Jet Tamil News

Jet Tamil News Jet Tamil news ஊடாக, இலங்கை , இந்தியச் செய்திகள் போன்றவற்றினை உடனுக்குடன் பார்த்து அறிந்து கொள்ளலாம்

24 மணிநேரத்தில் சீரற்ற காலநிலையின் கோர தாக்கம்: 6 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் பாதிப்புநாட்டை பாதித்துள்ள சீரற்ற கா...
04/08/2026

24 மணிநேரத்தில் சீரற்ற காலநிலையின் கோர தாக்கம்: 6 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், கினிகத்ஹேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. முதலில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

மோசமடையும் வானிலை: களனி ஆற்றுப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை!நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக...
03/08/2026

மோசமடையும் வானிலை: களனி ஆற்றுப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என்றும், ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் வெள்ளம் தேங்கக்கூடிய வீதிகள் வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக மழை தொடரும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதிகள் குறித்து விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சுங்கத்துறையின் முக்கிய அறிவிப்புவிமானம் அல்லது வேறு எந்த வழியிலும்...
31/07/2026

பொதிகள் குறித்து விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சுங்கத்துறையின் முக்கிய அறிவிப்பு

விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் வெளிநாடு பயணம் செய்யும் போது, பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப்பொருட்களை எந்த சூழ்நிலையிலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என இலங்கை சுங்கத்துறை பொதுமக்களுக்கும் விமான பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

போ**தைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்துவதற்காக, அறியாத பயணிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

30/07/2026

திடீர் விஜயம்! பூட்டான் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீர் விஜயமாக பூட்டான் நாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபருக்கு உதவியதாக 24 வயது இளைஞர் கைதுவத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை...
30/07/2026

வத்தளை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபருக்கு உதவியதாக 24 வயது இளைஞர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30/07/2026

104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் நாட்டை வந்தடைந்தன; பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

30/07/2026

வெடிக்குமா உலகப் போர்? ஈரான் மீது அமெரிக்காவின் கடும் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் மீது சக்திவாய்ந்த இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

என்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதல்ல – அரசியல் சவால் விடுத்த நாமல் ராஜபக்சஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உ...
30/07/2026

என்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதல்ல – அரசியல் சவால் விடுத்த நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கீரிமலை குப்பை மேட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு – புகையால் மக்கள் அவதியாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ...
29/07/2026

கீரிமலை குப்பை மேட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு – புகையால் மக்கள் அவதி

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் மர்ம நபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தால், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து புகை பரவி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வலி. வடக்கு பிரதேசத்தின் மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கல் அகழப்பட்டதால் உருவான பாரிய குழிகளை, கழிவுகளை கொட்டி மூடும் சுகாதார நில நிரவுகைத் திட்டம் 2019ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அண்மைக் காலமாக வலி. தெற்கு பிரதேச சபையினரும் கடற்படையினரும் டிப்பர் வாகனங்கள் மூலம் அந்தக் குழிகளுக்குள் மீண்டும் கழிவுகளை கொட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கடந்த ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில், அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தத் தீர்மானத்தையும் மீறி வலி. தெற்கு பகுதியில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, வலி. வடக்கு பிரதேச சபையின் சுகாதாரக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது குப்பைகளை கொட்ட வந்த கடற்படையின் டிப்பர் வாகனம் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (28) காலை அடையாளம் தெரியாத குழுவொன்று அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அடர்ந்த புகை பரவி அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் – பொலிஸார் விசாரணையாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்...
29/07/2026

யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் – பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Address

Soysapura
Colombo
10350

Alerts

Be the first to know and let us send you an email when Jet Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share