Shìfan Abdułłah

Shìfan Abdułłah Adventure Awaits! Join me on a journey across the globe through stunning landscapes, vibrant cultures, and unforgettable experiences.

ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து வந்து தாற டொபியும் சாக்லேட்டும் க்ளோனும்தான் பலருக்கு தெரியும் ஆனா அத எப்புடி கொண்டு வந்து ...
14/08/2025

ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து வந்து தாற டொபியும் சாக்லேட்டும் க்ளோனும்தான் பலருக்கு தெரியும் ஆனா அத எப்புடி கொண்டு வந்து சேக்காங்க எண்டு தெரியுமா... விளக்கமா சொல்லுறன் கேட்டுக்கோங்க...

ஒப்பீஸ்ல வெக்கேஷனுக்கு டேட் சொன்னதுல இருந்து சாமானுகள் வாங்குற படலம் கூடும். வீட்டுல, சொந்தத்துல, கூட்டாளிமார்ட இருந்து வந்த லிஸ்டோட வீட்டுல இரிக்கிர ஆக்களுக்கு அது நல்லம் இது நல்லம் எண்டு ஒவ்வொரு சாமானா வாங்கிட்டு வந்து பாத்தா 50 கிலோவத் தாண்டும். அங்க கார்க்கோ பர்ளாக்கப்படும்.

இனி அஞ்சி பத்துக் கிலோவ வெச்சிட்டு மிச்சத்த கார்கோல போடோணும். எயா கார்கோனா போறதுக்கு ரெண்டு கிழமைக்கு முன்னயாவது போடோணும். சீ கார்க்கோ எண்டா ரெண்டு மாசம் வெச்சித்தான் போடோணும்.

வீட்ட போறதுக்கு முன்னுக்கு போய் சேந்திடாமலும் போய் கனகாலத்துக்கு பிறகு வந்திடாமலும் பாத்து அந்த கார்க்கோவ போடோணும் அப்பதான் வீட்டுக்கு போய் கார்கோல போட்டது கைல கொண்டு போனது எண்டு எல்லா சாமானுகளையும் ஒழுங்கா பிரிச்சி பங்கு வைக்கலாம். இல்லாட்டி அது பெரிய பலாயா போயிரும்.

வெக்கேஷன் நெருங்கிட்டு எண்டா பெரும்பாலும் எத்தின கிலோ எண்டாலும் கிலோக்கு பத்து றியால் குடுத்து எயார் கார்கோலதான் போடோணும்.

கைல கொண்டு போக எண்டு முப்பது கிலோவ வெச்சிட்டு மத்ததான் கார்கோல போடுற எண்டு யாரும் நினச்சிட வேண்டாம். அஞ்சி பத்து கிலோவ மட்டும்தான் வெச்சிட்டு மத்தது கார்கோல அனுப்புற. அது ஏனெண்டு கீழே வாசிச்சிட்டு போககுள்ள உங்களுக்கே விளங்கும்.

வெக்கேஷன் கிட்டவாககுள்ள கோள்கள் வரும். நாட்டுக்கு வாறயாம் எண்டு கேள்விப்பட்டன் ஏலுமெண்டா ......
இதுல ஒண்டு வாங்கிட்டு வாங்களன். அவனுக்கு இது நல்ல விருப்பம் அங்க இரிக்கிரது நல்லமாம் வரக்குள்ள அதுல ரெண்ட புடிச்சிக்கி வாங்க. இப்புடி அடுத்த லிஸ்ட் தயாராகும்.

அது இல்லாம பொண்டாட்டி புள்ளைகள் கேட்டது. கார்கோல போடேலாத பழுதாகுற சாமானுகள் எண்டு கொஞ்சம் வாங்க இருக்கும்... அது போக தெரிஞ்சவங்க தந்த பார்சல்கள் வேறயா இருக்கும்.

இடையால ஒருத்தன் பார்சல் தாறன் தாறன் எண்டுட்டு கடைசி வர தர மாட்டான் நம்மளும் அவன் தாறல்லயாக்கும் எண்டுட்டு விட்டிடுவம் நாளைக்கி பயணம் எண்டா நைட்டுக்கு கொண்டு வந்து பார்சல நீட்டுவான். அதுவும் மூணு கிலோனு சொல்லிட்டு அஞ்சி கிலோ இருக்கும்.

இனி ஒண்டும் செய்யேலாம அதயும் வாங்கி எடுக்திட்டுப் பார்த்தா திரும்ப 50 கிலோ வந்து சேந்திருக்கும். இது எல்லாத்தையும் கொண்டுபோய் சேர்க்கோணும் அதுலதான் க்ளைமெக்சே இருக்கு.

கட்டார் எயர்வேஸ்ல 37 கிலோதான் தருவாங்க. 30 பெல்ட்ல 7 ஹேண்ட் லக்கேஜ்ல. இப்ப முதலாவதா பெல்ட்டுக்கு போடுற பொட்டிய கட்டோணும்.

