Rifan's Guide

Rifan's Guide Illuminate your path with knowledge, learning is the key to endless possibilities. ☀️📚

இப்படி யாருமே Motivation கொடுத்தது கிடையாது... படிக்க படிக்க சாதிக்க துண்டும் வார்த்தைகள் : நீங்கள் இன்று எங்கே இருக்கிற...
19/04/2025

இப்படி யாருமே Motivation கொடுத்தது கிடையாது... படிக்க படிக்க சாதிக்க துண்டும் வார்த்தைகள் :

நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள்!!!
என்பதில் முக்கியம் இல்லை ...
எங்கே போகிறீர்கள் என்பதே முக்கியம்! 🌱

“துவக்கம் எங்கே இருந்து என்பதை விட, முடிவு எங்கே இருக்கிறது என்பதுதான் வாழ்க்கையை அமைக்கிறது.”
இது வெற்றியாளர்களின் ரகசியம்!

ஒரே நேரத்தில் இருவர் ஒரே பள்ளியில் படித்தார்கள்.
ஒருவரின் தந்தை IAS அதிகாரி, மற்றொருவரின் தந்தை ஒரு டீ கடை நடத்துகிறவர்.
இருவரும் ஒரே வகுப்பில்,
ஒரே பாடங்களை, ஒரே ஆசிரியர்களிடமிருந்து கற்றனர்.
ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு ஒருவன் ஒரு கார் நிறுவனத்தில் CEO ஆனார்,
மற்றொருவன் கூடவே அந்த கம்பனியில் ஒரு டிரைவர்.

நாம் நினைப்பது போல வாழ்க்கை நியாயமானது அல்ல…
ஆனால் அது சாத்தியமானது!
நீங்கள் இன்று எங்கு இருக்கிறீர்கள் என்பது எப்போதும் முக்கியம் இல்லை,
நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பது தான் வாழ்க்கையை மாற்றும் முடிவு!

1. உங்கள் பின்னணியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் – உங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள்!

பின்புலம் ஒரு நிலைத்த அடையாளம் அல்ல ,,
அது ஒரு ஆரம்ப புள்ளி மட்டும்!
நீங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே வாழ்க்கையின் முதல் படி!

2. சமயமாக ஏமாற்றங்கள் வரும் – ஆனால் அவை உங்களை உருவாக்கும்!

எதிர்ப்புகள் ஒரு கதை சொல்லும்: "அவன் எவ்வளவு உறுதியுடன் மாறினான்" என்பதே முக்கியம்.

3. உங்கள் கனவுகள் தான் உங்கள் நிஜ அடையாளம்!

“நான் இப்படி இருக்கவே கூடாது” என்ற எண்ணம் வந்தால், அதுவே மாற்றத்தின் ஆரம்பம்!

4. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் – பெரிய மாற்றத்திற்கு வழி!

ஒரு நாள் 1% முன்னேற்றம் மட்டும் செய்தால், ஒரு வருடத்தில் 365% முன்னேற்றம்!
Consistency is the new superpower. ⚡

5. மற்றவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள்! 🧠

உலகம் உங்களைத் தான் பார்த்துக்கொள்வது இல்லை… உங்கள் செயல்கள், உங்கள் பயணம், உங்கள் வெற்றிகள் தான் பேசும்!

6. உண்மையான வளர்ச்சி – உங்களுக்குள் தான் நடக்கிறது! 🌱

வெளியில் என்ன நடக்கிறது என்பதை விட,
உள் மனதில் என்ன வளர்கிறது என்பதே முக்கியம்.
வாழ்க்கையின் மாற்றம் உங்கள் உள்ளத்தின் மாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது.

7. நீங்கள் செய்த தவறுகளை வீண்பாடாக நினைக்காதீர்கள் – அவை உங்கள் பாடங்கள்!

Failure is not opposite of success – it’s part of success!

8. ஒரு பெரிய கனவுக்கு சிறிய துடிப்பு போதும் – நம்பிக்கையுடன்! 🔥

புதிய பாதைகள்,
புதிய சூழ்நிலைகள்,
புதிய உயரங்கள்...
இவை எல்லாம் உங்களுக்காக தான்!

