Kandy Metro News

Kandy Metro News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kandy Metro News, Media/News Company, Colombo.

“டீப் ஸ்டேட்” (Deep State) எனப்படுவது, மக்களது ஆணையுடன் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும், கண்...
25/02/2026

“டீப் ஸ்டேட்” (Deep State) எனப்படுவது, மக்களது ஆணையுடன் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும், கண்களுக்கு புலப்படாத ஒரு பொறிமுறை அமைப்பாகும்.

அமெரிக்காவில், டீப் ஸ்டேட் யூத-அமெரிக்க வர்த்தக உயர்வர்க்கத்தினரால் வழி நடத்தப்படுகின்றது.

இந்தியாவில், அது உயர்மட்ட அரச நிர்வாக அதிகாரிகளால் இயக்கப்படுகிறது.

பாகிஸ்தானில், அது மூத்த இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கில் உள்ளது.

இந்த நாட்டில் டீப் ஸ்டேட்டிற்கு நீண்ட வரலாறு கிடையாது. வடக்கு–கிழக்கில் புலிகளுக்கெதிராக யுத்தம் செய்யும் காலத்தில் இத்தகைய அமைப்பு இருக்கவில்லை; அது நாட்டின் கஜானாவை சுத்தம் செய்யும் காலகட்டத்திலே உருவானதாகும்.

2009 க்குப் பின்னர் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில இராணுவ அதிகாரிகள் ராஜபக்சக்களிடம் அரசியல் பாதுகாப்பை நாடினர்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய அரசு யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கவில்லை. அதனால், இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இராணுவ அதிகாரிகள் பின்வரும் தரப்புகளுடன் ஒரு கூட்டணிக்குள் வந்தனர்;

1. இராணுவ அதிகாரிகள்
2. காவி தரித்தவர்கள்
3. பக்கச் சார்பான ஊடகப் பிரதிநிதிகள்
4. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்
5. வர்த்தகர்கள்

சிங்கள-பௌத்த மேலாதிக்க சிந்தனை இவர்களின் பொதுவான கருத்தியலாக விளங்கியது.

2015 இல் தோல்வியை தழுவிய ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்தை தம்வசப்படுத்திக்கொள்ள இந்த கும்பலை பயன்படுத்தினர். இந்த குழுவினரை பயன்படுத்தி “புலிகள் மீண்டும் எழுச்சி பெறுகின்றனர்”, “மின்சார கதிரைகளுக்கு கொண்டு செல்கின்றனர்” என்ற நாடகங்களை அரங்கேற்றினர்.

சிவாஜிலிங்கம் போன்ற செல்வாக்கிழந்த தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தி கொல்லப்பட்ட பிரபாகரனுக்கு மீண்டும் உயிரூட்ட முனைந்தனர்.

ஒருபுறம், சிவாஜிலிங்கத்தை ஜெனீவா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பினர். மறுபுறம், அவரோடு மோதலை உருவாக்க மற்றுமொரு (Sri Lanka Global Forum) குழுவினரையும் ஜெனீவாவுக்கு அனுப்பினர்.

அங்கே இவ்விரு தரப்புகளுக்கும் இடையில் விராந்தைகளிலும் மூலை முடுக்குகளிலும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. தெரண போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் இந்நிகழ்வுகளை பெருமிதத்துடன் மக்களுக்கு பெரிதுபடுத்திக் காட்டின.

இந்த இரு அணியினரும் ராஜபக்சக்களின் கையாட்களாகத்தான் செயல்பட்டனர் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. தெரண மக்கள் மயப்படுத்துவது நாடகம் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவில்லை.

போருக்குப் பின்னர் திலித் ஜயவீரவால், மஹிந்தவுக்கு தெரியாமல் கோட்டாபயவை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிக்கு சிங்கள-பௌத்த சுயநலவாத மேலாதிக்கச் சிந்தனை கொண்ட (டீப் ஸ்டேட் போன்ற) குழுக்களின் ஆதரவு பெறப்பட்டது.

திலித், ராஜபக்ச குடும்பத்தினரின் விருப்பத்தையும் மீறி இந்த திட்டத்தை முன்கொண்டு சென்றார்.

LTTE அச்ச சூழலுக்கு புறம்பாக, முஸ்லிம் அச்ச நிலவரமும் திலித்தினால் உருவாக்கப்பட்டது. அப்துல் ராஸிக்கை உபயோகப்படுத்தி முஸ்லிம் அச்சக்களம் உருவாக்கப்பட்டது.

அலுத்கம, திகன சம்பவங்கள், ஹலால் புறக்கணிப்பு, “வந்தக் கொத்து” சர்ச்சை, ஈஸ்டர் தாக்குதல் போன்றவை தனித்தனியான நிகழ்வுகள் அல்ல; கோட்டாபயவின் அரசியல் பிரவேசம் தொடர்பான திரைப்பட காட்சிகளின் பாகங்களாகும்.

