NewsNow தமிழ்

NewsNow தமிழ் விழுமியங்கள் சார்ந்த, நீதியான, நடுநிலையான செய்திகளை வெளியிடும் ஊடகம்!
(1)

NewsNow இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து விரைவான, நம்பகமான மற்றும் பாரபட்சமற்ற செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது. Newsnow Tamil, Newsnow மீடியா நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும் - இது செய்திகள், ஆவணப்படம் மற்றும் விளையாட்டு தகவல்களை உள்ளடக்கியது.

யெமன் தலைநகர் சானாவில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 செய்தியாள...
13/09/2025

யெமன் தலைநகர் சானாவில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 செய்தியாளர்கள் உயிரிழந்தனர்.

அத்துடன், 100 க்கு ம் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

தலைநகரின் அல்-தஹ்ரிர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தலைநகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

ஜென் Z இளைஞர்களின் அசுரத்தனமான போராட்டத்தால் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்ச ...
13/09/2025

ஜென் Z இளைஞர்களின் அசுரத்தனமான போராட்டத்தால் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.

நேபாள வரலாற்றில் ஒரு பெண், பிரதமராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும்.

நேபாளத்தில் வேலைவாய்ப்பின்மை, அரசுத் துறைகளில் ஊழல், வறுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் அந்நாட்டு இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த சூழலில், அந்நாட்டில் இயங்கி வரும் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நேபாள அரசு அதிரடியாக தடை செய்தது.

சமூக வலைதள தடையால் கொதித்து போன ஜென் Z இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த சூழலில்தான், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசிலா கார்கி பொறுப்பேற்றார்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடு...
13/09/2025

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

இந்நிலையில் தற்போது பலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலை இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனம்' என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவு, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்டது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், இரு நாடுகள் பார்முலாவின் மூலம் மட்டுமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியமாகும் என்று நியூயார்க் பிரகடனம் கூறுகிறது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து வருவதாகவும் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் ...
13/09/2025

நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து வருவதாகவும் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தூதர், எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய வெறுப்புக்கான தேசிய பதில் அறிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தூதர் அப்தாப் மாலிக் வெளியிட்டார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்திற்கு 54 பரிந்துரைகளை வழங்கினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு "முன்னோடியில்லாத அளவிற்கு" உயர்ந்துள்ளது என்றும், நேரில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் 150 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

🔗Tap the link in bio for more.

# #ᴛʀᴇɴᴅɪɴɢɴᴏᴡ

2015 முதல் 2025 வரை முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது மறைந்த முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கு வழங்கப்பட்ட சம்பளம், கொடுப்ப...
12/09/2025

2015 முதல் 2025 வரை முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது மறைந்த முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கு வழங்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2015 ஜனவரி 01 முதல் 2025 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கு மொத்தம் 33,003,454 ரூபா தொகை இதற்காக செலவிடப்பட்டுள்ளன.

ஹேமா பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான செலவுகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“பயங்கரவாதத் தலைவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் அவர்களைத் துரத்துவோம். கத்தார் இப்போது ஹமாஸைக் கண்டித்து வெளியேற்ற வேண்டு...
12/09/2025

“பயங்கரவாதத் தலைவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் அவர்களைத் துரத்துவோம். கத்தார் இப்போது ஹமாஸைக் கண்டித்து வெளியேற்ற வேண்டும்; இல்லையெனில் அதை இஸ்ரேல் செய்வதற்கு தயாராகும்,” என்று இஸ்ரேலின் ஐ.நா. பிரதிநிதி டேனி டானன் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.பலஸ்தீனத்...
12/09/2025

இனி பலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நெதன்யாகு கையெழுத்திட்டார்.

மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.

இதன் பின் பேசிய நெதன்யாகு , "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்த...
12/09/2025

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி செயற்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் 2026 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை அடைய ஒரு அணுகுமுறையொன்றை எட்ட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ரூபாயையும் அதிக பலன் கிடைக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை கடத்தி வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத...
12/09/2025

ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை கடத்தி வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக 6E1173 எனும் இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த 40 வயதுடைய இலங்கைப் பெண் பயணி ஒருவரே இவ்வாறு குறித்த பாம்புகளை கொண்டு வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவானது உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 3 Honduran Milk Snakes, 1 Speckled Kingsnake, 1 Yellow Anaconda, 1 Ball Python ஆகிய பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

2018ஆம் ஆண்டு கண்டி, திகன மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை இலங்...
12/09/2025

2018ஆம் ஆண்டு கண்டி, திகன மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை வன்முறைகள் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது.

இந்த அறிக்கை 9 அமைச்சுகளுக்கும் அத்துடன் அரசாங்கம் செயல்படுத்த வேண்டிய 6 பிற முக்கிய பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

🇮🇱

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  வெளியேற...
11/09/2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

சிரியா ஜனாதிபதி அஹ்மட் அல்-ஷரா, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது அமர்வு “உயர் மட்ட ...
11/09/2025

சிரியா ஜனாதிபதி அஹ்மட் அல்-ஷரா, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது அமர்வு “உயர் மட்ட வாரம்' நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

1967க்குப் பிறகு, ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்கிற முதல் சிரியா ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பும் இவருக்கே உரியதாகும்.

சிரியா பல ஆண்டுகளாக சந்தித்து வந்த தனிமைப்படுத்தலுக்குப் பின், இந்த பங்கேற்பு நாட்டின் சர்வதேச மறுபிரவேசத்திற்கான முக்கியக் கட்டமாக பார்க்கப்படுகிறது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

Address

255H, Danister De Silva Mawatha, Baseline Road
Colombo

Telephone

+94771358599

Website

https://www.youtube.com/@NewsNowTamilLK

Alerts

Be the first to know and let us send you an email when NewsNow தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share