9. துவக்கம் சிறியது என்றால் கவலைப்படாதீர்கள் – முடிவு மிகப்பெரியது ஆகலாம்! 🚀

அப்துல் கலாம் கடலோர கிராமத்தில் பிறந்தார்…
ஆனால் விண்வெளியை நோக்கி பறந்தார்!

10. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்ற முடியும் – இன்று தான் சரியான நாள்!

“என்றாவது ஒரு நாள்…”
என்று நினைக்கும் போது,
அதை இன்று மாற்றுங்கள்.
ஏனெனில் இன்று செய்யும் ஒரு செயல் – நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும்!”

> "Success doesn’t care where you start from, only how far you’re willing to go."
"பாதை சுருங்கியது என்றால், உங்கள் கனவை கூட சிறிதாக்க வேண்டிய அவசியமில்லை!"

இந்த நாள் தான் உங்கள் திருப்புமுனை – உங்கள் கனவுகளை நோக்கி ஒரு பாய்ச்சி எடுங்கள்!

உலகம் பாராட்டும் முன்,
நீங்கள் உங்களை நம்புங்கள்!
உங்களால் முடியும்.
இன்னும் அதிகம்,
மேலும் சிறந்ததைக் காண முடியும்!

09/02/2025
14/01/2025

நீங்களும் Solar System ஒன்றை செய்வதன் மூலம் நிலையான வருமானம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள எண்ணுபவரா? ....

☎️ Contact us for free Guidance - 075 2056661

MCM.Rifan B.Eng.Tech (Hons)
Assistant Engineer
Hayleys Solar

20/10/2024
02/06/2024

எனக்கும் Medicine கிடைக்கவில்லை. 😄

மூன்று தடவைகள் A/L பரீட்சை எழுதி மூன்றாவது தடவையும் Medicine க்கு தெரிவாகாமல் போன நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவர்களுக்கு இந்தப் பதிவினை இட தகுதியானவனா என்று எனக்கு தெரியவில்லை. 🤔
ஆனாலும் ஏதோ ஒன்றினை சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.

2005 ஆம் ஆண்டு O/L பரீட்சையில் 9A எடுத்தவுடன் சமூகம் என்னை ஒரு Doctor ஆக கற்பனை பண்ண வைத்து Bio stream இல் படிக்க வைத்தது.
அல்ஹம்துலில்லாஹ். அவ்வாறான ஒரு வழி காட்டலுக்கு இன்றும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவானாக இருக்கிறேன்.

A/L பரீட்சை முடிவுகள் வெளியான ஒவ்வொரு தடவையும் என் தாயின் கடின உழைப்பும் எல்லோரது எதிர் பார்ப்பும் வீணாய்ப் போனதாய் கண்களில் கண்ணீர் துளிகள் முட்டின.
சமூகமும் நான் படிக்க வில்லை அப்படி இப்படி என்று ஆயிரம் சொல்லி தூற்றியது.
அது ஒரு காலம். இன்று நினைத்தாலும் மனம் கனக்கிறது.

Bio படிப்பவர்கள் அனைவரும் டாக்டர் ஆகவோ Maths படிப்பவர்கள் அனைவரும் Engineer ஆகவும் வருவதில்லை. அவ்வாறு நடக்க சாத்தியமும் இல்லை. ஆனால் அவ்வாறு கிடைக்காதவர்கள் சீரழிந்து போவதும் இல்லை. எனக்கு தெரிந்த பலரும் இன்று ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு இடத்தில் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

இன்று போல் அன்று பல்கலைக்கழக வழி காட்டல் கருத்தரங்குகளோ இணையத்தளங்களோ பெரிதாக இருக்க வில்லை. ஏதோ விரும்பிய ஒழுங்கில் Course களை விண்ணப்பித்து கிடைப்பதை ஏற்று போய் கற்க வேண்டியது தான்.
அதிலே எனக்கு கிடைத்த Course BSc Nursing.

