Kalaiyaruvi TV

Kalaiyaruvi TV கலையருவி சமூக ஊடக தொலைக்காட்சி

விளையாட்டில் வேறுபட்டாலும் நல்ல குணங்களால் ஒன்று படும் இந்தக் காட்சி அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! #வாழ்த்துக...
24/09/2025

விளையாட்டில் வேறுபட்டாலும் நல்ல குணங்களால் ஒன்று படும் இந்தக் காட்சி அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
#வாழ்த்துக்கள்

24/09/2025

இது வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசலுக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகாலின் நிலை

நாளடைவில் பாரிய நோய்களை கொண்டுவரும் இந்நிலைக்கு பொது மக்களும் ஒரு வகையில் காரணம்.
தனது வீட்டு கழிவுகளை அல்லது தாங்கள் வீதிகளில் நிற்கும் போது உணவுப் பொருட்களை பாவித்து எஞ்சிய கழிவுகளை வீதிகளில் வீசுவதால் இவ்வாறான நிலை ஏற்படுகிறது. மற்றும் இவ் வடிகாலுக்கு குறித்த பணியாளர்களால் மூடிகள் இடப்படாமை போன்ற விடயங்களினாலும் இவ்வாறான ஆபத்தான நிலை உருவாகிறது.

எனினும் பாரிய தீய விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் இதனை தடுப்பது சிறந்தது.

உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு!

ஹிஜ்ரா வித்தியாலயத்தில் மரநடுகை அழகான பாடசாலை வளமான நாடு எனும் தொனிப்பொருளில் மரநடுகை மட்/மம/ ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியால...
24/09/2025

ஹிஜ்ரா வித்தியாலயத்தில் மரநடுகை

அழகான பாடசாலை வளமான நாடு எனும் தொனிப்பொருளில் மரநடுகை மட்/மம/ ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் இன்று (24) காலை 10.30 மணிக்கு வித்தியாலயத்தின் அதிபர் MA.சாபிர் தலைமையில் சிறப்புடன் இடம்பெற்றது.

(ACM.ருமைஸ்)

மட்டக்களப்பு மாவட்ட சமாதான தூதுவர்கள் அமைப்பின் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அரூஸ் தனது முயற்சியின் ஏற்பாட்டில் மேற்கொண்ட இந்நிகழ்வில் பிரதான அதிதிகளாக புனானை 23ம் படைப் பிரிவின் இராணுவ முகாம் மேஜர் ஜெனரல் GPP.குலதிலக, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் MSM.ஜரூல், வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி K.ஜயவர்த்தன, சமூக செயற்பாட்டாளர் கலாநிதி M.முஸம்மில், அமைப்பின் செயலாளர் AUM.முஸ்தபா ஆசிரியர், கோறளைப்பற்று மேற்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் MI.சபீனா மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வினில் மாணவர்களின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மரக் கன்றுகள் அதிதிகள் கரங்களால் வழங்கிவைக்கப்பட்டதுடன் சில மரக் கன்றுகளை பாடசாலை வளாகத்தில் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

24/09/2025

#தாய்லாந்தின்_பாங்காக்கில் இன்று (24) ஒரு வீதி அப்படியே கீழிறங்கும் பரபரப்பான காட்சி. இதனால் வீதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரை சந்தித்தார்ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள...
24/09/2025

ஜனாதிபதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரை சந்தித்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை, உயர் ஸ்தானிகரினால் அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் காசா குழந்தைகளுக்கான கல்வி பாதயாத்திரைவாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் மாணவர்கள...
23/09/2025

வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் காசா குழந்தைகளுக்கான கல்வி பாதயாத்திரை

வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, “காசா குழந்தைகளின் கல்வி – முழு உலகினதும் பொறுப்பு” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, 22.09.2025 இன்று செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்தனர்.

தரம் 1 முதல் 5 வரை பதினைந்து வகுப்பறைகளில் கற்கும் சுமார் 492 மாணவர்கள் மற்றும் 22 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, ரபீயுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் நபி முகம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கல்வி, கருணை, மனிதநேயப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பச்சை நிறக் கொடிகள் மற்றும் காசா குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய மாணவர்கள், வாழைச்சேனை பிரதானச் சந்தை, அந்-நூர் தேசிய பாடசாலை மற்றும் கிராமத்தின் பல பிரதான வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

இப்பாதயாத்திரை,
📢 கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை
📢 காசா குழந்தைகளின் கல்வி பாதுகாப்பு முழு உலக மக்களின் பொறுப்பு
என்பதைக் குரலாக்கி சமூகத்திடம் கொண்டு சென்றது.

