03/08/2026
இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 5 பேர் பலி, 41 மாயம்
ஜாவா கடலில் உள்ள மதுரா தீவுக்கு அருகே, பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 271 பேரை ஏற்றிச் சென்ற 'கே.எம். முதியாரா செந்தோசா 2' என்ற பயணிகள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் இருந்து 225 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமற்போயுள்ளவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.