Sooriyan FM

Sooriyan FM 103.6 FM or 103.4 FM Islandwide. www.sooriyanfm.lk

Sooriyan FM, the Number 01 Tamil channel in Sri Lanka.
(544)

சூரியனின் அனுசரணையில் இடம்பெறும் கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி, அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் ஆடிப்பூரம் பால்க...
15/08/2026

சூரியனின் அனுசரணையில் இடம்பெறும் கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி, அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் ஆடிப்பூரம் பால்குட பவனி 2026

15/08/2026

பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை Hits🔥☀️With  Listen Live - https://www.sooriyanfm.lkTune In Now - FM 103.6 | FM 103.4
15/08/2026

விடுமுறை Hits🔥☀️
With

Listen Live - https://www.sooriyanfm.lk
Tune In Now - FM 103.6 | FM 103.4

15/08/2026

கடந்த கால ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களது சுயதேவைகளுக்காகவும், தங்களது குற்றச்செயல்களை மறைத்துப் பாதுகாப்பதற்காகவே அரச ஊழியர்களையும் காவல்துறையினரையும் பயன்படுத்திக் கொண்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே காவல்துறைக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட பல முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் இன்னும் சில தினங்களில் போதைப்பொருள் பின்னணியில் உள்ள பெரிய திமிங்கலங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் அகப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து வருவதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

15/08/2026

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல இலங்கையில் ‘வீட்டுக் காவல்’ (House Arrest) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பல வளர்ந்த நாடுகளிலும் குற்றவாளிகள் அல்லது சந்தேகநபர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை உள்ளது.

எனினும் இலங்கை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக இல்லாததால், கண்காணிப்பு வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு சவால்கள் காரணமாக இத்தகைய திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.

ஒருவரை வீட்டுக் காவலில் வைக்கும்போது, அவரைப் பாதுகாப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பிரத்யேகப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

இந்தநிலையில் உடனடியாகச் சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நாட்டின் சட்ட மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நவீன மாற்று முறைகளை நோக்கி நகர்வது சிறந்த திட்டமாக அமையும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

15/08/2026

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட பலத்த பின்னதிர்வுகளும் கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

15/08/2026

கடந்த காலத்தில் வான் மற்றும் கடல் வழியாகக் கிலோ கணக்கில் பெருமளவு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு, அப்போதைய அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மறைமுக ஆதரவும் அனுசரணையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், விசாரணைகளில் தங்களது பெயர்கள் தெரிந்துவிடுமோ என்ற பயத்திலேயே அரசியல்வாதிகள் சிறைச்சாலை மோதல்களையும் கலவரங்களையும் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகின்றனர்.

கடந்த காலத்தில் சிறைச்சாலைகளுக்குள்ளிருந்தே போதைப்பொருள் வியாபாரம் தடையின்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆட்சியின்கீழ் அது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சதித்திட்டங்களைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எந்தக் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

15/08/2026

அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாகவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமமாகத் தனது கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களும், குற்றமிழைத்தவர்களும், நாட்டைப் பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களும் தற்போதைய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மீது கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

விசாரணை நிறைவடையும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம்.

சிறைத் தண்டனைக்கு பயந்தே எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும், ஊடக சந்திப்புகளையும் நடத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகவும் திட்டமாகவும் பலமாகவும் முன்னோக்கிச் செல்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது.

மக்களை மையமாகக் கொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து இயங்கும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா (விண்ணேற்புப் பெருவிழா)✝️
15/08/2026

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா (விண்ணேற்புப் பெருவிழா)✝️

Address

World Trade Centre, Colombo 01
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sooriyan FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sooriyan FM:

Shortcuts

Share

Category