SLMC MEDIA UNIT

SLMC MEDIA UNIT SLMC

"ஈதுல் அழ்ஹா" பெருநாள் வாழ்த்து பலஸ்தீனம்,ஈரான்,லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின்  மக்கள்இஸ்ரேலினதும்,அமெரிக்காவினத...
27/05/2026

"ஈதுல் அழ்ஹா" பெருநாள் வாழ்த்து

பலஸ்தீனம்,ஈரான்,லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்
இஸ்ரேலினதும்,அமெரிக்காவினதும், அதன் நேச நாடுகளினதும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களினால் தொடர்ந்தும் இனப் படுகொலைகளுக்கும்,ஏனைய பாதிப்புகளுக்கும் உள்ளாகிவருகின்ற சூழ்நிலையில் அவர்களை மையப்படுத்தி இந்த "ஈதுல் அழ்ஹா" பெருநாள் தினத்தில் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

இறை தூதர்களான இப்ராஹிம் (அலை ) இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தின் வலிமையை நினைவு கூரும் விதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் கடமையாக்கியுள்ள இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் புனித மக்கா நகரிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும், உலகெங்குமிருந்து பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி ஹஜ் கடமையிலும்,இதர வணக்கங்களிலும் ஈடுபடுகின்றனர்.நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல்) அவர்களின் மதீனா நகருக்கும் சென்று மஸ்ஜிதுன் நபவியில் அவர்கள் வணக்கங்களிலும் ஏனைய நற்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து 17 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் கூட, மக்கள் இன்னும் பிரச்சினைகளிலிருந்து முற்றாக விடுபடவில்லை.அத்துடன் நாட்டில் அண்மைக் காலமாக மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மக்கள் மத்தியில் அச்சமற்ற,பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதற்கும், இனங்களுக்கிடையில் சரியான புரிந்துணர்வு ஏற்பட்டு, சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக சகவாழ்வு வாழ்வதற்கும் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம்

ஈத் முபாரக் .

ரவூப் ஹக்கீம்,
தலைவர் ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,
பாராளுமன்ற உறுப்பினர்.

ලෝක ආර්ථිකයට බලපාන මැදපෙරදිග යුද්ධය හා ඉන් පීඩාවට පත් ජනතාවට සෞභාග්‍යයමත් සාමකාමී පරිසරයක් උදාවේවායි ප්‍රාර්ථනා කරමු!
යැයි ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී නීතිඥ රව්‍රෆ් හකීම් මහතා විසින් හජ් උත්සව දිනය නිමිත්තෙන් නිකුත් කරන ලද පණිවිඩයේ සඳහන් කර ඇත.

ඒ මහතාගේ " ඊදුල් අල්හා" හජ් උත්සව දින සැමරුම් පණිවිඩයේ වැඩි දුරටත් සඳහන් වනුයේ,

ලෝකවාසී සියලු ජාතීන්ට බලවත්සේ ආර්ථිකය අතින් අභියෝගයක් බවට පත්වී ඇති, ඇමෙරිකාව හා ඊශ්‍රායලය එක්ව සිදු කරමින් පවතින පලස්තීනය, ලෙබනනය සහ ඉරානය ඇතුළු මැදපෙරදිග කලාපයේ රටවල්වල අහිංසක ජනතාවට, මිලේච්ඡත්වීය ප්‍රහාර සහ එයින් මැද පෙරදිග රටවල් වල ඇතිවී තිබෙන යුද වාතාවරණය නිසා පීඩාවට පත් ජනතාවට සෞභාග්‍යයමත් සාමකාමී පරිසරයක් උදාවේවායි මෙම උතුම් හජ් උත්සව දිනයේ ප්‍රාර්ථනා කරමු !