ரூம்ல நல்ல ட்ரவளிங் பேக் எல்லாம் இருக்கும் அனா அது மூணு நாலு கிலோ வெயிட் எங்குறதால வெயிட் கொறஞ்ச கார்போர்ட் பொட்டியா தேடி எடுக்கோணும். அதுல 31 கிலோவுக்கு கூடாம 30.5 கிலோக்கு குறையாம அந்த பொட்டிய கட்டோணும். இப்ப மிச்சம் 20 கிலோவுக்கு மேல இருக்கும்.

அடுத்தது லெப் இல்லாத லெப்டொப் பேக் ஒண்ட எடுத்துக்கோணும். அதுக்குள்ள சைல சிறியதாகவும் கிலோவுல கூடயாவும் இரிக்கிர சாமானுகளாப் பாத்து வெச்சி லெப்டொப் இரிக்கிரமாதிரி அத செட்பண்ணி எடுக்கோணும். அந்த பேக் வீங்கினமாதிரி தள்ளிக்கி நிண்டா டவுட் வந்திரும் அதாலதான் இந்த வேல செய்ர.

இனி அதுக்குள்ள ஒரு அஞ்சி ஆறு கிலோ அமத்துப்படும். அடுத்தது ஹேண்ட் லக்கேஜ் அதுக்கும் பெரிசா இல்லாம மிச்சம் சிறிசாவும் இல்லாம ஒரு சைசான பேக்க பாத்து எடுத்துக்கோணும். அதுலயும் லெப் பேக்ல சாமான் அடிக்கின போர்மியுலால அடிக்கி பத்து பதின் மூணு கிலோவ அமத்திரோணும்.

அடுத்தது பாஸ்போர்ட், போர்டிங்க் பாஸ் ஃபோன் வைக்கிர சின்ன கை பேக். அதுக்குள்ளயும் வைக்க எலுமானத வெச்சிரோணும். ட்ரவுசல் பொக்கேட் ரெண்டுலயும் வாங்கின ஃபோன், பவர் பேன்க் இப்புடியான சாமான சொருவோணும்.

நாட்டுக்கு போய் போடுறதுக்கு உடுப்பு கொண்டு போகோணுமே அதுவும் மூணு நாலு கிலோக்கு வரும் இனி அதுக்கு சிலவங்க என்ன செய்ரெண்டா போட்டிக்கிர உடுப்புக்கு மேலால இன்னம் ரெண்டு ட்ரவுசர் சேட்ட போடுறது.

அதுக்கு அடுத்தது நல்ல அழகான பேப்பர் பேக் ஒண்ட எடுத்து அதுக்குள்ள ஈச்சம் பழம், இன்னம் சில ப்ரூட்ச போட்டு அதுலயும் ஒரு மூணு கிலோவ போட்டு எடுத்துக்கோணும்.

மிஞ்சின எல்லாத்தையும் ஒரு பேக்ல போட்டு எடுத்துக்கு எயார்போர்ட் போய் வெளியில ஒருத்தர ஸ்டேன்ட் பை நிப்பாட்டிட்டு அவர்ட கைல அந்த பேக்க கொடுத்திட்டுதான் உள்ள போறது.

இப்புடி எல்லாத்தையும் எடுத்துக்கு கவுண்டருக்கு போற நேர பயம் இல்லாம மூஞ்ச நல்ல பசுந்தா வெச்சிக்கோணும். பெல்ட்ல போடுற பொட்டிய தவிர மத்த எல்லாத்தையும் கவுண்டர்ல இரிக்கிரவனுக்கு விளங்காதமாதிரி அவண்ட டேபிளுக்கு மறச்சி வெச்சிடோணும்.

லக்கேஜ போட்டுட்டு சில நேரம் ஹேண்ட் லக்கேஜ் எங்க எண்டு கேப்பான் அப்புடி கேக்காட்டி போர்டிங்க் பாஸ வாங்கிட்டு மெதுவா வந்திடோணும். அப்புடி ஹேண்ட் லக்கேஜ டெக் அடிக்க கேட்டா பொட்டிட கிலோ விளங்காதமாதிரி பெல்ட்ல படாம பேக்க தூக்கி பிடிச்சிக்கோணும் அவன் டெக் அடிக்குமட்டும்.

தப்பி தவறி கிலோவ பாத்து குறச்சிட்டு வரச் சொன்னா அண்ணியனா இருந்த மூஞ்ச அம்பியா மாத்திக்கிட்டு கொஞ்சம் பேசிப் பாக்கோணும். அப்பவும் ஒத்துக்கலனா ப்ளான் B க்கு போகோணும்.

அந்த ப்ளான் என்னெண்டா... அவன் டெக் அடிக்காம போர்டிங்க் பாஸ தந்திட்டு குறச்சிட்டு வரச்சொன்னா ஹல்லி வல்லிண்டு போய் வெளிய வெச்சிருக்க கொடுத்த சாமானயும் ஹேண்ட் லக்கேஜ்ல போட்டுக்கு கவுண்டருக்கு போகாம உள்ள போகோணும். ஹேண்ட் லக்கேஜுக்கு டெக் அவசியமில்ல.

அதே போர்டிங்க் பாஸ தரலனா வேற வழி இல்ல வெளிய போய் கொஞ்சம் கிலோவ கொறச்சிட்டு வந்து போர்டிங்க பாஸ வாங்கிட்டு திரும்ப போய் அத போட்டுக்கு வரவேண்டியதுதான். என்ன ரெண்டு தரம் உள்ள போய் வர வேண்டி இருக்கும் அம்புட்டுத்தான்.