வைத்திய துறைக்கு தெரிவாகி இருந்திருந்தால் யாராவது ஒரு மாமனார் யூனிவர்சிட்டி செலவுகளை பொறுப்பெடுத்திருப்பாரோ என்னவோ 😄.
தாயாரின் சிறு கைத்தொழில் வருமானத்துடன், சில நல்ல உள்ளங்களின் உதவிகளையும் வைத்துக் கொண்டு இரண்டு வருட ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக வாழ்க்கை ஓடியது . என்னதான் சேவை சேவை என வாய் கிழிய கதைத்தாலும் தனிப்பட்ட தொழில் திருப்தி, விருப்பு வெறுப்புகள், பொருளாதாரப் பின்னணிகள், அந்த நாட்களில் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், கற்றல் நடவடிக்கைகளின் தாமதம் போன்றவற்றால் BSc Nursing degree யை கைவிடவேண்டியதாகிற்று.
ஆனாலும் யூனிவர்சிட்டி யில் மிகச் சிறந்த பெறு பேறுகளுடன் இரண்டு வருடங்களும் Batch first / second ஆக இருக்க கிடைத்தது.

நாம் என்னதான் முயற்சி செய்தாலும் இறைவன் நமக்கு வேறு ஒன்றில் நலவினை வைத்திருந்தால் சில விடயங்கள் எம்மை விட்டு தானாகவே விலகிச்செல்லும்.

Bio படித்த மாணவர்களுக்கு Professional Supplementary Medicine என்று கூறப்படுகின்ற Health Ministry ஆல் வழங்கப்படுகின்ற Higher Diploma Course கள் மாதாந்த allowance உடன் இருப்பதனை யாருமே அந்த நேரம் சொல்லித்தர வில்லை. அவ்வாறு வழி காட்டி இருந்திருந்தால் பொருளாதார வசதிகளை கருத்தில் கொண்டு நேர காலங்களை வீணாக்காமல் அந்தத்துறைக்கு தெரிவினை மாற்றி இருந்திருப்பேன்.

இருந்தாலும் அவ்வாறான ஒரு வழியும் Bio படித்த மாணவர்களுக்கு இருப்பதனை பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
Nursing Degree யினை விட்டு Occupational Therapy Higher Diploma விற்கு மாறிக் கொண்டேன்.

அதிலே கிடைத்த அடைவுதான் இன்று
UK NHS இல் Occupational Therapist ஆக வேலை செய்யும் சந்தர்ப்பம்.

நீங்கள் Bio செய்தவராயின், உங்களுக்கும் இந்த Occupational Therapist Job இல் ஆர்வம் இருந்தால் இணையத்தில் தேடி இந்த course இன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இலங்கை மட்டும் அல்லாமல் ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் எங்கிலும் தொழில் வாய்ப்புகள் உள்ளன. உங்கள்
ஆங்கிலத்தினையும் ஆளுமையினையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

University of kelaniya - Faculty of Medicine இந்த நான்கு வருட BSc Hons in Occupational therapy Degree இனை வழங்குகின்றது.
கீழே அதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

Medicine கிடைத்த மாணவர்களை வாழ்த்தி அதனை தவற விட்ட மாணவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன். உங்களுக்கான வாய்ப்புகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.

நமது பகுதிகளில் வைத்தியத்தொழில் என்பது சேவை தாண்டி ஒரு கௌரவத் தொழில் என்று கூறலாம். ஆனாலும் Arts படித்து விட்டும் மிக உயர்ந்த பதவிகளில் ஊரும் நாடும் மதிக்கத்த நிலையில் உள்ள நண்பர்களும் நமது ஊரிலே எமது பக்கத்திலேயே முன் மாதிரியாக இருக்கிறார்கள்.

இன்று நான் வேலை செய்கின்ற UK NHS இல் இந்த Occupational Therapist க்கு UK முழுவதும் 2765 வெற்றிடங்கள் உள்ளன. அதில் ஒருவராக நீங்கள் ஒரு காலத்தில் வேலை செய்யலாம். இது போலவே வேறு பல துறைகளுக்கும் பல நாடுகளிலும் பல வாய்ப்புகள் உள்ளன. நாம் ஒவ்வொரு வரும் தனித்துவமான விருப்பு வெறுப்பு மனப்பாங்கு உள்ளவர்கள். உங்கள் எதிர் காலம் பற்றி நன்கு சிந்தித்து முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொழில் வாய்ப்புகளை கருத்தில் கொள்ளுங்கள். எல்லோரும் போல் நாமும் இருக்க வேண்டியதில்லை. உங்கள் வழியினை தனி வழி ஆக்கி எழுந்து நில்லுங்கள்.
குறுகிய வட்டதினுள் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் ரிஸ்க் எங்கெல்லாம் உள்ளதோ அதனை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்.

