07/09/2026
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை – மாணவர்கள் கௌரவிப்பு.....
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் சித்திப் புள்ளியினை பெற்ற மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் காலை ஆராதனைக் கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் அவர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பிற்காக வாழ்த்தி ஊக்குவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் இச்சிறந்த பெறுபேற்றுக்கு வழிகாட்டிய அதிபர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வகுப்பாசிரியர், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
இம்மாணவர்களின் கல்விப் பயணம் மேலும் சிறப்புற்று, எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன். 🤲✨
ஊடாக பிரிவு-
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயம்.
(07.09.2026)