Eastern News7

Eastern News7 தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது https://www.threads.net/

ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் தமிழின் முன்னணி இணையதளம்
2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7,
தமிழ்,இணையதளம்.செய்திகளை
முந்தித் தருவதோடு பாரபட்சமின்றி
அரசியல் உள்ளிட்ட பல தரப்பட்ட செய்திகள் அரசியல் கலாசாரம் விளையாட்டு சினிமா செய்திகள்,சிறப்பு நிகழ்வுகள் வழங்கி வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழ் பிரிவான
இந்த இணையத்தளம் உள்ளது.
செய்திகளில் துல்லியம் நடுநிலைமையுடன் செய்த

ிகள் மற்றும் கட்டுரைகளை வழங்குவது ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் குறிக்கோள் இந்த செயல்பாட்டால் தமிழில் அதிக வாசகர்களை கொண்ட இணையதளமாக தொடர்ந்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7
உடனடி செய்திகளுக்கு எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழுடன்!!

  ஒக்டோபர் முதல் அமுலாகும் புதிய வரி..Ali Express,Temu,Alibaba,மற்றும் ஏனைய E-Commerce சேவைகளுக்கு 18 வீத வரியை ஒக்டோபர்...
07/07/2025


ஒக்டோபர் முதல் அமுலாகும் புதிய வரி..

Ali Express,Temu,Alibaba,மற்றும் ஏனைய E-Commerce சேவைகளுக்கு 18 வீத வரியை ஒக்டோபர் முதல் இலங்கை அரசு விதித்துள்ளது.


07/07/2025


Ali Express,Temu,Alibaba,மற்றும் ஏனைய E-Commerce சேவைகளுக்கு 18 வீத வரியை ஒக்டோபர் முதல் இலங்கை அரசு விதித்துள்ளது!

07/07/2025

#வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தக்குதல் திருகோணமலை அலஸ்தோட்ட பகுதியில்.!!

#வீடியோ காட்சியை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரனைகளை உப்புவெளி #பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றானர்.

இவ்வறான செயல் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்படும் ஆகவே உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு.

Sri Lanka Police

07/07/2025

தடைசெய்யப்பட்ட தீவிரவாத பட்டியலில் இருந்து சிரியாவின் அதிபரையும் அவரின் குழுவையும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது
👇👇

 #ஹக்கீம் கல்முனை கரையோர பாதுகாப்பு தொடர்பாக கரையோர திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் அவசர சந்திப்பு.!!மு.கா தலைவர் ரவூப் ...
07/07/2025

#ஹக்கீம் கல்முனை கரையோர பாதுகாப்பு தொடர்பாக கரையோர திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் அவசர சந்திப்பு.!!

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை கரையோர பிரதேச பாதுகாப்பு தொடர்பாக கரையோர திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் அவசர சந்திப்பு.

கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகோள் –

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்ரவூப் ஹக்கீம் MP, கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்

07.07.2025 – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள், இன்று (07.07.2025) கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு. டேனி பிரதீப் குமாரை திணைக்களத்தில் நேரில் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கல்முனை கடற்கரைப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு அபாயத்தைப் பற்றி அவர்கள் தீவிரமாக சுட்டிக்காட்டியதுடன், அதனாலே ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் இடர்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

கடலரிப்பால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப்பையும், அதன் அருகிலுள்ள வீதியையும் கடல் உலுக்கியுள்ளதோடு, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரமே பலவீனமடைந்துள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் கடற்கரைப் பகுதி மற்றும் ஹுதா பள்ளிவாசல் திடல் பகுதிகளும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த அபாயமான சூழ்நிலையை ஆழமாக கவனித்து, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை உடனடியாக ஒருங்கிணைத்து செயலில் ஈடுபடுத்துமாறு பணிப்பாளர் நாயகத்திடம் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 #யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.!!செய்மதி ம...
07/07/2025

#யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.!!

செய்மதி மூலமாக பெற்ப்பட்ட புகைப்பட ஆதரங்கிள் அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் அனையாளப்படுத்தப்பட்ட பகுதி அகழ்வின் போது மனித எலும்புகூட்டுத் தொகுதி சில அடையாள்ளம் காணப்பட்டுள்ளது.

இன்றுடன் 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என தகவல்.

07/07/2025

எரிசக்தி அமைச்சு 14 சொகுசு மற்றும் பாவனையற்ற வாகனங்கள் பகிரங்க ஏலத்தில்!!
👇👇

07/07/2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 3 சந்தேகநபர்களும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!

07/07/2025

நிந்தவூர் தவிசாளரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடை நிறுத்தம் ACMC அறிவிப்பு!

07/07/2025

தனது முதல் மாத சம்பளத்தை பெற்று 15 நிமிடங்களில் தேசிய பாடசாலைக்கு அன்பழிப்பு செய்த இறக்காமம் பிரதேச சபையின் NPP உறுப்பினர்!!
👇👇

07/07/2025

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!!
👇👇

 #பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.!!இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பா...
07/07/2025

#பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.!!

இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு கொடுப்பனவு ரூ.5,000, அலுவலக கொடுப்பனவு ரூ.100,000, எரிபொருள் கொடுப்பனவு ரூ.97,428.92 மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ரூ.15,000.

அவரது நிகர சம்பளம் ரூ.317,760. 39. சம்பளப் பட்டியலின்படி, மாதாந்திர விலக்குகளில் கேட்டரிங் கட்டணமாக ரூ.1,200, தனிநபர் வருமான வரியாக ரூ.3,728.53 ஆகியவை அடங்கும், மேலும் ரூ.25 முத்திரைக் கட்டணமாக கழிக்கப்படுகிறது.

ஜகத் விதான எம்.பி.யை டெய்லி மிரர் தொடர்பு கொண்டபோது, அவர் தனது முழு சம்பளத்தையும் சமூகப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதால் சம்பளப் பட்டியலை வெளியிட முடிவு செய்ததாகக் கூறினார்.

"நான் ஒரு தொழிலதிபர் என்பதால் எனக்கு சம்பளம் தேவையில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Eastern News7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern News7:

Share