NewsNow தமிழ்

NewsNow தமிழ் விழுமியங்கள் சார்ந்த, நீதியான, நடுநிலையான செய்திகளை வெளியிடும் ஊடகம்!
(1)

NewsNow இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து விரைவான, நம்பகமான மற்றும் பாரபட்சமற்ற செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது. Newsnow Tamil, Newsnow மீடியா நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும் - இது செய்திகள், ஆவணப்படம் மற்றும் விளையாட்டு தகவல்களை உள்ளடக்கியது.

22/11/2025

அதிக மழை காரணமாக இன்று கண்டி கீழ் கடுகண்ணாவ பகுதியில் வர்த்த நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு அண்மையில் இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை (22) காலை கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்த...
22/11/2025

இன்று சனிக்கிழமை (22) காலை கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 33 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் ...
21/11/2025

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 33 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் சிறுவா்கள்; 8 போ் பெண்கள்.

அதற்கு முன்னதாகவும் காஸா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கான் யூனிஸ் நகரில் தங்கள் வீரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், இஸ்ரேல் வீரா்களை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று ஹமாஸ் படையினா் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 69,546 போ் உயிரிழந்துள்ளனா். 1,70,833 போ் காயமடைந்துள்ளனா்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

21/11/2025

ஜெர்மனியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு (Integration) சந்திப்பில், சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் வழங்கிய குடியேற்ற எதிர்ப்பு உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருடைய கருத்துகளைப் பொருத்துக் கொள்ள முடியாத பலர், அமைதியாக அரங்கை எழுந்து வெளியேறிய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் அதிரச்செய்தது.

ஜெர்மனியின் தற்போதைய குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கருத்து முரண்பாடுகளையும், சமூகப் பிளவுகளையும் இந்த நிகழ்வு வெளிக்கொணர்கிறது.

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.  நிலந...
21/11/2025

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

பங்களாதேஷின் அண்டை நாடான இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

டாக்காவில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீற்றர் (25 மைல்) தொலைவில் உள்ள நர்சிங்டி நகரில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk





21/11/2025

துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

இந்த நிலையில், துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இரு...
21/11/2025

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது.

இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.

பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம்.

ஆனால் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது. காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk




அல் குர்ஆன் மீளாய்வுக்குழுவிலிருந்து ACJU விலகவேண்டும் என்றும் இது தொடர்பான தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ம...
21/11/2025

அல் குர்ஆன் மீளாய்வுக்குழுவிலிருந்து ACJU விலகவேண்டும் என்றும் இது தொடர்பான தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்இய்யதுல் உலமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

காசா நிலைமை குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கியமான கருத்துரையை ...
21/11/2025

காசா நிலைமை குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கியமான கருத்துரையை வெளியிட்டுள்ளார்.

“காசாவில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் எகிப்து அனுமதித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இப்படிச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது காசா மக்கள் வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் முயற்சி என பல சர்வதேச வட்டாரங்கள் பார்க்கின்றன. நெத்தன்யாகுவின் இந்த கருத்து, “கட்டாய இடமாற்றம்” பற்றிய சர்வதேச அச்சங்களை மேலும் தூண்டும் வகையில் உள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு சப்ளை செய்து வந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவ...
21/11/2025

சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு சப்ளை செய்து வந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவதற்கான மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

கோப்புகளை வெளியிடுவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் தனது சொந்தக் கட்சியின் அரசியல் அழுத்தத்தால் மசோதாவில் கையெழுத்திட்டார்.

இதன் விளைவாக, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, 2019 ஆம் ஆண்டு சிறையில் அவர் தற்கொலை செய்தது தொடர்பான விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ...
21/11/2025

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமேசன் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவ.10 முதல் 21 வரை நடக்கிறது. இந்த காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாடு நிறைவடைய ஒரு நாள் மட்டும் இருந்த பட்சத்தில், காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 50,000 இற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அரங்கின் ப்ளூஸோன் என்றழைக்கப்படும் பகுதியில் தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

21/11/2025

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் இன்று (21) நாடாளுமன்ற உணவகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறும், மிரட்டல் நடந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Address

255H, Danister De Silva Mawatha, Baseline Road
Colombo

Telephone

+94771358599

Website

https://www.youtube.com/@NewsNowTamilLK

Alerts

Be the first to know and let us send you an email when NewsNow தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share