ஒரு நெருக்கடிச் சூழலை உருவாக்கி அதிகாரத்திற்கு வந்த கோட்டாபயவுக்கு தொடர்ந்து வந்த கொரோனா உருவாக்கிய நெருக்கடிச் சூழலுடன் இறுதி ஊர்வலம் செல்ல வேண்டிய நிலை வந்தது.

கோட்டாவின் கப்பல் சூராவளியில் சிக்கி தத்தளிக்கும் போது திலித் அதிலிருந்து குதித்துவிட்டார். அதுமட்டுமன்றி, அவர் சிங்கள பௌத்த சுயநல, மேலாதிக்கவாத சிந்தனைகொண்ட குழுக்களுக்கு தலைமை வழங்கினார். ராஜபக்ச முகாமை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலும் அவர் பின் நிற்கவில்லை.

இலங்கையில் “டீப் ஸ்டேட்” எனப்படுவது தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக வயிற்றுப் பிழைப்புக்கானதும் மற்றும் சிங்கள-பௌத்த சுயநலவாதத்தை அடிப்டையாகக் கொண்டதுமானதொரு குற்றவாளிக் கும்பலேயாகும்.

மூலம் (சிங்களத்தில்) : Keerthi Ratnayake

300,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
24/02/2026

300,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

AL Ameenஉலகில் மிகவும் அமைதியான இடங்கள் நூலகமும், அண்டார்டிகாவும் தான் என மக்கள் கூறுவார்கள். ஆனால்... என்னைப் பொறுத்தவர...
24/02/2026

AL Ameen

உலகில் மிகவும் அமைதியான இடங்கள் நூலகமும், அண்டார்டிகாவும் தான் என மக்கள் கூறுவார்கள். ஆனால்...

என்னைப் பொறுத்தவரை, இந்தியா தோற்கும் போது அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம் தான் உலகின் மிக அமைதியான இடம்!”

-முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டோல் கிண்டல்

நாங்க சரி 25000 பேர் தான் போயிருந்தோம் ஆனா அங்க 90000 பேர் போயிருந்து அசிங்கப்பட்டுட்டு இருக்கானுங்க 😂🥹
24/02/2026

நாங்க சரி 25000 பேர் தான் போயிருந்தோம் ஆனா அங்க 90000 பேர் போயிருந்து அசிங்கப்பட்டுட்டு இருக்கானுங்க 😂🥹

வயது - 16 .ஏற்கனவே நகை கொள்ளை ஒன்றில் ஈடுப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தவன்.அதனால் Double Qualification.இப்போது மர்ஹூம் ல...
24/02/2026

வயது - 16 .

ஏற்கனவே நகை கொள்ளை ஒன்றில் ஈடுப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தவன்.
அதனால் Double Qualification.

இப்போது மர்ஹூம் லத்தீப் அவர்களை கொன்றுள்ளான் .

தனது பாட்டனார் வயதுடைய ஒருவரை (72) , லாவகமாக ஹயருக்கு என அழைத்து சென்று , கொல்வதற்கு முன்பே மர்ஹூம் லத்தீப் அவர்களது வங்கி அட்டையையும் வாங்கி இருக்கிறான் .

பிறகு , லத்தீப் அவரது ஆட்டோவிலேயே வந்து , நண்பர்களை அழைத்து சென்று Dinner Party .
அதுவும் மர்ஹூம் லத்தீப் அவர்களது ATM மூலமே பணம் எடுத்து 😡.

கற்பனை செய்து பாருங்கள், லத்தீப் அவர்கள் தான் தான் இறப்பதற்கு முன்பு , தனது ATM அட்டையின் இரகசிய இலக்கத்தை வழங்கி இருக்கனும் .
அந்த இரகசிய இலக்கத்தை எப்படி வழங்கிருப்பார் .

என்னிடம் எதை வேண்டுமானாலும் எடுங்க , உயிரோடு விடுங்க என்ற ஒரு மன்றாட்டமாக இருந்திருக்கலாம்.
அப்படியே இரகசிய இலக்கம் வழங்கப்பட்டிருக்கலாம் .

ஒருவரை திட்டமிட்டு கடத்தி , காட்டுக்குள் வைத்து கொன்று விட்டு , அவரது ஆட்டோவில் வந்து நண்பர்களை ஏற்றி கொண்டு , அவரது சல்லியிலேயே சாப்பிட்டு மகிழ்ந்துள்ளான் எனில் ????

இவனுக்கு தான் மனநோயாம் , அதனால் இவன் விடுதலையாகனும் என்ற மன்றாட்டங்கள் வேறு .

சிறுவன் தானே , மிஞ்சி மிஞ்சி போயின் , சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்புவார்கள் என்ற கதைகள் வேறு .

