Sky Tamil News

Sky Tamil News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sky Tamil News, Media/News Company, Colombo.

📲 செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/LXkDrVooIub19RdWlt7Gpg

விளம்பர தொடர்புகளுக்கு :
☎️ 071 5150 228 (Call)
🪀 075 7000 791 (WhatsApp)
🪀 077 6402 750 (WhatsApp)

ZABCO Travels & Tours - கல்முனை கிளையில் வேலைவாய்ப்பு!....எமது ZABCO International Travels & Tours நிறுவனத்தின் புதிய கல...
01/09/2026

ZABCO Travels & Tours - கல்முனை கிளையில் வேலைவாய்ப்பு!
....

எமது ZABCO International Travels & Tours நிறுவனத்தின் புதிய கல்முனைக் கிளையில் இணைந்து பணியாற்ற ஆர்வமும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

கீழ்க்கண்ட பதவிகளுக்கு உடனே விண்ணப்பியுங்கள்:

Office Receptionist
Office Admin
IT Supporter

📲 உங்கள் CV-ஐ WhatsApp மூலம் அனுப்பவும்:
+94 77 329 1993

📍 552, Main Street, Kalmunai - 14.

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீத...
01/09/2026

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்தோடு ரூ. 2 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் “ஊழல்” குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ரூ, 330,000 தொகையை விடுவித்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 2 குற்றச்சாட்டின் அடிப்படையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை குற்றவாளியாகக் கண்டறிந்து தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு.....ஊழல் குற்றச்சாட...
01/09/2026

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
.....

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதேபோன்று, இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை வெவ்வேறாக அன்றி, ஒரே தடவையில் ஏககாலத்தில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக எம்.எஸ்.எம். நிஹால் பதவியேற்புகே எ ஹமிட்தேசிய காங்கிரஸ் கட்சியினால் உள்ளூராட்ச...
01/09/2026

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக எம்.எஸ்.எம். நிஹால் பதவியேற்பு

கே எ ஹமிட்

தேசிய காங்கிரஸ் கட்சியினால் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர், பதவிநிலைகளை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கும் எண்ணக்கருவுக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியினை ஒலுவில் மண் அலங்கரிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எம்.எஸ்.எம்.நிஹால் கட்சித் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தவிசாளரின் உத்தியோகபூர்வ பதவியேற்கும் நிகழ்வு 2026.08.31ஆந் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்றது.

தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா முன்னிலையில் தனது கடமைகளை பிரதித் தவிசாளர் பொறுப்பேற்றுருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான எஸ்.அஹமட் பாயிஸ், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம். நிஹால் சிறந்த சமூக சிந்தனையுள்ள ஒரு இளம் தொழிலதிபர் ஆவார். தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தமைக்கான ஒரு அங்கீகாரமாகவே இதனை கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.கா.கட்சி ஆட்சியமைப்பதற்கு தேசிய காங்கிரஸ் கட்சி தனது ஆதரவினை வழங்கியிருந்ததுடன், அ.இ.ம.கா கட்சியினர் நடுநிலமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

“அட்லஸ் ஏஞ்சல் 2026” – சிறப்பு கூட்டு கலாச்சார இசைநிகழ்வு. இலங்கை விமானப்படை கலைப்பிரிவும்  அமெரிக்க பசிபிக் விமானப்படை ...
01/09/2026

“அட்லஸ் ஏஞ்சல் 2026” – சிறப்பு கூட்டு கலாச்சார இசைநிகழ்வு.

இலங்கை விமானப்படை கலைப்பிரிவும் அமெரிக்க பசிபிக் விமானப்படை இசைக்குழுவும் இணைந்து வழங்கும் “Fusion Performance – Atlas Angel 2026” சிறப்பு கூட்டு கலாச்சார இசைநிகழ்வு, 2026 செப்டம்பர் 4, அன்று கொழும்பு சுதந்திர சதுக்க Arcade இல் மாலை 5.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதில் இருநாட்டு விமானப்படை கலைப்பிரிவின் கலைஞர்களினால் இசை, கலாச்சார நடனம் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வருகிறது..!-------...
01/09/2026

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: ஹிஸ்புல்லாஹ் எம்.பியின்
தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வருகிறது..!

-----------------------------------------

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தனிநபர் பிரேரணை எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எமது மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்தியத்தில் மருத்துவ சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த தனிநபர் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சி!ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி ...
01/09/2026

பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சி!

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சி கொழும்பு டவர் மண்டபத்தில் நேற்று முத்தினம் (30) நடைபெற்றது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இப்போட்டியில், தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களில் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை அபிராமி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிய நடிகை அபிராமி, அவர்களின் எதிர்கால முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்வு ஏற்பாடுகளில் இணைந்து செயல்பட்டனர்.

பல்வேறு துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களை ஊக்குவிக்கவும் சிறந்த வாய்ப்பாக அமைந்த இந்நிகழ்வு, பங்கேற்பாளர்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் வகையில் அமைந்திருந்தது.

