Vaanalai Media

Vaanalai Media 🎤 "உண்மை தகவல், உன்னதமான அனுபவம்!" 🎤

✨📡 நம்பகமான செய்தி, புதுமையான விழுப்புணர்வு மற்றும் உங்களை ஈர்க்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் – எப்போதும் உங்களுடன்
(2)

🌟வானலை மீடியா – உங்கள் உண்மை ஒலி🌟

📡 நம்பகமான செய்திகள் | விவரமான பகுப்பாய்வு | விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் புதுமை தகவல்கள்!

🎙️ உண்மையை வெளிப்படுத்தும் குரல், உங்கள் தமிழ்மக்களுக்கு அர்ப்பணிப்பு!

🌏 வானலை மீடியா – உங்கள் பார்வை, உங்கள் ஒலி!

வெலிக்கடை சிறையில் பூஜித் - ஹேமசிறி: சிறைக்குள் நடப்பது என்ன..! வெளியாக முக்கிய தகவல்கள்Prisons in Sri LankaPrisonPujith...
13/08/2026

வெலிக்கடை சிறையில் பூஜித் - ஹேமசிறி: சிறைக்குள் நடப்பது என்ன..! வெளியாக முக்கிய தகவல்கள்
Prisons in Sri Lanka
Prison
Pujith Jayasundara

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருவருக்கும் சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜித் ஜயசுந்தர 33176 என்ற கைதி இலக்கத்திலும், ஹேமசிறி பெர்னாண்டோ 3317 என்ற கைதி இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறை நிர்வாக நடவடிக்கைகள் கைதி இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சிறைக்குள் அவர்களுக்கு தென்னைநார் தலையணை, பாய், தகரத்தட்டு மற்றும் தகரக் கோப்பை உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பெற்றுக்கொண்ட போது ஹேமசிறி பெர்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், பூஜித் ஜயசுந்தரவும் கண்களில் கண்ணீரை மறைத்தபடி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்படும் H1 சிறை அறையில், நிமல் என்ற மற்றொரு கைதியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறை வாழ்க்கை காரணமாக கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளான இருவரும், தற்போது நிமலுடன் இணைந்து தியானம் மற்றும் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஹேமசிறி பெர்னாண்டோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வயது மற்றும் உடல்நிலை காரணமாக சிறை வாழ்க்கைக்கு பழகுவதில் அவருக்கு கூடுதல் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூஜித் ஜயசுந்தரவை சிறைக்கு சென்ற முதல் நாளிலேயே அவரது மகனும், ஹேமசிறி பெர்னாண்டோவை அவரது மனைவியும் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இவர்களை போலவே முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். குறிப்பாக மகிந்தானந்த அளுத்கமகே நளின் பெர்னாண்டோ துமித சில்வா, சமிந்த வாஸ் குணவர்த்தன பலர் பேர் இருக்கிறார்கள். இவர்கள் யாரையுமே இவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை உறவினர்கள் பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். எனினும், கிறிஸ்மஸ், வெசாக் மற்றும் சிங்கள-தமிழ் புத்தாண்டு போன்ற விசேட நாட்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
=வானலை news=.

12/08/2026

இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு
Cricket
Sri Lanka Cricket
Indian Cricket Team.

தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியின் துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

03 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார். மேலும், கடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடாத பல வீரர்களும், இரண்டு புதிய வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத துடுப்பாட்ட வீரரான பசிந்து சூரியபண்டா மற்றும் சகலதுறை வீரரான கேசர நுவந்த ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்y போட்டி, ஒகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
=வானலை news=

கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்...
12/08/2026

கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,

எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.

ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன.

அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
=வானலை news=

ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் மைத்துனர் அதிரடியாக கைது!ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சி...
12/08/2026

ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் மைத்துனர் அதிரடியாக கைது!

ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனரே கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.

அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. யாருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கோ அல்லது அவர்களுடைய ஆட்களுக்கோ மட்டுமல்ல, சொந்தக் காரர்களுக்கும் அதுவே நிலைமை.
=வானலை news=

நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்.ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத...
11/08/2026

நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்.

ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

“ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளீர்கள்; நீங்கள் முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள்,” என்று மேலும் கூறிய ஈரானிய வெளியுறவு அமைச்சர், மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து இதை பலமுறை கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஈரானிய வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஈரான் அமெரிக்காவை இந்த அளவுக்கு எதிர்க்கும் என்று யாரும் நினைக்கவில்லை,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி மேலும் கூறினார்.
=வானலை news=

நாளை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களும் காணலாம்!பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச...
11/08/2026

நாளை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களும் காணலாம்!

பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை (12) அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle

இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது அதிகாலை 4.30 மணிக்கும் 5.15 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்வையிட முடியும் என ஆதர் சி. கிளார்க் மையம் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் சனி கோள்களை மிகவும் எளிதாக அடையாளம் காண முடியும். இருப்பினும், புதன் மற்றும் வியாழன் கோள்கள் அடிவானத்திற்கு மிக அருகில் தோன்றுவதால் அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

யுரேனஸைப் இருநோக்கிப் பெருக்கியையும் (binoculars) நெப்டியூனைப் தொலைநோக்கியையும் (telescope) பயன்படுத்தி பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை நிகழ்வினை பார்ப்பதற்கு வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானத்தை நோக்கித் தடைகளற்ற தெளிவான பார்வை கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுமார் 133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரத்தினால் விட்டுச்செல்லப்பட்ட விண்வெளிப் பொருட்களினாலேயே பெர்சீட்ஸ் எரிகல் மழை உருவாகிறது.

இந்த எரிகற்கள் ‘பெர்சியஸ்’ (Perseus) விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றுவது போல் காட்சியளிக்கும். இம்முறை எரிகல் மழையின் உச்சம் அமாவாசை நாளான நாளை வருவதால், இருண்ட வானம் எரிகற்களைப் பார்ப்பதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெளிவான வானிலை நிலவினால், ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வீழ்வதை மக்கள் பார்வையிட முடியும்.
=வானலை news=

சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலைஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரிய...
10/08/2026

சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று(10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் கொலை செய்யப்படுவார் என குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவல் தெரிவிக்கின்றன.
=வானலை news=

10/08/2026
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு: ஈரான் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு.ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உ...
10/08/2026

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு: ஈரான் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தனது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்” என உச்சத் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. 2024 ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பெசெஷ்கியான், கடந்த மே மாத தொடக்கத்தில் கமேனியை சந்தித்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்போது உச்சத் தலைவரின் அலுவலகம் இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடந்த புதன்கிழமை, கமேனியுடன் தற்போது தொடர்புகொள்வது “மிகவும் கடினமாக உள்ளது” என பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அவரது தந்தையை கொன்ற தாக்குதல்களில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதியும் உச்சத் தலைவரும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும், குறிப்பாக தற்போதைய இராணுவ நிலைமை மற்றும் எதிர்கால நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் உச்சத் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈரான், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.
=வானலை news=

Address

120 Street
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanalai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share