்கை ...................................................

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பாலமாக அமைப்பதற்காக அதன் மதிப்பீட்டு அறிக்கையினை பெறுவதற்கான வேலைத்திட்டம் இன்று(25) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க, நெடுஞ்சாலை அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் உத்தரவுக்கமைய, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.வீ. அலியாரின் மேற்பார்வையில், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட். ஏ. எம் அஸ்மிரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொறியியலாளர் ஏ.எல். அப்துல் ஹக்கீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.வீ. முஹம்மது ஹாரித் மற்றும் ஏ.சீ.முஹம்மது நிசார் ஆகியோர் இன்று கள விஜயத்தினை மேற்கொண்டு, அதற்கான மதீப்பீடு செய்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப், எம்.ஐ. நஜீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பாலமானது 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு  சென்ற  தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் ...
25/06/2025

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது ..........................................

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு போர்க் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டடுள்ளார்.

திருகோணமலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு போராட்டம்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...
25/06/2025

திருகோணமலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(25) திருகோணமலையில் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக காலை 8.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டு நகரில் மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் எரிபொருள் பவுசர் மோதியதில் பெண் படுகாயம்மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி ...
25/06/2025

மட்டு நகரில் மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் எரிபொருள் பவுசர் மோதியதில் பெண் படுகாயம்

மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பவுசர் மோதியதில் பெண் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

40 ஆயிரம் எரிபொருளுடன் பயணித்த இந்த பவுசர் சம்பவ இடத்தில் கவிழ்ந்து இருந்தால் நகரில் இன்று பாரிய ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் எரிபொருள் பவுசரை அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.

அத்துடன் ஏற்பட்ட விபத்துச் சம்பவம் குறித்து போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATTI TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share