"Clean Srilanka" மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு!!
"Clean Srilanka" கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் ஊடாக விரிவான மாற்றப்பட்ட செயன்முறை ஒன்றின் மூலம் மேம்பட்ட சமூகம் ஒன்றினை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் "Clean Srilanka" கருத்திட்டம் கடந்த 01.01.2025 திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி கருத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமே ஜனாதிபதி செயலகத்தின் பண்ணிப்பாளர் ஏ.கவிதா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்
வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(03) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப தலைவர் ஆ.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மா.நடராசா, மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள், பிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளாள் கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், இம்ம
மட்டக்களப்பில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்..!
வீட்டில் தங்கி வேலை செய்பவருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்..!
"எமது உழைப்பின் பெறுமதியை நாமே நிர்ணயிப்போம்" எனும் தொனிப்பொருளில் வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் தமக்கு இளைக்கப்படும் செயற்பாடுகளை நிவர்த்திக்கும் பொருட்டு மட்டக்களப்பில் இன்று (31) செவ்வாய் கிழமை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கவுள்ளதுடன் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்..
மட்டக்களப்பு அபிவிருத்தி பணிகளின் போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை; அருண் ஹேமச்சந்திரா உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ந
கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்ய கோரி மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் ஆர்ப்பாட்டம்.
வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாக பொலிசாருக்கு எதிராகவும் இன்று திங்கட்கிழமை (30) கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்பு போராட்டம் காந்த பூங்காலில் ஆரம்பித்து பழயை கச்சேரிக்கு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்
கடந்த 20 ம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற கிராம உத்தியோத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இது வரை கைது செய்யாததையடுத்து மாவட்ட ஜக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கவனயீர்பு ஆரப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சுகயீன விடுமுறையுடன் ம
3 இலட்சம் ரூபா பெறுமதியான மாட்டை பிடித்த இராட்சத முதலை - !!
மட்டக்களப்பில் 16 அடி நீளமான இராட்சத முதலை பிடித்த மக்கள்!!
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (29) ஞாயிற்று கிழமை இலங்கைக்கான சீனத் தூதுவர் 720 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 720 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் மற்றும் தூதரின் மனைவி சீன அரசியல் பிரிவு தலைவர் கின் லிகோங் ஆகியோரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் ஜஸ்டினா முரளீதரன்,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!!
கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market நேற்று (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளாந்தம் காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த ப
மட்டக்களப்பு சீயோன் தேவாலய கிறிஸ்மஸ் தின ஆராதனை
மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தி