எல்லாத்தையும் முடிச்சிட்டு 7 kg ஹேண்ட் லக்கேஜ்ல 27 கிலோவ தூக்கிட்டு பாரமே இல்லாதமாதிரி மூஞ்ச வெச்சிட்டு. பொட்டியையும் இழுத்துக்கு மல்லுக்கட்டாம கெத்தா ஒரு எடுவையோட நடந்துக்கு உள்ள போயிரோணும். அப்புடி உள்ள போயிட்டம் எண்டா போதும் வெக்கேஷன் சக்செஸ். இதெல்லாம் கட்டார் எயர்வேய்ஸ் எண்டா மட்டும்தான்.

இதுவே சிறீ லங்கன் எயர்வேய்ஸ் எண்டா கடைசியா ஒரு தடைதாண்டல் பரீட்சை இருக்கு அதயும் தாண்டோணும். அதுதான் ப்ளைட் வாசல்ல லாளாஹாமி மாத்தையா ரெண்டு பேரு தராசோட நிப்பாக அவடத்த மாட்டினா முடிஞ்சி. ஒண்டு காசி கட்டோணும் இல்லையா பொருட்கள இழக்கோணும்.

இது எல்லாத்தையும் முடிச்சிட்டு சீட்ல குந்தி ஒரு பெரும் மூச்சோட இனிமே இந்த கசகரணம் வேணா வாப்போவ் எண்டு ஒரு முடிவுக்கு வருவம். ஆனால் பலருக்கு இப்புடி கஷ்டபட்டதான் அது வெக்கேஷன் எங்குற பீலிங்கே வாறதாம் அதால திரும்பவும் அத பல்லவியும் சரணமும்தான்.

நான் எல்லாம் இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறத விட்டுட்டன் 😍😍😍

சரி இப்புடி கஷ்டப்பட்டு கொண்டு வந்த எண்டுட்டு கூப்புட்டு வெச்சி பொன்னாடையா போத்தப் போறாக அது தரல இது கொண்டு வரல எங்குற குறைதான் வரப் போகுது. இனி என்னத்துக்குத்தான் இவ்வளவு அவதிப்படவோ எண்டும் யோசின வரும்.

சரி இதுக்கு முடிவே இல்லையா எண்டு கேட்டா... இருக்கு அதுதான் லக்கேஜுக்கு ஏத்தமாதிரி தேவையான சாமானுகள வாங்கிட்டு சொல்லாம கொள்ளாம நாட்டுக்கு போய் இறங்கி சர்ப்ரைஸ் எண்டா சரி... இல்லையா போற போறவனுகள் எல்லார்டயும் பார்சல் கொடுக்காம இருந்தாலும் ஓரளவு தப்பிக்கலாம். 😁😁😁

🚀 வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அனைவரும் சவால்களை சந்திப்போம். சிலர் முன்னேறுகிறார்கள், சிலர் தயங்கி நிற்கிறார்கள். 🛑தயக்க...
12/08/2025

🚀 வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அனைவரும் சவால்களை சந்திப்போம். சிலர் முன்னேறுகிறார்கள், சிலர் தயங்கி நிற்கிறார்கள். 🛑
தயக்கம் என்பது கனவுகளை அடையும் பாதையில் மிகப் பெரிய தடையாகும்.
நீங்கள் எப்போதும் “சரியான நேரம்” வரும் என்று காத்திருந்தால், அந்த நேரம் ஒருபோதும் வராது. ⏳
முன்னேறு, தவறு நடக்கலாம், ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது.

💬 "தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை..!!" 💡

இந்த வாசகம் ஒரு எளிய உண்மையைச் சொல்கிறது:
தயக்கம் என்பது உன் வெற்றிக்கான கதவை பூட்டும் சாவி போல. 🔒
நீ கனவு காணலாம், திட்டமிடலாம், ஆனால் செயலில் இறங்காவிட்டால், அந்த கனவுகள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.
நீங்கள் “முடியுமா?” என்று சந்தேகப்படுகிற நேரமே, முன்னேற வேண்டிய நேரம்.
செயலே சந்தர்ப்பங்களை உருவாக்கும் — சரியான சந்தர்ப்பம் காத்திருப்பதில்லை, அதை உருவாக்க வேண்டும்.
வாழ்க்கையின் பாதையில் முன்னேற, மனதில் தன்னம்பிக்கை கொண்டு, பயத்தை தாண்டி, ஒரு அடியை எடுத்து வை. 👣

💡 10 Life Lessons

1. தயக்கம் = நேர இழப்பு ⏳
தயங்கி நிற்பது உன் வாய்ப்புகளை உன் கண்ணால் பார்க்காமல் விட்டுவிடுவதாகும்.

2. முதல் அடியே முக்கியம் 🚶‍♂️
எந்தப் பயணமும் ஒரு அடியிலிருந்து தான் தொடங்கும்.

3. சந்தேகத்தை விட தன்னம்பிக்கை 💪
“நான் முடியும்” என்ற நம்பிக்கையே வெற்றியின் முதல் படி.