அதே நேரம் எதுவும் கணப்பொழுதில் மாறலாம். இன்றைய உலகின் நிலை எம் கண் முன்னே அவ்வாறுதான் இருக்கிறது . இருக்கும் அருள்கள் ஒரு நொடியில் இல்லாமலும் போகலாம்.

இறுதியாக...
நாங்கள் என்னதான் வைத்திய நிபுணராகவோ விண் வெளிஆராய்ச்சி ஆளாரவோ, Occupational therapist ஆகவோ இருந்தாலும் எங்களிடம் மார்க்கமும் மனிதமும் இல்லை எனில் எல்லாமே பூச்சியம் தான்.

https://medicine.kln.ac.lk/index.php/academic-programmes/undergraduate/ot-degree-programme.html

original Author :

யாரோ சிலர் எம்மால் பயனடைகின்றனர்,😍
01/06/2024

யாரோ சிலர் எம்மால் பயனடைகின்றனர்,😍

31/05/2024

A/L Fail to PhD

எல்லோரும் போல் O/L பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வந்ததன் பிற்பாடு A/L இல் கணிதப்பிரிவு கற்பதற்காக ஒரு மாணவன் தயாராகின்றான்.

A/L இல் பாடங்களை கற்றலின் பின் முதல் தடவை A/L பரீட்சைக்கு தோற்றுகின்றான். முதல் தடவை பெற்ற பெறுபேறு 3W. மீண்டும் படிக்க ஆரம்பிக்கின்றான். இம்முறை "2A, W(Chemistry)" தரத்தை பெறுவதே அவனது திட்டம். ஏனெனில் Chemistry அவனுக்கு மிகவும் வெறுத்திருந்தது.

ஆனால் இரண்டாவது தடவை வந்த பெறுபேறு C (Physics), S (Com.Maths), W ( Chemistry). சுற்றியுள்ளவர்கள் QS Course ஒன்றினை செய்துவிட்டு மத்தியகிழக்கை நோக்கி படையெடுக்குமாறு வழிகாட்டி னார்கள். ஆனால் தனது பொறியியல் பீடம் நுழைய வேண்டும் என்ற இலட்சியத்தை வலுப்படுத்திற் கொண்டு மீண்டும் பரீட்சைக்கு முயற்சிக்கின்றான்.

அல்ஹம்துலில்லாஹ் இம்முறை வந்த பெறுபேறு 2A, B. Ruhunu பல்கலைகழகத்தில் Engineering பீடத்திற்கு நுழைகின்றான். அந்த நபர் தான் Ajmal Azees

பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தது தான் தாமதம் தன் திறமைகளை ஒவ்வொன்றிலும் வெளிப்படுத்துகிறார். பல தரப்பட்ட Innovation போட்டிகளில் பங்குபற்றி பல awardகளை சுவீகரிக்கின்றார். 1st Class உடன் பட்டம் பெற்று வெளியாகிய அவர் தனது இலட்சிய பயணத்தின் அடுத்த கட்டமாக PhD செய்ய ஆரம்பிக்கிறார்.

தற்போது Australia வின் RMIT University இல் Biomdeical Engineering and Auditory Neuroscience இல் Phd செய்து வருகிறார். இன்ஷா அல்லாஹ் வருகின்ற Augustஇல் தனது Phd இனை நிறைவு செய்கிறார். எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள் சகோ.

தான் வெறுத்த, சிரமப்பட்ட Chemistry பாடத்தில் மூன்று வருட A/L Final Exam paper இன் MCQற்கு விளக்கவுரை எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம்.

