Kandy Metro News

Kandy Metro News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kandy Metro News, Media/News Company, Colombo.

என்ன சொல்லலாம்
16/10/2025

என்ன சொல்லலாம்

16/10/2025

நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் விமான நிலையத்துக்கு வெளியில் அழைத்துவரப்படும் காட்சி

16/10/2025

செவ்வந்தி விமான நிலையத்தில் .

புதிய சட்­ட­திட்­டங்கள் - ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும்------------------------------...
15/10/2025

புதிய சட்­ட­திட்­டங்கள் - ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும்
---------------------------------------------------

திடீர் மரண விசா­ர­ணைகள் தொடர்­பி­லான புதிய சட்­ட­திட்­டங்கள் சாதா­ரண மக்­களை மேலும் சிர­மப்படுத்தும். அத்­துடன், குறிப்­பாக முஸ்­லிம்­களின் ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும் என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தற்­போது நடை­மு­றையில் உள்ள திடீர் மர­ணங்கள் குறித்து திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­படும் மரண விசா­ர­ணை­களை நீதித்­து­றைக்கு சுமத்தி, ஏற்­க­னவே நெருக்­க­டி­யான பணிச்­சு­மையில் உள்ள நீதவான் நீதி­மன்­றங்­களை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளாக்­க­வேண்டாம் என தேசிய ஷூரா சபை நீதி­ய­மைச்சர் ஹர்ஷ நாண­யக்­கா­ர­விடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மற்றும் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி ரஷீத் எம். இம்­தியாஸ் ஆகியோர் ஒப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குற்­ற­வியல் நடை­முறைச் சட்­டத்தின் பிரிவு 370(3) இன் கீழ், குற்­ற­வியல் உட்­பட குற்றம் கவ­னக்­கு­றைவு பற்­றிய நியா­ய­மான சந்­தேகம் உள்ள சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் நீதவான் நீதி­மன்­றங்­களில் மரண விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற நடை­முறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளின் பணிச்­சு­மையை நீதவான் நீதி­மன்­றங்­களின் மீது திணிக்க வேண்டாம்.

சட்­டத்தை மக்கள் இல­கு­வா­ன­தா­கவும், பொது­மக்­க­ளுக்கு செலவு குறைந்­த­தா­கவும், நீண்­ட­கால சட்ட தாம­தங்­களைக் குறைப்­ப­தான நீதி அமைச்சின் முயற்­சி­களை வர­வேற்­கிறோம். இருப்­பினும், பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வி­ருக்கும் சில புதிய திட்­டங்கள் சட்ட தாம­தங்­க­ளுக்கு மேலும் வழி­வ­குக்கும். அத்­துடன் நீதி­மன்­றங்கள் மூல­மான பிரேத விடு­விப்பு நடை­மு­றை­யா­னது துய­ரத்தில் உள்ள குடும்­பங்­க­ளுக்கு அதிக செலவை ஏற்­ப­டுத்தும்.

99% திடீர் மர­ணங்கள் இயல்­பான மர­ணங்­க­ளா­கவே கடந்­த­கால புள்­ளி­வி­ப­ரங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. எனவே, சந்­தே­கிக்­கு­ம்­ப­டி­யான 1%க்கும் குறை­வான மர­ணங்­களின் விதி­வி­லக்­கான வழக்­கு­க­ளுக்கு மாத்­தி­ரமே தேவைப்­படும் நீதவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் மற்றும் பிரேதப் பரி­சோ­த­னைகளுக்கு (Post Mortems) இந்த 99% ஆன­வர்­களும் உட்­ப­டுத்­தப்­ப­டு­வது நியா­ய­மற்­றது. மேலும் இவ்­வா­றான புதிய சட்­ட­திட்­டங்கள் நடை­மு­றையில் உள்ள இல­கு­வான நடை­மு­றை­மையை விட மேலும் கடி­ன­மாக்­கு­வ­துடன் துய­ரத்தில் உள்ள குடும்­பங்­களை மேலும் சிர­மப்­ப­டு­த்து­கின்­றது. குறிப்­பாக முஸ்­லிம்­களின் ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களில் இவை மேலும் பாதிப்­ப­டை­யச் ­செய்யும்

பிரேத பரி­சோ­த­னைகள் அர­சாங்­கத்­திற்கு அதி­க­பட்ச கூடுதல் நிதியைச் செல­விட வ­ழிவகுக்­கின்­றன. அத்­துடன் துய­ரத்­தி­லுள்ள குடும்­பங்­க­ளுக்கும் கூடுதல் செல­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இறந்த மனித உடல்­க­ளுக்கும் சர்­வ­தேச சட்­டங்கள் மற்றும் வழக்­க­மான மத நடை­மு­றை­களின் கீழ் மரி­யாதை மற்றும் கண்­ணியம் அவ­சியம். எல்லா மதங்­களும் இறந்­த­வர்­க­ளுக்கு கண்­ணி­ய­மான இறுதிச் சடங்­கு­களை வலி­யு­றுத்­து­கின்­றன.

