𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • 𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥

𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது WhatsApp group இல் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf

தொடர்புகளுக்கு:- 077 263 5032
(7)

01/08/2025
01/08/2025

🔴 ஞாயிற்றுக் கிழமை (03) தேசிய ஷுஹதாக்கள் தினத்தையொட்டி ஷுஹதாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மீரா ஜும் ஆப் பள்ளிவாயல் மைய்யவாடி இன்று சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

31/07/2025

🔴 எதிர்வரும் ஆகஸ்ட் 03 திகதி காத்தான்குடியில் இடம்பெறவுள்ள 35 ஆவது தேசிய ஷுஹதாக்கள் தினம் தொடர்பில் தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் E.M. றுஸ்வின் அவர்கள்

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

ஆகஸ்ட் 03 திகதி தேசிய ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடி அனுஷ்டிக்கப்படும்.(எம்.பஹத் ஜுனைட்)1990 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 03 ஆ...
31/07/2025

ஆகஸ்ட் 03 திகதி தேசிய ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடி அனுஷ்டிக்கப்படும்.

(எம்.பஹத் ஜுனைட்)

1990 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு 2025.08.03 திகதியுடன் 35 வருடங்களாகிறது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் நிகழ்வுகளின் ஒழுங்குகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு வியாழக்கிழமை (31) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.ரமீஸ் (ஜமாலி) நெறிப்படுத்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.அப்துல் கபூர் (மதனி), தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஈ.எம். றுஸ்வின், காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எல்.எம்.பரீட் மற்றும் ஹுஸைனியா மஸ்ஜித், மீரா ஜும் ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகிகள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (03) திகதி தேசிய ஷுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்ததுடன் அன்றைய நாளில் ஒழுங்கு செய்துள்ள ஷுஹதாக்கள் நினைவு நிகழ்வுகள் மற்றும் குருக்கள்மட சம்பவம் தொடர்பிலான அனைத்து நிகழ்வுகளிலும் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

31/07/2025

🔴 "Blood-Soaked Night"குருதியில் உறைந்த இரவு.. (1990 August 03) வலிகளை சுமந்த வரலாறு..

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

31/07/2025

🔴 காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதான ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள 35வது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வினது ஏற்பாடுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

ABH லேன் ஜ  வசிப்பிடமாக கொண்ட, *ஆதம்பாவா (அசனார்)* அவர்கள் காலமானார். إنا لله وإنا إليه راجعون...காலஞ்சென்றவர்களான மீரால...
31/07/2025

ABH லேன் ஜ வசிப்பிடமாக கொண்ட, *ஆதம்பாவா (அசனார்)* அவர்கள் காலமானார்.
إنا لله وإنا إليه راجعون...

காலஞ்சென்றவர்களான மீராலெப்பை சுஹரா உம்மா தம்பதியின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான அகமதுலெப்பை ஹாஜியானி நாஹூர் உம்மா தம்பதியின் மருமகனும், சுபைதா உம்மா அவர்களின் கணவரும்,
அம்ஜாத், பாத்திமா அக்கிலா ஆகியோரின் தகப்பனாரும்,
குழந்தை உம்மா , கலர்ந்தை லெப்பை (வண்டிக்காரால்) , காசிம் , காசரா உம்மா ஆகியோரின் சகோதரரும்,மர்ஹூம் மீரா மொஹிதீன்(மரமால்) , ALA.அப்தூர் ரஷீத் (இறைச்சிக்கடை) ஆகியோரின் சம்மந்தனும் நிலைபா உம்மா, ஆயிஷா உம்மா, சுபைர் ஆகியோரின் மச்சானும் அய்மன் பத்தாஹ், அகீஷ் அஹமட், அய்சாத் அஹமட் ஆகியோரின் மூத்தவாப்பாவும் ஆவார்.

*அன்னாரின் ஜனாஸா இன்று வியாழக் கிழமை (31/07/2025) இஷா தொழுகையுடன், ஜாமிஉல் ஹசனாத் இரும்புத்தைக்கா பள்ளிவாயளில் தொழுகை நடாத்தப்பட்டு ஜாமியுல்லாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.*

தகவல்:
குடும்பத்தினர்.

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கு...
31/07/2025

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலஸ்தீன விவகாரமாகும். மனிதநேயம் கொண்டவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு காஸாவின் அழுகுரலாகும்.

பலஸ்தீன விவகாரம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. கள்ளத்தனமாக இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்ட பின்னணியிலிருந்து ஆரம்பமானது.