இங்கு முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றுமில்லை. எமக்கு தேவையானதை நாம் தான் தேடிச்செல்ல வேண்டும்.
பொதுவாக எம்மவர்கள் மத்தியில் முதல் தடவை A/L பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகம் நுழைபவன் தான் திறமையானவன் என்றும், இரண்டாம் மூன்றாம் தடவைகளில் நுழைபவன் திறமை குறைந்தவன் என்றும் நினைக்கின்றார்கள். ஒரு பரீட்சையின் பெறுபேறில் திறமை என்பதையும் தாண்டி பல விடயங்கள் (பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், குடும்ப சூழல், கற்கும் முறை, தேவையற்ற நெருக்கடிகள்) தாக்கம் செலுத்தும். இங்கு எத்தனையாவது தடவை முயற்சியின் பின் நுழைந்தோம் என்பது முக்கியமில்லை, இறுதியில் எங்கு நிற்கின்றோம் என்பதுதான் முக்கியமான விடயம்.

இன்னும் சிலர் இரண்டாம், மூன்றாம் தடவை பல்கலைகழகம் நுழைந்தால் உழைப்பதற்கு காலம் அதிகம் எடுக்கும் என்று நினைத்து தங்கள் கல்வி பயணத்தை இடைநிறுத்துகின்றனர். நான் முதலாம் தடவையிலே பல்கலைகழகம் நுழைந்தவன். ஆனால் எனது நண்பன் ஒருவன் மூன்றாம் தடவையும் முயற்சி செய்து பல்கலைகழகம் நுழைந்து, நான் தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்ள முன் சிறந்த தொழில் ஒன்றினை அவன் பெற்றுக்கொண்டான்.

பணம் இருந்தால் Private இல் படியுங்கள். உண்மையில் உங்களின் அதிகளவான நேரம் சேமிக்கப்படும். பணம் இல்லை என்றால், பணம் இல்லாமல் எவ்வாறு படிப்பது என்று சிந்தியுங்கள். இங்கு நிறையவே வழிகள் இருக்கின்றன. ஆனால் தேடல்கள் தான் குறைவாக உள்ளன.

இங்கு ரிஸ்க் என்பது அல்லாஹ் நிர்ணயித்த விடயம். முயற்சி செய்வதே எமது பணி. எமக்கானதை வழங்க வேண்டியது அவனின் பணி.

from Afkar Mohamed Ismail brother.

உனக்கு எப்டிபட்ட life வேணும்னு நீதான் முடிவெடுக்கனும்....நமக்கு அப்பா அம்மா பணமா எந்த சொத்தும் சேர்த்து வைக்கலனாலும் கல்...
23/03/2024

உனக்கு எப்டிபட்ட life வேணும்னு நீதான் முடிவெடுக்கனும்....

நமக்கு அப்பா அம்மா பணமா எந்த சொத்தும் சேர்த்து வைக்கலனாலும் கல்வின்னு மிகப்பெரிய ஒரு சொத்த தந்திருக்காங்க....

போ எங்கயாச்சும் போ, கடல் கடந்து போ, உன்னோட சந்ததிக்கு நீ கல்விய மட்டும் கொடுக்காம அவங்களுக்குனு ஒரு Financial freedom ஆன ஒரு லைஃப் அ கொடு...

காசு இருக்கிறவன் ஈசியா சொல்லுவான் , Busines பண்ற idea இந்த generation கு இல்ல, இன்னொருவனுக்கு கீழ கை கட்டி வேல பாக்கத்தான் தயாரா இருக்காங்கன்னு, இங்க நிறைய middle class பசங்களுக்கு இருக்குற ஒரே ஒரு hope, நம்ம படிச்சு university போனா ஏதோ நாலு பேரு மதிக்குற மாதிரி வாழ்ந்துடலாம் என்றது மட்டும் தான், startup செய்ய என்னதான் பண பலம் தேவையில்ல என்று வாய்க்கு வக்கறையா உதாரணங்கள சொன்னாலும், இங்க ஒவ்வொருத்தரோட responsiblities வேற, lifestyle வேற.

முடியுமானவரை சாக்கடையாக தேங்கி விடாமல், சில தியாகங்களை சகித்துக்கொண்டு வாழ்க்கையை மாற்ற
ஓடு.

Rifan's Guide

2 நிமிடங்கள் ஒதுக்கி  வாசித்துப் பாருங்கள்  பிரியோசனமான பதிவு .தாயாண உண்மைக் கத 💯💯💯.க.பொ.த  உயர்தர  பரீட்சையில் 3A  எடுத...
07/02/2024

2 நிமிடங்கள் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள் பிரியோசனமான பதிவு .

தாயாண உண்மைக் கத 💯💯💯.

