Ceylon Time News - CTN

Ceylon Time News - CTN உங்களது செய்திகளை [email protected] மற்றும் 0757758884 எனும் Whatsapp ஊடாகவும் அனுப்பமுடியும்.

"  ட்ரீம் செண்டர் முற்றிலும் இலவசம் 2025  "**************************************தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை ந...
28/11/2025

" ட்ரீம் செண்டர் முற்றிலும் இலவசம் 2025 "
**************************************

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை நலன் கருதி
எமது பகுதியில் ஊர்கள் அனைத்தும் நீரால் மூழ்கி கிடப்பதனால் தனவந்தர்கள் சமைத்து பார்சல்கள் வழங்கி வருகின்றனர்.

எனவே சமைப்பதற்க்கான சட்டி வகைகள் நீர் வசதி இடம் முற்றாக இலவசமாக தருவதற்க்கு ட்ரீம் செண்டர் நிர்வாகம் முன்வந்துள்ளது.

அந்த வகையில் ட்ரீம் செண்டரை சூழ உள்ள (புத்தளம், கற்பிட்டி, கரம்பை, உழுக்காப்பள்ளம், புழுதிவயல், விருதோடை, கடையாமோட்டை, கனமூலை, சமீரகம, பெருக்குவட்டான், கொத்தாந்தீவு, உடப்பு, புளிச்சாகுளம், கரிக்கட்டை, நாஹவில், பாலாவி) ஆகிய அனைத்து மகல்லாவாசிகளுக்கும் இந்த சலுகையை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும்.

1*Note;- 1000kg அரிசியானாலும் சிறப்பாக சமைத்து தருவதற்கு பல வருடம் சமையல் துறையில் அனுபவம் வாய்ந்த சமையல் வல்லுனர்களையும் ஏற்பாடு செய்துதர காத்திருக்கின்றோம்.

2* Note;- வெளிநாடுகளில் வாழும் எம் நாட்டவர்கள் இம்மக்களுக்கு சமைத்த உணவு பொதிகளை வழங்க விரும்பினால் சமையல் உபகரணங்களுக்கு மாத்திரம் கட்டணத்தை செலுத்தினால் போதும் Dream center நிருவாகம் பொருப்பேற்று அதனை சமைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும்.

எவ்விதமான உதவிகளுக்கும் மேலதிக தகவ‌ல்களை பெற்றுக்கொள்ள உடன் அழையுங்கள்...

நிர்வாகம்
DREAM HALL MADURANKULI.
WhatsApp & Hotline 0766488855/0767021218
dreamcenter.lk

அன்புள்ள ஆண்களே....???? அன்பு நண்பர்களே ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படித்து பாருங்கள்மாதத்தில் மூன்று நாள் மாதவிடாய் அவளுக்க...
26/11/2025

அன்புள்ள ஆண்களே....????

அன்பு நண்பர்களே ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படித்து பாருங்கள்

மாதத்தில் மூன்று நாள் மாதவிடாய் அவளுக்கு.
அந்நேரம் அவளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்,
கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்கள்,
அவள் கோபம் கொள்கிறாள் என்று நீங்களும்
கோபம் கொள்ளாதீர்கள்...,

ஏனென்றால் அம்மூன்று நாளில் அவள் அவளாக
இருக்க மாட்டாள், அவளால் அந்நேரத்தில் பெரிதாக
சாப்பிட முடியாது, நிதானமாக யோசிக்க முடியாது,
அடி வயிற்றிலிருந்து உயிர் பிரியும் வலியோடு
வலியை வெளியே காண்பிக்காமல்,

மனதால் அழுவாள்.அவள் அழுவதை 5அறிவுள்ள
மிருகங்கள் கேட்டால் கூட தேம்பித் தேம்பி அழும்..!!!
மிருகங்களே அவளை நினைத்து அழும்போது
ஆண்கள் உங்களுக்கு மனம் இழகவில்லையா..?
அவளும் இறைவனால் அற்புதமாகப் படைக்கப்பட்ட உணர்வுள்ளதொரு மனிதன்
தானே
அவளுக்கும் ஆண்களுக்கு உள்ளதைப்
போன்றதொரு இதயம் தானே உண்டு ~ ஜடப்பொருள்
இல்லையே அவள்... ???அவளின் உணர்வுகளையும்
மிதிக்காமல் கொஞ்சம் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்களேன்.

