News21 Tamil

News21 Tamil Reliable News, Around the Clock

யாழிலிருந்து வந்த ரயில் மோதி இளம் தாய் பலி! சாலியபுரத்தில் நிகழ்ந்த விபத்துகாங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயண...
29/05/2026

யாழிலிருந்து வந்த ரயில் மோதி இளம் தாய் பலி! சாலியபுரத்தில் நிகழ்ந்த விபத்து

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் சாலியபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.

சுயதொழில் செய்து வந்த அவர், அநுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் 'ஐஸ் பக்கெட்டுகளை' விற்பனை செய்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலியபுர பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பற்ற ரயில் கடவை இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், எவ்விதமான காவலர்களும் பணியில் அமர்த்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்த பாதுகாப்பற்ற நிலையே ஒரு இளம் தாயின் உயிரைப் பறித்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

🚨 மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!மட்டக்களப்பு நகரில் ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திச...
29/05/2026

🚨 மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற மர்ம நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரைப் பாழடைந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு, நகை, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

நடந்தது என்ன?

பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஓட்டோ சாரதி, மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்குச் சவாரி சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை இரவு 07 மணியளவில் இருந்து காணாமல் போயிருந்த இவர், வியாழக்கிழமை (28) காலை ரிதிதென்னை காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் மக்களால் மீட்கப்பட்டார்.

கொள்ளையர்கள் சாரதியிடமிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.

தற்போது குறித்த சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

🚨 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: இளைஞன் கைது!கொழும்பில் இருந்து கொரியர் சேவை ஊ...
29/05/2026

🚨 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: இளைஞன் கைது!

கொழும்பில் இருந்து கொரியர் சேவை ஊடாக யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை வருவித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

யாழ். குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த சந்தேகத்திற்கிடமான பொதி குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தப் பொதியை சோதனையிட்டபோது, அதனுள் 1,800 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பொதியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்குரிய இளைஞனை, யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கொழும்பில் இருந்து இந்தப் பொதியை அனுப்பி வைத்த நபர் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

🚨 மட்டக்களப்பில் அதிர்ச்சி! மகனின் வாயில் சூடு வைத்த தந்தை கைது! மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில், 8 வயது சிறுவன...
29/05/2026

🚨 மட்டக்களப்பில் அதிர்ச்சி! மகனின் வாயில் சூடு வைத்த தந்தை கைது!

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில், 8 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனின் வாய்ப் பகுதியில் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைத்துப் படுகாயப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து கிராம உத்தியோகத்தர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, சந்திவெளி பொலிஸார் தந்தையை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்களே கவனியுங்கள்! பிள்ளைகளின் தவறுகளை அன்போடும் பொறுமையோடும் திருத்த முனையுங்கள். உங்கள் ஒரு நிமிடக் கோபம், உங்கள் பிள்ளையின் வாழ்நாளையே சிதைத்துவிடக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு எமது News21tamil பக்கத்தைப் பின்தொடருங்கள். ✨

ராசிகளுக்கான இன்றைய பலன்கள் | மே 29, 2026  | சுபமுகூர்த்தம்👇 வெற்றிக்கான வழி : “நம்பிக்கை இருந்தால் தைரியம் தானாக வரும்”...
29/05/2026

ராசிகளுக்கான இன்றைய பலன்கள் | மே 29, 2026 | சுபமுகூர்த்தம்

👇 வெற்றிக்கான வழி :

“நம்பிக்கை இருந்தால் தைரியம் தானாக வரும்”

பொருள்:

ஒரு மனிதன் தனது திறமை, முயற்சி அல்லது எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால், எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் அவனுக்குள் இயல்பாக உருவாகும்.



🚀 உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்! 🚀

இன்றைய டிஜிட்டல் உலகில் உங்கள் வணிகத்திற்கென ஒரு நவீன இணையதளம் இருப்பது மிகவும் அவசியம். WebStudio Sri Lanka மூலம் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நேர்த்தியான இணையதளங்களை நாங்கள் வடிவமைத்து தருகிறோம்.

✅ புதிய தொழில்நுட்பம் (Modern Technology) ✅ நியாயமான விலை (Reasonable Price) ✅ நேர்த்தியான வடிவமைப்பு

இன்றே உங்கள் வணிகத்திற்கான புதிய இணையதளத்தை ஆரம்பியுங்கள்!

🌐 மேலும் அறிய: https://webstudio.com.lk/

Professional Web Design & Hosting Services : https://webstudio.com.lk/

பிக்குகளை விலங்கிட்டு எவ்வாறு நீதிமன்றங்களுக்கு கொண்டுசெல்வது?  பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; 'தர்ம ந...
29/05/2026

பிக்குகளை விலங்கிட்டு எவ்வாறு நீதிமன்றங்களுக்கு கொண்டுசெல்வது? பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; 'தர்ம நீதிமன்றம்' நிறுவப்படும்

Read : https://www.news21.lk/President-concerned-about-immorality-of-monks

ஹட்டனில் பரபரப்பு: பெற்றோரைத் தேடி தனியாக கொழும்பு செல்ல முயன்ற 7 வயது சிறுவன் மீட்பு!நுவரெலியா மாவட்டம் - ஹட்டன் பகுதிய...
29/05/2026

ஹட்டனில் பரபரப்பு: பெற்றோரைத் தேடி தனியாக கொழும்பு செல்ல முயன்ற 7 வயது சிறுவன் மீட்பு!

நுவரெலியா மாவட்டம் - ஹட்டன் பகுதியில், கொழும்பில் பணிபுரியும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காகத் தனியாக பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள முயன்ற 7 வயது சிறுவன் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்தச் சிறுவன், பஸ் நிலையத்திற்குத் தனியாக வந்துள்ளார். அங்குள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நிலைய நேரக் காப்பாளரிடம், தான் கொழும்புக்குத் தனியாகச் செல்லப் போவதாகக் கூறியுள்ளார்.

கொழும்பில் தங்கி வேலை செய்யும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காகவே தான் செல்வதாகவும், இதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குப் பணம் கொடுத்ததாகவும் அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுவன் ஒருவன் தனியாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனை பஸ்ஸில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். உடனடியாக இது குறித்து ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் அந்தச் சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல்
29/05/2026

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல்

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங...
29/05/2026

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே உணரப்படுகின்றன. இந்நிலையில், கொழும்பில் பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது தலைமைக் குழுக் கூட்டம் தொடங்கியது.

Address

Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when News21 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News21 Tamil:

Share