SLMC MEDIA UNIT

SLMC MEDIA UNIT SLMC

13/07/2025

Rauff Hakeem ❤️❤️❤️

செம்மணிக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.அப்படி இருக்க, குருக்கள் மடம் பேரவலையின் நீதியை ஒரு நீதி அமைச்சர் எளிதாக பெற்றுத...
12/07/2025

செம்மணிக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
அப்படி இருக்க, குருக்கள் மடம் பேரவலையின் நீதியை ஒரு நீதி அமைச்சர் எளிதாக பெற்றுத்தர முடிந்திருக்குமா?

🕯️ 1990 ஜூலை 12 மற்றும் 13ஆம் திகதிகளில், ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்கள், குருக்கள் மடம் பகுதியில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

🔹 ஏப்ரல் 2014 – காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அப்துல் ரஊப் அவர்களால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
🔹 ஜூன் 2014 – அடையாளம் காட்டப்பட்ட இடத்தை தோண்ட நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
🔹 ஜூலை 2014 – பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

⏳ சம்பவம் நடந்ததிலிருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பலர் அதிகாரங்களில் இருந்தனர்,
ஜனாதிபதிகள் மாறினார்கள், பலர் அமைச்சர் பதவியில் இருந்தார்கள் —
எவரும் இந்த வழக்கை தொட முடியவில்லை.

ஆனால்… ஒரு அரசியல்வாதி மட்டும், தன் பதவியைப் பயன்படுத்தினார்.

🎯 ரவூப் ஹக்கீம் – (2010 முதல் 2014 வரை நீதி அமைச்சர்)

✅ 2014 – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
✅ நீதிமன்ற உத்தரவு மூலம் புதை குழி தோண்டும் அனுமதி பெறப்பட்டது.
✅ நீதிமன்ற மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்
✅ உறவினர்களின் வாக்குமூல்கள், சாட்சியக் கோப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டன
✅ அதில் முக்கியமாக – OMP (Office on Missing Persons) அப்போது இல்லையென்றாலும், அதற்கு ஒத்த முறையில் உண்மையை வெளிக்கொணர வழி அமைக்க முயற்சி செய்தார்

📣 இதெல்லாம் எந்த ஊடக பிரச்சாரமும் இல்லாமல் மிகுந்த பொறுப்புடன் நடந்து முடிந்தது.

🙏🏽 ஆனால் இன்று அந்த வழக்கு முன்னேறவில்லை.
🙏🏽 அவர் பதவியை விட்டதற்குப் பிறகு – எதுவும் நடக்கவில்லை.
🙏🏽 Attorney General's Department இந்த வழக்கை மூடிவிட்டதாகவே கூறப்படுகிறது.

🔸 நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.
🔸 ஆனால், அதற்கான விதையை சொந்த சமூகத்துக்காக ஒரு தலைவர் போட்டார்.
🔸 இன்று அது வளரவில்லை என்றால், அவர் மட்டும்தான் காரணம் இல்லை.

11/07/2025
சம்மாந்துறை - தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்காக 112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 5 மாத கால...
11/07/2025

சம்மாந்துறை - தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்காக 112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 5 மாத காலத்திற்குள் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படும்!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு. சுனில் ரணசிங்க பதிலளிப்பு..!

பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் Dr. றிஸ்வி சாலி தலைமையில் இன்று (11.07.2025) இடம்பெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் கேள்வி எழுப்புகையில்,

இறக்காம பிரதேச செயலக பிரிவில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தொப்புக்குடா பிரதான வாய்க்கால் நிரம்பி வழியும் காலங்களில் நிந்தவூர், சம்மாந்துறை பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான நெற்காணிகள் நீரில் மூழ்குவதால் விவசாயிகளுக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதுடன், தீகவாபி விகாரைப் பிரதேசம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான நெற்காணிகளும் நீரில் மூழ்கி வருகின்றன. இப்பிரதான வாய்க்கால் (தொப்புக்குடா) ஒவ்வொரு தடவையும் உடைந்து நீர் வழிவதால் இப்பிரதேச விவசாய மக்களும் பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர். இப்பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் தற்காலிகமான முறையில் திருத்தம் செய்வதனால் மீண்டும் உடையும் நிலைமை ஏற்படுகின்றது. எனவே, இதற்கு நிரந்தரமான முறையில் வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை அவசரமாக மேற்கொண்டு சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகள் தொடர்ந்து நஷ்டமடையும் நிலைமையை நிரந்தரமாக இல்லாமல் செய்ய வேண்டும் எனவும், தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கு நீர்ப்பாசன அமைச்சினால் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் இப்பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்வதற்கான கால எல்லையையும் கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இது தொடர்பாக பதிலளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு சுனில் ரணசிங்க சம்மாந்துறை - தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கு 112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 5 மாத காலத்திற்குள் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