உங்களுக்கு ருசியான உணவை சமைத்துப்
பசியோடு வீடு வரும் கணவன் உங்கள்
வருகைக்காக தன் பசி மறந்து காத்திருந்து,
கணவனுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு கணவன்
சாப்பிட்ட பின் சாப்பிடுபவள் ~அவள்

நீங்கள் சாப்பிட்டு முடிந்து எழும்பிச் செல்லாமல்
அவளிடம் ஒரு வார்த்தையாவது சாப்டியா டீஈஈஈ..???
என்று பாசமாகக் கேளுங்கள். மனைவியிடம் வாய்
துறந்து கேட்பதால் சுவாசம் நின்றுவிடுவதில்லையே...!!!
இது ஏனோ பல ஆண்களுக்குப் புரிவதில்லை...!!!

அவளின் ஆசையெல்லாம் உங்கள் சொத்து,சுகமல்ல,
மாறாக ~ அன்பாக ஒரு வார்த்தை, ஆறுதலாக
ஒரு அரவணைப்பு ~அவ்வளவே...!! அன்றி வேறில்லை.
அவள் மாதவிடாயில் இருக்கும்போது அவள்
கொஞ்சம் கோபமாகத் தான் இருப்பாள் ~அதைப்

பொறுற்படுத்தாமல் அவளுக்கு சிறந்த சேவகனாக
இருங்கள். உங்களை அந்நேரத்தில் மட்டும் அவளுக்குச்
சேவகனாக இருக்கச் சொல்லவில்லை,
அந்நேரத்திலாவது சேவகனாக இருங்கள் என்று
தான் சொல்கிறேன்

அவள் மாதவிடாய் வலியில் இருக்கிறாள் என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள், அவளை அந்நேரங்களில்
மகிழ்ச்சியாக வைத்திருங்கள், அவளுக்குப் பிடித்த
உணவை வாங்கிக் கொடுங்கள். அவளுக்கும்
வலிகளுண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உயிர் பிரியும் வரை உங்களுக்கு பாசத்தில் தாயாக,
அன்பில் குழந்தையாக, அறிவில் ஆசிரியையாக,
கவலையின் போது தோழியாக, எப்போதும் இருப்பாள்.

✍️படித்ததில் பிடித்தது

26/11/2025

Dreamcenter.lk
மதுரன்குளி,கடையாமோட்டை வீதியில் அமைந்துள்ள ட்ரீம் திருமண மண்டபம் (DREAM HALL) தமது வாடிக்கையாளரின் நலனுக்காக மழைக்கால சிரமங்களை போக்கும் நோக்கோடு மிகக்குறைந்த கட்டணங்களை பெற்று சகல தளபாடங்கள், மற்றும் சமையலுக்கு தேவையான விறகு களையும் தருவதற்கு தயாராகவே உள்ளனர்....

மழைக்காலங்களில் சிரமமின்றி உங்கள் வைபவங்களை செய்து முடிக்க இன்றே அழையுங்கள்....
HORLINE & WP - 0766488855/0767021218.

பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவுகளுக்கான புதிய மாணவிகள் அனுமதி-2026புத்தளம், தில...
16/11/2025

பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி

ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவுகளுக்கான புதிய மாணவிகள் அனுமதி-2026

புத்தளம், தில்லையடி பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இயங்கி வரும் எமது கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவுகளுக்கு புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

👉தஜ்வீத் பயிற்சியுடன் அல்குர்ஆன் மனனம்,
👉இஸ்லாமிய ஷரீஆ துறைசார்ந்த கலைகள்
👉G.C.E O/L , A/L
👉அல் ஆலிம் முதவஸ்ஸிதா ஸானவிய்யா மற்றும் அஹதிய்யா
👉அரபு, தமிழ், ஆங்கிலம், உருது மொழிகள்
👉கனினி, தையல் கலைகள்
போன்ற அரச பரீட்சைகளுக்கான தயார்படுத்தல்கள்.

*நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025.12.21ம் திகதி காலை 09.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.*

எனவே நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள *Google Form* *https://forms.gle/jHgGtN6APCz6ot668* பூரணப்படுத்தி அனுப்பி வைப்பதன் ஊடாக அ‌ல்லது *076 677 0166* என்ற வட்சப் இலக்கத்திற்கு பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்பி உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

☎️தொடர்புகளுக்கு
071 7500048 / 076 677 0166

🚗✨ சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) Renewal செய்ய புதிய நடைமுறை! ✨🚦  இனி ஒரே நாளில் லைசன்ஸ் புதுப்பிக்க முடியும்...
14/11/2025

🚗✨ சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) Renewal செய்ய புதிய நடைமுறை! ✨🚦
இனி ஒரே நாளில் லைசன்ஸ் புதுப்பிக்க முடியும்... ஆனால் சில புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன!

👇👇👇

🔹 முன்பு போல அன்றே சென்று, அன்றே Renewal செய்ய முடியாது.
🔹 புதிய முறையை பின்பற்றினால் மட்டும் அதே நாளில் வேலை முடிக்க முடியும்!
🔹 மருத்துவ சான்றிதழ் கையில் வழங்கப்படாது.

✅ படி 1:
DMT Website-இல் சென்று உங்கள் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க உகந்த தேதியை முன்பதிவு செய்யுங்கள்.
(சேவை கட்டணம் இல்லை)

✅ படி 2:
அதே தேதிக்கே eChannelling Website-இல் சென்று மருத்துவ சான்றிதழ் appointment ஒன்றை Rs.114-ஐ செலுத்தி book செய்யுங்கள்.

✅ படி 3:
அன்று Medical centre சென்று Rs.1500 செலுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள். கையில் certificate வழங்கப்படாது SMS ஊடாகவே வழங்கப்படும்.
(Booking இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படாது)

📩 SMS மூலம் Ref No வரும் – இதையே Renewal இடத்தில் காட்டினால் போதும்!

நீங்கள் DMD Website இல் Book செய்த திகதியில் Renewal செய்து கொண்டு அதே நாளில் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பு: உங்களுடைய licence Expiry ஆகுவதற்கு ஒரு மாதத்திற்கு முதலே booking செய்வதன் ஊடாகவே தாமதம் இன்றி உரிய திகதியில் பெறக்கூடியதாக இருக்கும்.

🎯 இந்த வழிமுறையை பின்பற்றினால், ஒரு நாளில் உங்கள் Driving License புதுப்பிக்க முடியும்!

📌 இப்போதே Save செய்யுங்கள் – இப்போது தேவையில்லை என்றாலும் நாளைய பயன்பாடு உண்டு!

📢 உங்கள் நண்பர்களும், உறவினர்களும் தெரிந்து கொள்ள Share பண்ணுங்கள்!

உங்கள் சொந்த காணியினுள் வீடு அல்லது மதில் கட்டினாலும் — அனுமதி பெற வேண்டுமா? இது பலருக்கும் குழப்பமான ஒரு கேள்வி. “என்னு...
07/11/2025

உங்கள் சொந்த காணியினுள் வீடு அல்லது மதில் கட்டினாலும் — அனுமதி பெற வேண்டுமா?

இது பலருக்கும் குழப்பமான ஒரு கேள்வி. “என்னுடைய காணி தானே, நான் வீட்டை கட்டினால் யார் என்னைக் கேட்பது?” என்று பலர் நினைப்பார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் —சட்டப்படி, உங்கள் சொந்த காணியாயினும் எந்தவிதமான கட்டுமானத்தையும் செய்ய முன், சட்டரீதியான அனுமதி பெறுவது கட்டாயம்...!

"சுருக்கமாக சொன்னால் சட்டரீதியான கட்டிட அனுமதி பெறாமல் ஒரு செங்கல்லை கூட நீங்கள் நிரந்தரமாக உங்கள் காணியில் கூட நிர்மாணிக்க முடியாது."

"சட்டத்தின் அடிப்படை நிலை
இலங்கையில் கட்டிடங்கள், வீடுகள், மதில்கள், கடைகள் போன்றவை கட்டப்படுவது பொது பாதுகாப்பு, சுகாதாரம், நகரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட்டரீதியாக கட்டுப்படுத்தப்படுகிறது."

