21/10/2025
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை பிரதேசத்திற்கான மத்திய குழுக் கூட்டம் நேற்று (20)
மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கட்சியின் மருதமுனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் தாஜுடீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியக்க் கலந்து கொண்டார்.
கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, க
தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எஸ்எம்எம்.முஸர்ரப், கட்சியின் பிரதிச் செயலாளர்
மன்சூர் ஏ காதர் , கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி.சமால்தீன், கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான, அமீர், நவாஸ், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், இளைஞர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாரை மாவட்டம் கல்முனை தொகுதிக்குட்பட்ட இளைஞர் அமைப்பாளர்கள் சிலர் , தேசிய இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரபினால் நியமிக்கப்பட்டு , அவர்களுக்கான நியமனக் கடிதங்கள்
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. அந்தவகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக ஏ.அஹமத் ஷௌகி ஹக்கானி (A. Ahamed Shawkky Hakkani )
சாய்ந்தமருது பிரதேசத்துக்கான இளைஞர் அமைப்பாளராக முஹம்ம மன்சூர் முஹம்மத் பௌமி (MOHAMED MANSOOR MOHAMED FAMY)
சம்மாந்துறை பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் அர்சாத்
(Mohamed Ismail Mohamed Arshath) ஆகியோர்
நியமிக்கப்பட்டனர்.
மேலும் மருதமுனை பிரதேசத்திலுள்ள 4 வட்டாரங்களுக்கும் , கல்முனை பிரதேசத்தில் ஒரு வட்டாரத்திற்குமான இளைஞர் அமைப்பாளர்கள் முதல் கட்டமாக நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் கல்முனை 13 ஆம் வட்டாரத்திற்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராக .ஏ.ஆர்.ஏ. ஜௌசான்(ARA.Jowsan) மருதமுனை 05 ஆம் வட்டாரத்திற்கான இளைஞர் அமைப்பாளராக அமானுல்லாஹ் அப்ராஸ்( Amanullah Afras )மருதமுனை 04 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக. யூ.ஏ.எம் .ஜரீத்(UAM JAREETH )
மருதமுனை 03 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக தணீஸ் அஹமத் (Thanees Ahamed) மருதமுனை 02 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக என்.எம்.ஜப்ரான் (NM.Jabran) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் வகையில் ஏனைய பிரதேசத்திற்கான இளைஞர் நியமனங்களும் விரைவில் வழங்கப்படும் என்பதை கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் உறுதிப்படுத்தினார்.