எனவே, அர­சாங்கம் நீதவான் நீதி­மன்­றங்­களை மேலும் சுமைப்­ப­டுத்­தாமல், மாறாக திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களை தொழி­லாளர் பிணக்­குகள் சபையின் ஆணை­ய­ாளர்­க­ளுக்கு இணை­யான வச­தி­க­ளுடன் மேம்­ப­டுத்த வேண்டும். அத்­துடன், புதிய நிய­ம­னங்­க­ளுக்கு நியா­ய­மான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திக்­கேற்ப, தற்­போ­துள்ள சட்­டங்­களில் மாற்­றங்கள் சட்ட தாம­தங்­களைக் குறைத்து, செயல்­மு­றையைச் செலவு குறைந்­த­தா­கவும், திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களை மக்கள் நம்­பக்­கூ­டி­ய­தாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

செவ்வந்தியும், சாவகச்சேரி தக்சியும் விமானத்தில் வரும்போது.......
15/10/2025

செவ்வந்தியும், சாவகச்சேரி தக்சியும் விமானத்தில் வரும்போது.......

15/10/2025

கொழும்பு கொண்டுவரப்பட்டார் செவ்வந்தி...

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் எடுப்பவர்களிடம் ஸ்ரூடியோக்கள் சில அல்லது பல நுட்பமான முறையில் கொள்ளையடிக்கின்றன .போட்டோ எடுக்கு...
15/10/2025

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் எடுப்பவர்களிடம் ஸ்ரூடியோக்கள் சில அல்லது பல நுட்பமான முறையில் கொள்ளையடிக்கின்றன .

போட்டோ எடுக்கும் கட்டணம் ரூபா 700 உம் ஒன்லைனில் படிவம் நிரப்பிப் பதிவதற்கு ரூபா 800 உம் என 1500 ரூபாவை வசூலிப்பதாகக் கூறப்படுகின்றது.

போட்டோ எடுப்பவரிடம் ஏன் எதற்கெனக் கேட்காமல் தங்களுடைய இஸ்ரத்திற்குப் பதிந்து கட்டாயப்படுத்திக் காசு வாங்குவதாகக் கூறுகின்றனர்.

சில ஸ்ரூடியோக்காரர் கொழும்பு அல்லது வவுனியா போகும் செலவைக் கணக்குப் பாருங்களெனக் கணக்கு விடுவதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் போட்டோ 500 ரூபாவுக்கு எடுப்பதாகத் தான் குடிவரவுத் திணைக்களத்துடன் ஸ்ரூடியோக்கள் உடன்படிக்கை செய்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் 200 பேருக்குப் பாஸ்போட் கொடுக்கின்றனர்.

ஆனால் 150 க்கும் குறைவானோர் தான் பெறுவதாக அவதானித்துள்ளேன்.

ஆகவே சாதாரணமாக ஒருவர் பெறும் நிலையிலிருக்க ஒன்லைன் மூலமாகப் படிவம் நிரப்புகிறோமென 800 ரூபா வாங்குவது கொள்ளையிடல் தான்.

யாழ்ப்பாணக் கச்சேரிச் சூழலில் படிவம் நிரப்புவோர் 150 ரூபா கட்டணத்திற்கு நிரப்பிக் கொடுக்கின்றனர்.

அவர்களுடைய வருமானத்தைத் தட்டிப் பறிப்பது மிக அநியாயமானது.

ஆளுநரும், அரசாங்க அதிபரும் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
Copy வேதநாயகம் தபேந்திரன்

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியும்... உதவிக்காக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணும்....சோழர் பரம்பர...
15/10/2025

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியும்... உதவிக்காக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணும்....

சோழர் பரம்பரையில் ஓர் பாதாளம் 💪

கொலை சம்பவத்தின் பின் யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த இஷாரா கடல் மார்க்கமாக இந்தியா போய் அங்கிருந்து நேபாளம் சென்று கடந்த 7 மாதங்களாக அங்கு தங்கியுள்ளார்...

இந்தியா தப்பிச்செல்ல உதவிய JK பாய் (கென்னடி பஸ்தியான்பிள்ளை) எனும் நபரும்... இஷாராவை போன்ற உருவ ஒற்றுமையை உடைய சாவகச்சேரி பகுதியை சேர்ந்த தக்ஸி எனும் பெண்ணும் கூடவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்...

குறித்த யாழ்ப்பாண பெண்ணின் பெயரிலான போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி இஷாராவை ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பிக்க வைப்பதே திட்டமாக இருந்துள்ளது....

