Samachcharam

Samachcharam This website for Latest News in Tamil around the world

நடிகர் கமல் ஹாசன் எம்பியாக இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன...
25/07/2025

நடிகர் கமல் ஹாசன் எம்பியாக இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவருடன் மேலும் திமுக உறுப்பினர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

2024 சட்ட சபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தமைக்காக அவருக்கு மேல் சபையில் உறுப்பினர் பதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹாசன் 1954 நவம்பர் ஏழாந்திகதி பிறந்தவர்.

70 வயதான அவர் தேசிய அரசியலில் முதற்தடவையாகப் பிரவேசிக்கின்றார். திரு. கமல் ஹாசன் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதையடுத்து அவரது மகள் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

இன்று பதவியேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை! என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கம...
24/07/2025

மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை! என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மதுபான விடயத்தில் பெண்களுக்கு சமவுரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்கள் மதுபானம் விற்கவும் சில்லறை விற்பனை நிலையங்களில் மது அருந்தவும் மது உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியவும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் செயற்பாட்டாளரான பேராசிரியை ஒருவரும் மேலும் 14 பேரும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இணக்கத்தின் அடிப்படையில் வழக்கை முடிவுறுத்தியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் பெண்கள் மதுபானத்தைக் கொள்வனவு செய்ய முடியும்; சில்லறை விற்பனை நிலையங்களில் மது அருந்த முடியும்; மதுபான உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் – 2018இல்- பெண்கள் மது விற்கவும் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியவும் விற்கவும் தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி 15 பேர் கொண் பெண்ணுரிமை அமைப்பு அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2018 ஜூலை ஒன்பதாந்திகதி உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்பிரகாரம் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராசா, மகிந்த சமயவர்தன, மேனகா விஜேசுந்தர ஆகியோர் இந்த மனுவை நிராகரித்து மேற்கண்ட அடிப்படையில் சமரசம் செய்துவைத்தனர்.

அப்போதைய நிதியமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர, நிதியமைச்சின் செயலாளர், அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிபபிடப்பட்டிருந்தனர்.

மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை என்ற அடிப்படையில் பழைய வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தி வௌியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய பெண்களுக்கும் மதுபான விடயத்தில் சட்டரீதியாக சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு! 163பேருக்குக் காயம்!!பங்களாதேஷில் நேற்றுப் பகல் (21) இரண்...
22/07/2025

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு! 163பேருக்குக் காயம்!!

பங்களாதேஷில் நேற்றுப் பகல் (21) இரண்டு மாடிப் பாடசாலை கட்டடத்தின் மீது அந்நாட்டுப் போர்ப் பயிற்சி விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது.

இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் என 26பேர் உயிரிழந்தனர். விமானியான விமானப் படை வீரரும் உயிரிழந்தார்.

விமானம் பறக்க ஆரம்பித்த சில நொடிகளில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது விமானி அதனை வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் ஆனால், விமானம் பாடசாலையில் வீழ்ந்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எயார் இந்திய விமான விபத்தும் ஒரு கல்லூரியில் வீழ்ந்து தீப்பிடித்தது. அதேபோல், பங்களாதேஷிலும் கல்லூரியில் விமானம் வீழ்ந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து இன்று அங்குத் தேசிய துக்க தினம் அனுட்டிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் இந்தியாவின் மும்பையிலும் அமெரிக்காவிலும் இரண்டு விமான விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துளளன.

தமிழ்நாட்டிலிருந்து மலைநாட்டுக் குயில் ஸ்நேகா நாடு திரும்பியது!தமிழ்நாட்டில் சரிகமப இசைப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்ற...
20/07/2025

தமிழ்நாட்டிலிருந்து மலைநாட்டுக் குயில் ஸ்நேகா நாடு திரும்பியது!

தமிழ்நாட்டில் சரிகமப இசைப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய மலைநாட்டுக் குயில் செல்வி ஸ்நேகா இன்று நாடு திரும்பினார்.