4. சவால்களை தவிர்க்க வேண்டாம் 🛡️
சவால்கள் தான் உன்னை வலுவானவனாக மாற்றும்.

5. தவறுகள் பயிற்சியின் பகுதி 📚
தவறு செய்யும் பயம் உன்னை முயற்சிக்கவிடாமல் தடுத்துவிடும்.

6. நேரம் யாருக்காகவும் காத்திருக்காது ⏰
இன்று செய்ய வேண்டியது இன்று செய், நாளைக்கு தள்ளாதே.

7. சந்தர்ப்பம் தேடும் மனநிலை 🔍
சந்தர்ப்பம் தானாக வராது, அதை தேட வேண்டும்.

8. முன்னேறும் மனப்பாங்கு 🏃‍♀️
முயற்சி செய்பவர்களுக்கு தான் வாழ்க்கை பலன் தரும்.

9. பயம் என்பது மாயை 🫧
பயத்தை நீக்கும் ஒரே வழி — அதை எதிர்கொள்.

10. வெற்றி முயற்சியில்தான் 🏆
நீ செயலில் இறங்காவிட்டால், வெற்றி கனவாகவே இருக்கும்.

---

🏆 Conclusion

வெற்றி என்பது காத்திருப்பவர்களுக்கு வராது, முன்னேறும் துணிவுடையவர்களுக்கு மட்டுமே வரும். 🌟
தயக்கம் உன்னை ஒரு இடத்தில் நிறுத்திவிடும், ஆனால் முயற்சி உன்னை முன்னேற்றும்.
ஒரு அடியை எடுத்து வையுங்கள், உங்கள் பாதை தானாக திறக்கும். 🚪

💬 "நீங்கள் எதை செய்ய தாமதிக்கிறீர்கள்? இன்று ஒரு அடியை எடுத்து வையுங்கள்!"

#வாழ்க்கைப்பாடம் #நேர்மறைசிந்தனை

பாலஸ்தீனத்தில் கட்டிட இடிபாடுகளிலிருந்து அல்-குர்ஆன் "ஒரு துண்டு பிரதி" கண்டெடுக்கப்பட்டது.🇵🇸  ‎இந்த ஒரு துண்டு பிரதி சூ...
29/07/2025

பாலஸ்தீனத்தில் கட்டிட இடிபாடுகளிலிருந்து அல்-குர்ஆன் "ஒரு துண்டு பிரதி" கண்டெடுக்கப்பட்டது.🇵🇸

இந்த ஒரு துண்டு பிரதி சூரத்துல் பகரா- (2:154) மேலும் அது கூறுகிறது;

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் இதை உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

[அல்குர்ஆன் 2:154]

அல்லாஹு அக்பர்!

ஆண்களுடனும் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்!பெரும்பாலான பெண்கள் ஆண்களின் பெறுமதியை அவர்களை இழந்த பின்னரே தெரிந்து கொள்கின்ற...
29/07/2025

ஆண்களுடனும்
மென்மையாக நடந்து கொள்ளுங்கள்!

பெரும்பாலான பெண்கள் ஆண்களின் பெறுமதியை அவர்களை இழந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர்.

ஆண்கள் மகனாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக, பாட்டனாக பல பாத்திரங்கள் இருந்த வண்ணம் நல்லதோர் குடும்பத்தை கட்டியெழுப்ப, கெளரவமான ஒரு வாழ்வை வழங்க எடுக்கும் கரிசனை எற்றும் பாரட்டத்தக்கது, நன்றிகூறத்தக்கது.

ஆண்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவம் வாலிபத்தையும் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்கின்றனர்.

இல்வாழ்வு நழ்வாழ்வாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக ஆண்கள் சமூகம் கொடுமைகள் நிறைந்த வெளியுலகில் இன்னல்களையும் இடர்களையும் எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள்தான் கொஞ்சம் ரிலெக்ஸுக்காக வெளியே சென்றால் பொறுப்பற்றவர்கள் என்ற ஏச்சுக்கு ஆளாகின்றனர்.

அவர்கள்தான் கொஞ்சம் ஓய்வுக்காக வீட்டில் இருந்தால் சோம்பேறிகள் என்று பட்டம் சூட்டப்படுகின்றனர்.

அவர்கள்தான் தாயின் பேச்சைக் கேட்டால்
பயந்து மடிந்து வாழ்பவர்கள் என்ற பெயர் வழங்கப்படுகிறனர்.

அவர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டால் மத்திரம் செய்து மயக்கப்பட்டவர்கள் என்ற பெயர் பெறுகின்றனர்

இப்படியெல்லாம் இருந்தும் கூட ஆண்கள் தங்களை விட தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படும் பிறவிகள்.

பிள்ளைகள் சிறிவர்களாக இருக்கும்போது அவர்களது காலை மிதித்தாலும் அவர்கள்
தாங்கிக்கொள்கின்றனர். பெரியவர்களாகி அவர்களது நெஞ்சை மிதிக்கும் போதும் அவர்கள் தாங்கிக்கொள்கின்றனர்

தாய் தன் பிள்ளைகளை 10 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை அவர்களை காலமெல்லாம் தலையிலும் நெஞ்சிலும் சுமக்கின்றார்.