🌸 இலங்கையில் நடக்கும் இயற்கையின் அதிசயம்!நாமலும் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வரலாமே? Missed பண்ணிட்டிங்கடா 12 வருடம் காத...
12/10/2025

🌸 இலங்கையில் நடக்கும் இயற்கையின் அதிசயம்!

நாமலும் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வரலாமே? Missed பண்ணிட்டிங்கடா 12 வருடம் காத்திருக்கணும்...!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி (நீலு) மலர்கள் 2100 உயரத்திலுள்ள நுவரெலியா ஹோர்டன் சமவெளியில் தற்போது பெருவளர்ச்சியுடன் பூத்துக்
குலுங்குகின்றன.

ஹோர்டன் பிளெயின்ஸ் தேசியப் பூங்காவின் (Horton Plains National Park) முழு சமவெளியையும் குறிஞ்சி மலர்கள் ஊதா, இளஞ்.சிவப்பு, வெள்ளை, இள நீலம் போன்ற நிறப் போர்வையால் மூடியது போல காணும் காட்சி இயற்கையின் அமைதியையும் புதுப்பிக்கும் வலிமையையும் நினைவூட்டுகிறது.

இதனை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்2026 ஆம் ஆண்டு முதல் அம...
12/10/2025

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்

2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்

புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.

✅ கட்டாய Subjects – 5:

இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:

1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)

2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)

3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)

4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)

5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)

🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14

✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:

மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.

Second National Language

Information and Communication Technology

History

Civic Education

Health and Physical Education

Technology :

Tourism and Hospitality Management Technology

Design and Engineering Technology

Livestock Product Technology

Artistic Product Technology

Entrepreneurship and E-commerce Technology

Geography

Aesthetics Education:

Oriental Music

Western Music

Carnatic Music

Oriental Dance

Bharatha Dance

Western Dance

Drama and Theatre

Art

Entrepreneurship and Financial Literacy

➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.

🔹 GPA (Grade Point Average) முறைமை:

பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.

இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.

✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):

% Marks Range Grade Point

90% - 100% 4.0
80% - 89% 3.7
70% - 79% 3.3
60% - 69% 3.0
50% - 59% 2.7
40% - 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)

👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.

✅ GPA கணக்கீட்டு முறை:

மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:

Mathematics: 3.7

English: 3.3

Mother Tongue: 4.0

Religion: 3.7

Science: 3.0

Optional Subject 1: 3.5

Optional Subject 2: 3.2

📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4

📌 Final GPA = 24.4 / 7 = 3.48

இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.

🔹 GPA முறைமையின் நன்மைகள்:

✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது

✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்

✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது

✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்

✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்

🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:

📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்

📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்

📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.

📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.

🚨🤪எப்படி திமிங்கலம் இப்படி யோசிக்க முடிகிறது 🤪👉அரச காசில கட்டடம் கட்டி அதை வாடகைக்கு எடுத்து அரச காசிலயே அந்த வாடகைய கட்...
12/10/2025

🚨🤪எப்படி திமிங்கலம் இப்படி யோசிக்க முடிகிறது 🤪

👉அரச காசில கட்டடம் கட்டி அதை வாடகைக்கு எடுத்து அரச காசிலயே அந்த வாடகைய கட்ட முடியும்

⭕️சதொச 15,000 சதுர அடி நான்கு மாடி கட்டடத்தை 200 மில்லியன் செலவில் கட்டிய கட்டடம் வெறும் 200,000 மாதம் படி 10 வருட வாடகையில் கொடுக்கிறது.

⭕️மீண்டும் சதொச தனது கிளைக்காக அதே கட்டடத்தின் கீழ் தளத்தை மாதம் 200,000 வாடகையில் பெறுகிறது.

⭕️அதாவது சொந்த முழு கட்டடத்தை 200,000 க்கு கொடுத்துவிட்டு கீழ் தளத்தை மாதம் 200,000 வாடகையில் பெறுகிறது

⭕️இவ்வாறான டீல்களை கனகச்சிதமாக செய்து முடித்து சமூகத்துக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகளை மற்றும் அதிகாரிகளை பெற்றுக்கொண்டது எமது மக்களின் வரமே 🤪

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி  செய்ய அனுமதி வழங்கப்பட்ட, 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் பு...
12/10/2025

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட, 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் , அதன் எண்ணிக்கை 160,590.

அவற்றில் 37,115 கார்கள், 8,820 முச்சக்கர வண்டிகள், 2,806 டிராக்டர்கள் மற்றும் 2,156 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள் என்பன 18 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட மாதமாக கடந்த செப்டெம்பர் மாதம் பதிவாகியுள்ளதுடன், 48,957 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014 முதல் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட ஆண்டு 2015 ஆகும். அந்த ஆண்டு புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 668,907 ஆகும்.

- போக்குவரத்து திணைக்களம் -

Address

Colombo
20000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy Metro News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share