Muslim Vanoli

Muslim Vanoli 1st Islamic Tamil Radio Station

கத்தார் பிரதமர் எகிப்துக்கு வருகை தந்த நிலையில், ஹமாஸ் குழு, 60 நாள் போர் நிறுத்தத்தை உள்ளடக்கிய காசா போர் நிறுத்த ஒப்பந...
18/08/2025

கத்தார் பிரதமர் எகிப்துக்கு வருகை தந்த நிலையில், ஹமாஸ் குழு, 60 நாள் போர் நிறுத்தத்தை உள்ளடக்கிய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான தங்கள் முன்மொழிவை அங்கீகரிப்பதாக மத்தியஸ்தர்களிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.



www.muslimvanoli.com

மக்கா முகர்ரமா - மதீனா முனவ்வரா - ஜித்தாஆகிய நகரங்களிடையே மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் *ஹரமைன் எக்ஸ்பிரஸ்* ரயிலை ...
12/08/2025

மக்கா முகர்ரமா - மதீனா முனவ்வரா - ஜித்தா
ஆகிய நகரங்களிடையே மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் *ஹரமைன் எக்ஸ்பிரஸ்* ரயிலை இயக்குவது இந்த ஹிஜாபி இளம் பெண்கள் தான்..!

நன்றி..!
Fros Khan




www.muslimvanoli.com

இன்று (03/08/2025) கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் காஸாவில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக அவுஸ்திரேலிய சிட்னி நகரி...
03/08/2025

இன்று (03/08/2025) கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் காஸாவில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக அவுஸ்திரேலிய சிட்னி நகரில் திரண்ட மக்கள் வெள்ளம்.

நள்றி.!
சகோதரர்: ஷர்தார்’



www.muslimvanoli.com

(இஸ்ரேலியக் கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதாக கூறி கைது செய்யப்பட்ட) "ஸுஹைல் எந்தக்...
09/07/2025

(இஸ்ரேலியக் கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதாக கூறி கைது செய்யப்பட்ட) "ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை" என்று 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக்கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத்! சாரமாரியான கேள்விகளால் பொலிஸாரைத் துளைத்தெடுத்த நீதவான் மற்றும் சட்டத்தரணிகள்!

இன்று (09.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைல் எந்தவிதக் குற்றமும் இழைக்கவில்லை என்றும், அவரை பிணையில் விடுதலை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் நீதவானிடம் தெரிவித்தார்.

இதன்போது, "ஏன் எந்தக் குற்றமும் இழைக்காத ஸுஹைலை இவ்வளவு நாள் பயங்கரவாதக் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தீர்கள்?" என்று பொலிஸாரிடம் வினவினார் கல்கிஸ்ஸை நீதவான்.
ஸுஹைல் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணிகள் ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸனலி, எம்.கே.எம். பர்ஸான் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பர்னாந்து ஆகியோரும், "ஏன் இவ்வளவு காலம் எந்தக்குற்றமும் இழைக்காத ஸுஹைலின் வாழ்க்கையில் விளையாடினீர்கள்?" என்று பொலிஸாருக்கு எதிரான தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதன்போது நீதவான், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமக்கு பிணை வழங்குவதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்றும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தெரிந்த பொலிஸாருக்கு ஏன் அதன் கீழ் நீதவானுக்கு பிணை வழங்க முடியாது என்று தெரியவில்லை என்றும், பொலிஸார் ஸுஹைலை விடுவிக்குமாறு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ் விசாரணையின் போது ஸுஹைல் நிகழ்நிரல் (digital hearing) மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இறுதியில் சட்டத்தரணிகளின் கடும் அழுத்தத்தின் காரணமாக அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் (15.07.2025) சட்டமா அதிபரை சந்தித்து, தான் ஸுஹைலை விடுவிக்க, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு வருதாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத் உறுதியளித்தார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அடுத்த தினமான வரும் செவ்வாய்க்கிழமை அன்று (15.07.2025) நிகழ்நிரலில் அல்லாது, ஸுஹைலைத் திறந்த நீதிமன்றத்தில் (open court) ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார் கல்கிஸ்ஸை நீதவான்.

அடுத்த செவ்வாய்க்கிழமை ஸுஹைல் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்!

- சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு
09.07.2025.

Arqam Muneer

US President Donald Trump hosts Israeli Prime Minister Benjamin Netanyahu on Monday to push for an end to the Gaza war, ...
07/07/2025

US President Donald Trump hosts Israeli Prime Minister Benjamin Netanyahu on Monday to push for an end to the Gaza war, after Israel and Hamas held indirect talks in Qatar on an elusive ceasefire.


www.muslimvanoli.com

கல்முனை   திண்மக்கழிவகற்றல்  மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான் நேற்று (03)  ஸாஹிராக் கல்லூரி வீதியில் கடமை நிமித்தம...
04/07/2025

கல்முனை திண்மக்கழிவகற்றல் மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான் நேற்று (03) ஸாஹிராக் கல்லூரி வீதியில் கடமை நிமித்தம் சென்றபோது, பெண்கள் பயன்படுத்தும் money purse ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்டெடுத்து, உடனடியாக மாநகர சபைக்கு விரைந்து, மாநகர ஆணையாளரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.

ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பாராட்டியுள்ளார்.

குறித்த பணப்பைக்குரிய குடும்பப் பெண், மாநகர ஆணையாளரின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, குறித்த மாநகர சபை ஊழியரான எம்.எம்.எம். றிஸ்வான் அவர்களின் பொற்கரங்களினாலேயே அதனை கையளிக்கச் செய்தார் ஆணையாளர்.

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியைச் சேர்ந்த இப்பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகைப் பணத்தையும் கைத்தொலைபேசியையும் இந்தப் பையில் வைத்து எடுத்துச் சென்றதாகவும் அதனுள் தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் எனபனவும் இருந்ததாகவும் அது தவறிக் காணாமல் போய், தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே தகவல் தரப்பட்டு, மாநகர சபை காரியாலயத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது பணப்பையை மீட்டுத்தந்த ஊழியருக்கு ஆனந்தக் கண்ணீருடன் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் குறித்த ஊழியருக்கு அன்பளிப்பு வழங்கவும் முற்பட்டார். எனினும் அந்த ஊழியர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த மேற்பார்வையாளரான எம்.எம்.எம். றிஸ்வான், தங்க ஆபரணங்கள் அடங்கிய பொதியொன்றைக் கண்டெடுத்து, உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தமைக்காக மாநகர சபை நிர்வாகத்தினரால் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பதும் அது பி.பி.சி. உலக செய்திச் சேவையின் கவனத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஙாழ்த்துக்கள்…!
❤️👌👍💐

www.muslimvanoli.com

30/06/2025
நீங்கள் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவரா?நீங்களும் தொகுப்பாளர் ஆகலாம்..!உங்கள் சுயவிபரக்கோவையை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..👇...
19/06/2025

நீங்கள் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவரா?
நீங்களும் தொகுப்பாளர் ஆகலாம்..!

உங்கள் சுயவிபரக்கோவையை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..👇

Email. [email protected]
[email protected]
Whatsapp. +94777 161670

குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார போட்டி நிகழ்வும்...
22/05/2025

குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார போட்டி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா -ஆரம்பப் பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் மத்ரசாவின் அதிபர் அஷ் ஷேஹ் ஆசாத் ஹக்கீமி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் -ஷேஹ், ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதி தலைவரும் நாடறிந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளருமான அஷ் ஷேஹ் உமர்த்தீன் ரஹ்மாணி அவர்கள் கலந்து விசேட சொற்பொழிவினை நிகழ்தினார்.

இன்நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக, மானல் வத்த ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜே. எம். நிஸ்லான் மற்றும், முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடக செயலாளரும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான அப்துல் மஜீத் ஜெசீம் ,மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம். இசட், முனீர் உட்பட பிரபல உலமக்கள், ஆசிரியர்கள் ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனாசா நலன்புரி சங்க உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வுகள் யாவும் சர்வதேச முஸ்லிம் வானொலியில் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டமையும் இதன் சிறப்பம்சமாகும்.

Address

Union Place
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Vanoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Vanoli:

Share

Category

Muslim Vaanoli

24 Hours Islamic Tamil Radio Station