வீட்டுத்தலைவர்கள் நல்லபடியாக இருக்கும் வரைதான் நாடே நல்லபடியாக இருக்கும்!

தந்தையாக, மகனாக, கணவனாக,
சகோதரனாக உலகை கட்டியெழுப்பும் எல்லோருக்கும் அருளாளன் அல்லாஹ்வின் அருளும் ஆசிர்வாதமும் கிடைக்கட்டும்!❤

மனிதர்கள் அறியாத நம்முடைய ஏக்கங்களை அல்லாஹ், அறிவான்.!மனதில் மறைந்திருக்கும் மறைமுகமான கவலைகளை அல்லாஹ், அறிவான்.!மௌனத்தா...
28/07/2025

மனிதர்கள் அறியாத நம்முடைய ஏக்கங்களை அல்லாஹ், அறிவான்.!

மனதில் மறைந்திருக்கும் மறைமுகமான கவலைகளை அல்லாஹ், அறிவான்.!

மௌனத்தால் மறைக்கப்பட்ட வார்த்தைகளை அல்லாஹ், அறிவான்.!

பொய்யான புன்னகைக்கு பின்னால் ஒலிந்திருக்கும் உண்மையான கண்ணீரை அல்லாஹ், அறிவான்.!

மனதில் உள்ள வலியை சொல்லவும் முடியாமல் மூடி மறைக்கவும் முடியாமல் கத்தி கதறிய தருணங்களை அல்லாஹ், அறிவான்.!

"கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்".
[அல்குர்ஆன் 9:40]

அல்லாஹ், ஒருவனே அனைத்திற்கும் போதுமானவன்.!

யா அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து,கடலைப் பிளந்து பாதுகாத்தது ப...
28/07/2025

யா அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து,
கடலைப் பிளந்து பாதுகாத்தது போல்
முஃமினான, முஸ்லிமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!

 #அவ்ரத்தை_வெளிக்காட்டிய_படி_தொழுதும்  #தொழுகை_செல்லுபடியாகாது!இன்றைய முஸ்லிம் வாலிபர்களுக்கு அவ்ரத் பற்றிய அறிவின்மை கா...
24/07/2025

#அவ்ரத்தை_வெளிக்காட்டிய_படி_தொழுதும் #தொழுகை_செல்லுபடியாகாது!

இன்றைய முஸ்லிம் வாலிபர்களுக்கு அவ்ரத் பற்றிய அறிவின்மை காரணமாக வெளியே சுற்றும் வேளையிலும் பள்ளிவாயலுக்கு செல்லும் வேளையிலும் படத்தில் காட்டப்படுள்ளவாறு அவ்ரத்தை வெளிப்படுத்தும் கிழிந்த/வெட்டப்பட Fashion என அவர்கள் கருதும் ஆடைகளை அணிந்து எவ்வித கூச்சமும், வெட்கமுமின்றி நடமாடுவதை காண முடிகிறது.

அவ்ரத்தை மறைப்பதில் ஒரு மனிதன் மற்ற மனிதனோடு அவனது ஆடை முறையிலான நாகரிகத்தை வெளிப்படுத்துவதோடு இறைவனது சட்டத்தையும் மதிக்கிறான் என்பதே அர்த்தமாகும்.

ஆணின் அவ்ரத்தை பொறுத்தவரை முழங்காலிலிருந்து (உட்பட) தொப்புள் வரை அனைத்து பகுதிகளும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டும். தொழும் போது இந்த அவ்ரத் பகுதியோடு மேலதிமாக புஜம்/தோள் பகுதி இரண்டும் மறைக்கப்பட வேண்டும்.

விடயம் இவ்வாறிருக்க அல்லாஹ்வும் திருமறையில் பின்வருமாறு பணிக்கிறான்.

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 7:31)

عَن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا تَنْظُرُ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ رواه مسلم (338) .

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸயீதினில் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் "ஒரு ஆண் மற்றொரு ஆணின் அவ்ரத்தை பார்க்கமாட்டான், ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அவ்ரத்தை பார்க்கமாட்டாள்." நூல் முஸ்லிம் (338)

ஒருவரது அவ்ரத் பகுதியின் அமைப்பு, நிறம் கட்டாயம் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும்.

இவ்வாறு இஸ்லாம் பணித்திருக்கும் போது, அல்லாஹ்வுடன் உரையாடவுள்ளோம், அவனது முன்னிலையில் நிற்கவுள்ளோம் எனும் பயம் மற்றும் உணர்வு இருப்பின் நாம் ஒரு போதும் இத்தகைய தரம் கெட்ட ஆடைகளை அணியமாட்டோம்.

ஒரு ஜனாதிபதி அல்லது ஒரு நிறுவனத் தலைவரை சந்திப்பதாக இருப்பின் நாம் இத்தகைய மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு செல்வோமா என்று எம்மை நாம் கேள்வி கேட்டால் இல்லை என்றே 100% கூறுவோம். இவ்வாறிருக்க எம்மை படைத்தவன், முழு உலகத்தையும் ஆட்சி செய்யும் அரசருக்கெல்லாம் மா பெரும் அரசன் முன்னிலையில் இவ்வாறு நிற்க எவ்வாறு தான் மனம் வருகிறதோ தெரியவில்லை!

