Beruwala News

Beruwala News "மக்களால் மக்களிடமிருந்து மக்களுக்காக"

இன்றைய வானிலை முன்னறிவித்தல்நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...
08/11/2025

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இஷாரா செவ்வந்தி பின்னணியில் சக்திவாய்ந்த பாதாள குற்றவாளிகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவுகணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் ஒன்பத...
07/11/2025

இஷாரா செவ்வந்தி பின்னணியில் சக்திவாய்ந்த பாதாள குற்றவாளிகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் ஒன்பது சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு இன்று (7) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்த கொலையில் ஆறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த பிரிவின் அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

மேலும், இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி தப்பிச்செல்வதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பல சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த கொலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் 09 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் 04 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், காவலில் உள்ள சந்தேகநபர்கள் அதிகாரியால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளின் முன்னேற்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கும், கொழும்பு நீதவான் நீதிமன்ற எண் 08க்கும் தெரிவிக்கப்படும் என்றும் கோட்டை நீதவான் தெரிவித்தார்.

மேலும், முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேர...
07/11/2025

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார்.

நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அக்கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது.

மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும்.

நுகேகொடை அரசியல் சமரானது அரசாங்கத்துக்கு நிச்சயம் கடுமை அழுத்தமாக அமையும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

சபையில் அர்ச்சுனா எம்.பி உறக்கம் - வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவுவடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும...
07/11/2025

சபையில் அர்ச்சுனா எம்.பி உறக்கம் - வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு

வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தேன் வட மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை.

வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை.



கடந்த முறை ஐயாயிரம் மில்லியன் வீதி அபிவிருத்திக்காகவும் 1500 மில்லியன் வட்டு வாகல் பாலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள்.இங்க இந்தத் தடவை எதுவுமே இல்லை.



கடந்த தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை.

வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் நிதியும் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. என்று தெரிவித்துள்ளார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்ஹெரோயின் போதைப்பொருள் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்...
07/11/2025

கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்

ஹெரோயின் போதைப்பொருள் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, ஸ்தாபனக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தை அவர் செய்துள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மைத்ரிபால ஆஜர்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்...
07/11/2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மைத்ரிபால ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இன்றைய வானிலை முன்னறிவித்தல்மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள...
07/11/2025

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

பாடசாலை தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு நடைபவனிதமிழனின் ஊடக அனுசரணையில் இராஜகிரிய - ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயத்தி...
06/11/2025

பாடசாலை தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு நடைபவனி

தமிழனின் ஊடக அனுசரணையில் இராஜகிரிய - ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயத்தின் பாடசாலை தினத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை(08) நடைபவனி இடம்பெறவுள்ளது.

குறித்த நடைபவனி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

ஒபேசேகரபுர பாடசாலை வளாகத்தில் ஆரம்பமாகும் நடைபவனி, ஒபேசேகரபுர வீதியை கடந்து ராஜகிரிய மேம்பாலம் வழியாக மீண்டும் பாடசாலை வளாகத்துக்கு சென்று நிறைவடையும்.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் விரும்பியவர்கள் இந்த நடைபவனியில் கலந்து கொள்ளலாம் எனவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசுன்னாகம், ஊரெழு மேற்கு பகுதியில் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹ...
06/11/2025

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

சுன்னாகம், ஊரெழு மேற்கு பகுதியில் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இன்றைய வானிலை முன்னறிவித்தல்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்...
06/11/2025

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

ராஜபக்சக்களின் ஆட்சி மீது வெறுப்பு - சரத் பொன்சேகா“ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட...
05/11/2025

ராஜபக்சக்களின் ஆட்சி மீது வெறுப்பு - சரத் பொன்சேகா

“ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும். மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தற்போதைய எதிர்க் கட்சியினர் மீண்டும் ஆட்சி கிடைக்கக் கூடாது என்று பிரார்த்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்திலேயே பார்க்க முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் தனியாக இயங்குகிறது. பாதாளக் குழுக்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பிட்டவையாகும். தற்போது செயற்பாட்டில் இருக்கின்றன. இருந்தபோதும், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகிறது என்பதை நான் பயமின்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுகிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இருந்தபோதும் அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்க வேண்டும். ஒருசில எதிர்க் கட்சியினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே எதிர்க் கட்சிகளிடமிருந்து விலகி தனித்து செயற்பட ஆரம்பித்து விட்டேன். 15 வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் செயற்பாடுகளினால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டதாலேயே அவர்களிடமிலுருந்து விலகி வந்தேன். அதனால், மீண்டும் அவர்களுடன் இணைந்துகொள்ளுமளவுக்க நான் முட்டாளும் இல்லை.

மீண்டும் அவர்களுக்கு ஆட்சிகிடைக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். 75 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை கட்டியெழுப்பக் கூடிய நாட்டை கட்டியெழுப்பவில்லை. மீண்டும் இவர்கள் கூறும் தேவதை கதைகளை நம்பி அதிகாரத்தை வழங்கி, அவர்களுக்கே வரப்பிரசாதங்களை வழங்கி ஆட்சியாளர்களாக்குமளவுக்கு மக்கள் முட்டாள்களாவார்கள் என்றால் அந்த மக்களுக்கு எப்போதும் தற்போதுள்ள பிரச்சினைகளுடனே வாழ வேண்டியவரும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற எந்தவொரு வேண்டுதலும் இல்லை.

தற்போதிருக்கும் பிரச்சினை போதவில்லை என்றால் மக்கள் யாரை வேண்டுமென்றாலும் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்க முடியும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிமட்ட அரசியவை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் குறைப்பாடுகள் இருக்கின்றன. அரசாங்கத்தில் கற்ற, நிபுணர்களாக இருந்தாலும் அவர்கள் அடிமட்டத்துடன் இணைந்து அரசியல் செய்ய பழக்கப்பட்டவர்கள் இல்லை. எனவே. விரைவாக அதற்கான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு வரைவாக முறையாக அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றை அரசாங்கம் சரி செய்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை, ராஜபக்ஷக்கள் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும்.மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன். உண்டுவிட்டு, நித்திரைக்கொண்டு வானத்தை பார்த்துகொண்டு இருந்தவர்கள் நாங்கள் இல்லை. ஒருசிலரை போன்று சோரம் போகவும் இல்லை. நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தோம். அன்போடு நாட்டுக்காக பணியாற்றினோம். எங்களின் அனுபவத்துக்க சமை அவர்களின் மீது வெறுப்பு இருக்கிறது என்றார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

Address

Maradana
Beruwala
12070

Alerts

Be the first to know and let us send you an email when Beruwala News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beruwala News:

Share