22/04/2026
பெருந்தோட்ட மக்களை ஒடுக்க ‘கறுப்பு படை’?
இரத்தினபுரி மாவட்டம், காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடொன்றை கறுப்பு ஆடையில் வந்த கும்பலொன்று தாக்கி தரைமட்டமாக்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் மகன் நிர்மாணித்த தற்காலிக குடியிருப்பே இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தோட்ட காணியில் அத்துமீறி வீடமைத்திருந்தால்கூட அதனை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். அத்துமீறிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து சட்டம், ஒழுங்கை கறுப்பு கும்பல் கையில் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது யார்?
எதற்காக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களை அடித்து, கத்தி, பொல்லுகளுடன் வரவேண்டும்? இது மலையக மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
பெருந்தோட்டப்பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள் இருந்தாலும், சில தோட்ட நிறுவனங்கள், தமது அடாவடிகளை நிறைவேற்ற வன்முறை கும்பல்களை வைத்துள்ளனவா என்ற வினா எழுகின்றது.
தோட்ட நிர்வாகம் இந்த கும்பலை அனுப்பவில்லையெனில், அதனை அனுப்பியது யார்?
இதன் பின்புலம் என்னவென்பது பற்றி கண்டறியப்பட வேண்டும்.
( இது விடயத்தில் என்ன நடந்துள்ளது என்பதைவிட, பெருந்தோட்ட மக்களை அடக்கி ஆள்வதற்கு பிரத்தியேக பாதுகாப்பு பிரிவொன்று நிர்வாக தரப்பில் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுக்கின்றது. அந்த சந்தேகம் நீக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை கும்பலொன்று கையில் எடுப்பது பேராபத்தாகும்...