Sky Tamil News

Sky Tamil News விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/HY1OhRlrW9M9ohqHFSN6Mm
(1)

06/09/2025

ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைப்பு..

காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(06) அல்-பஜ்ர் பள்ளிவாயலில் நடைபெற்றது.






06/09/2025

ஹாசிம் உமர் பவுண்டேசனினால் 14 ஆம் கட்ட மடிக்கணினி அன்பளிப்பும் அஹதிய்யா பாடசாலைக்கு நிதியுதவி வழங்கி வைப்பும்

06/09/2025

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் இலவச வைத்திய முகாம் .

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய விசேட தகவல்
06/09/2025

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய விசேட தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்ப...

களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள் வழங்க நடவடிக்கை
06/09/2025

களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள் வழங்க நடவடிக்கை

களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்று....

செம்மணி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு – 239 எலும்புக்கூடுகள் மீட்பு
06/09/2025

செம்மணி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு – 239 எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்!https://www.skytamilnews.com/archives...
06/09/2025

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்!

https://www.skytamilnews.com/archives/68447

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.



இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.



இந்தப் பதவி உயர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.



மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.



பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.



ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.



இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.

அரசாங்க நெல் கொள்முதல் திட்டத்தில் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் மேல் நெல் கொள்முதல்.https://www.skytamilnews.com/archive...
06/09/2025

அரசாங்க நெல் கொள்முதல் திட்டத்தில் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் மேல் நெல் கொள்முதல்.

https://www.skytamilnews.com/archives/68444

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அறுவடையில் 85 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

நெல் கொள்முதல் செய்வதற்காக முதல் கட்டமாக அரசாங்கம் 60,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.


இதில் 55,000 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிhttps://www.skytamilnews.com/archives/68437...
06/09/2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

https://www.skytamilnews.com/archives/68437

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (05) பிற்பகல், வைத்திய ஆலோசனையின் பேரில் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

மகாவலி அதிகார சபையின் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது அரசியல் அலுவலகம் 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அழிக்கப்பட்டதற்காக, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில், சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆல் கைது செய்யப்பட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷ மீதான வழக்கு கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கொழும்பு பிரதான நீதவான், அவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
06/09/2025

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இன்று, 2025.09.05 மாலை 4:30 மணியளவில் கொழும்பிலிருந்து கொட்டகலையில் உள.....

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
06/09/2025

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ர...

இலங்கை கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனையின் கடற்படை வீரன்.https://www.skytamilnews.com/archi...
06/09/2025

இலங்கை கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனையின் கடற்படை வீரன்.

https://www.skytamilnews.com/archives/68417

(எம்.ஜே.எம். சஜீத்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் காதர் றிழா முஹம்மத் என்பவருக்கு கடந்த (2025.09.01) ஆம் திகதி இலங்கை கடற்படைத் தளபதி Vice Admiral BAKSP பாணகொட, RSP, USP, ndc, psc. வினால் “Surface Warfare Bagde” என்றழைக்கப்படும் கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தனது 13 ஆண்டுகள் சேவையையும் இவரது சிறப்பான ஆளுமையினையும் பாராட்டும் விதமாக இந்த கெளரவிப்பு இடம்பெற்றுள்ளது.

இவர் கடற்படை பொறியியல் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதோடு பல்வேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதோடு 2021 ஆம் ஆண்டு கடற்படையினரால் நடாத்தப்பட்ட போர் மற்றும் மேலாண்மை தலைமைத்துவ பயிற்சி, “Warfare Leadership and Management course”இல் முதலாவது இடத்தைப் பெற்று அட்டாளைச்சேனை மண்ணிற்கு பாரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sky Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky Tamil News:

Share