Kalaiyaruvi TV

Kalaiyaruvi TV கலையருவி சமூக ஊடக தொலைக்காட்சி

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் நிர்வாக கூட்டம் சிறப்புடன் இடம்பெற்றது.  " Modern Tailor" நிறுவனத்தின் மேல் மாடி...
18/06/2025

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் நிர்வாக கூட்டம் சிறப்புடன் இடம்பெற்றது.

" Modern Tailor" நிறுவனத்தின் மேல் மாடியில் இன்று 18ம் திகதி இரவு 8.30 மணியளவில் இராப்போசன நிகழ்வுடன் இடம்பெற்றது.

நடைபெறவுள்ள விஷேட கெளரவிப்பு நிகழ்வு தொடர்பாக இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் இதன் செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் பற்றிய விடயங்களை கழகத்தின் உப தலைவர் M சதாம் விரிவாக பேசியிருந்தார்.

கழகத்தின் தலைவரும், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான IM. ரிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப் பற்று பிரதேச சபை உறுப்பினரும் கழகத்தின் உதைப்பந்தாட்ட குழு தலைவருமான ALM.கபூர், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மாதிரி சந்தைக் கண்காட்சி!மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்வி...
18/06/2025

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மாதிரி சந்தைக் கண்காட்சி!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் இயங்கும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இன்று (18) மாதிரி சந்தைக் கண்காட்சி நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஷல்மானுல் ஹரீஸ் ஆலோசனையில் தரம் 3 மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்பில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் இக்கண்காட்சி இடம்பெற்றது.

இதில் தரம் 3 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பமளித்து மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு வருவதற்குரிய சந்தர்ப்பஙகளை அமைத்துக்கொடுப்பது அதிபர்களின் கடமையாகும்.

அந்தவகையில், பிள்ளை நேயப்பாடசாலையான வை.அஹமத் வித்தியாலயத்தில் குறித்த மாணவர் சந்தை இன்று ஏற்படுத்தப்பட்டது.

சமூகமும் பிள்ளைகளும் பெற்றோரும் எவ்வளவு தூரம் பாடசாலைக்கு விரும்பி வருகின்றார்களோ அவ்வளவு தூரம் பாடசாலை முன்னேறும் எனும் திட்டத்தின் அடிப்படையில் கல்வியமைச்சு இதனை வலியுறுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே இணைப்பாட விதானத்தில் இவ்வாறான தொடர் செயற்பாடுகள் எமது வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

இக்கண்காட்சியின் சந்தையொன்றில் விற்பனை செய்யக்கூடிய அனைத்து விதமான பொருட்கள் விலைப்பட்டியலுடன் காட்சிப்படுத்தப்பட்டதுடன், முறையான வர்த்தக நடைமுறைகளை முன்னெடுத்தல், வாடிக்கையாளர்களுடனான சிறந்த தொடர்பாடலைப் பேணுதல் போன்ற விடயங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுவதாக அதிபர் தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் ஷல்மானுல் ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.அனஸ், எம்.எச்.எம்.றிஸ்மி, ஏ.எல்.சமீம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையப் பணிப்பாளர் எஸ்.எச்.புர்ஹானுதீன், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.எம்.நியாஸ், ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன், ஹைறாத் வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.றமீஸ், ஓட்டமாவடி எக்ஸலெண்ட் சிராஜ் கல்லூரி பணிப்பாளரும் வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் றஹீஸ் நளீமி, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் மெளலவி முஹம்மது ஷப்ரி ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இஸ்ரேல் என்றால் ஏதாவது ஒரு நாடு அல்ல. அது மத்திய கிழக்கு பகுதியிலுள்ள அமெரிக்காவின் ராணுவத் தளம் மட்டுமே. அதன் அனைத்து ந...
18/06/2025

இஸ்ரேல் என்றால் ஏதாவது ஒரு நாடு அல்ல. அது மத்திய கிழக்கு பகுதியிலுள்ள அமெரிக்காவின் ராணுவத் தளம் மட்டுமே. அதன் அனைத்து நடவடிக்கைகளும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கே உட்பட்டவை."

இஸ்ரேலுடன் இணைந்து எந்த நாடாவது ஈரானை தாக்கினால் அதை எங்களுக்கு எதிரான போராக கருதி அந்த நாட்டுக்கு எதிராக வடகொரியா போர் தொடுக்கும்.

வடகொரிய அதிபர்

Petrol ஐ கொள்வனவு செய்வதற்காக Oddamavadi பாலத்திற்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ந்தும் தொடர் வர...
18/06/2025

Petrol ஐ கொள்வனவு செய்வதற்காக Oddamavadi பாலத்திற்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர்ந்தும் தொடர் வரிசை

ஈரானையும் அதன் மக்களையும், வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள்...
18/06/2025

ஈரானையும் அதன் மக்களையும், வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள், ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டால், சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும்.

