NewsNow தமிழ்

NewsNow தமிழ் விழுமியங்கள் சார்ந்த, நீதியான, நடுநிலையான செய்திகளை வெளியிடும் ஊடகம்!
(1)

NewsNow இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து விரைவான, நம்பகமான மற்றும் பாரபட்சமற்ற செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது. Newsnow Tamil, Newsnow மீடியா நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும் - இது செய்திகள், ஆவணப்படம் மற்றும் விளையாட்டு தகவல்களை உள்ளடக்கியது.

மீண்டும் வன்முறை: பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரி...
19/07/2025

மீண்டும் வன்முறை: பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழப்பு.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

🇧🇩

பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின்  பள்ளிவாசலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல...
18/07/2025

பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறியது.

இப்பிரேரணை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

பலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது விதிக்...
18/07/2025

பலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து கவலை தெரிவித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் பொலிவியா, பிரேசில், சிலி, சீனா, கொலம்பியா, கியூபா, ஹொண்டுரஸ், ஐஸ்லாந்து, நமீபியா, ஸ்லோவேனியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, வெனிசூலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் , இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.

அல்பானீஸ் மற்றும் பிற ஐ.நா. நிபுணர்கள் மீதான சமூக ஊடகத் தாக்குதல்களை இந்த கடிதத்தின் ஊடாக கண்டித்துள்ள குறித்த நாடுகள், இது சர்வதேச சட்ட மீறல்களை அம்பலப்படுத்துபவர்களை இழிவுபடுத்தும் நியாயமற்ற முயற்சிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

‼️

கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து தொடர்பாக AAIB இன் முதற்கட்ட அறிக்கை...
18/07/2025

கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து தொடர்பாக AAIB இன் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்க செய்தித்தாள் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை விமான கேப்டன் துண்டித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தகவலின்படி, காக்பிட் குரல் பதிவில், கேப்டன் சுமித் சபர்வால், இணை விமானி கிளைவ் குண்டரிடம், “நீங்கள் ஏன் எரிபொருள் சுவிட்சை ஆஃப் செய்தீர்கள்?” என்று கேட்க, இணை விமானி, “நான் செய்யவில்லை” கூறிவிட்டு கேப்டன் அமைதியாக இருந்ததாகவும் அமெரிக்க பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்திய அரசாங்கம் இந்தக் கூற்றை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பைலட் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய விமானிகள் சங்கம் (FIP) கண்டனம் தெரிவித்துள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குறைந்தது 63 பேர் பலியானதோடு ஏறக்குறை...
18/07/2025

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குறைந்தது 63 பேர் பலியானதோடு ஏறக்குறைய 300 பேர் காயமடைந்தனர்.

ஜூன் மாதப் பிற்பகுதியில் தொடங்கிய பருவமழையால் பலியானோர் எண்ணிக்கை குறைந்தது 159க்கு அதிகரித்துள்ளது.

கனத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது; கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. வலுவிழந்த கூரைகள் இடிந்துவிழுந்ததால் அதிக மரணங்கள் நேர்ந்தன.

ஜூன் மாத இறுதியிலிருந்து பருவமழையால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 103 பேர் மாண்டனர்; 393 பேர் காயமடைந்தனர்; 120க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

⚠️

அக்பர், பாபர்,அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் என சித்தரித்து NCERT வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தக்கத்தால் சர்ச்சை ஏற...
17/07/2025

அக்பர், பாபர்,அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் என சித்தரித்து NCERT வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதுடன் கடும் எதிர்ப்பலைகளும் உருவாகியுள்ளன.

மத்திய பாடத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) என்ற அமைப்பு பாடப்புத்தகங்களை தயாரித்து வருகிறது.

நடப்பாண்டில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கு ஒரு புதிய புத்தகத்தை NCERT வெளியிட்டுள்ளது. ‘சமூகத்தை ஆராய்தல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் முதல் முறையாக டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ ஆட்சி குறித்து இடம்பெற்றுள்ளது.

‘இந்தியாவின் அரசியல் வரைப்படத்தை மறுவடிவமைத்தல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பாடத்தில் டெல்லி சுல்தான்களின் வளர்ச்சியும் எழுச்சியும், விஜயநகரப் பேரரசு, முகலாயர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களின் எழுச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக பாபரை, நகரங்களின் முழு மக்களையும் கொன்று குவித்த கொடூரமான மற்றும் இரக்கமற்ற வெற்றியாளர் என்றும், ஒளரங்கசீப்பை கோயில்களையும் குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்பரின் ஆட்சியில் பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு கொடூரத்தன்மையாகவும் சகிப்புத்தன்மையாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

காசா அநீதியை தடுப்பதற்கு ஏதாவ து செய்யமுடியாமல் அமெரிக்கா தடுக்கிறது: இது மேற்குலக நாகரீகத்தின் சரிவை காட்டுகிறது. அமெரி...
17/07/2025

காசா அநீதியை தடுப்பதற்கு ஏதாவ து செய்யமுடியாமல் அமெரிக்கா தடுக்கிறது: இது மேற்குலக நாகரீகத்தின் சரிவை காட்டுகிறது. அமெரிக்கா இனியும் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரி அல்ல: டாக்டர் மஹதீர் முஹமட்.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

‼️

'ஷாஸ்' ஹரேடி அரசியல் கட்சி இஸ்ரேலிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது. இருப்பினும், ஷாஸ் கட்சியினர்  அரசாங்கத்திற்கு எதிர...
16/07/2025

'ஷாஸ்' ஹரேடி அரசியல் கட்சி இஸ்ரேலிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது.

இருப்பினும், ஷாஸ் கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்களை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கட்சியில் சேரவோ மாட்டார்கள்.

இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசட்டில் 'ஷாஸ்' கட்சி 11 இடங்களைப் பிடித்தது. நெதன்யாகுவின் கூட்டணி இப்போது 50 இடங்களையே கொண்டுள்ளது.

இது 120 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கிய ஷாஸ் கட்சி கூட்டணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததால் இந்த நிலை ஏற்படலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

அகமது அல் ஷாராவைப் பொறுத்தவரை அவரை ஒழிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம், பாம்பின் தலை  வெட்டப்பட வேண்டும்'' இடாமர்...
16/07/2025

அகமது அல் ஷாராவைப் பொறுத்தவரை அவரை ஒழிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம், பாம்பின் தலை வெட்டப்பட வேண்டும்'' இடாமர் பென்-க்விர் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர்

👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z

👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk

16/07/2025


சுவெய்தாவில் துர்ஸிகள் இஸ்ரேல் கொடியை உயர்த்தினர்

சிரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சுவெய்தா நகரில், துர்ஸி மக்கள் இஸ்ரேலின் தேசியக் கொடியை பொதுவெளியில் உயர்த்தினர்

இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவின் தலைநகரான தமாஸ்கஸை தாக்கியது...                             ‼️
16/07/2025

இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவின் தலைநகரான தமாஸ்கஸை தாக்கியது...

‼️

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when NewsNow தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share