இதற்கான முக்கிய சட்டங்கள் பின்வருமாறு:

1️⃣ Urban Development Authority Act No. 41 of 1978
இந்தச் சட்டத்தின் கீழ், UDA-யால் தமது அதிகாரத்திற்குட்பட்டதென பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்டும்போது,

அதற்கான Building Plan Approval மற்றும் Development Permit பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Section :

“No person shall carry out any development activity including the construction of a building without a permit issued by the Authority or a local authority authorized by the Authority.”

அதாவது உங்கள் சொந்த காணியில் கூட வீடு, பதில் boundary wall, shed, extension, garage போன்றவை எவையாயினும் கட்ட அல்லது நிர்மாணிக்க வேண்டுமென்றால் கூட குறித்த அனுமதி அவசியம்.

2️⃣ Municipal Councils Ordinance (Chapter 252)
இந்தச் சட்டத்தின் பிரிவுகள் கட்டிட அனுமதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது.
“No person shall construct any building within the limits of a Municipal Council without the written approval of the Council.”

அதாவது மாநகரசபை எல்லைக்குள் (Municipal Limit) உங்களுடைய காணி இருந்தால், அந்த மாநகரசபையிலிருந்து பெறப்பட்ட கட்டிட அனுமதி இல்லாமல் ஒரு கல் கூட உங்களால் நிர்மாணிக்க முடியாது!

3️⃣ Urban Councils Ordinance (Chapter 255) மற்றும் Pradeshiya Sabha Act No. 15 of 1987
இந்த சட்டங்களும் அதேபோல், நகரசபை அல்லது பிரதேசசபை எல்லைக்குள் கட்டிடங்கள், மதில்கள் போன்றவற்றை கட்டுவதற்கு முன்கூட்டியே எழுத்துமூல அனுமதி பெற வேண்டும் என்கின்றன.

Sections of – Pradeshiya Sabha Act:
“No person shall commence to erect any building without the prior written approval of the Pradeshiya Sabha.”

அனுமதி பெற வேண்டிய கட்டுமானங்கள்

01. புதிய வீடு கட்டுதல்.
02. பழைய வீட்டை விரிவுபடுத்துதல் (Extension).
03. மதில் (Boundary Wall) கட்டுதல்.
04. கூரை மாற்றுதல் அல்லது shed அமைத்தல்.
05. Shop / Store / Garage கட்டுதல்.
06. காணிக்குள் கழிவு தொட்டி septic tank / soakage pit மலசலகூடம் மற்றும் அதன் குழி அமைத்தல்.

அதாவது நீங்கள் உங்களுடைய காணியினுள் அல்லது காணி எல்லையில் நிரந்தர சிறிய அல்லது பெரிய கட்டிட நிர்மாணம் எதுவாயினும் நிர்மாணிக்க தீர்மானித்தால் அதற்கான எழுத்துமூல முன்னனுமதி பெறல் வேண்டும்.

அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டினால் ஏற்படும் விளைவுகள்
குறித்த கட்டிடம் இடிக்கப்படும்:

UDA, Urban Council அல்லது Pradeshiya Sabha அதிகாரிகள் demolition order பிறப்பிக்கலாம்.
👉 (UDA Act – Section 27; Municipal Ordinance – Section 42A)

Fine & Legal Action:
அனுமதி இல்லாமல் கட்டியதால் Case தொடுக்கப்படும்.
சில நேரங்களில் Rs. 50,000 – Rs. 500,000 வரை அபராதம் விதிக்கலாம்.

Electricity / Water Connection மறுப்பு:
அனுமதி சான்றிதழ் இல்லாமல் CEB மற்றும் NWSDB சேவைகள் வழங்கப்படமாட்டாது.

Ownership Transfer தடைகள்:
அத்தகைய கட்டிடத்திற்கு Building Plan Approval Certificate இல்லாவிட்டால்,
Deed Registration அல்லது Bank Loan பெறுவது கடினமாகிவிடும்.

முக்கிய வழக்குகள் (Case Law Examples)

Fernando v. Urban Development Authority (1993)

இந்த வழக்கில், நபர் ஒருவர் தனது காணியில் அனுமதி இல்லாமல் கட்டிடத்தை கட்டினார்.
UDA அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் கூறியது:

“Land ownership does not give immunity from the law.
Construction within UDA areas must comply with planning regulations.”
அதாவது — “உன் காணி என்ற alone காரணத்தால் சட்டம் நீங்காது” என்கிற தெளிவான தீர்ப்பு!

