Vaanalai Media

Vaanalai Media 🎤 "உண்மை தகவல், உன்னதமான அனுபவம்!" 🎤

✨📡 நம்பகமான செய்தி, புதுமையான விழுப்புணர்வு மற்றும் உங்களை ஈர்க்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் – எப்போதும் உங்களுடன்
(2)

🌟வானலை மீடியா – உங்கள் உண்மை ஒலி🌟

📡 நம்பகமான செய்திகள் | விவரமான பகுப்பாய்வு | விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் புதுமை தகவல்கள்!

🎙️ உண்மையை வெளிப்படுத்தும் குரல், உங்கள் தமிழ்மக்களுக்கு அர்ப்பணிப்பு!

🌏 வானலை மீடியா – உங்கள் பார்வை, உங்கள் ஒலி!

ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்.போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் போதிய ...
10/06/2026

ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என ஜனாதபிதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 'அப்பாச்சி' ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதை சுட்டிக்காட்டி, இந்த அதிரடி முடிவை அவர் அறிவித்தார்.

நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம், அதுவும் மிகக் கடுமையான தாக்குதலாக இருக்கும்" என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு முழு உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஈரான் மீது அமெரிக்கா பலத்த தாக்குதலை நடத்தியுள்ளதை உறுதிப்படுத்திய டிரம்ப், இன்றும் அதே போன்ற கடுமையான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் கடந்த சில மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், இது ஒரு நல்ல ஒப்பந்தம். ஆனால் அவர்கள் காலம் கடத்தி வருகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் கோபமடைந்துள்ள டிரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதையும் நிராகரிக்க மறுத்துவிட்டார்.
=வானலை news=

10/06/2026

விமல் வீரவணசவின் சத்திய கிரகத்தில் கைகலப்பு.
உண்மைகள் வெளியாகும் போது இவர்களுக்கு இருந்துகொள்ள முடியவில்லை.
இதில் வேதனைப்பட்டவர்கள் நாங்கள். இந்த கொடூர செயலால் எனது தாயை இழந்தவன் உனக்கு அந்த வேதனை தெரியாது....
=வானலை news=

சற்றுமுன்னர் ஷான் விஜயலால் டி சில்வா கைது.தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆண...
10/06/2026

சற்றுமுன்னர் ஷான் விஜயலால் டி சில்வா கைது.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
=வானலை news=

10/06/2026
இதெப்படி இருக்கு... இலங்கையின் பிரபல நடிகைக்கு இன்று 99 வது வயது.=வானலை news=
10/06/2026

இதெப்படி இருக்கு... இலங்கையின் பிரபல நடிகைக்கு இன்று 99 வது வயது.
=வானலை news=

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்தது.இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக...
10/06/2026

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்தது.

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரானின் ஆயுதப் படைகள் அறிவித்துள்ளன.

ஆனால் லெபனான் அல்லது அதன் பிரதேசம் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் "மிகவும் நசுக்கும்" பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.
=வானலை news=

18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு.லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக...
10/06/2026

18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு.

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.
=வானலை news=

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று(10.06.2026) கால...
10/06/2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று(10.06.2026) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 84.

2024 மார்ச் மாதம், தனது 48ஆவது வயதில் மாரடைப்பால் அவரது மகன் மனோஜ் காலமானதிலிருந்து பாரதிராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.

அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (10) அதிகாலையில் காலமானார்.

அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
=வானலை news=

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்.இஸ்ரேல் மீண்டும் ஈரானைத் தாக்கினால், இஸ்ரேல் அமெரிக்காவி...
09/06/2026

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்.

இஸ்ரேல் மீண்டும் ஈரானைத் தாக்கினால், இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்கக்கூடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தான் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் அவரிடம், நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், இல்லையென்றால் மிக விரைவில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்' என்று கூறினேன்" என ட்ரம்ப் கூறியதாக முக்கிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பெய்ரூட்டைக் குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், ட்ரம்ப் கூறியதை நெதன்யாகு ஒரு புரிந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும், அவர் தனது விருப்பப்படியே செயல்படுகிறார் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இஸ்ரேலில் அரசியல் ரீதியாகத் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகுவுக்குப் போர் தொடர வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நிலைத்திருக்க ட்ரம்புக்கு இப்போர் முடிவுக்கு வர வேண்டியுள்ளது" என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
=வானலை news=

Address

120 Street
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanalai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share