தொழுகையின் பிரதான நிபந்தனைகளில் ஒன்றே அவ்ரத்தை மறைப்பது தான், அவ்ரத்தை மறைக்காது இவ்வாறு தொழுவது செல்லாக்காசு போல் பயனற்ற, ஏற்கப்படாத செல்லா தொழுகையாகும்.

நான் இன்று ஸுப்ஹு தொழுகையிலும் இதே நிலையில் ஒருவரையும் நான்கு மாதங்களுக்கு முன் இஷா தொழுகையிலும் ஒருவரையும் கண்ட போது, உடனே அணுகி விடயத்தை கூறி தெளிவுபடுத்திய போது அவர்கள் உணர்ந்து இயன்றளவு தமது ஆடையை மறைக்க முனைகின்றனர், ஆனாலும் மறைக்க முடியவில்லை.

நாகரிகம் கெட்ட, மேற்கத்திய கலாசார ஆடைகள், இஸ்லாத்தின் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் ஆடைகளை ஒரு முஸ்லிம் முழுமையாக தனது வாழ்வில் தவிர்த்து நடப்பதே மேல். அத்தோடு பெற்றோர், பாதுகாவலர் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைப்புகள் வளர்ந்து வரும் பிள்ளைகள் உட்பட வாலிப சமூகத்துக்கு அவ்ரத் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதும், இத்தகைய மோசமான ஆடைகளை தவிர்ப்பதன் அவசியத்தை உணர்த்துவதும் கடமையாகும்.

வாலிபர்களே! இவ்விடயத்தை விளையாட்டாக எடுக்காது, ஒரு இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தோக்கத்துடனும் இஸ்லாமிய உணர்வுடனும் எடுத்து நடக்க முயற்சிக்கும் அதே வேளை இது பற்றி தெரியாத தோழர்களுக்கு வழிகாட்டி அவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள்.

வல்ல அல்லாஹ் அனைவரையும் என்றும் நேரான வழியில் இட்டுச் செல்வானாக! ஆமீன் 🤲💖

துஆ பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்..!♥️01. இரவின் நடுப்பகுதி02. இரவின் கடைசி மூன்றாவது பகுதி03. ஒவ்வொரு தொழுகை...
22/07/2025

துஆ பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்..!♥️

01. இரவின் நடுப்பகுதி
02. இரவின் கடைசி மூன்றாவது பகுதி
03. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில்
04. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
05. அதான் சொல்லப்படும் போது
06. மழை பொழியும் போது
07. உண்மையான (நம்பிக்கையுடன்) ஸம்ஸம் தண்ணீரை குடிக்கும் போது
08. ஸுஜூதில் இருக்கும் பொழுது
09. ஒரு முஸ்லிம் தன் இன்னொரு முஸ்லிம் சகோதரனுக்கு செய்யும் துஆ
10. அரஃபாவுடைய நாளில்
11. தந்தை பிள்ளைக்கும், பிள்ளை தந்தைக்கும் செய்யும் துஆ
12. பிரயாணியின் பிரார்த்தனை
13. கஃபாவிற்குள் கேட்கும் துஆ
14. நோன்பாளியின் துஆ
15. குத்பாவில் கதீப் மிம்பரில் அமறும் வேளை.
16. ஏதேனும் ஒரு தர்மம் கொடுக்கப்பட்டவுடன்
17. குரானை ஓதி முடித்த பின் கேட்கும் துஆ
18. யாஸீன் ஸூறா ஓதிமுடியும் வேளை
19. அஸ்மாஉல் ஹுஸ்னா ஓதிமுடியும் வேளை
20. நோயாளிகளை தரிசிக்கச் சென்ற இடத்தில் கேட்கும் துஆ.

குறிப்பு :
"துஆவுக்கு முன்னரும் பின்னரும் ஸலவாத் ஓதாவிட்டால் துஆவே ஏற்கப்படமாட்டாது.ஆரம்பத்திலும் இறுதியிலும் ஸலவாத் ஒதுவதால் நடுவில் வேண்டப்படும் துஆவை மட்டும் அல்லாஹ் தட்டி விட மாட்டான்" என்பது நபி மொழி !♥️

 #நன்றி_விசுவாசம் ♥️இறுதி நபிகள் நாயகம் ﷺ எச்சரிக்கிறார்கள்இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:நாயகம...
17/07/2025

#நன்றி_விசுவாசம் ♥️

இறுதி நபிகள் நாயகம் ﷺ எச்சரிக்கிறார்கள்

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக: "எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அதை விட பயங்கரமான எதையும் நான் கண்டதில்லை. இன்னும் அதில் அதிகமாக பெண்களையே கண்டேன்." மக்கள், "ஏன் (அது) அல்லாஹ்வின் தூதரே! " என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "பெண்களின் நிராகரிப்பே காரணம்" என்றார்கள். அப்போது, "பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என்று வினவப்பட்டது. அதற்கு *"கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை, என்று சொல்லிவிடுவாள்"* என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி - 1052

ஹாஷியா - (விளக்க உரை)

1. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மெஹராஜ் பயணத்தின் போது அவர்கள் கண்ணுற்ற சம்பவத்தினை பெண்களை எச்சரிக்கையுடன் இருப்பதற்கு நவின்றுள்ள சம்பவம்தான் இது.