என்னை பொறுத்தவரை, இவனை போன்றோரை ஜெயிலுக்கு அனுப்பவும் கூடாது , சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பவும் கூடாது .
(இவனெல்லாம் ஆயுள் வரை அனுபவிக்க வைக்கனும்).

நோன்பு நேரம் , அநியாயமாக இறந்து போன சகோதரர் லத்தீப் அவர்களுக்கு, இறைவன் சுவனபதியை வழங்கட்டுமாக !

ஐந்து வருடங்கள் முன்பு , இதே சுற்று வட்டத்திலே , ஒரு கூட்டு களவாணிகளால் , ஒரு சகோதரியும் கொலை செய்யப்பட்டார்.
இது பலருக்கு மறந்து போனது அல்லது தெரியாது .

எல்லாமே போதை தலைக்கேறியதின் விளைவுகள்.

குறைந்தப்பட்சம் இந்த சுற்று வட்டத்திலே , ஒரு பொலிஸ் அரணையாவது அமைக்க , பொறுப்பு வாய்ந்தோர் முனைவது , இப்போதைக்கு சாலச்சிறந்தது .

23/02/2026

பாலாவி, ரத்மல்யாய பகுதியில் முற்சக்கரவண்டி சாரதியை காெலை செய்த சந்தேகநபர்,

கல்முனையில் 68 வது அரச ஒசுசல  கிளை ஆதம்பாவா எம்.பி இனால் திறந்து வைப்பு !!!---------------------------------------------...
30/12/2025

கல்முனையில் 68 வது அரச ஒசுசல கிளை ஆதம்பாவா எம்.பி இனால் திறந்து வைப்பு !!!
-------------------------------------------------------------------------------

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30.12.2025) கல்முனை பிரதேசத்தில் 68 வது அரச ஒசுசல திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர், வைத்தியர்கள், பிராஜாசக்தி தவிசாளார்கள், கல்முனை பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

කල්මුණේ හි 68 වන රාජ්‍ය ඖෂධ ශාඛාව ආදම්බාව මන්ත්‍රීතුමා විසින් විවෘත කරන ලදී!!
------------------------------------------------------------------------------------

අම්පාර දිස්ත්‍රික් වෙරළ කලාප සංවර්ධන කමිටුවේ සභාපති, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ සාමාජික සහ ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී අබුබකර් ආදම්බාව මහතා විසින් අද (2025.12.30) කල්මුණේ හි දී ශාඛාව විවෘත කරන ලදී.

රාජ්‍ය ඖෂධ සංස්ථාවේ සභාපති, දිස්ත්‍රික් රජයේ නියෝජිත, කල්මුණේ ප්‍රාදේශීය සෞඛ්‍ය අධ්‍යක්ෂ, වෛද්‍යවරුන්, ප්‍රජාශක්ති ගුරුවරුන්, කල්මුණේ ප්‍රාදේශීය ජාතික ජන බලවේගයේ ක්‍රියාකාරීන්, සුභ පතන්නන් සහ මහජනතාව.

The 68th Government Pharmacy Branch in Kalmunai was inaugurated by Athambawa MP !!!
----------------------------------------------------------------------------------

The Ampara District Coastal Region Development Committee Chairman, Constituent Assembly Member and Honorary Member of Parliament, Aboobucker Athambawa, inaugurated the branch in Kalmunai today, Tuesday (30.12.2025).

The event was attended by the Chairman of the Government Pharmacy Corporation, District Government Agent, Kalmunai Regional Health Director, doctors, Prajashakthi teachers, activists of the Kalmunai Regional National People's Power, well-wishers and the public.

- ஆதம்பாவா ஊடக பிரிவு -
- ආදම්බාවා මාධ්‍ය අංශය -
- Athambawa Media Division -

வதந்தியால் மரணித்துப்போன இரு உயிர்கள்!உண்மைச் சம்பவம். 💔😢நவம்பர் 30 இரவு 10:15கம்பளை நகரம்.மீட்பு வேலைகளுக்காக வரும் குழ...
02/12/2025

வதந்தியால் மரணித்துப்போன இரு உயிர்கள்!
உண்மைச் சம்பவம். 💔😢

நவம்பர் 30 இரவு 10:15
கம்பளை நகரம்.

மீட்பு வேலைகளுக்காக வரும் குழுக்களை ஒருங்கிணைப்பது பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் இருந்தோம். அப்போது...

"Dam ஒடஞ்சாம்" என்று சப்தமாக சொல்லியபடி மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அந்தத்தகவல் எப்படியோ நாம் இருந்த இடத்துக்கும் வந்து சேர்ந்தது.