11/07/2025

பொத்துவிலுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தலைமை ❤️🫶🏽 அல்ஹம்துலில்லாஹ்

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
10/07/2025

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

10/07/2025

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளிமடை பிரதேச சபை உறுப்பினரான எம்.ஜெ துவான் காஸிம் அவர்கள் 10/07/2025 இன்றைய தினம் வெளிமடை குருதலாவை பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள நமது ஊரின் மிக முக்கியமான ஒரு பொக்கிஷமாக கருதப்படக் கூடிய பர்ஹானியா அரபுக் கல்லூரிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டு அறிந்து கொண்டதுடன் தனக்கு உள்ளூராட்சி மன்ற சபை மூலம் கிடைக்கப்பெற்ற முதல் மாத கொடுப்பனவை பொதுநலன் கருதி பர்ஹானியா அரபுக் கல்லூரிக்கு நன்கொடை செய்தார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் தனக்கு கிடைக்கப்பெறும் கொடுப்பனவுகளை பொதுநலன் கருதியே செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவ...
10/07/2025

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று(10), "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்றபோது இந் நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

இதில் கட்சியின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Former Member of Parliament and Pottuvil Pradeshiya Sabha Chairman S.M.M. Musharaf has been appointed as the National Youth Organizer of Sri Lanka Muslim Congress by party's leader Rauff Hakeem,MP.

The appointment was officially made during the SLMC high command meeting held today (10), at its "Darussalam" Headquarters ,in Colombo-2.

Party's Secretary Nizam Kariapper, PC ,MP, party's other members of Parliament and high command members participated in the meeting.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள SMM. முஷாரப் அவர்களுக்கு வாழ்த்த...
10/07/2025

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள SMM. முஷாரப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந் நியமனமானது கட்சியின் தலைவர் சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

10/07/2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்ட இஸ்ரேல் பிரஜை "பக்கம் அபூ" என்பவர் யார்? பாராளுமன்றத்தில்ரவூப் ஹக்கீம் எம்.பி கடும் தொனியில் தொடுத்த கேள்விக் கணை !

Who is "Pakkam Abu", the Israeli citizen, involved in Easter Sunday's attack?

Rauff Hakeem MP,questions in a harsh tone in Parliament !

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்...
10/07/2025

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் முக்கியமான இரு (02) கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

முதலாவதாக, தற்போது 5000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 6000/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்காக அமைச்சுக்கு நன்றியை தெரிவித்ததோடு, எதிர்வரும் காலங்களில் இந்த தொகையானது அதிகரித்து வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஏனென்றால் ஒரு சாதாரன அரசு ஊழியரின் மாதாந்த சம்பளம் 50,000/- ரூபாவாக இருந்தும் கூட, இவ்வாறான முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இந்த சிறிய கொடுப்பனவுகள் போதாமல் இருக்கின்றது. எதிர் வரும் காலங்களில் அமைச்சினூடாக அரசாங்கம் இந்த கொடுப்பனவினை அதிகரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இரண்டாவதாக பயிற்சி பெற்று டிப்லோமாதாரர்களாக முன்பள்ளியினை நடாத்திச் செல்கின்ற அனைத்து முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் இந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு,

மேலும் அவர் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3800 க்கும் அதிகமான முன்பள்ளி ஆசிரியர்கள் இருந்த போதிலும் 2000 க்கு சமமான முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.
ஆகவே இதனை ஒரு நியாயமற்ற செயலாக அவர் கருதுவதாகவும் சுட்டிக் காட்டிள்ளார். எனவே டிப்லோமா பயிற்சி பெற்ற அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு வழங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சு சார் குழுக் கூட்டத்திலே கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when SLMC MEDIA UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share