Municipal Council of Kandy v. Gunasekara (1989)

இங்கு, காணி உரிமையாளர் ஒரு boundary wall கட்டியபோது அனுமதி பெறவில்லை.
கண்டி மாநகர சபை அதனை இடிக்க உத்தரவிட்டது.

நீதிமன்றம் தீர்மானித்தது:

“Even walls are part of structural development; prior approval is mandatory.”

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் காணி உரிமையாளர் என்றால்:

1️⃣ உங்கள் Building Plan-ஐ ஒரு Licensed Draughtsman / Engineer மூலம் வரைந்து கொள்ளுங்கள்.

2️⃣ அதனை Local Authority (MC/UC/PS) யில் சமர்ப்பிக்கவும்.

3️⃣ Planning Approval + Building Permit பெறவும்.

4️⃣ கட்டுமானம் முடிந்ததும் Certificate of Conformity (COC) பெறவும்.

இதனால் உங்கள் கட்டிடம் சட்ட ரீதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

உதாரணம்:

சுரேஸ் என்ற நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியில் 6 அடி உயர மதில் கட்டினார். அனுமதி பெறாமல் செய்ததால், Jaffna Municipal Council அவருக்கு Notice அனுப்பியது. அவர் பின்னர் அனுமதி பெற்று மதிலைச் சட்டபூர்வமாக்கினார்.
இல்லையெனில், அந்த மதில் இடிக்கப்பட வேண்டியிருந்தது.

சிந்தியுங்கள் நண்பர்களே!

“உங்களது காணி என்பதற்காக சட்டம் எப்போதும் எவ்வகையிலும் உங்களுக்கு விலக்களிக்காது!”

சட்டம் அனைவருக்கும் சமம்.

நீங்கள் கட்டும் வீடு, மதில், அல்லது கடை சட்டப்படி பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமெனில்

அனுமதி பெறுவது உங்கள் கடமை, உங்கள் உரிமையைப் பாதுகாக்கும் வழியும் ஆகும்!

இதனைப் பகிருங்கள் நண்பர்களே!
இந்தச் சட்ட உண்மை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது!
ஒருவரின் வீடு சட்ட பிரச்சினையிலிருந்து காப்பாற்றப்படும்!

முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)
Kamsan Kumarasingam நன்றி

சீனாவில் நடந்த அபின் போர் ஐ பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? இலங்கை மக்கள் இந்த யுத்தம் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய...
04/11/2025

சீனாவில் நடந்த அபின் போர் ஐ பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? இலங்கை மக்கள் இந்த யுத்தம் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய கால கட்டம் இது.

ஓபியம் அல்லது அபின் போர் (O***m War 1839–42) என்பதற்கு, நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. பிரிட்டிஷார் உலகின் பல நாடுகளை காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியிருந்த சமயம் அது. தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருட்களை சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சீனர்கள் இறக்குமதி செய்யவில்லை; தன்னிறைவாக இருந்தனர். இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள், இதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். இந்தியாவில் அவர்கள் இலகுவாக காலூன்ற முடிந்தாலும், சீனாவில் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.

இதையடுத்து, இந்தியாவிலும், வங்காள பகுதிகளிலும் பிரிட்டன் அபின் உற்பத்தியில் ஈடுபட்டது. அதை, சீனாவில் இறக்குமதி செய்தது பிரிட்டன். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. தெருவெங்கும் இப்போது இருக்கும் இலங்கையை போன்று ஒவ்வொரு வீடுகளுக்கும் கொள்ளை நோயை விட வேகமாக இந்த அபின் / ஓபியம் பரவி சீரழித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.

இதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. போதை இல்லாமல் சில இடங்களில் இளைஞர்கள் கொதி கொண்டு கிடைக்கும் அனைத்தையும் போதைக்காக பயன்படுத்த தொடங்கினர். கேஸ் ஒயில், கற்பூரம், ஒட்டுவதற்கு பயன்படும் கம், காய்ந்த தேயிலை நீர் என்று கைகளில் கிடைப்பதை எல்லாம் மாற்று போதைப் பொருளாக எடுக்க தொடங்கினர். இதன் விளைவு கொத்து கொத்தாக மரணங்கள் சீனா எங்கும் விழத்துவங்கியது. பல போதையாளர்கள் தாமாகவே உயிரை மாய்க்க தொடங்கினர். எனினும் சீன அரச போதை ஒழிப்பில் விடாப்பிடியாக இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.
முதலாம் அபின் போர் 1839ம் ஆண்டு முதல் 1842ம் ஆண்டு வரை நடந்தது.