63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம்=================வெளிநாடுகளில் இயங்கும் 63 இலங்கைத் ...
01/09/2026

63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம்

=================

வெளிநாடுகளில் இயங்கும் 63 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக சேவைகளை டிஜிட்டல் முறைக்கு நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பொதுமக்கள், தூதரக சேவைகள், கன்சுலர் தகவல்கள் மற்றும் படிவங்களை .gov.lk உத்தியோகபூர்வ இணைய முகவரிகள் ஊடாக மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் அணுக முடியும்.

ஒரே தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்தின் கீழ் அனைத்துத் தூதரகங்களையும் கொண்டுவந்து, பொதுமக்களுக்கான அணுகலை எளிதாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

website link :
https://skytamilnews.com/

ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள்=================ஜப்பான் - இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பின...
01/09/2026

ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள்

=================

ஜப்பான் - இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியிலான 3 புதிய அம்பியூலன்ஸ்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன.

வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாகாணத்தில் உள்ள 150 சுகாதார நிறுவனங்களின் அவசர சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த அம்பியூலன்ஸ்கள், மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் குணவர்தன, ஜப்பானிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கல்வி முறையில் அவசர சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி செயலகத்துக்கு எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் கோரிக்கை============இலங்கையின் த...
01/09/2026

கல்வி முறையில் அவசர சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி செயலகத்துக்கு எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் கோரிக்கை

============

இலங்கையின் தேசிய உற்பத்தித்திறனையும், இளைஞர்களின் எதிர்கால வாய்ப்புகளையும் நேரடியாகப் பாதிக்கும் கல்விக் கட்டமைப்பில் காணப்படும் முக்கியமான குறைபாடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற ஆசிரியரும், Centre for Educational Excellence and Leadership Studies நிறுவனத்தின் தலைவரும் இன்பிரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் கல்வி முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் பல முக்கியமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒரு மாணவர் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து, இளமானிப் பட்டப்படிப்பை (Bachelor’s Degree) நிறைவு செய்யும் காலப்பகுதி ஏனைய பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய கல்வி நடைமுறையின் கீழ், இலங்கையில் ஒரு மாணவர் தனது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்யும் போது பொதுவாக 25 அல்லது 26 வயதை அடையும் நிலை காணப்படுகிறது. இது கல்வியின் தரம் அல்லது பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால் மாத்திரம் ஏற்படுவதல்ல. மாறாக, பரீட்சைகள், பெறுபேறுகள் வெளியீடு, பல்கலைக்கழக அனுமதி மற்றும் சேர்க்கை போன்ற நிர்வாகச் செயற்பாடுகளில் ஏற்படும் தேவையற்ற காலதாமதங்களும் இதற்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கும் (O/L), உயர்தரப் பரீட்சைக்கும் (A/L) இடையிலான நீண்ட கால இடைவெளி, பரீட்சைகள் நடத்தப்பட்ட பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் மாதக்கணக்கான தாமதம், பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய காலப்பகுதி மற்றும் பல்கலைக்கழகங்களில் முறையான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை அனைத்தும் இணைந்து, ஒரு இளைஞரின் கல்விப் பயணத்தில் பல ஆண்டுகளை வீணடிக்கின்றன.
இந்த நிலை தனிப்பட்ட மாணவரின் எதிர்காலத்தையே பாதிப்பதல்ல; ஒட்டுமொத்தமாக நாட்டின் மனிதவளப் பயன்பாட்டையும் தேசிய உற்பத்தித்திறனையும் பாதிக்கும் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையாகும்.

ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற பல நாடுகளில் மாணவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர், குறைந்த காலத்திற்குள் உயர்கல்வியைத் தொடங்கி, பொதுவாக 21 அல்லது 22 வயதிற்குள் தங்களது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதன் மூலம் இளைஞர்கள் குறைந்த வயதிலேயே தொழில்சந்தைக்குள் நுழையவும், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் பங்களிக்கவும், தொழில் முனைவில் ஈடுபடவும் அல்லது முதுகலை மற்றும் பிற உயர் கல்விகளைத் தொடரவும் முடிகிறது. மாறாக, இலங்கையில் கல்வி நிர்வாகத் தாமதங்கள் காரணமாக இளைஞர்களின் முக்கியமான உற்பத்தி வயதின் ஒரு பகுதி பயனற்ற காத்திருப்பில் கழிகிறது.

ஒரு மாணவர் தனது பட்டப்படிப்பை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் முன்னதாக நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழைந்திருந்தால், அந்தக் காலப்பகுதியில் அவர் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
எனவே, கல்வி நிர்வாகத்தில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களால், ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பல ஆண்டுகால மனிதவள உற்பத்தித்திறன் இழக்கப்படுகிறது.