அவரை வரவேற்பதற்காக மலைநாட்டின் போராளிச் சிங்கங்களும் ஊடகப் பெருந்தகைகளும் படையெடுத்திருந்தனர்.

தங்கை ஸ்நேகா எதிர்காலத்தில் மலைநாட்டுக் குயிலாக அன்றி இந்த உலகின் தமிழ்க் குயிலாக இசைபரப்ப சமாச்சாரத்தின் வாழ்த்துகள்!

பாடகர் ஶ்ரீனிவாஸ் யாழ் வருகை தந்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதகான பேருந்தை வாங்குவதற்கு ந...
18/07/2025

பாடகர் ஶ்ரீனிவாஸ் யாழ் வருகை தந்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பயணம் செய்வதகான பேருந்தை வாங்குவதற்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

பஸ் வாங்குவதற்குத் தேவையான நிதியை இசை நிகழ்வின் மூலமாக சேகரிப்பதற்காக பாடகர் ஶ்ரீனிவாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் குப்பை வண்டி அரசியல்!இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில...
16/07/2025

இலங்கை தமிழரசுக் கட்சியின் குப்பை வண்டி அரசியல்!

இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை.

அதனால், அவர்கள் இன்று குப்பை வண்டியில் மாவட்ட ஒருஙகிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியள் ராசமாணிக்கம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தலைவர்களின் வாகனங்களைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தமது கட்சி உறுப்பினர்கள் அவ்வாறு வருகை தந்ததாக் குறிப்பிட்டுள்ள ராசமாணிக்கம், தேசிய மக்கள் சக்தி கைப்பற்றாத சபைகளை ஒடுக்கும் அரசின் நோக்கம் தெளிவாகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

விமானி தற்கொலை என்பது அபத்தம்! விமானிகள் சங்கம் மறுப்பு; கண்டனம்!ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உ...
15/07/2025

விமானி தற்கொலை என்பது அபத்தம்! விமானிகள் சங்கம் மறுப்பு; கண்டனம்!

ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில், விமானத்தின் இயந்திர எரிபொருள் சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட போதிலும், மனிதத் தவறே விபத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை இரண்டு பெரிய வர்த்தக விமானிகள் சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு ஜூலை 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி நடந்த விபத்துக்கான எந்தவொரு முடிவையும் வெளியிடவில்லை அல்லது யாருடைய தவற்றையும் சுட்டிக்காட்டவில்லை.

ஆனால், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை நிறுத்தினார் என்று கேட்டதாகவும், அதற்கு இரண்டாவது விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

விமானிகளுக்கு இடையேயான விமானியறை உரையாடல் குறித்த மேல்விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், “ஊகக் கதைகளால், குறிப்பாக விமானி தற்கொலை என்ற பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக” இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் கூறியது.

“இந்தக் கட்டத்தில் அத்தகைய கூற்றுக்கு எந்த அடிப்படையுமில்லை,” என்று அது ஜூலை 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், “சம்பந்தப்பட்ட தனிநபர்கள், குடும்பங்களின் உணர்வுகளை இது பொருட்படுத்தவில்லை..

“சரிபார்க்கப்பட்ட ஆதாரம் இல்லாமல் விமானி தற்கொலை என்று சாதாரணமாகக் கூறுவது நெறிமுறை சார்ந்த அறிக்கையின் பெரும் மீறல், இந்தத் தொழிலின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி,” என்றும் அது தெரிவித்தது.

800 உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு விமானிகள் அமைப்பான இந்திய விமானிகள் சங்கம் (Alpa India), விசாரணையைச் சுற்றியுள்ள ‘ரகசியத்தன்மை’ குறித்து விசாரணை நிறுவனத்தைக் குற்றம் சாட்டியதுடன், ‘தகுதியான பணியாளர்கள்’ இதில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறியது.