ඉබ්‍රාහිම් සහ ඉස්මායිල් ( අලෛ) නම්, අල්ලාහ් දෙවියන් වහන්සේගේ වක්තෘවරයන් දෙපලගේ අධිෂ්ඨානශීලී ජීවිත චරිත සහ දෙවියන් වහන්සේ වෙනුවෙන් සිදු කරන ලද උත්තරීතර කැප කිරීම් සංකේතවත් කරන මෙම හජ් උත්සවය ලෝකවාසී ජනතාවටම ආශිර්වාදයක් වේවා යි පතමු!
ශ්‍රී ලංකාවේ පැවති කුරිරු යුද්ධයෙන් මිදී දාහත් වසරක් සම්පූර්ණ වූවද, ඉන් පීඩාවට පත් ජනතාවට සෑහීමට පත් වන අයුරින් විසඳුම් ළගා කර ගැනීමට නොහැකි වී තිබේ.
එවැනි වාතාවරණයක් තුළ රටවැසියන් අතර සමගිය හා සංහිදියාව උදාවීමට මේ උතුම් දිනය, අවස්ථාවක් කර ගනිමු .

රවුෆ් හකීම් පා. ම.
ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක .

Let us not forget those suffering in West Asia on this holy day of Eid ul Adha

— Rauff Hakeem

In his Eid ul Adha message, Leader, Sri Lanka Muslim Congress Rauff Hakeem stated that on this sacred day of Eid ul Adha, we should pray to Allah for the relief and liberation of Muslims living in countries such as Palestine, Iran, and Lebanon and others who continue to face brutal attacks, genocides, and various forms of oppression by Israel, the United States, and their allied nations.

In his Haj Eid greeting message, he further stated.Every year, millions of Muslims from across the world gather in the holy city of Makkah and its surrounding areas to perform Hajj — the fifth pillar of Islam in remembrance of the supreme sacrifices made by the Prophets Ibrahim (peace be upon him) and Ismail (PBUH). The Pilgrims also travel to Madinah, the sacred city wherein the Prophet Muhammad (PBUH) is buried, to perform acts of devotion and piety.

In Sri Lanka, although 17 years have passed since the end of the civil war, the population has yet to fully overcome its economic hardships. Moreover, there are signs that a deeper economic crisis may be imminent.

On this auspicious Eid day, let us pray for a peaceful and secure environment for the people, for better understanding among all ethnic communities, and for all communities to live in unity and harmony.

Eid Mubarak!

Rauff Hakeem MP
Leader, Sri Lanka Muslim Congress.

16/05/2026

இலங்கை பாராளுமன்றத்தில் 14.05.2026 இல் நடைபெற்ற பொது நிதி குழுவின் கூட்டத்திலிருந்து...

From Committee of Public Finance meeting held in Parliament on 14.05.2026.

2026.05.14 වැනි දින පාර්ලිමේන්තුවේදී පැවැත්වූ රාජ්‍ය මුදල් පිළිබඳ කාරක සභා රැස්වීමේදී...

08/05/2026

சாய்ந்தமருது நகர சபைக்கு 2 மாதத்திற்குள் தேவையான கட்டிடத்தையும், வளங்களையும் அவசரமாக வழங்குங்கள்

08/05/2026

உழூஹிய்யா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி. உண்மையிலேயே அரசாங்கத்திற்கு மிக்க நன்றிகள்

07/05/2026

சாய்ந்தமருது நகர சபை! மகிழ்ச்சியாகவுள்ளது! அதாவுல்லா பெரும் முயற்சி செய்தார் - MS உதுமாலெப்பை MP பாரட்டு

06/05/2026

தமிழக தேர்தல் வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

05/05/2026

பாட்டுப் பாடி விஜய்யை வாழ்த்திய காரியப்பர் - Nizam kariyapper MP

ஏறாவூர் அபிவிருத்தி:அனைத்து தலைமைகளும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்முகா தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்ஏறாவூரில் அரைகுறையாக நி...
30/04/2026

ஏறாவூர் அபிவிருத்தி:

அனைத்து தலைமைகளும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்

முகா தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்

ஏறாவூரில் அரைகுறையாக நிற்கும் திட்டங்களை ஒழுங்காகவும்,சிறப்பாகவும் செய்து முடிப்பதற்கு இப்பிரதேசத்தின் அனைத்து தலைமைகளும் ஒன்றுபட்டுச் செயலாற்ற முன்வர வேண்டும்
என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் ,அதன் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். நழீம் தலைமையில் அண்மையில் புன்னக்குடா வீதியில் நடைபெற்ற ஏறாவூர் பொதுச்சந்தையின் மாபெரும் திறப்பு விழாவில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ண சேகர பிரதம அதிதியாகவும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அதிதி களாகவும்,இன்னும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,

ஆங்கிலேயர் காலத்தில் ஒரு ‘சனிட்டரி போர்ட்’ ஆக ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபை, இப்பொழுது முழுமையான நகரசபையாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் பலரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.
அப்போதைய ஆட்சியிலிருந்த எனதுதலைமைத்துவக் காலத்தில், பல சச்சரவுகளை முகாமை செய்து,சவால்களுக்கு முகம் கொடுத்து எப்படியாவது இந்த மண்ணுக்கான அபிவிருத்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

முன்னொரு காலத்தில் இங்கு பொதுக்கூட்டமொன்றை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால், இன்று அனைவரும் ஒன்றிணைந்து இத்திறப்பு விழாவை அமைதியாக நடத்துவது பெரும் நிம்மதியைத் தருகிறது.

​நான் எப்போதும் சொல்வதைப் போல, ஏறாவூர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவது மிகவும் கடினமான காரியம். இருந்தபோதிலும், எனது தலைமைத்துவக் காலத்தில் நான்கு முறை இந்த ஊருக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்கி கௌரவித்திருக்கிறேன் .

​இந்த ஊர் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் அமைச்சராக இருந்தபோது பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்தேன். குறிப்பாக, இந்தச் சந்தைக் கட்டிடத்திற்காக 125 மில்லியன் ரூபாயும்,நகரசபை அலுவலகக் கட்டிட அபிவிருத்திக்கு 25 மில்லியன் ரூபாயும், ஏறாவூர் லகூன் வீதிக்காக 60 மில்லியன் ரூபாயும், அஹமட் பரீட் விளையாட்டு மைதான சுற்றுமதிலுக்காக 40 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்தோம். அத்துடன் கலாசார மண்டபக் கட்டுமானத்திற்காக 20 மில்லியன் ஒதுக்கினோம்.

முன்னாள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சவுக்கடி கடற்கரைப் பகுதியில் மக்கள் உல்லாசமாக நேரத்தைக் கழிப்பதற்காக 25 முதல் 30 மில்லியன் ரூபாய் வரை நிதி ஒதுக்கி அபிவிருத்தி செய்தோம். சவுக்கடி கடற்கரை பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பகுதி தற்போது முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது. இது ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உட்பட்டது என்பதால், உள்ளூராட்சி ஆணையாளர் இந்தப் பராமரிப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

​எங்களிடம் பல உத்தேசத் திட்டங்கள் இருந்தன. குறிப்பாக, காத்தான்குடி மற்றும் ஏறாவூருக்கான முழுமையான கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, வெளிநாட்டு கடனுதவி உடன்படிக்கை செய்யப்பட்டும் கூட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அது காலாவதியாகிப் போய் தடைப்பட்டு விட்டது.

பாசிக்குடாவைப் போன்றே புன்னக்குடா கடற்கரையும் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்பட வேண்டும்.

முறக்கொட்டாஞ்சேனையிலிருந்து பாடசாலைக் காணியில் இராணுவ தளம் இருக்கக் கூடாது அதை இங்குள்ள எல் .ஆர்.சி. காணிக்குக் கொண்டு வருவோம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, நாங்கள் பாதுகாப்பு சபை(Defence Committee)யிலும், இராணுவ தளபதியுடனும் பேசி அந்த விசேட பீரங்கி படையணி(Heavy Artillery Unit ) யை இங்கு கொண்டு வருவதைத் தடை செய்தோம்.அது செய்யித் அலி சாஹிர் மௌலானாவின் காலம்.
இங்கு அமையவிருந்த அந்த இராணுவ முகாமைத் தடுத்து நிறுத்தி, அந்த நிலத்தைப் பொதுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாத்தோம்.

