Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்

  • Home
  • Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்

Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் தெரிவிப்பது நாங்கள் – தீர்மானிப்பது எம்மைப் பற்றி
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

மாரவிலயில் பெண்ணொருவர் சுட்டுக்கொலைhttp://muslimvoice.lk/?p=41115மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு ச...
23/07/2025

மாரவிலயில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை
http://muslimvoice.lk/?p=41115

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான பிள்ளையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கைhttp://muslimvoice.lk/?p=41112மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்...
23/07/2025

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
http://muslimvoice.lk/?p=41112

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம் கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.

எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்களும் இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.

இந்தக் கடல் பகுதிகளில் கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் தற்கொலைhttp://muslimvoice.lk/?p=41109அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் ப...
23/07/2025

காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் தற்கொலை
http://muslimvoice.lk/?p=41109

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலிhttp://muslimvoice.lk/?p=41107நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில்...
23/07/2025

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி
http://muslimvoice.lk/?p=41107

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியானார்.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த சுமார் 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீ பரலுக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறதுஉலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக...
22/07/2025

திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என்று தற்போது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகியிருப்பினும், தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது. பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.

பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI சதவீதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை ‘ப்ளூ மண்டே’ என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.
http://muslimvoice.lk/?p=41105

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைhttp://muslimvoice.lk/?p=41102அடுத்த பிரதம நீதியரசராக ...
22/07/2025

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை
http://muslimvoice.lk/?p=41102

அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க. அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஜனாதிபதியின் பரிந்துரை குறித்து இறுதி முடிவை எடுக்க அரசியலமைப்பு சபை புதன்கிழமை (23) கூட உள்ளது.

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ 27 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அவர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்த உள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதியரசர்களில் ஒருவரான ப்ரீதி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

நாட்டில் பல உயர்மட்ட வழக்குகளில் நீதிபதியாகவும் சூரசேன பணியாற்றியுள்ளார். ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றுகிறார்

உப்பு விலை குறைந்ததுhttp://muslimvoice.lk/?p=41100கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப...
22/07/2025

உப்பு விலை குறைந்தது
http://muslimvoice.lk/?p=41100

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் உப்புத் தேவையில் 50 வீதம் முதல் 55 வீதம் வரை புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், முந்தல், மங்கள எளியா, பாலவி, தளுவ, கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லுவ ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தற்போது சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் சுமார் 1,000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளத்தில் உப்பு உற்பத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு ஒரு சான்றாக, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான இப்னு பதூதா 1304 முதல் 1368 வரை உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் போது இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். இவர், புத்தளம் நகரில் தங்கியதுடன், புத்தளம் உப்புத் தொழில் குறித்து பல குறிப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது.

புத்தளத்தில் உப்புத் தொழிலின் நீண்டகால வரலாறு இவ்வாறு ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் ‘புத்தளத்தின் உப்பு சக்கரை போன்றது’ என்ற பழமொழி நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப்படுகிறது. எனவே, உப்புத் தொழிலுடன் மிகவும் பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றை புத்தளம் கொண்டுள்ளது.

சில தசாப்தங்களுக்கு முன்பு, குளத்தில் இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்திக்காக மாற்றியுள்ளனர். இறால் வளர்ப்பில் பல்வேறு நோய்கள் மற்றும் அதிக செலவுகள் ஏற்படும் நிலையில், சில இறால் வளர்ப்பாளர்கள் அதை மேற்கொள்ளத் தயங்குவதால், இறால் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இறால் தொட்டிகளை உப்பு உற்பத்திக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மேலும், குறைந்த மூலதனத்துடன், சரியான வறண்ட வானிலை நிலவும் மாதங்களில் வளமான உப்பு அறுவடையைப் பெறவும், நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்பதன் காரணமாக உப்புத் தொழிலை ஆரம்பித்தனர். இருப்பினும், புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், உப்பு அறுவடை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

புத்தளம் மாவட்டத்தில் பெய்த மழை, நாட்டின் பிற பகுதிகளிலும் பெய்தது. இவ்வாறு நாடு முழுவதும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் குஜராத்தில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது உப்பு அறுவடை நடைபெற்று வருகிறது. உப்பு உற்பத்தியாளர்கள் 50 கிலோ இந்திய உப்பை 4,000 ரூபாவுக்கு வாங்கும் அதே வேளையில், புத்தளத்தில் 50 கிலோ உப்பு மூட்டையின் விலை 1,800 முதல் 2,000 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கூறுகையில், “இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ததே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணமாகும். உப்பை இறக்குமதி செய்ய அனுமதி கேட்ட அனைவருக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் இன்றி இந்தியாவில் இருந்து உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு உப்பை இறக்குமதி செய்திருந்தால் உள்நாட்டு உப்பு உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைத்திருக்கும்.