இருந்த இடத்தில் இருந்து ஒரு பத்து அடி ஓடி இருப்பேன். அதன் பின் தான் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

இந்தத் தகவல் உண்மைதானா? (உண்மையைச் சொல்கிறேன். அந்தப் பதற்றத்தில் என் காதில் விழுந்த சப்தம், அனைத்தையும் புரட்டிக்கொண்டு வரும் தண்ணீரின் சப்தம் போன்றே இருந்தது)

உண்மையாக இருந்தால் ஓடித் தப்ப முடியாதே. கொத்மலை அணைக்கட்டு உடைப்பெடுத்தால் முழுத்தண்ணீரும் எட்டு நிமிடத்தில் பேராதனையில் இருக்கும் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. இந்த வேகத்தில் எங்கு ஓட?

மேல் மாடிக்கு ஏறலாமா? அணை உடைந்தால் கட்டிடத்தையே பிடுங்கிக்கொண்டு போகுமே.

இவை அனைத்தையும் கணப்பொழுதில் மனதுக்குள் அசை போட்டுக்கொண்டு அமர்நதிருந்த இடத்துக்கே திரும்பும்போது அங்கிருந்த ஒருவர் நிதானமா பேரிடர் முகாமைத்துவ குழு (Disaster Management Committee - DMC) இன் தொலை பேசி இலக்கம் (117) க்கு அழைப்பெடுத்து குறித்த தகவலை விசாரித்துக்கொண்டிருந்தார்.

"தகவல் பொய்யாம்" சப்தமாக சொல்லி ஓடிக்கொண்டு இருந்தவர்களை நிறுத்தி, நம்பாதவர்களை 117 க்கு அழைப்பெடுக்க வைத்து, குழப்பத்தில் நிதானமிழந்தவர்களை சாந்தப்படுத்தி ஓடி வந்து விழுந்த வயோதிபர்களை அமர வைத்து.... என்று அல்லோலகல்லப்பட்டுக்கொண்டு இருந்தபோது யாரோ ஊர்வாசிகள் மஸ்ஜித்களை அணுகி குறித்த தகவல் போலியானது என்று அறிவிக்க ஏற்பாடு செய்திருநதார்கள்.

இத்தனை நடக்கும்போது கம்பளையில் இருந்த இரண்டு மூத்தவர்களின் இதயங்கள் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் நிரந்தரமாக ஓய்வெடுத்து இருந்தன. (மாரடைப்பால் இறந்துவிட்டனர் - இன்னாலில்லாஹ்)

இந்த வதந்திக்குப் பின்னால் இருந்த நதிமூலம் ரிஷிமூலத்தை தேடிப்பார்த்தால்...

அது கொத்மலை அணையின் வான்கதவுகளில் ஒரு வான்கதவை திறப்பதற்காக எழுப்பிய வழமையான பாதுகாப்பு ஒலி.

வதந்திகள் ஆபத்தானவை.
அவை உயிர்களைக்கூட காவுகொள்ளலாம்.

தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிரயத்தனம் எடுப்போம்.

பதிவு - Husni Jabir

அவரது சிறிய குடும்பம்!💔
02/12/2025

அவரது சிறிய குடும்பம்!💔

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ...
02/12/2025

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம் . சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்.

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும். இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம். ஆனால் நாம் யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும். இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு இன்றிரவு (30) ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது

இதுவும் கடந்து போகும் ☺️🥲University of Peradeniya💔
02/12/2025

இதுவும் கடந்து போகும் ☺️🥲
University of Peradeniya💔

“இன்று இந்த துயரம் நிகழவில்லை என்றால், நாளை கொழும்புப் பல்கலைக்கழக  #பட்டமளிப்பு விழாவில் சிவப்பு மேலங்கியுடன் உங்களை சந...
02/12/2025

“இன்று இந்த துயரம் நிகழவில்லை என்றால், நாளை கொழும்புப் பல்கலைக்கழக #பட்டமளிப்பு விழாவில் சிவப்பு மேலங்கியுடன் உங்களை சந்திக்க முடிந்திருக்கும்…” — இது எங்கள் விரிவுரையாளர் Pavithra Jayawardena கூறிய வரிகள்.

நேற்று உயிர்களை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலபிடியா, கொழும்பு பல்கலையின் International Relations Master Degree மாணவர் ஆவார். நாளை பட்டம் பெற இருந்த அவர், இனி நமக்குப் பாசமிகு நினைவாகவே இருக்கின்றார்.

மக்களுக்காக செய்த அவரது வேலைகள் என்றும் மறக்கமுடியாதது.

அவருடன் இருந்தவர்களையும் அங்கே வீதியில் இருந்தவர்களையும் காப்பாற்ற அவரால் முடிந்ததை செய்தார். இருப்பினும் கண்டதையெல்லாம் vedio செய்ய முனையும் கலாச்சாரம் பெறும் அனாச்சாரம்.

Address

Colombo
20000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy Metro News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share