அரைகுறையாக நிற்கும் திட்டங்களை ஒழுங்காகச் செய்து முடிப்பதற்கு இப்பிரதேசத்தின் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.சிறந்த ஏற்றுமதி வலயமாக இப் பிரதேசம் திகழ வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஏறாவூர் நகர சபை தவிசாளர்எம்.எஸ்.நழீம், இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பிரதி அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா,
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,முன்னாள் அமைச்சருமான ஹாபிழ் நசீர் அஹ்மத் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூதும் இப் பிரதேச மக்களால் மறக்கப்பட முடியாதவர்.அபிவிருத்தியில் அவரது பங்களிப்பும் இருந்திருக்கிறது.

உல்லாச பயண ஆற்றங்கரை அபிவிருத்தி தொடர்பில் நகர சபை தவிசாளர் நழீம் நல்லதொரு திட்ட வரைவை தயாரித்திருக்கிறார்.

இறுதியாக, ஆளுநரின் கவனத்திற்கு ஒரு முக்கிய விடயத்தைக் கொண்டு வருகிறேன்.அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டுப்பாடுகளால் உள்ளூராட்சி சபைகள் பெரும் நிதிச் சிக்கலை எதிர்கொள்கின்றன. ஊழியர்களின் சம்பளத்தில் 40 வீதத்தை அந்தந்தச் சபைகளே பொறுப்பேற்க வேண்டும் என்பது ஏறாவூர் போன்ற சபைகளுக்கு பெரும் சுமையாகும். இந்த நிலை தொடர்ந்தால் அபிவிருத்தி வேலைகள் முடங்கி விடும். எனவே, ஆளுநர் இது குறித்துத் திறைசேரியுடன் பேசி ஒரு கொள்கை ரீதியான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

(தொகுப்பு : "விருட்ச வேந்தன்")
நன்றி- "விடிவெள்ளி" (30.04.2026).

தமிழ்நாடு தேர்தலில் ஸ்டாலின் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.
21/04/2026

தமிழ்நாடு தேர்தலில் ஸ்டாலின் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.

காத்தான்குடியின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆரம்பிக்கப்பட்ட வ...
19/04/2026

காத்தான்குடியின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆரம்பிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா படகுச் சவாரியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பயணித்தார்.

"வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை" கடந்த மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தது..

நிகழ்வில் கட்சியின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இந்நாள் ஏறாவூர் நகர முதல்வருமான எம்.எஸ்.எம். நழீம் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள்,
முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்து கலந்துகொண்டனர்.

SLMC Leader ,Rauff Hakeem MP,on embarked on the Lagoon Park Boat Ride, which was initiated with the aim of taking the scenic beauty of Kattankudy and the progress of the tourism sector to the peak.

The "Lagoon Park and Tourist Boat Service" was inaugurated last month.

This boat ride included the party's Deputy Leader and Batticaloa District MP M.L.A.M. Hizbullah, Eravur Urban Council Chairman M.S.M. Naleem (Ex MP)and many other party's high-ranking members.

SLMC Leader ,Rauff Hakeem MP,on Friday (17) embarked on the Lagoon Park Boat Ride, which was initiated with the aim of taking the scenic beauty of Kattankudy and the progress of the tourism sector to the peak.

The "Lagoon Park and Tourist Boat Service" was inaugurated last month.

This boat ride included the party's Deputy Leader and Batticaloa District MP M.L.A.M. Hizbullah, Eravur Urban Council Chairman M.S.M. Naleem (Ex MP)and many other party's high-ranking members.

Address

Colombo
00020000

Alerts

Be the first to know and let us send you an email when SLMC MEDIA UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share