இதை வாசிக்கும் போதே இலங்கையின் தற்போதைய நிலையும் சமீப காலமாக ஏற்படும் இளம் மரணங்களுக்கான காரணமும் உங்கள் மனக்கண்ணில் வந்து போயிருக்கும்.

ஜனாதிபதி அனுரவின் போதை ஒழிப்பு முயற்சியின் பின்னணியில் சில துயரங்களும் வெளிப்படுகின்றன. அது தவிர்க்க முடியாதது. எமது பிரதேசங்களிலும் ஐஸ், ஹெரோயின் போன்ற கடுமையான போதைப் பொருட்கள் கிடைக்காததால் சில இளம் வாலிபர்கள் மாற்று வழிகளைத் தேடி போதைய தாக்கத்தைப் பெறும் மாத்திரைகளை ஒரே அடியாக விழுங்க தொடங்கியுள்ளனர்.

போதை மாத்திரைகள் மாத்திரம் இன்றி Tramadol, Penadol போன்ற மருத்துவ குளிசைகள், பெயிண்ட் இற்கு பயன்படுத்தும் தின்னர், Tooth Paste, கடுகு, இருமல் பாணி போன்றவற்றையும் மாற்று போதை பொருட்களாக பாவிக்க தொடங்கியுள்ள அவல நிலை தொடங்கியுள்ளதுடன் கடந்த சில நாட்களாக இளம் உயிர்கள் இந்த ஆபத்தான பழக்கத்தால் மரணமடைந்துள்ளனர்.
இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலைமையை அலட்சியப்படுத்தினால் இன்னும் பல குடும்பங்கள் துயரத்துக்குள்ளாக நேரிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:
“நாங்கள் உங்களை பயமும் பசியும், பொருள், உயிர், விளைச்சல் இழப்பாலும் சோதிப்போம்”
(அல்-பகரா 2:155)

இன்று நம் சமூகத்தில் நிகழும் இளம் உயிரிழப்புகள் துயரமானவை தான், ஆனால் அவை நம்மை விழிப்புணரச் செய்யும் சோதனைகள். அல்லாஹ் சில மரணங்களைப் பிறருக்கான படிப்பினையாகவும், சமூகத்திற்கான மீட்பாகவும் மாற்றுவான்.

நம் நாட்டில் இப்போது நடைபெறும் போதை ஒழிப்பு முயற்சி முன்பை போன்று சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல என்பதை உணர்ந்து இருப்போம். ஒரு கிராம் இரண்டு கிராம் என்று சில்லறை தூளர்களை பிடித்து படம் காட்டாமல் டொன் கணக்கில் உற்பத்தி செய்யும் மேல்மட்ட போதை மாபியாவின் தலையில் அரசாங்கம் கை வைக்க தொடங்கியாதன் விளைவே இந்த போதை தட்டுப்பாடும், அதன் வழியான மரணங்களும்.

சீனாவில் போதை அழிவை ஏற்படுத்தியபோல், இலங்கையிலும் இதனை நிறுத்தாவிட்டால், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடாவிட்டால் நம் நிலை கேள்விக்குறிதான். போதை கருவறுப்பு அரசாங்கத்தின் வேலை மாத்திரம் என்று நினைத்து ஒதுங்கி விடாமல் மக்களின், பெற்றோரின், பள்ளிகளின், மத அறிஞர்களின், மற்றும் ஒவ்வொரு சமூக தலைவரின் கடமை என்ற எண்ணம் வராத வரை இனி வரும் இழப்புங்களுக்கும் குறைவேதும் இருக்க போவதில்லை..

நன்றி!
📝Abdul Hathee

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்த...
29/10/2025

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது.

குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

புன்சர அமரசிங்க என்ற இந்த பேராசியரின் "இலங்கையில் குடியேறியவர்களின் கொள்கையின் பின்னால் இஸ்ரேலின் நிழல்கள்" என்ற தலைப்பிலான நூலில் குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய விவசாய மற்றும் இராணுவ மாதிரிகள்,இலங்கையின் மீள்குடியேற்ற உத்திகளுக்கு குறிப்பாக தமிழர் தாயகத்தில், இராணுவ மயமாக்கப்பட்ட இனப்பரம்பலை மாற்றும் செயற்பாட்டை உட்பொதித்து, இன்றுவரை தொடர்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்திற்கும், இலங்கையின் வடக்கு கிழக்கின் சிங்களக் குடியேற்றத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை கோடிட்டு, தேசத்தைக் கட்டியெழுப்பும் போர்வையில் அபிவிருத்தி, இடப்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கல் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன என்பதையும் இந்த ஆய்வை பேராசிரியர் புன்சரஅமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஆற்றல் மற்றும் மீள்குடியேற்ற இலக்குகள் Amy Yar என்ற இஸ்ரேலிய முகவரால் உருவாக்கப்பட்டது

ஜே ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்துடனான அவரது நெருங்கிய உறவுகளின் விளைவாக, விவசாய நிபுணர் என்ற போர்வையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் பேராசிரியர் புன்சர அமரசிங்கவின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய கட்டிடக்கலை நிபுணர் உல்ரிக் பிளெஸ்னர் 1981 ஆம் ஆண்டு மலைநாட்டில் உள்ள மகாவலி குடியிருப்புகளில் புதிய நகரங்களைத் திட்டமிடுவதற்காக இலங்கைக்கு வந்தார் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றங்களை நினைவூட்டும் அடிப்படை திட்டமிடல் கொள்கைகளை பிளெஸ்னர் இந்த திட்டத்துக்குள் இணைத்தார் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

18/10/2025
 #அறிந்துக்_கொள்வோம்.!🧠 மன அழுத்தம் — மனதிற்கே மட்டும் அல்ல, உடலுக்கும் தாக்கம் வரும்.! மன அழுத்தம் (Stress) வந்தால் அது...
12/10/2025

#அறிந்துக்_கொள்வோம்.!

🧠 மன அழுத்தம் — மனதிற்கே மட்டும் அல்ல, உடலுக்கும் தாக்கம் வரும்.!

மன அழுத்தம் (Stress) வந்தால்
அது மனதில் மட்டும் இல்லாமல்,
உடல் முழுவதும் இரசாயன மற்றும் உடல் மாற்றங்களை தூண்டும் என்பது தெரியுமா?

உடலில் நடக்கும் மாற்றங்கள்:

➡️ கார்டிசோல் & அட்ரினலின் ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
➡️ இதய துடிப்பு வேகமாகும்.
➡️ இரத்த அழுத்தம் உயர்வு.
➡️ அழற்சி (Inflammation) அதிகரிப்பு.

இதன் விளைவாக:
❌ இதய நோய்
❌ பக்கவாதம்
❌ நீரிழிவு அபாயம் 🚨
🛡️ நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கும்.
மன அழுத்தம் உங்கள் immune system ஐ பலவீனப்படுத்தி, ஜீரணக் கோளாறு இரத்த சர்க்கரை & கொலஸ்ட்ரால் உயர்வு,
நினைவாற்றல் குறைவு,
மனநிலை மாற்றங்கள்.
தூக்கக் கோளாறு,
சருமம் & முடி பிரச்சனைகள் இருக்கும்.

மன அழுத்தம் உங்கள் உடலின் பெரும்பாலான அமைப்புகளை பாதிக்கும். அதைக் கட்டுப்படுத்துவது, நீண்ட ஆயுள் + நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

யோகா | தியானம் | நடை | நேர்மறை சிந்தனை இதை முயற்சிப்பது நல்லது.

உங்கள் உடலும் மனமும் சமநிலையில் இருக்க, இன்று முதல் முயற்சி செய்ய தொடங்குங்கள்!

ஆனால்... இவை யாவும் செய்வதால்
மனம் நிம்மதி அடைவது கேள்விக் குறியே.!

