Kalaiyaruvi TV

Kalaiyaruvi TV கலையருவி சமூக ஊடக தொலைக்காட்சி

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அண்மையில் கடமை பொறுப்பேற்ற திரு.ஜோ.அருள்ராஜ் அவர்களை மனித உரிமைகள் சமாதானத் தூ...
23/10/2025

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அண்மையில் கடமை பொறுப்பேற்ற திரு.ஜோ.அருள்ராஜ் அவர்களை மனித உரிமைகள் சமாதானத் தூதுவர் அமைப்பின் சமூக இளைஞர்கள் வலுவூட்டல் மற்றும் சனசமூக திட்டங்கள் பணிப்பாளருமான ASMஅரூஸ் நேரில் சென்று சந்தித்து தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்
தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக நல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

23/10/2025

CREST FIELD International School & Academy ஆங்கில மொழி மூல பாடசாலையில் (வாழைச்சேனை)இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உணவு தொடர்பான விழிப்புணர்வு!உலக உணவுத் திட்டத்தின் வீட்டுத்தோட்ட முறைமையின் ஊடாக பாடசாலை போஷ...
23/10/2025

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உணவு தொடர்பான விழிப்புணர்வு!

உலக உணவுத் திட்டத்தின் வீட்டுத்தோட்ட முறைமையின் ஊடாக பாடசாலை போஷாக்கு நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மூலமாக இச்செயற்திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் உள்ள அறிவு மற்றும் நடைமுறை உத்திகளைக் கொண்டு மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை ரீதியான பெற்றோரை விழிப்பூட்டும் நிகழ்வு நேற்று (22) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களின் பெற்றோர் கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் வளவாளராக பொதுச்சுகாதார பரிசோதகர் M.ஷகீல் கலந்து கொண்டு ஆரோக்கியமான உணவுகள் தொடரபாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளின் வகைகள் பற்றியும் விளக்கமளித்தார். அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதிகா சுரேஷ் இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பினை வழங்கியிருந்தார்.

ஓட்டமாவடி தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு!(எச்.எம்.எம். பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சப...
23/10/2025

ஓட்டமாவடி தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு!

(எச்.எம்.எம். பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருக்கும் பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பைறூஸின் உறுப்புரிமையை நீக்கி இருந்தது.

இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் பைறூஸ் இடைக்கால தடையுத்தரவு வேண்டி வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில், இடைக்கால் தடையுத்தரவு வழங்கப்படாத நிலையில் வழக்கு டிஸம்பர் மாதம் 9 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🔸 ICST பல்கலைக்கழகமும் அபுதாபி பல்கலைக்கழகமும் (Abu Dhabi University) இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்..!(எஸ்....
23/10/2025

🔸 ICST பல்கலைக்கழகமும் அபுதாபி பல்கலைக்கழகமும் (Abu Dhabi University) இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்..!

(எஸ். சினீஸ் கான்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான அபுதாபி பல்கலைக்கழகம் மற்றும் ICST பல்கலைக்கழகம் இணைந்து செயற்படுவது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இன்று (23) அபுதாபியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், பொறியியல் (Engineering), Quantity Surveying, முகாமைத்துவம் (Management) போன்ற துறைகளில் இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும், முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்கள், விரிவுரையாளர்களுக்கான விசேட பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கலாநிதி அன்சாரி, கலாநிதி பஷீல் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபுதாபி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக வேந்தர் Professor Ghassan Aouad மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

மீராவோடை மேற்கில் குழாய் நீர் பதிக்கும் வேலைத்திட்டம்!கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் MHM.பைறூஸ் அவர்களின் வ...
23/10/2025

மீராவோடை மேற்கில் குழாய் நீர் பதிக்கும் வேலைத்திட்டம்!

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் MHM.பைறூஸ் அவர்களின் வழிகாட்டலில் பிரதி தவிசாளர் AH.நுபைல் அவர்களின் பங்களிப்புடன் மீராவோடை மேற்கில் குழாய் நீர் பதிக்கும் ஆரம்ப கட்ட வேலைத்திட்டம் இன்று (23) ஆரம்பமானது.