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3A எடுத்த மற்றும் இனிவரும் காலங்களில் எடுக்கப்போகும் தங்கங்கள் அதிலும் குறிப்பாக Commerce & Arts stream தம்பியாக்கள், தங்காக்களுக்கு சொல்ற free advice என்னவெனில், பல்கலைக்கழகங்களுக்கு சென்று வீணாக உங்களுடைய வாழ்க்கையை வீணாக்காதீங்க. சில வழிகள் இருக்கு

1. A/L பெறுபேற்றுடன் விண்ணப்பம் கோரப்படுகின்ற G.S, MSO, Health service assistant, integration coordinator, revenue officer போன்ற பரீட்சைகளை எழுதி அரசாங்க தொழில் ஒன்ற எடுத்துட்டு வெளிவாரியாக பட்டம் முடித்துக்கொள்ளுங்கள்

2. இல்ல எனக்கு காசு தான் முக்கியம் மாசத்துக்கு 10 லட்சம் சம்பாதிக்கனும் என்ட ஐடியாவுல இருந்திங்க என்டா
கனடா - 7-9 லட்சம்
லண்டன் - 6-7 லட்சம்
பிரான்ஸ் - 5-6 லட்சம்
அவுஸ்திரேலியா - 5-6 லட்சம்

இதுக்கு நீங்க செய்ய வேண்டியது IELTS பரீட்சை எழுதி 10க்கு குறைந்தது 6 புள்ளிகள் எடுக்கனும். பிரபல வளவாளர்களால் முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன

3. அதுவும் இல்லையா, குடும்பத்துல கஷ்டம் வீட்டுக்கு மூத்த புள்ள, குடும்ப பொறுப்பும் உங்கட தலைலயா கவலையே வேணாம் முதல்ல ஒரு 35000, 40,000 க்குள்ள நல்ல ஒரு தொழில பாருங்க
Example : book shop, showrooms, private banks, finance companies or NGO's
அதுக்கு பிறகு திறந்த பல்கலைக்கழகங்கள் ல ஏகப்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. Teaching ல விருப்பம் இருக்கா?
B.Ed (Hons) ஒவ்வொரு வருசமும் கோல் பன்றாங்க. 4 வருசத்துல சரியா முடிஞ்சிடும். அது முடிய உங்கட teaching appointment 2-2 க்கு கிடைக்கும். முதல் மாச சம்பளமே 65000 க்கு மேல எடுக்கலாம்.
இல்லையா L.LB, Social sciences, mass media, B.A இப்படி பல தரப்பட்ட பட்டப்படிப்புக்கள் உள்ளன எதையாவது ஒன்ட செய்ங்க.

4. சரி அதுவும் கஷ்டம் நான் Boss ஆ இருக்கனும் 10 பேருக்கு என்ட கையால சம்பளம் குடுக்கனும் என்டு நினைக்குறீங்களா?
Automobile அல்லது Hybrid technolgy அல்லது sensor mechanism courses குருணாகல் பிரதேசங்கள் ல available ஆ இருக்கு. சொந்தமா தொழில் செய்ய நல்ல வாய்ப்பு. ஏனென்டா இனி வரும் காலங்கள் எல்லாம் Sensor தொழிநுட்பத்துல தான் இயங்க இருக்குது. அத செஞ்சீங்க என்டா நிமிசத்துக்கு லட்சத்துல சம்பாதிக்கலாம்.

5.தாதிய கல்லூரியும் இருக்கு தாதியரா வாரக்கு ஒழுங்கா அனுபவ படிப்பா படிச்சா பரவாயில்லை இல்லாட்டி மாறி கணுலா(Kanula)போட்டா gohome gotta வ விட மோசமா வைத்தியசாலைக்கு முன்னால ஆர்ப்பாட்டம் செய்வாங்கள் (நியாயம் தானே மாறி போட்டு கைய வெட்டினா யார் தான் குழம்ப மாட்டான்😂 ஏனென்றால் தாதிய சேவை)

அத விட்டுட்டு இன்னுமின்னும் QS, Autocad, Civil engineering முடிச்சி எந்த பிரயோசனமும் இல்ல. ஊருக்க கன பேர் முடிச்சிட்டு certificate இல்லாம அண்ணா certificarte எடுக்க ஏலாதா? நானா certificate எடுக்க ஏலாதா என்டு கேக்குறாங்க.