“அரசகாணியில் நீங்கள் 10 வருடமாக குடியிருக்கிறீர்களா? அது உங்கள் சொத்து ஆகுமா ? ஆவணங்கள் எதுவும் இல்லையா...? - சட்டரீதியா...
12/10/2025

“அரசகாணியில் நீங்கள் 10 வருடமாக குடியிருக்கிறீர்களா? அது உங்கள் சொத்து ஆகுமா ? ஆவணங்கள் எதுவும் இல்லையா...? - சட்டரீதியான விளக்கம் இதோ!”

பலருக்கும் இருக்கும் பெரிய சந்தேகம் இதுதான். “நாங்கள் 30 வருடமாக இந்த அரசகாணியில் இருக்கிறோம் இப்போது அது எங்களுடையதுதான் என சொல்லிக் கொள்ளலாமா?” என்ற கேள்வி.

உங்கள் சந்தேகத்திற்கு சட்ட அடிப்படையிலான தெளிவான பதில்

சட்டம் என்ன சொல்கிறது?

1. Prescription Ordinance No.22 of 1871 அடிப்படையில் (Prescription) ஆட்சியுரிமை சார்ந்த சட்டம் அரச காணிகளுக்கு (State Land) பொருந்தாது.

2. இதனை அரச காணிகள் கட்டளைச் சட்டமும் State Lands Ordinance No.8 of 1947 உறுதிப்படுத்துகிறது:

ஆகவே அரசு சொத்துக்கள் எச்சந்தர்ப்பத்திலும் எவராலும் ஆட்சி உரிமை மூலம் உரிமை கோரி தங்களுடைய சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாதவை.

மேலும் Sri Lankan Case Law இதை மீண்டும் மீண்டும் தீர்ப்பு அளித்துள்ளது:

Mahaweli Authority vs Udayakumara (SC Appeal 21/2010)

Attorney General vs Jinadasa (1994)
நீண்ட காலம் அரச காணியில் இருப்பது மட்டும் சட்ட உரிமையாக கருதப்படாது.

#அப்படியென்றால் #அரச #காணியை #சட்டப்படி #எவ்வாறு #பெறலாம்?

கீழ்க்கண்ட சட்ட நடைமுறைகள் மூலம் பெற்றால் மட்டுமே உரிமை கிடைக்கும்:

1. அளிப்பு பத்திரம் Grant (Land Development Ordinance கீழ் LAND GRANT மூலம்)

2. காணி அனுமதிப்பத்திரம் Permit (Jayabhoomi / Swarnabhoomi / LDO Permit)

3. நீண்டகால குத்தகை Lease (99 Years Lease Agreements from State)

4. விசேட அளிப்பு Grant under Special Schemes (Mahaweli, UDA, NHDA allocations)

5. பூரண அளிப்பு (FREE GRANT) பத்திரம் மூலம்

#கசப்பான உண்மை என்னவென்றால் :

அரச காணியில் நீண்ட காலம் வசிப்பது மட்டும் உரிமைகோர போதாது — சட்ட அடிப்படையான ஆவணம் அவசியம்!

நீங்கள் தற்போது அரசுக் காணியில் இருந்தால் – கவனிக்க வேண்டியவை!

A. நிலத்தை விற்கவும் முடியாது
B. Bank Mortgage வைக்க முடியாது
C. Tittle Deed பெற முடியாது
D. Court இல் Ownership Claim போட முடியாது

✅ ஆனால் சில வழிகளில் சட்டபூர்வமாக உரிமை பெற முயற்சிகள் செய்யலாம்:

1. பிரதேச செயலாளரிடம் (Divisional Secretariat மூலம் Regularization Application) விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

2. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (National Housing Development Authority) மூலம் விண்ணப்பம்

3. அனுமதிப்பத்திரம் இனை அளிப்பு பத்திரமாக மாற்றம் செய்து பெற்றுக் கொள்ளலாம் (Permit Upgrade to Grant)

இந்த போஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

👉 தொடர்ச்சியாக “Land Law Awareness” பதிவுகள் வேண்டும் என்றால் “YES” என்று Comment போடுங்கள்!

ஆம்

👉 நிலத்தை பாதுகாப்பது உங்கள் உரிமை – சட்டத்தை தெரிந்து கொள்ளுதல் உங்கள் கடமை!

(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல)

- சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன் -

Address

Batticoloa

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Time News - CTN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Time News - CTN:

Share