அன்று அரபு நாடுகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், அக்கிரமத்திற்கும் எதிராகப்போரிட்டு பல இழப்புகளைச் சந்தித்ததை மறந்து விட முடியாது.

கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் காரணமாக இன்றைய சூழலை எவ்வாறு கையாள்வது? என்பதில் அரபுலகு கண்ணுங்கருத்துமாகச் செயற்படுவதைக் காணலாம்.

இச்சூழ்நிலையில் பலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியாவை பலர் விமர்சனம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றுடன் பின்னிணைப்பிணைந்துள்ளதால் சவூதி அரேபியா முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத்திகழ்கின்றது. இரு புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதோடு, இஸ்லாம் வளர்ந்த பிரதேசம், தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் நபி(ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்த பிரதேசம் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்களால் நேசிக்கப்படும் தேசமாக சவூதி அரேபியா உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியா என்ற நாடு உலக முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணைகாட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு சவூதி அரேபியா மீது கொண்டுள்ள நம்பிக்கை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுத்து வருகின்றது.

அதேநேரம், சவூதி தன்னாலான அனைத்து உதவிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளுக்கும் தொடராக வழங்கி வருவதைக் காணலாம்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு பெருமளவு நிதிகளை வழங்கி வருவதும், அங்கு வாழும் முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணையோடு செயற்படுவதும், பிரச்சினைகள் வரும் போது இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களைக்கொடுத்து தீர்வ்களைப் பெற்றுக்கொடுப்பதையும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து காணலாம்.

சில நாடுகளில் கொடுமைகளை அனுபவித்த முஸ்லிம்களுக்கு தன்னுடைய நாட்டுக்குள் தஞ்சம் கொடுத்து சவூதி வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது.

சவூதி அரேபியாவில் காணப்படும் எண்ணெய் வளம் உலகில் முக்கியத்துவம் பெற்றதாகும். சவூதியோடு உறவைப்பலப்படுத்திக்கொள்ளவே உலக நாடுகள் விரும்புகின்றன. முஸ்லிம் நாடுகளில் பலமான நாடாக சவூதி விளங்குவதாலும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிலும் முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு செய்வதிலும் அதிக பங்கு சவூதி அரேபியாவிற்கே இருக்கின்றது.

சவூதியைப்பலவீனப்படுத்த வேண்டுமென்பதில் சவூதியின் வளர்ச்சியைப்பிடிக்காத முஸ்லிம் விரோதச்சக்திகள் சவூதிக்கெதிரான விமர்சனங்களை பூதகரமாக்கி மக்கள் மயப்படுத்துவதில் அன்று தொட்டு இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சவூதியை அழிப்பதற்கு முதல் உலக முஸ்லிம்களின் உள்ளத்திலும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களுக்கெதிரான மனோநிலையினை ஏற்படுத்தி வெறுப்பை உருவாக்கி ஏனைய நாட்டிற்குள் அரபு வசந்தம் என்ற போர்வையில் உள்நுழைந்து அந்த நாடுகளை நாசம் செய்தது போல் சவூதியையும் நாசம் செய்து புனிதஸ்தலங்களையும் துவம்சம் செய்ய வேண்டுமென்ற எண்ணமாகும்.

பல முறை பல முயற்சிகள் நடந்தும் இறைவன் அருளால் அவை முறியடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

தற்போது நீண்ட நாட்களாக பலஸ்தீனத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும் காஸாவின் அழுகுரல்களும் முஸ்லிம் உம்மத்தை மாத்திரமின்றி, மனிதநேயமிக்க மக்களையும் நாடுகளையும் உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கொதித்துப்போயிருக்கும் மக்களின் உணர்வுகளைத்தூண்டி விட்டு சவூதி அரேபியாவுக்கெதிராக திருப்பி விட வேண்டுமென்ற குறிக்கோளில் இஸ்லாத்தின் எதிரிகள் மிகக்கச்சிதமாக ஊடகங்களைப்பயன்படுத்தி உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதோடு, பலஸ்தீன விவகாரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை சவூதி மேற்கொண்டு வரும் அத்தனை முயற்சிகளையும் மூடிமறைத்துச் செயற்படுவதைப் பார்க்கலாம்.