வீட்ட அப்பா சொல்றார் அம்மாட விருப்பம் தாத்தாட ஆசை என்டு University போய் காலங்கள வீணாக்காதீங்க. இந்த விசயங்கள் இருக்கெண்டு எந்த பள்ளிக்கூடத்துலயும் சொல்லி குடுக்கமாட்டாங்க. A/L பாஸ் ஆகல்ல university போகல்லன்டா மேசன் வேலைக்கு போகணும் என்டு தான் சொல்லுவானுங்க. ஏனென்டா அவங்கட பாடத்துல A எடுத்தா தானே அடுத்த வருசம் 10 புள்ளயல் கூடயா வரும். தம்பியாக்கள் , தங்காக்கள் நீங்கெல்லாம் வெறும் விளம்பரதாரிகள் மட்டுமே அத கவனத்தில கொள்ளுங்க.

இன்னொரு விசயமும் இருக்கு அதுவும் பொம்புள பிள்ளையல் வெளி ஊருக்கு university போனா சொல்லவே தேவல்லனு நினைக்கன். Yes நீங்க நினைக்குறது சரிதான்.
Rooms, night partys, Condom, timing tablet, postinor 2, university கலஸ் நைட் அதுவும் phone light ல எல்லாத்தயும் தான் சொல்றன்.

A/L Result வெளியாகி university க்கு போக 1.5 வருசம் . அங்கால 4 வருசம். முடிச்சா தொழிலும் இல்ல முக்கியமா Arts காரருக்கு 28.5% தான் தொழில் வாய்ப்பாம் மற்றவர்கள் நாக்கா வழிக்கிற ? படிக்கிற காலத்துல மாசத்துக்கு 15000-20000 தேவப்படும். அப்புடி தொழில் எடுத்தாலும் D.O க்கு 40,000 சம்பளத்தோட தொழில் கிடைக்கும். காலை நேர சாப்பாட்டுக்கும் பெற்றோலுக்கும் தான் காணும். நாளைக்கு கல்யாணம் பன்னினா பொண்டாட்டிட செலவு, பிள்ளைக்கு pedia pro, cerelac, anchor 1+, anchor 2+, pampers இதெல்லாம் வாங்க வழி எங்கால???????

எல்லாத்தயும் கவனத்தில கொண்டு நடங்க பிள்ளையள். உங்கட வாழ்க்கைய நீங்க தான் வாழனும்.
ஊருக்குள்ள எனக்கு பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் ஏன் எதிரிகளும் இருக்கலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்ன? எப்டி நடந்திச்சி? என்டு இன்னும் 1 வருசத்துலயோ 2 வருசத்துலயோ காலம் பதில் சொல்லும் நான் சொல்லமாட்டன்.

இனி வரும் காலங்கள் கடும் கஷ்டம். நாட்டு பொருளாதாரம் மீள எழும்ப இன்னும் குறைஞ்சது 15 வருசம் சரி தேவப்படும். இத கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசிச்சி நல்ல முடிவா எடுங்க தம்பி தங்காக்கள். எரிச்சல், பொறாம, கசடு இருக்குறவன், சொந்தக்காரன் இதெல்லாம் சொல்லமாட்டான்.

இவ்வளவுக்கும்
கஷ்டப்பட்டவன், edited from social media
படித்தில் பிடித்தது.

எல்லாத்தயும் விட்டுட்டு வெளிநாடு போக தான் இருக்கு சொந்தகாரன் மரண உருட்டு விடுவான் இங்க வந்து வீசா கிடைக்காது வந்து என்ன செய்யப்போறா?
நாங்கள் அந்தக்காலம் வந்திட்டம் வயசு போக உங்கதான் வரப்போறம் என்று சொல்லுவான் நம்பாத அவங்கள் விலாச வந்து காச விசுக்கி உள்ள காடு,மேடு எல்லாம் வாங்கி ஊரில இருக்கிற காணிட விலையல கூட்டுவீங்கள் நாங்கள் ஊரில ஒரு துண்டு காணி கூட வாங்காத நிலைமைக்கு ஆக்குவினம் 😅😅

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifan's Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share