Sky Tamil News

  • Home
  • Sky Tamil News

Sky Tamil News விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/HY1OhRlrW9M9ohqHFSN6Mm

10/08/2025

ஹெரிடேஜ் டெர்பி 2025: கொழும்பில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வெற்றி பெற்றுள்ளது!

ஹெரிடேஜ் டெர்பி 2025: கொழும்பில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வெற்றி பெற்றுள்ளது https://www.skytamilnews.com/archives/66526...
10/08/2025

ஹெரிடேஜ் டெர்பி 2025: கொழும்பில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வெற்றி பெற்றுள்ளது

https://www.skytamilnews.com/archives/66526

கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (10) வெகுவிமர்சையாக நடைபெற்ற ஹெரிடேஜ் டெர்பி கால்பந்தாட்டப் போட்டியில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி மற்றும் சாஹிரா கல்லூரி அணிகள் மோதின.

நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் (டாக்டர்) ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலீத் ஹமூத் நாசர் அல் கஹ்தானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. விறுவிறுப்பான ஆட்டத்தில், ஹமீத் அல் ஹுசைனி அணி 3–1 என்ற கணக்கில் சாஹிரா கல்லூரியை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது.

10/08/2025

10 August 2025 - 24 மணிநேரத்தில் இலங்கையில் பதிவாகிய முக்கிய செய்திகளின் தொகுப்பு..

இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்கhttps://www.skytamilnews.com/archives/66512இளைஞர் ...
10/08/2025

இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க

https://www.skytamilnews.com/archives/66512

இளைஞர் சங்கங்களை அரசியலுக்கு பயன்படுத்தும் நிலைமைகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேர்ந்துள்ள சவால்கள் குறித்து இன்று விசேட உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன். இவை சமூக அபிவிருத்திக்காக இருக்க வேண்டும், அரசியலுக்காக அல்ல,' என அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகளை சந்தித்து, இளைஞர்களுக்கான சிக்கல்களுக்கு இருதரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் எனவும், அமைச்சருக்கு யோசனையொன்றையும் முன்வைத்தார்.

இளைஞர்களின் திறன் வளர்ச்சி மற்றும் சமூக சேவையை முன்னேற்றும் நோக்கில் இளைஞர் சங்கங்கள் இயங்க வேண்டும் என்பது அவரது வலியுறுத்தலாகும்.

இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர்.

இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன.

இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர்.

சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும்.

இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள். என குறிப்பிட்டுள்ளார்

இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும்.

பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும்.

இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.' என குறிப்பிட்டுள்ளார்

2025 சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்புhttps://www.skytamilnews.com/archives/66509இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ...
10/08/2025

2025 சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

https://www.skytamilnews.com/archives/66509

இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் இன்று (10) நடைபெற்றதுடன், அதில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர்.


அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்தாண்டு (2025) நவம்பர் மாதம்10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கையர்https://www.skytamilnews.com/archives/66506கல்ஃப் நியூஸ் வெள...
10/08/2025

தென் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கையர்

https://www.skytamilnews.com/archives/66506

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான தென் ஆசியாவின் மிகச் செல்வந்தர்கள் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் இஷாரா நாணயக்கார USD 1.6 பில்லியன் சொத்து மதிப்புடன் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் முகேஷ் அம்பானி USD 118 பில்லியன் சொத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹித் கான், வங்காளதேசத்தின் மோஸ்ஸா பின் ஷம்ஷர், நேபாளத்தின் பினோத் சௌதரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

10/08/2025

சர்வதேச தரத்திலான அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி

பராமரிப்பு பணிக்காக Lusail Boulevard பாதை வரை மூடப்படும்https://www.skytamilnews.com/archives/66502பராமரிப்பு பணிக்காக L...
10/08/2025

பராமரிப்பு பணிக்காக Lusail Boulevard பாதை வரை மூடப்படும்

https://www.skytamilnews.com/archives/66502

பராமரிப்பு பணிக்காக Lusail Boulevard பாதை ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 18, 2025 வரை மூடப்படும்.

😍 DIPLOMA COURSES - ICAS COLLEGE* 🧑🏻‍🎓🏛️👨🏻‍🎓-SLQF Level 3-DIPLOMA IN 🥰✅ `English Language`✅ `Human Resource Management`✅...
10/08/2025

😍 DIPLOMA COURSES - ICAS COLLEGE* 🧑🏻‍🎓🏛️👨🏻‍🎓
-SLQF Level 3-

DIPLOMA IN 🥰
✅ `English Language`
✅ `Human Resource Management`
✅ `Psychology & Counseling`
✅ `Teacher Training`
✅ `Business Management`
✅ `Law`

➡️Medium: Tamil ➡️01 வருடம்
➡️ 100% Online / Distance
➡️Study From Anywhere, Anytime!
➡️தவனை முறையில் கட்டணங்களை செலுத்த முடியும்.
➡️ Convocation நடாத்தப்படும்.

✅Total Course fee: Rs.44,000 👌🏻
(Register fee: Rs.8,000)
{06 installment 🫰 × Rs.6,000 = Rs.36,000}

🔥 பதிவுக் கட்டணத்தை செலுத்தி இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

🔏 பதிவுகளுக்கு:
`உஙகளது முழுப் பெயர், முகவரி, NIC அடையாள அட்டை இலக்கம், தொடர விரும்பும் பாடநெறி` ஆகியவற்றை எமது Whatsapp இலக்கத்திற்கு அனுப்பவும்.
+94 788 099 599
+94 77 697 3337

*Closing Date: 29.August.2025*
`Community Link` 👇🏻
https://chat.whatsapp.com/IZa7V04VY8s8tcCrRKQfVo?mode=ac_t

ICAS COLLEGE
www.icasedu.lk | [email protected]

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் ரூ.127 கோடியை இழந்த பாகிஸ்தான்!https://www.skytamilnews.com/arch...
10/08/2025

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் ரூ.127 கோடியை இழந்த பாகிஸ்தான்!

https://www.skytamilnews.com/archives/66492

இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.

இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.

ரஜினியின் ‘கூலி’ – டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல்!https://www.skytamilnews.com/archives/66496நடிகர் ரஜினிகாந...
10/08/2025

ரஜினியின் ‘கூலி’ – டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல்!

https://www.skytamilnews.com/archives/66496

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

10/08/2025

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sky Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Tamil News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share