முஸ்லிம்களோடு நட்புறவாடி நயவஞ்சகத்தால் வீழ்த்த நினைக்கும் சில நாடுகள் தங்களை முஸ்லிம்களின் காவலனாக காட்டுவதற்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பலஸ்தீன விவகாரம் உட்பட பல முஸ்லிம் நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் தனது செல்வத்திலிருந்து அதிகளவான கொடை கொடுப்பதும், அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும், அவர்களுக்கான பிரச்சினைகளின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இராஜதந்திர ரீதியில் தலையீடுகளைச் செய்வதிலும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து சர்வதேச ரீதியாக அழுத்தங்களை உருவாக்கி சாதிப்பதிலும் சவூதிக்கு முதன்மை இடமிருக்கிறது. எனவே தான் சவூதியின் பலத்தை குறைப்பதற்கும் பல சக்திகள் திரைமறைவில் காய் நகர்த்துகின்றன.

சவூதி அரேபியா நாடு என்ற அடிப்படையில் தனது குடிமக்களின் எதிர்காலம் தொடர்பாக அதிக கரிசனை காட்டுவதோடு, உலகில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் கரிசனை காட்டுகிறது. உலக விவகாரங்களில் வேறு நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்பட முடியாதென்பது நிதர்சனமான உண்மை.

எந்த நாடும் வேறு நாடுகள் தங்கள் விடயத்தில் தலையீடு செய்வதை விரும்பாது. சர்வதேச ரீதியாகவும் தடைகள் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த விவகாரங்களில் தனது நட்பு நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று சர்வதேச அமைப்புகளின் கவனத்தை குறித்த விடயங்களில் திருப்பி இராஜதந்திர ரீதியான நகர்வுகளினூடாகத்தான் சாதிக்க முடியும்.

பலஸ்தீன விவகாரத்திலும் சவூதியின் செயற்பாடுகளும் பலமான நகர்வுகளாகவே இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு வந்திருப்பதன் பின்னணியில் சவூதியின் வேலைத்திட்டம் இருக்கிறது. பலஸ்தீன மீளெழுச்சியில் நிதி ரீதியாக பெரும் பங்களிப்பையும் தொடராக வழங்கி வருகிறது.

இவ்வாறான மனிதாபிமான உதவிகளை உறவுகளுக்காக வழங்கி வரும் சவூதியின் பணிகளைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் என்ற ரீதியில் மோசமாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.

உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட சமூகமாக நாம் இருந்து விட்டு, விமர்சித்து விட்டுப்போக முடியாது. இவ்வாறான பிழையான விமர்சனங்கள் மற்றவர்களின் மனங்களில் தப்பான எண்ணங்களைத்தோற்றுவிப்பதோடு, எதிரிகள் தங்களின் இலக்கை எம்மூடாக நிறைவேற்றிக் கொள்ளவும் இடங்கொடுக்கக்கூடாது.

ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் ஒவ்வொருவரின் பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நாம் நம்பியிருக்கிறோம்,

இஸ்லாம் இவ்வாறான விவகாரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென வழிகாட்டியிருக்கத்தக்கதாக சில உலமாக்களும் ஏனையவர்களும் தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆரோக்கியமல்ல. அரபுமொழியை அறியாதவர்கள் என்ன நடக்கிறது எனப்புரியாதவர்கள் ஊடகங்களின் தவறான கதைகளை நம்பி விமர்சனம் செய்வது ஆரோக்கியமல்ல என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் சில உலமாக்கள்,அறிஞர்கள் பலஸ்தீன விவகாரம் உட்பட சவூதியின் செயற்பாடுகளையும் அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்,

தவறான புரிதல் ஆபத்தானது என்பதையும் யார் உண்மையான முஸ்லிம்களின் நண்பர்? யார் இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும், அறியாமையின் காரணத்தினால் நன்மை செய்வோருக்கெதிராக மற்றவர்கள் பாவம் செய்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் இவ்விடயங்களைப்பதிவு செய்து கொள்கிறார்கள்.

நமக்குத்தெரியாத விடயத்தில் போலியான தகவல்களை நம்பி உண்மைக்குப்புறம்பாகப்பேசுவதை விடுத்து நம்மிடமிருக்கும் பலமான ஆயுதமான துஆவை பலஸ்தீன மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

சவூதியின் ஆட்சியாளர்கள் இன்னும் இவ்விடயங்களில் கரிசனை காட்டுவதற்கு நல்லெண்ணங்களோடு பிரார்த்தனை செய்வோம். அதுவே மிக ஆரோக்கியமான செயலாக இருக்கும்.

