Eastern News7

Eastern News7 தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது https://www.threads.net/
(1)

ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் தமிழின் முன்னணி இணையதளம்
2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7,
தமிழ்,இணையதளம்.செய்திகளை
முந்தித் தருவதோடு பாரபட்சமின்றி
அரசியல் உள்ளிட்ட பல தரப்பட்ட செய்திகள் அரசியல் கலாசாரம் விளையாட்டு சினிமா செய்திகள்,சிறப்பு நிகழ்வுகள் வழங்கி வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழ் பிரிவான
இந்த இணையத்தளம் உள்ளது.
செய்திகளில் துல்லியம் நடுநிலைமையுடன் செய்த

ிகள் மற்றும் கட்டுரைகளை வழங்குவது ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் குறிக்கோள் இந்த செயல்பாட்டால் தமிழில் அதிக வாசகர்களை கொண்ட இணையதளமாக தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7
உடனடி செய்திகளுக்கு எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழுடன்!!

 #சவளக்கடையில் வீதி விபத்து: சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்✍️மஜீட். ARM​சவளக்கடைப் பகுதியில் இன்...
21/11/2025

#சவளக்கடையில் வீதி விபத்து: சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்

✍️மஜீட். ARM

​சவளக்கடைப் பகுதியில் இன்று 8.30 மணியளவில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 #சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பளவெளி 12 வீட்டுத் திட்டத்தில் துப்பாக்கிச் சூடு!!அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்...
21/11/2025

#சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பளவெளி 12 வீட்டுத் திட்டத்தில் துப்பாக்கிச் சூடு!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பளவெளி -12 வீட்டுத் திட்டப் பகுதியில் இன்று (நவம்பர் 21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுவிந்தன் என்ற நபர் காயமடைந்துள்ளார் காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 #யாழ் நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரார்ப்பணம் இன்று ஆரம்பம்..
21/11/2025

#யாழ் நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரார்ப்பணம் இன்று ஆரம்பம்..

 #தெல்லிப்பழை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாவீரர்களை நினைவேந்தினார்
21/11/2025

#தெல்லிப்பழை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாவீரர்களை நினைவேந்தினார்

 #யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல்.!! #மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்ற...
21/11/2025

#யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல்.!!

#மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (நவம்பர் 21, வெள்ளி) #யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இந்தக் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 #மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி.!!மட்டக்களப்பு மாவட்டம்  #போரதீவுப்பற்று  பிரதேசத்தில் ...
21/11/2025

#மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி.!!

மட்டக்களப்பு மாவட்டம் #போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் #கண்ணபுரத்தில் இன்று (21.11.2025)ஆம் திகதி #தொல்பொருள் திணைக்களம் நட ஆயத்தமான பெயர் பலகையினை அகற்றிய போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன்,உப தவிசாளர் த.கயசீலன், உறுப்பினர்கள்,கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன்,மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் வெல்லாவெளி வட்டார உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொல்பொருள் திணைக்களத்திகு எதிராக கோஷங்களை எழுப்பி விரட்டியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 #மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள்  #கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!!தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகா...
21/11/2025

#மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் #கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!!

தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய #சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி #மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்

21/11/2025

#இறக்காமம் பிரதித் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த NM.ஆஷிக்....

கண்ணீர் மல்க பதவி விலகினார் இறைவன் இதை விடப் பெரிய பதவியை எனக்கு நாடியிருக்கலாம்.

 #நுகேகொடை பொது எதிரணியின் கூட்டத்தில் மக்கள் அலை  #காட்சிகள்      Eastern News7                       fans             ...
21/11/2025

#நுகேகொடை பொது எதிரணியின் கூட்டத்தில் மக்கள் அலை #காட்சிகள்

Eastern News7 fans

21/11/2025

நுகேகொட மாபெரும் பேரணி! களத்தில் இறங்கினார் நாமல்..

 #தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை வெட்டுப்புள்ளிகள்  #வௌியானது (முழு விபரங்கள் இதோ.!!2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து ...
21/11/2025

#தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை வெட்டுப்புள்ளிகள் #வௌியானது (முழு விபரங்கள் இதோ.!!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ரீதியான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசிப்பதன் ஊடாக, குறித்த வெட்டுப் புள்ளிகள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகப் பிரவேசித்து, தமக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலையைத் துல்லியமாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, தரம் 06 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

21/11/2025


டுபாயில் விழுந்து நொறுங்கிய #இந்திய போர் விமானம்.!!

துபாய்யில் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் #விமானக் கண்காட்சியில் #இந்திய போர் விமானம் ஒன்று விழுந்து #விபத்துக்குள்ளகி தீ பிடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

#விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவிலிருந்து வந்த HAL #தேஜாஸ் போர் விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Eastern News7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern News7:

Share