- ஆயத்தொல்லா கமேனி -

கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக் மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்துகொண்டு கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் ச...
18/06/2025

கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக் மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்துகொண்டு கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் சகிதம் ஜெயில் செல்லும் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இன்றைய (18) காட்சிகள்!

இன்று புதன்கிழமை அதிகாலையும் தம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி பல கா...
18/06/2025

இன்று புதன்கிழமை அதிகாலையும் தம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி பல கார்கள் சேதமடைந்தன எனவும் மக்கள் பதுங்குகுழியில் ஒளிந்து கொண்டனர் எனவும் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டது

ஈரான், இஸ்ரேல் மீது புதன்கிழமை அதிகாலை இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி காமெனி, “போர் தொடங்கிவிட்டது” என்று அறிவித்து, இஸ்ரேலியர்களுக்கு “இரக்கம் காட்ட மாட்டோம்” என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாலை 12:40 மணியளவில் தொடங்கிய முதல் ஏவுகணைத் தாக்குதலில் 15 ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டன. 40 நிமிடங்களுக்குப் பின், மற்றொரு தாக்குதலில் 10 ஏவுகணைகள் இஸ்ரேலின் மையப் பகுதிகள் மற்றும் மேற்குக் கரை குடியேற்றங்களை நோக்கி ஏவப்பட்டன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) எச்சரிக்கை விடுத்து, மக்களை பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தின. தாக்குதல்கள் முடிந்த பின், பதுங்கு குழிகளை விட்டு வெளியேறலாம் என IDF அறிவித்தது.

இந்தத் தாக்குதல்களில் பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் மையப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி, பல கார்கள் சேதமடைந்தன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC), “பட்டாஹ்-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி 11-வது அலைத் தாக்குதலை நடத்தியதாக” அறிவித்தது. “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வான்வெளியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக” ஈரான் இராணுவம் மேலும் கூறியது.

அதேநேரம், சாக்கடல் பகுதியில் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) ஊடுருவல் காரணமாக எச்சரிக்கை ஒலித்தது. புதன் அதிகாலை 6 மணியளவில் வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் மற்றொரு ட்ரோன் “கிழக்கு” இலிருந்து வந்த பகுதியை, ஈராக் மற்றும் மேய்டனில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களுக்கு தொடர்பு உள்ளவரால், இயக்கப்பட்டு, இஸ்ரேல் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை முழுவதும் ஈரான் சிறிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

“பயங்கரவாத சியோனிஸ்ட் ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்” என்று காமேனி X தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டார். இதேபோல், யூத மொழியிலும், ஷியா கருப்பொருளுடன் பாரசீக மொழியில் “போர் தொடங்குகிறது” என்று கூறி, 7-ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற கைபர் நகரத்தைக் குறிப்பிட்டார். இந்தப் பதிவில் வாளுடன் ஒருவர் கோட்டையில் நுழைவது, வானில் தீப்பறப்பது போன்ற படமும் இணைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் புதன்கிழமை தெஹ்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்து, அங்கு ராணுவ உள்கட்டமைப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர், இஸ்ரேல் விமானப்படை தெஹ்ரானில் புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அறிவித்தது.

ஈரானிய செய்தி நிறுவனங்கள், இஸ்ரேல் தெஹ்ரானின் கிழக்கில் IRGC-யுடன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தைத் தாக்கியதாகவும், தலைநகருக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி தளத்திலும், கராஜ் நகரிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தன.

ஆறாவது நாளாக நீடிக்கும் பரஸ்பர தாக்குதல், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்களை அகற்றுவதாக கூறி இஸ்ரேலால் தொடங்கப்பட்டது.

ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள், அணு விஞ்ஞானிகள், யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கிறது. , இஸ்ரேலை அழிக்க உறுதியெடுத்துள்ள ஈரானை அணு ஆயுதங்களை உருவாக்க விடாமல் தடுக்க அவசியம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான், இஸ்ரேல் மீது 370-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களால் குறைந்தது 224 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவியேற்றார் விராய் கெலி பல்தசார்
18/06/2025

கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவியேற்றார் விராய் கெலி பல்தசார்

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மக்களுக்கான இலகு சேவையின் நிமித்தம் குறித்த பிரதேச சபை...
18/06/2025

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மக்களுக்கான இலகு சேவையின் நிமித்தம் குறித்த பிரதேச சபையின் தவிசாளர் MHM.பைறூஸ், செயலாளர் SA.அமீர் ஆகியோர் களப்பணியில்.....

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்முன்னாள் அமைச்...
18/06/2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (18) காலை அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது

18/06/2025

இரத்தினபுரி - அவிசாவெல்ல வீதியில் லாரி மற்றும் CTB பஸ் மோதி விபத்து - 23 பேர் காயம், இருவர் நிலை கவலைக்கிடம்.

ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு அ...
18/06/2025

ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தூதரகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கையில் வசிக்கும் சவூதி அரேபிய பிரஜைகளும் இதில் பங்கேற்றனர்.

Address

Hairaath Road, Valaichanai/04
Batticaloa

Telephone

+94752707575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaiyaruvi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category