இது வேலைவாய்ப்பு, வருமானம், வரி வருவாய், தொழில் முனைவு, புத்தாக்கம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

கல்வி என்பது ஒரு தனிநபரின் முன்னேற்றத்திற்கான கருவி மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கியமான முதலீடாகும். ஆகவே, கல்வி முறையில் ஏற்படும் ஒவ்வொரு தேவையற்ற தாமதமும், உண்மையில் நாட்டின் மனித மூலதனத்தின் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பாகவே கருதப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையின் மற்றுமொரு முக்கியமான அம்சம் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்துடன் தொடர்புடையதாகும்.
வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுப் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் காலத்தைத் தவிர்ப்பதற்காக தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்து, குறைந்த வயதிலேயே பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழைகின்றனர்.

ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பல்கலைக்கழக வாய்ப்புகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. இதனால் அவர்களது கல்விப் பயணம் நீடிப்பதுடன், பெற்றோரை நீண்டகாலம் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்க வேண்டிய நிலையும் உருவாகிறது. இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு, இளைஞர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சம், விரக்தி மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
எனவே, கல்வி முறையின் இந்தக் கட்டமைப்பு சார்ந்த தாமதங்களை நீக்குவது என்பது வெறுமனே கல்வி நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக அல்லாமல், சமூக நீதியையும் சமமான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இலங்கையின் மனிதவள ஆற்றலை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், இளைஞர்கள் தங்களது திறமைகளை மிகக் குறைந்த வயதிலேயே நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கும் பின்வரும் மூன்று முக்கிய பரிந்துரைகளை அவசரமாகக் கருத்தில் கொள்ளுமாறு எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

1. மாணவர்கள் 17 அல்லது 18 வயதிற்குள் தங்களது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யும் வகையில், க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் முறையாகவும் தடையற்ற வகையிலும் திட்டமிடப்பட வேண்டும்.
ஒரு பரீட்சை முடிவடைந்த பின்னர் அடுத்த கல்விக் கட்டத்தை ஆரம்பிப்பதற்காக மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை முற்றாகக் குறைக்கப்பட வேண்டும்.

2. நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன், சாத்தியமான பகுதிகளில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகளை நவீனமயப்படுத்தி, பரீட்சை பெறுபேறுகளை சில வாரங்களுக்குள் வெளியிடும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் தங்களது உயர்கல்வி மற்றும் தொழில் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகளை தேவையற்ற தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.

3. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் காலப்பகுதியை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், பல்கலைக்கழகங்களின் ஆரம்பகட்டப் பாடநெறிகள், அடிப்படைப் பயிற்சிகள் அல்லது அறிமுகக் கல்விச் செயற்பாடுகளை முன்கூட்டியே ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும்.

இதன் மூலம், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முறையான கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே தங்களது அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மொத்த காலத்தையும் குறைக்க முடியும்.

இலங்கையின் இளைஞர்களிடம் திறமைக்குக் குறைவில்லை. அவர்களிடம் அறிவும், ஆற்றலும், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் காணப்படுகின்றன. ஆனால், அந்தத் திறமைகளை சரியான நேரத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ற கல்விக் கட்டமைப்பை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

ஒரு மாணவர் 21 வயதிலேயே தனது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்சந்தைக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவது, அந்த இளைஞரின் தனிப்பட்ட எதிர்காலத்துக்கு மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

இளைஞர்கள் குறைந்த வயதிலேயே தொழில்துறையில் இணைந்தால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும்; குடும்பங்களின் பொருளாதாரச் சுமை குறையும்; நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும்; தொழில் முனைவோர் உருவாகும்; மேலும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கால அவகாசமும் விரிவடையும்.

எனவே, “21 வயதில் பட்டதாரி” என்ற இலக்கை இலங்கையின் கல்விக் கொள்கையில் ஒரு தேசிய இலக்காகக் கருத்திற்கொண்டு, அதனை அடைவதற்கான நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய காலம் இதுவாகும்.

இலங்கையின் எதிர்காலம் அதன் இயற்கை வளங்களில் மாத்திரமல்ல; அதன் இளைஞர்களின் அறிவு, திறமை மற்றும் உற்பத்தித்திறனிலேயே தங்கியுள்ளது.

அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் தேவையற்ற பல ஆண்டுகள் காத்திருப்பாக மாறாமல், அவர்களின் கல்விப் பயணத்தை விரைவுபடுத்தி, திறமைகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே இலங்கையை அறிவுசார் மற்றும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரமாக மாற்ற முடியும்.

இளைஞர்களை விரைவாகக் கல்வியூட்டி, விரைவாகத் தொழில்சந்தைக்குள் கொண்டுவருவது ஒரு கல்விச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடாகும் என்பதே இக்கோரிக்கையின் அடிப்படை நோக்கமாகும்.

-ஓய்வுபெற்ற ஆசிரியரும், Centre for Educational Excellence and Leadership Studies நிறுவனத்தின் தலைவரும் இன்பிரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எம்.ஏ.சி.எம். ஜவாஹிர்-

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sky Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Tamil News:

Shortcuts

Share