2. ஒரு பெண்ணானவள் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அருட்கொடைகளில் முக்கியமானதும் முதன்மையானதும் தன்னுடைய கற்ப்பிற்கு பாதுகாப்பு செய்வதாகும்.

3. தன்னுடைய கணவன் மூலம் அன்பையும், வாழ்கைக்கு உறுதுணையும், உண்ணும் ரிஜக்கில் பாதியை கணவனின் ஹக்கிலிருந்து பெறுகிறாள். இந்த பெண்ணுடைய ஹக்கின் மூலம் கணவனுக்கும் உண்ணும் ரிஜக்கில் பாதியை பெறுகின்றார்.

4. தாய் என்ற அந்தஸ்து

தன்னுடைய கணவனின் மூலம் தாய் என்ற அந்தஸ்தை பெறுகின்றாள். உலகத்தில் தன் கணவனை தவிர வேறு எவர் ஒருவராலும் கொடுக்க முடியாததாகும். தாயின் மகத்துவத்தினை விவரிக்க வார்தைகள் இல்லை. அப்பேற்பட்ட ஒரு கண்ணியமான அந்தஸ்தை தன்னுடைய கணவனின் மூலம் பெருகின்றாள்.

5. கணவனின் உற்றார் மற்றும் உறவினர்களும் இந்த பெண்ணுக்கும் உற்றார் மற்றும் உறவினர்கள் ஆகிறார்கள்.

செல்வம், கல்வி, குழந்தைகள், இருப்பிடம், கெளரவம், சமுதாய அந்தஸ்து இவை யாவும் தன்னுடைய கணவனின் மூலம் அடைகின்றாள்.

ஒரு சிறிய விஷயதினில் மனம் வேறுப்பட்டு இல்லை ஏமாற்றம் அடையும் போது.... தான் தன்னுடைய கணவனின் மூலம் பெற்ற அனைத்தையும் மறந்து...உன்னோடு வாழ்ந்து என்ன நான் கண்டேன் என்று கூறும் போது தான்....தன்னுடைய நன்றி விசுவாசத்தினை இழக்கின்றாள்.

உண்மையில் கணவனுக்கு செய்யும் நன்றி தன்னுடைய கணவனையும் தன்னையும் படைத்த இறைவனுக்கு செய்யும் நன்றி விசுவாசமாகும்.

*அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய பெண்களை நன்றி செலுத்துபவர்களின் பட்டியலில் சேர்த்து வைப்பானாக.....*

ஆமீன் யாரப்பல் ஆலமீன்....🤲

❤சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும் அல்லாஹ் கேட்கிறான்.❤காணப்படாத ஒவ்வொரு காயத்தையும் அல்லாஹ் பார்க்கிறான்.❤தாங்கமுடியாதஒவ்வ...
16/07/2025

❤சொல்லாத ஒவ்வொரு
வார்த்தையையும் அல்லாஹ்
கேட்கிறான்.

❤காணப்படாத ஒவ்வொரு
காயத்தையும் அல்லாஹ்
பார்க்கிறான்.

❤தாங்கமுடியாத
ஒவ்வொரு வலியையும் அல்லாஹ் குணப்படுத்துகிறான்.

🔘கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.

🔘மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.

🔘செங்கடல் வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

🔘இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிராவிற்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.

🔘மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ்(அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது.

🔘யூசுப்(அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது.

🔘எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான்.

🔘சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

🔘 இஸ்லாத்தில் அவநம்பிக்கைக்கு இடமில்லை. நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது. ஆம் துன்பத்திற்கு பிறகு தான் இன்பம் இருக்கிறது.

🔘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?
✍அல்குர்ஆன் 29:02

🔘 உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (ப.பி)
✍அல்குர்ஆன் 2:214
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்

🤲 #யா_அல்லாஹ்!
#வறுமை_எனும்_கொடிய #சோதனையிலிருந்து
#எங்கள்_அனைவரையும் #பாதுகாத்தருள்வாயாக

ஆமீன் ஆமீன் ஆமீன்

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகோண்ட ஒரு பெண்மணியிடம்: அவள் திருமணய் செய்து நாற்பது வருடங்கள...
14/07/2025

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகோண்ட ஒரு பெண்மணியிடம்:

அவள் திருமணய் செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்னவென்று? கேட்கப்பட்டது.

கைதேர்ந்த சமையலா...
கண்கவரும் அழகா...
பெற்றுக்கொடுத்த
பிள்ளைச் செல்வமா
அல்லது வேறேதும்
காரணங்கள் உண்டா?
என்பதாக வினவப்பட்டது.

அதற்கு அந்தப் பெண்: அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வின் இரகசியம் மனைவியின் கரங்களில் தான் தங்கியுள்ளது' என்றாள்.

பெண் நினைத்தால் தன் இல்வாழ்வை சுவனச் சோலையாகவும் மாற்றலாம், அல்லது நரகப் பாதாளமாக மாற்றலாம்.

