Muslim Vanoli

Muslim Vanoli 1st Islamic Tamil Radio Station

குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார போட்டி நிகழ்வும்...
22/05/2025

குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார போட்டி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா -ஆரம்பப் பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் மத்ரசாவின் அதிபர் அஷ் ஷேஹ் ஆசாத் ஹக்கீமி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் -ஷேஹ், ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதி தலைவரும் நாடறிந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளருமான அஷ் ஷேஹ் உமர்த்தீன் ரஹ்மாணி அவர்கள் கலந்து விசேட சொற்பொழிவினை நிகழ்தினார்.

இன்நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக, மானல் வத்த ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜே. எம். நிஸ்லான் மற்றும், முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடக செயலாளரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான அப்துல் மஜீத் ஜெசீம் ,மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம். இசட், முனீர் உட்பட பிரபல உலமக்கள், ஆசிரியர்கள் ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனாசா நலன்புரி சங்க உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வுகள் யாவும் சர்வதேச முஸ்லிம் வானொலியில் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டமையும் இதன் சிறப்பம்சமாகும்.

 #சிந்திக்க_சில_நொடிகள் என் காதலி என்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்கவில்லை என்றால், அந்த காதலி எனக்கு தேவையில்லை.ஆனால் எனக...
16/05/2025

#சிந்திக்க_சில_நொடிகள்

என் காதலி என்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்கவில்லை என்றால், அந்த காதலி எனக்கு தேவையில்லை.

ஆனால் எனக்கு வரப்போகும் மனைவி கன்னியாக இருக்க வேண்டும்.

என் அம்மாதான், என் அன்பின் உருவம்.

பக்கத்து வீட்டு பெண்ணின் உருவம், அய்யோ சகிக்கல.

என் அண்ணி என் அம்மா மாதிரி.

என் சகோதரிதான் என் இதயம்.

மற்ற சகோதரிகள் பற்றி எனக்கு கவலை இல்லை!!!!

என் மகிழ்ச்சிதான் எனக்கு எல்லாமே.

என் மனைவியைப் பார்க்க யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

ஆனால் பிறரின் மனைவிகளை பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை.

நீங்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ள விரும்பினால், உங்களுக்கு வரும் மனைவி கன்னியாக இருப்பாள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

உங்கள் சொந்த தாய் உங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும் உகந்தவர்.

ஆனால், பக்கத்து வீட்டு பெண்மணி யாரோட அம்மாவோ இல்லையா? அதனால் கிண்டல் செய்யலாம். அப்படித்தானே.

உங்கள் சகோதரியை பற்றி தாழ்வாக எதுவும் பேச மாட்டீர்கள்.

வேறொருவரின் சகோதரியை மட்டும் எப்படி கிண்டல் செய்வீர்கள்?

இது எவ்வளவு கீழ்தரமானது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உடலில் உள்ள மனம்தான் இங்கு வேறுபடுகிறது, உடல் அமைப்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் போலத்தான் எல்லோருக்கும்.

பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், அவர்களும் யாரோ ஒருவரின் அன்புக்கு தகுதியானவர்கள் தான்.

அவர்களும் யாரோ ஒருவரின் அன்பான தாய் மற்றும் சகோதரிகளே. அவர்களை நேசிக்கவும் அன்பான ஒரு இதயம் இருக்கும்.

ஒரு இருட்டு அறையில் கூட, ஒரு பெண் உங்களுடன் பாதுகாப்பாக உணரும் வகையில் உங்கள் குணநலனை(CHARACTER) உருவாக்குங்கள். அதன்படி வாழுங்கள். உங்களால் பிறர் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சி தானாக வரும்.

வாழ்த்துக்கள் நண்பர்களே...
மனித நேயத்தை நேசியுங்கள், இது தான் அமைதியான, வெற்றிகரமான வாழ்க்கையின் தாரக மந்திரம்.

www.muslimvanoli.com

10/05/2025
05/05/2025

சவூதி அரேபியா - றியாத் பகுதியில் ஏற்பட்ட மணல் புயல்…!


www.muslimvanoli.com

மக்காவில் சமீபத்தில் வீசிய காற்றின்போது எடுக்கப்பட்ட கஅபாவின் புகைப்படம் இது.சாதாரண கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் கட்டுமா...
03/05/2025

மக்காவில் சமீபத்தில் வீசிய காற்றின்போது எடுக்கப்பட்ட கஅபாவின் புகைப்படம் இது.

சாதாரண கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் கட்டுமானத்தையே இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

தங்க இழைகளால் நெய்யப்பட்ட உயர்தர பட்டு ஆடைகளால் அதை மூட வேண்டும் என்றோ,

வைரத்தாலும் வைடூரியத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பிரசங்க மேடைதான் அமைக்கப்பட வேண்டும் என்றோ,

தூய தங்கத்தால் செய்யப்பட்ட மைக்கில்தான் பிரசங்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லாஹ் ஆணை பிறப்பிக்கவில்லை.

கஅபாவின் உண்மையான தோற்றத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தவும், அதன் மூலம் உண்மையில் யார் மீது ஈமான் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவும் அன்று வீசிய அந்தக் காற்று விரும்பியிருக்கலாம்.

அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லாடும் ஓர் ஏழையின் மனதில்... ஒருமுறையேனும் அந்த புனித ஆலயத்தைக் கண்ணால் காணும் பாக்கியம் கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும்.

கடன் வாங்கியேனும் அங்கு சென்று அந்த கஅபாவை கண்குளிரக் காண மாட்டோமா என்ற தவிப்பு இருக்கும்.

கஅபாவை அலங்காரிக்கும் செல்வந்தர்களின் செயல்களை அந்தக் காற்றின் மூலம் அல்லாஹ் அம்பலப்படுத்த விரும்பியிருக்கலாம்.

சோர்வடைந்திருக்கும் ஏழைகளுக்கு அந்தக் காற்றின் மூலம் ஒரு செய்தியை அல்லாஹ் சொல்ல நாடியிருக்கலாம்.

"உங்கள் வீடுகளைப் போன்றே என் வீடும் சாதாரணக் கற்களால் ஆனதுதான். நீங்கள் இங்கு வரமுடியாவிட்டால் என்ன...
உங்கள் வீடுகளை என் நினைவாலும் உங்கள் இதயங்களை என் அன்பாலும் நிரப்புங்கள், நான் அங்கிருப்பேன்”
என்று அந்தக் காற்றின் மூலம் அல்லாஹ் ஒரு செய்தியை சொல்லி அனுப்பியிருக்கலாம்..!

நன்றி.!
✍️ நூஹ் மஹ்ழரி
03.05.2025

இஸ்லாமிய கலை கலாச்சார நேரடி ஒலிபரப்பு..! From: Kurunegala      www.muslimvanoli.com
19/04/2025

இஸ்லாமிய கலை கலாச்சார நேரடி ஒலிபரப்பு..!
From: Kurunegala


www.muslimvanoli.com

EiD Mubarak 💫
30/03/2025

EiD Mubarak 💫

Address

Union Place
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Vanoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Vanoli:

Share

Category

Muslim Vaanoli

24 Hours Islamic Tamil Radio Station