சவூதி அரேபியா தன்னாலான தனியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் அதே வேளை, சவூதி அரேபியாவை தலைமையாக, தளமாகக் கொண்டியங்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)” காசா-இஸ்ரேல் மோதல் தொடர்பான விடயங்களை தீவிரமாகக் கையாண்டுவருகிறது.

இஸ்ரேலைக் கடுமையாக கண்டித்து வருவதுடன், காஸாவில் இடம்பெறும் இஸ்ரேலிய நடவடிக்கைகளை "போர்க்குற்றங்கள்" என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் என்றும் முத்திரை குத்தி வருகின்றது.

அத்தோடு, கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராகக்கொண்ட சுதந்திர பலஸ்தீன் மலர வேண்டும். இடம்பெயர்வை நிராகரித்தல் மற்றும் இஸ்ரேலுக்கெதிரான தென்னாப்பிரிக்காவின் ICJ இனப்படுகொலை வழக்கை ஆதரித்தும் வருகின்றது.

அத்துடன், மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மனிதாபிமான உதவி வழங்குமாறு ஏனைய நாடுகளையும் வலியுறுத்துதல், காஸாவின் முற்றுகையை நீக்குதல் மற்றும் பாலஸ்தீன அதிகார சபை நிர்வாகத்தின் கீழான காசாவிற்கு $53 பில்லியன் மதிப்புள்ள அரபு மறுகட்டமைப்புத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளல்.

அத்துடன், இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து அவசரக்கூட்டங்களை நடத்துதல் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற தன்மையை விமர்சித்தல் என கூட்டாகவும் தனியாகவும் சவூதி அரேபியா பல்வேறு பணிகளை பல சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்டு வருவதை மறுதலிக்க முடியாது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (UAE), கத்தார் போன்ற ஏனைய நாடுகளும் தம்மாலான பல்வேறு இராஜதந்திர, மனிதாபிமான முயற்சிகளை, உதவிகளை முன்னெடுத்தே வருகின்றன.

இது அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்கி துதிபாடுவதாக அல்லாமல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கான பதிவாகும்.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

*ஜனாஸா பற்றிய அறிவித்தல்* பாலமுனை முஹைதீன் மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மது யூசுப் அவர்கள் வபாத்தானார்கள். *இன்னாலில்லாஹி வயி...
30/07/2025

*ஜனாஸா பற்றிய அறிவித்தல்*

பாலமுனை முஹைதீன் மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மது யூசுப் அவர்கள் வபாத்தானார்கள்.

*இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்*

அன்னார் MY. மசூத் MY. அஸ்ஹர் (Madagama gold house) அவர்களின் தந்தை ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் ஊடக வெளியீடு பிரதேச செயலாளர்,பிரதேச செயலகம்,காத்தான்குடி.காத்தான்குடி பிரதேசத்தின் ...
30/07/2025

சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் ஊடக வெளியீடு

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
காத்தான்குடி.

காத்தான்குடி பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 2 வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் ஆகிய உங்களது ஒருங்கிணைப்பின் கீழ் நேற்றைய தினம் (29) இடம்பெற்றிருந்தது.

காணி, மீன்பிடி, கல்வி, மின்சார சபை, நகரசபை, நீர் வழங்கல், கால்நடை, போக்குவரத்து, சுகாதாரம், வைத்தியசாலை, வீதி அபிவிருத்தி மற்றும் பொலிஸ் போன்ற முக்கிய துறைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக குறித்த கூட்டத்தொடரில் ஆராயப்பட்டு காத்தான்குடி பிரதேச மக்களுக்கு பிரயோசனமான பல முடிவுகள் எட்டப்பட்டிருந்தன.

மற்றும் அரசியல் வாதிகளுக்கிடையிலான சில கருத்துப் பரிமாறல்களும் குறித்த கூட்டத்தொடரில் இடம்பெற்றிருந்தன.

இருந்த போதும் பிரதேச செயலாளரான உங்களது ஒருங்கிணைப்பின் கீழ் இடம் பெற்றிருந்த குறித்த கூட்டத் தொடரில், உங்களது அனுமதியுடன் கலந்து கொண்ட சில ஊடகங்கள், குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினால் காத்தான்குடி பிரதேசம் அடைந்து கொண்ட நன்மைகளை தங்களது ஊடகங்களில் கூறாமல், அரசியல் வாதிகளுக்கிடையிலான சில கருத்துப்பரிமாற்றங்களை மாத்திரம் கணொளிகளாக்கி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தன.

