Jet Tamil News

Jet Tamil News Jet Tamil news ஊடாக, இலங்கை , இந்தியச் செய்திகள் போன்றவற்றினை உடனுக்குடன் பார்த்து அறிந்து கொள்ளலாம்

12/05/2026

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமான நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமான நன்றி தெரிவிப்பு தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜ...
12/05/2026

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் மனப்பூர்வமான நன்றி தெரிவிப்பு

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது 'எக்ஸ்' பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில், "இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளன" என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்து, தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் வாழ்த்துக்குத் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், "கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்.

உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே, சர்வதேசத் தலைவர்களுடன் இணக்கமான உறவை விஜய் வெளிப்படுத்தியிருப்பது, அவரது முதிர்ச்சியான அரசியலைக் காட்டுவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வி.சி.க தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்த முதல்வர் விஜய்!
12/05/2026

வி.சி.க தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்த முதல்வர் விஜய்!

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இராமநாதபுரத்தைச் சே...
12/05/2026

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே, தமிழக முதலமைச்சர் விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடும் நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் சேர்த்து மொத்தம் 60 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரமான 264 படகுகள் இலங்கை வசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அவற்றை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறித் தொடரும் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு வெளியுறவுத்துறை சார்ந்த ஒரு விவகாரத்தில் விஜய் எடுக்கும் முதல் முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி பவனி நல்லூரிலிருந்து ஆரம்பம்முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுகளைச் சுமந...
12/05/2026

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி பவனி நல்லூரிலிருந்து ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஊர்திப் பவனி, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12.05.2026) காலை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

பொதுச்சுடரேற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட பின் இந்தப் பயணம் தொடங்கியது. இந்த ஊர்தியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, மக்களின் அஞ்சலிகளைப் பெற்றுக்கொண்டு, இறுதியாக வரும் மே 18-ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளது.

ஊர்திப் பவனி ஆரம்ப நிகழ்வின் போது, தியாக தீபத்தின் நினைவிட முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் மக்கள் பட்ட பட்டினியையும், வலிகளையும் இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு மத்தியில் புறப்பட்ட இந்த ஊர்திப் பவனியில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

12/05/2026

IUML அலுவலகத்திற்கு வருகை தந்து காதர் மொகிதீனிடம் வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்

12/05/2026

மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பின்னணியில் அநுர வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதியோ, கிராம சேவையாளரோ.. சட்டத்திற்கு அனைவரும் சமம்! - மகிந்த விசாரணை பின்னணியில் அநுரவின் அதிரடி!முன்னாள் ஜனாதிபதி...
12/05/2026

ஜனாதிபதியோ, கிராம சேவையாளரோ.. சட்டத்திற்கு அனைவரும் சமம்! - மகிந்த விசாரணை பின்னணியில் அநுரவின் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.

இந்தச் சூழலில் அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, "நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அல்லது ஒரு கிராம உத்தியோகத்தராக இருந்தாலும், அனைவரும் சட்டத்திற்கு கீழேயே இருக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிலவிய 'அதிகாரம் இருந்தால் தப்பிக்கலாம்' என்ற கலாசாரம் மாற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு குற்றச் செயல் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பதோ அல்லது வாக்குமூலம் பெறுவதோ பாரதூரமான குற்றம் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் அதிகாரம் படைத்தவர்களிடம் விசாரணை நடத்துவது ஏதோ மாபெரும் குற்றம் என்பது போன்ற மாயையை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாகச் சாடினார்.

"ஏதேனும் ஒரு சம்பவத்தில் எனது பெயர் இருந்தால், என்னிடமும் விசாரணை நடத்துவதில் தவறில்லை" எனத் தனது வெளிப்படைத்தன்மையையும் அவர் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தனது அரசு பின்வாங்காது என்பதைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் 'A' அணியில் சஜிந்தினி! - பந்துவீச்சில் மிரட்டத் தயாராகும் தமிழ் வீராங்கனை!மன்னார் புனித பற்றிமா மகா வி...
12/05/2026

இலங்கை கிரிக்கெட் 'A' அணியில் சஜிந்தினி! - பந்துவீச்சில் மிரட்டத் தயாராகும் தமிழ் வீராங்கனை!

மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சதீஸ்குமார் சஜிந்தினி, இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய திறன் தேடல் திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்.

23 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் குழாமில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த இவர், தற்போது இலங்கை மகளிர் 'A' அணிக்குள் நுழைந்துள்ளார்.

இவரது வேகம் மற்றும் பந்துவீச்சுத் திறமை குறித்துப் புகழ்ந்துள்ள பயிற்றுநர் ஹேமன்த தேவப்ரிய, அனுபவங்கள் மூலம் சஜிந்தினி இன்னும் முன்னேற்றம் காண்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து மகளிர் 'A' அணிக்கும், இலங்கை 'A' அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

சத்யா சந்தீப்பனி தலைமையிலான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமில் சஜிந்தினி வேகப்பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஷ்மி குணரட்ன போன்ற நட்சத்திர வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடப் போகும் சஜிந்தினி, இத்தொடரில் தனது முத்திரையைப் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நடத்துவதில் திமுக சீனியர்!“நானும் முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.ஆனால் ஆட்சி அனுபவத்தில் திமுக மூத...
12/05/2026

அரசு நடத்துவதில் திமுக சீனியர்!

“நானும் முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.
ஆனால் ஆட்சி அனுபவத்தில் திமுக மூத்த கட்சி; எங்கள் அனுபவங்களை பகிரத் தயாராக இருக்கிறோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12/05/2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Address

Soysapura
Colombo
10350

Alerts

Be the first to know and let us send you an email when Jet Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share