இந்நிகழ்வின் மூலம் சிறுவர்கள் உலகக் குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

சுத்தமானதும், பசுமையானதுமான காத்தான்குடி நகரை நோக்கிய தேசிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு.-( எம்.ஏ, சீ.எம்.ஜெலீஸ் )2025 ஆம் ...
23/09/2025

சுத்தமானதும், பசுமையானதுமான காத்தான்குடி நகரை நோக்கிய தேசிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு.

-( எம்.ஏ, சீ.எம்.ஜெலீஸ் )

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின்கீழ் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி அவர்களால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று (23) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஸஹா மெரைன் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது நிருவாக மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செநரத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கிறிஸ்டினா முரளிதரன். பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உப செயலாளர் திருமதி மகேஷி கொடிப்பிளி ஆராய்ச்சி, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெள ஜுத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன், , கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் ஊடகப் பிரிவு தலைவர் இஸுரு அனுராத விஜேசிங்க ,காத்தான்குடி கிளின் ஸ்ரீலங்கா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.எம்.பிர்தெளஸ்(நளீமி), கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லாஹ் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சி செய்யும் இயந்திரத்தினைக் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50862246.97 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சிசெய்யும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிகரம் மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் அஜ்மீருக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருதுகோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப...
23/09/2025

சிகரம் மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் அஜ்மீருக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இயங்கி வரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் முகம்மது அஜ்மீர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இந்த விருதினை வழங்கியுள்ளது.

சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவராக செயற்படும் அஜ்மீர் சிறந்த சமூக செயற்பாட்டளாராக செயற்பட்டமைக்காக இந்த விருது திங்கட்கிழமை (22) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரினால் வழங்கி வைக்கப்பட்டன.
(தகவல் - எச் எம் எம். பர்ஸான்)

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்வில் கந்தசாமி பிரபு எம்பி.++++++++++++++++++++++++++++இளைஞர் விளையாட்டு விவகார ...
23/09/2025

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்வில் கந்தசாமி பிரபு எம்பி.
++++++++++++++++++++++++++++
இளைஞர் விளையாட்டு விவகார அமைச்சின் கீழ் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலையத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு நேற்று (22-09-2025) உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்

இதன் பொழுது மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 8.7மில்லியன் ரூபாய்களில் மூன்று இலட்சம் ரூபாய்கள் நிதியில் பயிற்சி உபர்ணங்கள் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

அத்தோடு, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சி நிலையமானது கோறப்பற்று மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களுடைய எதிர்கால உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மொழிப்பயிற்சி மற்றும் சகலவிதமான தொழிற்பயிற்சி கற்றுக்கொள்ளும் நிலையமாக செயற்பட்டு வருகின்றது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தனது கருத்திலே, தேசிய மக்கள் சக்தி அரசில் இளைஞர்களுடைய நலன்சார்ந்த விடயங்கள் , தொழில்சார்ந்த விடயங்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயங்களில் பூரண அகறையுடன் செயற்பட்டு வருவதுடன், குறித்த பயிற்சி நிலையத்தினை எல்லா வகைகளிலும் முன்னேற்றுவதற்காக அதன் வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்றவகையில் பொறுப்புடன் பங்காற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு தொழிற்பயிற்சி நிலையத்தின் ( Vocational Training Center) பொறுப்பதிகாரி ஏ.எம் ஹனீபா தலமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடந்த எட்டு மாதங்களாக இயங்கி வருகின்ற இந்த நிலையத்தில் குறுகிய கால கற்கை நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு சான்றுதல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும், குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் UKM.அப்துல்லாஹ், பிரதேச செயலாளர் காதர் முஹம்மட் பைரூஸ், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மட்ட செயற்குழு உறுப்பினர் MAC நியாஸ்தீன்
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச மட்ட செயற்குழு உறுப்பினர்கள்
பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்
கோறளைப்பற்று மேற்கு,மத்தி,மற்றும் கோறளைப்பற்று பரதேச இளைஞர்கழங்களின் சம்மேளன தலைவர்கள் ,செயலாளர்கள் அதன் உறுப்பினர்கள்,பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்டவர்கள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

தவல்.அஹமட் இர்ஷாட் பிரதேச ஒருங்கிணைப்பாளர்
கந்தசாமி பிரபு.MP

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்.தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத...
23/09/2025

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலையத்தின் பொறுப்பதிகாரி AM. ஹனீபா அவர்களின் தலைமையில் 22.09.2025 (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இளைஞர்களின் திறன் விருத்தியை அபிவிருத்தி செய்து தொழில் வாய்ப்பினை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு முன்னெடுக்கும் எனவும், ஓட்டமாவடியில் அமையப்பெற்றுள்ள இந்த பயிற்சி நிலையம் எல்லா வகையிலும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.