குறித்த காணொளிகள் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்ப நிலை என்பதைப் போல ஒரு தோற்றத்தை மக்களுக்கு காட்டி நிற்பது மாத்திரமல்லாமல், குறித்த அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் மேலும் முரண்பாடுகளையும் கருத்து மோதல்களையும் தூண்டிவிட காரணமாகவும் அமைந்துள்ளது.

குறித்த விடயங்கள் காத்தான்குடி என்ற ஊரிணையும் எமது சமூகத்தினையும் கலங்கப்படுத்தும் செயலாகவே நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு சில சமூக நலன் அற்ற அரசியல் நோக்கமுடைய ஊடகங்களினால், தங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் பெறுமதியை இழந்து வெறும் சண்டை நடைபெற்ற நிகழ்வாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை பேசப்பட்ட, முடிவுகள் எட்டப்பட்ட நல்ல விடயங்கள் ஊடகங்களினால் மக்களுக்கு சொல்லப்படாமல் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளே ஊடகங்களினால் இடம்பெறுகின்றன.

இது தொடர்பாக தாங்கள் கவனம் செலுத்தி ஊடகங்களின் ஊடாகவோ அல்லது ஊடக ஒழுங்குபடுத்தலின் ஊடாகவோ அல்லது அடுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலாவது இது தொடர்பாக பேசி ஊடகங்களை அல்லது ஊடகவியலாளர்களை அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு அனுமதிப்பதன் உன்மையான நோக்கத்தை ஊடகங்களிற்கு புரிய வைப்பீர்கள் என நம்புகின்றோம்..

முஹம்மட் ஹம்ஸா கலீல்,
தலைவர்,
சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு (OSPR)

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

 #பொதுமக்களுக்கு_முக்கிய_அறிவிப்பு!பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்.போதைப்பொருள் தொட...
30/07/2025

#பொதுமக்களுக்கு_முக்கிய_அறிவிப்பு!
பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்.

🛑விஷேட இலக்கம் - 071 859 8800
🛑கொழும்பு வடக்கு - 071 859 8801
🛑கொழும்பு தெற்கு - 071 859 8803
🛑கொழும்பு மத்தி - 071 859 8804
🛑நுகேகொட - 071 859 8805
🛑கல்கிஸை - 071 859 8806
🛑கம்பஹா - 071 859 8807
🛑நீர்கொழும்பு - 071 859 8808
🛑களனி - 071 859 8809
🛑பாணந்துறை - 071 859 8810
🛑களுத்துறை - 071 859 8811
🛑மாத்தறை - 071 859 8812
🛑தங்கல்ல - 071 859 8813
🛑காலி - 071 859 8814
🛑எல்பிடிய - 071 859 8815
🛑கண்டி - 071 859 8816
🛑மாத்தளை - 071 859 8817
🛑தெல்தெனிய - 071 859 8818
🛑கம்பளை - 071 859 8819
🛑நுவரெலியா - 071 859 8820
🛑ஹட்டன் - 071 859 8821
🛑குருநாகல் - 071 859 8822
🛑குளியாப்பிட்டி - 071 859 8823
🛑நிக்கவரெட்டிய - 071 859 8824
🛑புத்தளம் - 071 859 8825
🛑ஹலாவத்த - 071 859 8826
🛑அநுராதபுரம் - 071 859 8827
🛑பொலன்னறுவை - 071 859 8828
🛑கெபித்திகொல்லாவ - 071 859 8829
🛑இரத்தினபுரி - 071 859 8830
🛑எம்பிலிபிடிய - 071 859 8831
🛑கேகாலை - 071 859 8832
🛑சீதாவக - 071 859 8833
🛑யாழ்ப்பாணம் - 071 859 8834
🛑காங்கேன்துறை - 071 859 8835
🛑வவுனியா - 071 859 8836
🛑மன்னார் - 071 859 8837
🛑கிளிநொச்சி - 071 859 8838
🛑முல்லைத்தீவு - 071 859 8839
🛑மட்டக்களப்பு - 071 859 8840
🛑அம்பாறை - 071 859 8841
🛑திருகோணமலை - 071 859 8842
🛑கந்தளாய் - 071 859 8843
🛑பதுளை - 071 859 8844
🛑பண்டாரவளை - 071 859 8845
🛑மொனராகல - 071 859 8846

அனைத்து நபர்களுக்கும் சென்றடைய இதனை #பகிர்ந்து #கொள்ளுங்கள்.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share