ஏமனில் மரண தண்டனையிலிருந்து கேரள தாதியைக் காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம்!16ஆம் திகதி தூககு! 14ஆம் திகதி வழக்கு!!ஏமனில் மரண...
12/07/2025

ஏமனில் மரண தண்டனையிலிருந்து கேரள தாதியைக் காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம்!
16ஆம் திகதி தூககு! 14ஆம் திகதி வழக்கு!!

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரளாவைச் சேர்ந்த தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏமனில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இந்த மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக நடவடிக்கை மன்றம் என்ற அமைப்பின் சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் முடிவில், நிமிஷா பிரியாவுக்கு 2020இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 202ஈல் நிராகரிக்கப்பட்டது.

தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலை​யில் பிரியாவுக்கு சட்​ட​பூர்​வ​மாக உதவ அனைத்துலக நடவடிக்கை மன்றம் சார்​பில் வழக்​கறிஞர் சுபாஷ் சந்​திரன் உச்ச நீதி மன்​றத்​தில் வியாழக்கிழமை முன்னிலையானார்.

அப்​போது, நிமிஷா பிரி​யாவைக் காப்​பாற்​று​வதற்​கான அரசதந்திர வழிகளை மத்​திய அரசு விரைந்து ஆராய வேண்டும் என்று உச்​ச நீ​தி​மன்​றத்​தில் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்​து, இரண்டு நீதிபதிகள் அடங்​கிய அமர்வு இந்த வழக்கு ஜூலை 14ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தது.

இந்த வழக்கில், ஷரி​யத் சட்​டத்​தின்கீழ் இறந்​தவரின் குடும்​பத்​துக்கு இழப்பீடு வழங்கு​வதன் மூலம் குற்​ற​வாளி மன்​னிக்​கப்​படலாம். இந்த அடிப்படையில் தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த கிங்கொங் மகளுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் கிங்கொங் மகளின் தி...
11/07/2025

திருமண பந்தத்தில் இணைந்த கிங்கொங் மகளுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் கிங்கொங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங்காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் எனப் பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

‘போக்கிரி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட படங்களில் வடிவேலு உடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் பிரபலம்.

இவர் தனது மகளின் திருமணத்துக்காக கடந்த சில நாள்களாக தமிழின் முன்னணி நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை பலருக்கும் அழைப்பிதழ் வைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற கிங்காங் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

கிங்கொங் மகளுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்தபோது முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கிங்காங் மகள் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதப்படையினரை அழைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.ஜனாதிபதியின் விசேட அ...
08/07/2025

நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதப்படையினரை அழைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட அறிவிப்புக்கு அமைய நாடளாவிய ரீதியில் அமைதியை உறுதிப்படுத்த படையினர் பாதுகாப்புக் கடமையில் அமர்தப்படுவார்கள்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரட்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

08/07/2025

மழை பொழிந்தால் பயிர் விளையும்!
சொல் பொழிந்தால் உயிர் விளையும்!
மழையும் சொல்லும் ஒன்றே!

இரண்டு நாளில் சிறுவர்கள் ஐவர் நீருககுப் பலி!நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொல...
07/07/2025

இரண்டு நாளில் சிறுவர்கள் ஐவர் நீருககுப் பலி!

நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற இந்தச் சிறுவர்கள் இன்று பாடசாலை முடிந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதுர்.

மதிய உணவு எடுத்துக்கொண்டதன் பின்னர் இவர்கள் நீராடச் சென்றதாகவும் அப்போது இருவர் நீரில் மூழகியதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பத்து வயர் நிரம்பிய சிறுவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று நேற்று மட்டக்களப்பு வாகரை - பனிச்சங்கேணி வாவியில் நீராடிய சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கிப் பலியாகினர்.

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94751682995

Alerts

Be the first to know and let us send you an email when Samachcharam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samachcharam:

Share

Category

உண்மையின் சாளரம்

நாட்டு நடப்புகளையும் நடுநிலைச் செய்திகளையும் உடனுக்குடன் வழங்குவதற்கான இணையத்தளம். உங்களின் பங்களிப்பையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

தொடர்புக்கு [email protected]