Sky Tamil News

Sky Tamil News விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/HY1OhRlrW9M9ohqHFSN6Mm

இன்றைய வானிலை முன்னறிவிப்புhttps://skytamilnews.com/?p=5034நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்...
31/10/2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

https://skytamilnews.com/?p=5034

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்
***************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!https://skytamilnews.com/?p=5025விஷ போதைப்...
30/10/2025

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

https://skytamilnews.com/?p=5025

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘1818’ என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வாகன சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுhttps://skytamilnews.com/?p=5022முச்சக்கர...
30/10/2025

வாடகை வாகன சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

https://skytamilnews.com/?p=5022

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முதற்கட்டமாக இந்த போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

"முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

பொதுவாக, இந்தப் பிரிவில் ஈடுபட்டுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்களின் பாதுகாப்புக்காக, ஒரு அரச சார்பற்ற போக்குவரத்துத் தொழிலாளர் சபையை ஒரு நிறுவனமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன."

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிருண்டா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:

"முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் ஆகிய பிரிவுகளில் தரவுகள் சேகரிக்கப்படும். இதற்காக, அரச நிறுவனங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் ஸ்டிக்கர் ஒன்றை நாங்கள் காட்சிப்படுத்துவோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். தரவு சேகரிப்பு நவம்பர் 1 ஆம் திகதி முதல் தொடங்குகிறது."

30/10/2025

கத்தாரில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவம்பர் 3 முதல் 27 வரை (2025) நடைபெறவுள்ளது.

Qatar ready to stage ‘exceptional’ U-17 World Cup

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை!https://skytamilnews.com/?p=5019இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கா...
30/10/2025

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை!

https://skytamilnews.com/?p=5019

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழி தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று வரையில் 37,715 பரிவர்த்தனைகள் ஊடாக ரூபா 568,666,330 பெறுமதியான அரசாங்க நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 184 அரச நிறுவனங்கள் இணைந்துள்ளன.

GovPay ஆனது, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் நாட்டின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay ஆல் இயக்கப்படும் ஒரு திட்டமாகும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்முயற்சியின் கீழ், இந்தப் புதிய தளம், அரசாங்கத்தின் நிதிப் பரிவர்த்தனைகளில் மேம்பட்ட கட்டுப்பாடு, துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் வருவாய் சேகரிப்பு செயல்முறைகளை நவீனப்படுத்துகிறது.

இதன் மூலம், அரச நிறுவனங்களுடனான நிதிப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவதன் மூலம் மின்-ஆளுகையை மேம்படுத்துவதற்கான இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளில் இந்தப் திட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

GovPay, ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டம் பல கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

2வது அணு ஆயுத சோதனை வெற்றி – ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!https://skytamilnews.com/?p=5016அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்ல...
30/10/2025

2வது அணு ஆயுத சோதனை வெற்றி – ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!

https://skytamilnews.com/?p=5016

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியதாவது:

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் ‘போஸிடான் சூப்பர் டார்பிடோ’ வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது.

பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்து இருந்தார்.

இந்த சோதனை தேவையில்லாத ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 10 எரிவாயு ரவைகள் மீட்பு - விசாரணை தீரவிம்https://skytamilnews.com/?p=5013போராட்டங்களின்போது கொண்டு வரப்பட்டத...
30/10/2025

கொழும்பில் 10 எரிவாயு ரவைகள் மீட்பு - விசாரணை தீரவிம்

https://skytamilnews.com/?p=5013

போராட்டங்களின்போது கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயு தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் பாதையிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் (Common Coffee House) கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த எரிவாயு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிவாயு தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கட்டிடத்திலேயே விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தலைமை பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல்: போலீசார் உள்பட 64 பேர் பலிhttps://skytamilnews.com/?p=5010போ...
30/10/2025

பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல்: போலீசார் உள்பட 64 பேர் பலி

https://skytamilnews.com/?p=5010

போதைபொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய நடத்தப்பட்ட சோதனையின் போது இடம்பெற்ற மோதலில் நான்கு பொலிஸார் உட்பட 64 பேர் மரணமடைந்துள்ளதோடு 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500இற்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.பதிலுக்கு பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தின் விஷேட வகுப்புகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் ஒரு வருடமாக இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசுக்கு கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர ஆளுனர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

30/10/2025

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(30) அங்குரார்ப்பணம்!

https://www.facebook.com/share/v/19mXGW8psp/

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கத்தாரில் உற்சாக வரவேற்புhttps://skytamilnews.com/?p=5000கேரள மாநிலத்தின் முதலமைச்சர...
30/10/2025

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கத்தாரில் உற்சாக வரவேற்பு

https://skytamilnews.com/?p=5000

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் இன்று (30) கத்தாரை வந்தடைந்தார்.

கத்தார் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் அவரை இந்தியத் தூதுவர் திரு.விப்புல் அன்புடன் வரவேற்றார்.

கத்தாரில் நடைபெறும் ‘மலையாளோற்சவம் 2025’ நிகழ்வை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

30/10/2025

“பாரம்பரியம் பேசும் சுவைகள் — காத்தான்குடியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி ஆரம்பம்!”

#பாரம்பரியஉணவுகள்

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கௌரவிப்புநூருல் ஹுதா உமர்கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் 125 ம் ஆண்டை வெகு சி...
30/10/2025

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர்

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் 125 ம் ஆண்டை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு க்கு ஒரு வருட காலமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் மீள் பரிசீலனை மூலம் சித்தியடைந்த வினோதராஜ் அரனன் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 78 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ் மாணவனுடன் 79 மாணவர்களாக அதிகரித்தமை குறிப்பிட்டத்தக்கது.

அத்துடன் உலக தபால் தினம் 2025 தேசிய மட்டத்தில் எஸ்.பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் தேசிய தீபாவளி தபாலுறை சித்திர போட்டி - 2025 இல் ஜுவராசா லபிக்ஷன் தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். அதே போன்று தேசிய மட்ட தமிழ் தின போட்டியில் வில்லுப்பாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்ற ஜெயானந்தன் தட்சகன், கிருபாகரன் யுதீஸ், ஜீவரெட்ணம் கவிஷ்யன், றொஷாந்த் டானியேல் மிறோன், வனராஜா ஹரிஷான், சசிகரன் தட்ஷிகரன், ரவிச்சந்திரன் சரன் என்போரும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போட்டி நிகழ்வுகளுக்கு மாணவர்களை பயிற்சியளித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு ஊக்குவிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sky Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Tamil News:

Share