தமது பிரதேச மக்களின் நலன்கருதி குறித்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகை செய்த தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளருக்கும் மீராவோடை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் MI.றிஸ்வின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி தவிசாளரின் இடைக்காலத்தடை கோரிய வழக்கு டிசம்பர்  9ல் ஐக்கிய மக்கள் சக்தியினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கெதிர...
23/10/2025

ஓட்டமாவடி தவிசாளரின் இடைக்காலத்தடை கோரிய வழக்கு டிசம்பர் 9ல்

ஐக்கிய மக்கள் சக்தியினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கெதிராக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத்தடை விதிக்குமாறு கோரிய வழக்கு இன்று (23.10.2025) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 13.10.2025ம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தவிசாளரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராகத்தெரிவு செய்யப்பட்டமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதாக எழுத்து மூல அறிவிப்பை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த இடைக்காலத்தடை கோரி வழக்கு தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thehotline

சாரதி அனுமதிப் பத்திரம் தொலைந்தமை. கல்குடா யங் ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினரான T.M. இஜாஸ் என்பவரின் சாரதி அனுமதிப்பத்த...
23/10/2025

சாரதி அனுமதிப் பத்திரம் தொலைந்தமை.

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினரான T.M. இஜாஸ் என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) தொலைந்துவிட்டது.

எனவே, அதை கண்டெடுக்கக்கூடிய சகோதரர்கள், கீழே வழங்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு தயவுடனும், அன்புடனும் கேட்டுக் கொள்கிறார்.

தொடர்புக்கு: 0 74 199 9173
0750362744

தகவல் - FM. அfப்ரின்

சேவைநலன் பாராட்டி கெளரவிப்பு! சக்ஸஸ் அகடமியில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் கடந்த 2 வர...
22/10/2025

சேவைநலன் பாராட்டி கெளரவிப்பு!

சக்ஸஸ் அகடமியில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் கடந்த 2 வருடங்களாக கற்பித்ததுடன் தற்போதைய நிலையில் பிரியாவிடை பெற்றுச் செல்லும், ஆசிரியை எம்.முஜிபாவின் சேவையைப் பாராட்டி இன்று புதன்கிழமை 22.10.2025 சக்ஸஸ் நிறுவனத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விடைபெற்றுச் செல்லும் ஆசிரியையின் எதிர்காலம் சிறக்க சக்ஸஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ANM.றிழா தமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகள் உடன் ...
22/10/2025

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும் -நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்.

(தகவல் -எம்.என்.எம்.யஸீர் அறபாத் BA -ஓட்டமாவடி)

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக்கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகமவில் இன்று (22) காலை இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத்தவிசாளருடைய அகோரமான கொலைச்சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இக்கொலைச்சம்பவம் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை பாராளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத்தவிசாளரைக்கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

இந்த உள்ளூராட்சித்தவிசாளரை நியமனமிக்கின்ற தினத்தில் அவருக்குச்சார்பாக வாக்களிக்கவிருந்தவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகமெழுந்திருந்தது.

இப்பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறுபக்கங்களில் திசைதிருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச்சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப்பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள்ளே கொலைச்சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடாத்திய கொலைதாரிகளை மிக அவசரமாககைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர...
22/10/2025

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்(ACM.ருமைஸ்)வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அன...
22/10/2025

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

(ACM.ருமைஸ்)

வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று 22.10.2025ஆம் திகதி பிரதேச செயலாளர் A.தாஹிர் அவர்களின் தலைமையில் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் A.ஜுமானா ஹஸீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை பிரதி தவிசாளர் AH.நுபைல் மற்றும் அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கனமழை தொடங்குவதற்கு முன்னர் அனர்த்த குறைப்பு செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது தொடர்பிலும் ஏனைய அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

Address

Hairaath Road, Valaichanai/04
Batticaloa

Telephone

+94752707575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaiyaruvi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category