SLMC MEDIA UNIT

SLMC MEDIA UNIT SLMC

பொத்துவில் மக்களின் ஏக்கத்திற்கு தீர்வு
29/07/2026

பொத்துவில் மக்களின் ஏக்கத்திற்கு தீர்வு

29/07/2026
26/07/2026

🦟 டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில், சம்மாந்துறையில் நடைபெற்ற கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்.

டெங்குவை ஒழிப்போம்… ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! 🤝

Rauff HakeemSri Lanka Muslim CongressMS Abdul WazeethM S Uthuma LebbeFaizal CassimMIM MansoorRahmath Munsoor

Why are Provincial Council Elections still not being held in Sri Lanka?In this explosive interview, Sri Lanka Muslim Con...
24/07/2026

Why are Provincial Council Elections still not being held in Sri Lanka?

In this explosive interview, Sri Lanka Muslim Congress leader Rauff Hakeem argues that the government is deliberately delaying Provincial Council Elections because it fears losing control of the provinces. He also criticizes the government's stance on constitutional reform, the Executive Presidency, and minority rights, while insisting that "absence of war is not peace."

Watch the full discussion as he explains why these issues matter for Sri Lanka's democracy and future. https://youtu.be/1Ub0ee64TXg?si=IB3UT46731Op-naN

Why are Provincial Council Elections still not being held in Sri La...

கொழும்பில் உள்ள GAP தலைமையகத்தில் நடைபெற்ற ஃபிதா ஃபஹ்மி (Fida Fahmy) எழுதிய "கேர்ள்ஸ் ஒப் இஸ்தான்புல்" (Girls of Istanbu...
18/07/2026

கொழும்பில் உள்ள GAP தலைமையகத்தில் நடைபெற்ற ஃபிதா ஃபஹ்மி (Fida Fahmy) எழுதிய "கேர்ள்ஸ் ஒப் இஸ்தான்புல்" (Girls of Istanbul) நூல் வெளியீட்டு நிகழ்வில், துருக்கி குடியரசின் தூதுவர் மாண்பு மிகு லுத்பு தர்கட் முன்னிலை வகித்திருக்கத் தக்கதாக, சிறப்பு அதிதிகளில் ஒருவராக நூலாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நலம் விரும்பிகள் சகிதம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

19 வயது இளம் எழுத்தாளர் ஃபிதா ஃபஹ்மியின் இந்த குறிப்பிடத்தக்க அடைவையிட்டு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

SLMC leader, Parliamentarian Rauff Hakeem participated as a guest, at Fida Fahmy's book launch of "Girls of Istanbul", at the GAP headquarters,
Colombo, in the presence of his Excellency Lutfu Targut, Ambassador of Republic of Türkiye in Sri Lanka, along with other distinguished guests, family members and well wishers.

He congratulated 19 year old young author Fida Fahmy on her remarkable achievement.

தலைவனே ❤️
17/07/2026

தலைவனே ❤️

13/07/2026

கொழும்பில், திங்கட்கிழமை தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தமது சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கருத்துத்தெரிவித்தனர்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கத்திற்கான பொதுத் தளமொன்றை அமைப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
ஒவ்வொரு கட்சியும் தங்களது தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணிக்கொண்டே, பொதுவான நலன்கள் சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படவும், சாத்தியமான இடங்களில் கூட்டு ஆதரவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்தனர்.

இதன்போது பின்வரும் முக்கியமான மூன்று விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டது.

01. நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் அவசியம்.

02. நீண்டகாலமாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை அவசரமாக நடத்தி, ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை.

03. அனைத்து சமூகங்களையும் பாதித்துவரும் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமான, உள்ளடக்கமான மற்றும் அர்த்தமுள்ள கலந்தாய்வுகளின் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம்.

இலங்கையில் இன நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி, தொடர்ச்சியான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக இக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

சிறைச்சாலை இடநெருக்கடி அரச பகுப்பாய்வுத்திணைக்கள தாமதங்கள் -தீர்வுகளை முன்வைக்கும் முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்​இ...
13/07/2026

சிறைச்சாலை இடநெருக்கடி
அரச பகுப்பாய்வுத்திணைக்கள தாமதங்கள்
-தீர்வுகளை முன்வைக்கும் முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

​இலங்கை சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் பாரிய இடநெருக்கடி, மனிதாபிமான சிக்கல்கள் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் தாமதங்கள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ளார்.

​'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் முன்வைத்த முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:

​சிறைச்சாலை இடநெருக்கடியும் பிணைச் சட்டங்களும்
இலங்கையில் 10,000 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சிறைச்சாலைகளில் தற்போது 40,000-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் அல்லர் எனவும், பிணை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

​இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பிணை வழங்கும் சட்டங்களில் போதிய நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்டுவரப்பட வேண்டும். மேலும், மிகச் சிறிய அளவிலான தண்டப்பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​அரச பகுப்பாய்வுத் திணைக்கள தாமதங்களும் பிணை நடைமுறையும்
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச பகுப்பாய்வு அறிக்கை வெளிவர நீண்ட காலம் எடுப்பதால், சந்தேகநபர்கள் பல மாதங்களாகச் சிறையில் வாடும் நிலைமை காணப்படுகிறது.

தான் நீதியமைச்சராக இருந்த காலத்தில், ஒரு சந்தேகநபர் சிறையிலடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்காவிட்டால் அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார். அந்தத் தீர்மானம் முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

​அதேவேளை, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் நிலவும் நீண்டகாலப் பணியாளர் வெற்றிடங்களே இந்தத் தாமதங்களுக்கு முக்கிய காரணமாகும். எனினும், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், புதிய ஆட்களை ஆட்சேர்ப்புச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தற்போதைய நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இதன் மூலம் பணிகளை விரைவுபடுத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

​நீதித்துறை விசாரணைகளில் நவீன தொழில்நுட்பம்
கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதீத செலவுகளைத் தவிர்ப்பதற்காகப் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தலாம். சிறை வளாகத்திற்குள்ளேயே நீதிவான்கள் முன்னிலையில் பிணை வழங்கல் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வசதிகளை ஏற்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்லைன் (Online) ஊடாகச் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறையையும் நடைமுறைப்படுத்தலாம்.

​போதைப்பொருள் பாவனையாளர்களுக்குப் புனர்வாழ்வு
போதைப்பொருள் விற்பனையாளர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், போதைப்பொருள் பாவனையாளர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நோயாளிகளாகக் கருதி, அவர்களைச் சிறைகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

​சுகாதாரம் மற்றும் மத உரிமைகள்
சிறைச்சாலைகளில் நிலவும் சுற்றுச்சூழல் சுத்தமின்மையால் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நோய்ப் பரவலைத் தடுக்க சுகாதார வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அனைத்து மதங்களையும் சேர்ந்த கைதிகளும் தத்தமது மதச் சட்டங்களின்படி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமைகளும் அதற்கான இடவசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

(தொகுப்பு :நிசப்தம்)

தமது உறவினரான, அக்கரைப்பற்று ZAIN GYM உரிமையாளர் ஸெயின் அவர்களின் அருமைப் புதல்வி பாத்திமா சஸ்றாவின் திருமண வைபவத்தில், ...
12/07/2026

தமது உறவினரான, அக்கரைப்பற்று ZAIN GYM உரிமையாளர் ஸெயின் அவர்களின் அருமைப் புதல்வி பாத்திமா சஸ்றாவின் திருமண வைபவத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

அவர் மணமகன் மும்தாஸ் மற்றும் மணமகள் சஸ்றா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Address

Colombo
00020000

Alerts

Be the first to know and let us send you an email when SLMC MEDIA UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share