இன்றும் 1,50,000 தொன்னுக்கும் மேல் உப்பு துறைமுகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உப்பை இறக்குமதி செய்தவர்கள் அதனை விற்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்க முடிகின்றது. குறைந்த விலைக்காவது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பை விற்பனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் இருக்கும் போது, எங்களது உப்பை எப்படி விற்பனை செய்வது?

புத்தளத்தில் உப்பு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. உப்பை அறுவடை செய்ய உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். நல்ல வெப்பமும் உப்பு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பைத் தருகிறது. ஆனால் உப்பின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதைவிட சிறந்த விலை கிடைத்தால் நல்லது என நினைக்கிறோம்.

மேலும், முந்தைய அரசாங்கங்களிடமிருந்து உப்பு உற்பத்திக்குத் தேவையான நிலத்தை எங்களால் பெற முடியாமல் போனது. எனவே, புத்தளத்தில் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவுமாறு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்,” என்றார்.

இதேவேளை, சமீபத்தில் பெய்த மழையால் எங்களால் உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே, தற்போதைய வறண்ட வானிலை உப்பு உற்பத்திக்கு உகந்ததாகக் காணப்படுகிறது. இருப்பினும், உப்பின் விலை குறைவடைந்துள்ளதால், நாங்கள் செய்யும் செலவுகளைக் கொண்டு இந்தத் தொழிலை நடத்துவது சற்று கஷ்டமாக உள்ளது. எனவே, இதற்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பு உற்பத்தியைப் பார்க்கும் ஒருவர், அது அவ்வளவு பெரிய வேலை இல்லை என்று நினைக்கலாம். ஆனால், அது முறையாகச் செய்ய வேண்டிய ஒரு தொழில். எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போதைய விலையில் தொழிலாளர் செலவுகள் மற்றும் பிற செலவுகள் போக, ஒரு சிறிய தொகையை மட்டுமே நாம் பெறுகிறோம். எனவே, இந்தத் தொழிலை நடத்துவதற்கு எங்களுக்கு பொருத்தமான தொகை கிடைக்க வேண்டும்.

கடந்த காலத்தில், 50 கிலோ உப்பு ரூ. 12,000 க்கு விற்கப்பட்டது. எங்களுக்கு அவ்வளவு பணம் வேண்டாம். தொழிலுக்கு ஏற்ற விலையை நாங்கள் பெற வேண்டும் என்றும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டை உலுக்கிய முச்சக்கரவண்டி கொள்ளை – பெண் உட்பட மூவர் கைதுhttp://muslimvoice.lk/?p=41098தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக...
22/07/2025

நாட்டை உலுக்கிய முச்சக்கரவண்டி கொள்ளை – பெண் உட்பட மூவர் கைது
http://muslimvoice.lk/?p=41098

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவின் பொல்கசோவிட்ட பகுதியில், கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 06 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வாடகைக்கு செல்வது போன்று முச்சக்கர வண்டிகளில் பயணித்து, சாரதிகளின் முகத்தில் மிளகாய்த் தூள் வீசி முச்சக்கர வண்டிகளைக் கொள்ளையடித்து வந்ததாகத் தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கலவான மற்றும் கஹதுடுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 29 வயதுடைய சந்தேக நபர் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கஹதுடுவ, பொரலஸ்கமுவ மற்றும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கர வண்டிகளைத் கொள்ளையடித்துள்ள நிலையில், 4 முச்சக்கர வண்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
http://muslimvoice.lk/?p=41098

பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டது ஏன்-பிரதமர்http://muslimvoice.lk/?p=41096புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேர...
22/07/2025

பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டது ஏன்-பிரதமர்
http://muslimvoice.lk/?p=41096

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“பாடம் அல்லது பாடப்பகுதிகள் அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். குழு ஆராய்ச்சி மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை,” என்று அவர் விளக்கினார்.

ஆரம்பத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பாடசாலைகளை இயக்க முன்மொழியப்பட்டதாக வெளிப்படுத்திய பிரதமர் அமரசூரிய, இருப்பினும், பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

போக்குவரத்து போன்ற பிற சிக்கல்களைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்புhttp://muslimvoice.lk/?p=410942025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில...
22/07/2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
http://muslimvoice.lk/?p=41094

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 2,787 தேர்வு நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.

இரண்டாம் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும். முதல் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடையும்.

விண்ணப்பதாரர்களின் விவரங்களில் திருத்தங்களை ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 4 வரை நிகழ்நிலை முறை மூலம் செய்யலாம்.
http://muslimvoice.lk/?p=41094

இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்புhttp://muslimvoice.lk/?p=41092இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு இன்று முதல் அமல...
22/07/2025

இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு
http://muslimvoice.lk/?p=41092

இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பழுப்பு நிற முட்டைகளின் மொத்த விலை 29 ரூபாய் ஆகவும், வெள்ளை நிற முட்டைகள் 27 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share