Tamiltv News

Tamiltv News உலக தமிழர்களின் உண்மைக் குரல் News

09/08/2025

தாந்தா கோயிலுக்கு பெற்றோர் போகவிடாததால் 12 வயது சிறுவன் தற்கொலை

தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பிரகலாதன் நிஷாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில் தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும் அப்போது போகலாம் என தெரிவித்த நிலையில் மனமுடைந்த சிறுவன் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Battinatham

09/08/2025

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் நேற்று காணாமல் போன இளைஞன் இன்று காலை முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது

08/08/2025

இன்று உகந்தை கடலில் நீராடிய மூவரில் ஒருவரை காணவில்லை ! தேடும் பணிகள் தொடர்கின்றன

08/08/2025

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையில் உள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.

அந்த கடிதம் கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த கடிதம் மூலம் தெரியவருகிறது.

இதனையடுத்தே அந்த கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழலில், அவரால் கடிதம் ஒன்று அனுப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மாநகரசபைக்கு சென்று, மாநகரசபை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

ஏ9 வீதியில் வாகன விபத்து! ஆறு பேர் வைத்தியசாலையில்கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான...
08/08/2025

ஏ9 வீதியில் வாகன விபத்து! ஆறு பேர் வைத்தியசாலையில்

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (07)ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு

காயமடைந்தவர்கள் மத்துகம பகுதியில் இருந்து யாத்திரைக்கு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தின் பின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🔵 மூதூர் விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஜெம்சித் வபாத் இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை மூதூர் பிரதேசத்தில் இடம்ப...
08/08/2025

🔵 மூதூர் விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஜெம்சித் வபாத்

இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) - காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார்

விபத்தில் படுகாயமடைந்த
மற்றொரு இளைஞரான சிஹான்
என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து தோப்பூர் நோக்கி வந்த டிப்பர்
ரக லாரியுடன் தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரும் மூதூர் பச்சநூர் சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

08/08/2025

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகை வாகனத் திட்டம் வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்காக திருப்பி அனுப்பக்கூடிய அடிப்படையில் வழங்கப்படுகிறது.

08/08/2025

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு தற்காலிகத் தடை - அமைச்சரின் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது

மன்னார் காற்றாலை மின் அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின்சார அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிராந்தியத்தில் உள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் கனிம வளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்டப் பிரதிநிதிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்டக் குடிமக்கள் குழுவின் பிரதிநிதிகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். காற்றாலை மின் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

கலந்துரையாடலின் போது, மன்னார் சிவில் சமூகப் பிரதிநிதிகள் திட்டத்தின் ஆரம்ப கட்டங்களால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினர். இதன் விளைவாக, அனைத்து தரப்பினருடனும் மேலதிக ஆலோசனை நடத்தப்படும் வரை திட்டப் பணிகள் இடைநிறுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இரண்டு வாரங்களுக்குள் ஒரு விசேட கூட்டம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. காற்றாலை மின் திட்டம் தொடர்பான உபகரணங்களை கொண்டு செல்வதை நிறுத்துமாறும், மேலதிக அறிவித்தல் வரும் வரை அனைத்து இயந்திரங்களையும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் சேமித்து வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

07/08/2025

பொரளையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

07/08/2025

மட்டு ஓட்டமாவடியில் விபத்து ஒருவர் பலி

சற்று முன் ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் பொத்தானை சந்தியில் வேளாண்மை வெட்டும் இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிய விபத்தில் காவத்தமுனையைச்சேர்ந்த முஹம்மது பரீட் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (7) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

அவருடன் பயணித்த காவத்தமுனையை பிறப்பிடமாகவும், பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அசனார் முகம்மட் நிப்ராஸ் என்பர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் ஜனாஸா பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

07/08/2025

வாகன இறக்குமதியை நிறுத்தவோ அல்லது அதிக வரி விதிக்கப்படவோ மாட்டாது என அதிபர் அனுரா குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "இந்த ஆண்டு வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு வாங்கலாம் - எதுவும் மாறாது," என்று அவர் கூறினார், கொள்கை மாற்றத்தின் கூற்றுக்கள் தவறானவை என்று நிராகரித்தார்.

07/08/2025

வாகன இறக்குமதிக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது!

வாகன இறக்குமதிக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதாரம் குறித்துப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamiltv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share