பணம் இருந்தால் மகிழ்ச்சியும் கூடி வரும் என்று சொல்லாதீர்கள்...! பணத்தில் மிதக்கும் பல குடும்பப் பெண்கள், பார்க்கப் பரிதாபமான வாழ்க்கை வாழ்கின்றனர். தங்கள் கணவன்மார்களால் மதிக்கப்படாது ஒதுக்கப்படுகின்றனர்.

பிள்ளைகள் பெற்றுக்கொடுத்தால் மகிழ்ச்சி தொடரும் என்றும் சொல்லாதீர்கள். ஒரு பெண் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்திருப்பாள், ஆனாலும் தன் கணவனால் காதலிக்கப்படாமல் இருப்பாள். அல்லது விவாகரத்தும் கூட செய்யப்பட்டிருப்பாள்

எத்தனை பல பெண்கள் சமையலில் வித்தகர்களாக உள்ளனர். இருந்தும் கணவனின் நடத்தைகள் சரியில்லை என்பதாக முறையிடுகின்றனர்.

இடையில் குறுக்கிட்ட ஒளிபரப்பாளர் ஆச்சரியமாக கேட்கிறார்:

அப்படியென்றால் மகிழ்ச்சிகரமான இல்வாழ்வின் இரகசியம் தான் என்ன?

அவள் தொடர்ந்தும் சொல்கிறாள்;
என் கணவன் கோவப்படும் போதெல்லாம் நான் அமைதியை கடைப்பிடிப்பேன். முழு மரியாதையோடு மொளனியாகிவிடுவேன்.
தலை குனிந்து அடக்கமாக இருப்பேன்.

ஆனால் ஒன்று, சில பெண்கள் கிண்டலான பார்வையுடன் மெளனிப்பார்கள், பாருங்கள். அது ஆபத்தானது. ஆண்கள் புத்திசாலிகள். அவர்கள் அதனை கண்டுபிடித்து விடுவார்கள்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவன் இருக்கும் இடத்திலிருந்து விலகி ஓரமாகப் போகவேண்டியது தானே...?

அதற்கு அவள் சொல்கிறாள்: கூடாது, அது பெரும் தவறு! அவன் பேச்சைக் கேட்காமல் ஓடப் போகிறாள்' என்று நினைப்பான். அவன் பேசுவதை எல்லாம் அமைதியாக செவிமடுக்க வேண்டும். பின்னர் அவன் பேசி முடிந்த பிறகு அவனை அவன் பாட்டில் சில நேரம் விட வேண்டும். அவன் இப்போது களைத்துப் போயிருப்பான். அவன் களைப்பாற வேண்டும். நாம் நம் வீட்டுப் பணிகளை தொடர வேண்டும்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்:
அப்படியென்றால் இப்படியே பேசாமல் பல நாட்கள், பல வாரங்கள் இருப்பதா?

அவள் சொல்கிறாள்; அதுவும் பெரும் தப்பு.
அவன் இன்னும் பிடிவாதக்காரனாக மாறிவிடுவான். சில நேரம் கழிந்த பிறகு சூடாக ஒரு கிளாஸ் டீ அல்லது கூலாக ஒரு கிளாஸ் ஜுஸ் தயார் செய்து அவனுக்கு நான் கொடுத்துவிட்டு அவன் பக்கம் அமர்வேன். அவன் அந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

அவனுடன் வழமை போன்றே பேசுவேன். அவன் என்னிடம்: 'நீ என்னுடன் கோபமா? என்று கேட்பான். நான்: 'இல்லை' என்பேன்.
என்னிடம் மன்னிப்புக் கேட்க ஆரம்பிப்பான்.
அன்பாக பேசத் தொடங்குவான்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவனை நீ நம்புவாயா?

அவள் சொல்கிறாள்: ஏன் இல்லாமல். அவன் கோபத்தில் பேசியதை நான் நம்ப வேண்டும், அவன் அமைதியாக பேசும் போது நான் நம்பக் கூடாதா?

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: எங்கே உங்கள் தன்மானம்?

அவள் சொல்கிறாள்: கணவன் மனைவிக்கு மத்தியில் என்ன தன்மானம் உள்ளது ...! என் ஆடைகளை எல்லாம் கழட்டி அவன் முன் நின்றேன் என்றால் என் தன்மானம் எல்லாம் அவனை திருப்திப்படுத்துவதிலும் உறவில் விசுவாசமாக இருப்பதிலும் தான் தங்கியுள்ளது.♥️

Alhamdulillah! 🤲✨ With the grace of Allah ﷻ, I have successfully completed ICT Level 5. This achievement wouldn’t have b...
09/02/2025

Alhamdulillah! 🤲✨ With the grace of Allah ﷻ, I have successfully completed ICT Level 5. This achievement wouldn’t have been possible without His guidance, the endless support of my beloved parents, and the wisdom shared by my amazing teachers. May Allah bless them all abundantly.

Grateful for every lesson, every prayer, and every encouragement that brought me here. Onward to greater heights, In Sha Allah! 🙌💻📚

Address

Mackan Markar Mawatha
Colombo
00300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shìfan Abdułłah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share