01/06/2026
கொழும்பு, செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு, செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும், கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் குமாரசிங்க, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா ஆகியோருடன் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குறித்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
🇱🇰