பயிற்சி நிலையத்திற்கான காணி மற்றும் கட்டட தேவையின் அவசியம் பற்றிய கோரிக்கையினை முன்வைத்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை நூலக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நிலையம், இளைஞர் யுவதிகளின் நன்மை மற்றும் தொழில் பயிற்சியின் அவசியம் உணரப்பட்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் இயங்க தவிசாளரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கெளரவ கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் ஜனாப் UKM. அப்துல்லாஹ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஜனாப் A தாஹிர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஜனாப் MHM. பைரூஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் SA. றியாஸ், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் வேட்பாளருமான ஜனாப் ACM. நியாஸ் ஹாஜியார் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்குழு உறுப்பினர்களும் இதன்போது கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கோறளைப்பற்று மேற்கு, மத்தி மற்றும் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் இதன் போது பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் குறுங்கால கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தகவல் என்.எம் இஹ்ஸான் (ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையம்)

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கு...
23/09/2025

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும்.

(கே எ ஹமீட் )

கிழக்கு மாகாண ஆளுநரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு (22.09.2025) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமல்லெப்பை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய மின்சாரம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்திற்கென தனியான வீடமைப்பு அதிகார சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் .என கோரிக்கையை அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அட்மிரல் மொஹான் விஜய விக்ரம அவர்களிடம் முன்வைத்து இலங்கையில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளிலும் தனியான வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வீடமைப்பு அதிகார சபையை 2014ம் ஆண்டு உருவாக்கினோம்.

2014ம் ஆண்டு திரைசேரியினால் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் 132.69 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கனிசமான மக்களின் வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 2025ம் ஆண்டு வீடமைப்புத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 132.69 மில்லியன் நிதியினை ஆளும் கட்சியினரின் சிபாரிசுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இந்த செயற்பாடு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும், கிழக்கு மாகாண சபையின் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் கட்சி பேதத்திற்கு அப்பால் செயற்படுத்தப்பட வேண்டும் அல்லது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முன்வைக்கும் திட்டங்களை வைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேட்டுக் கொண்டதுடன், விரைவில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை குறித்து பாராளுமன்றத்தில் பேசவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீண்டகாலமாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறைக்கும், நிறைவு செய்யப்படாத பாடசாலைக் கட்டிடங்களையும் நிறைவு செய்யும் செயற்பாடுகளுக்கு 2026ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அடுத்த வருடத்திலிருந்து (2026) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளில் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறை மற்றும் நிறைவு செய்யப்படாத கட்டிடங்கள் தொடர்பாகவும் முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பதிலளித்தார்

வாழைச்சேனை ஆயிஷாவுக்கும் பிறைன்துரைச்சேனை அஸ்ஹருக்கும் பிரபு எம்பி கள விஜயம்.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர...
22/09/2025

வாழைச்சேனை ஆயிஷாவுக்கும் பிறைன்துரைச்சேனை அஸ்ஹருக்கும் பிரபு எம்பி கள விஜயம்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான அபிவித்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு இன்று திங்கட் கிழமை (22-09-2025) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கும், பிறைன்துரைச்சேனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திற்கும் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

ஆயிஷா மகளிர் பாடசாலையின் பாடசாலையின் அதிபர் சாஹாப்தீன் மற்றும் அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அதிபர் சாதிக்கீன் ஆகியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த கள விஜயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டிருந்தார்.

அத்தோடு பாடசாலைளுக்கு தேவையான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் சம்பந்தமாக கேட்டறிந்ததோடு, குறித்த பாடசாலைகளின் அதிபர்களினால் மகஜர்களும் கந்தசாமி பிரபுவிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பொழுது தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிறைன்துறைச்சேனை வட்டாரக்குழு தலைவர்களான சப்ராஸ் மற்றும் அன்சார் ஆகியோர்களுடன் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தார்கள்.

தகவல் அஹமட் இர்ஷாட்
பிரதேச ஒருங்கிணைப்பாளர்.
பிரபு எம்பி

Address

Hairaath Road, Valaichanai/04
Batticaloa

Telephone

+94752707575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaiyaruvi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category