Flash News - Tamil

Flash News - Tamil SRILANKA TAMIL NEWS SERVICE News

🚨 கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கு: அதிரடி கைதுகள் மற்றும் பகீர் தகவல்கள்! 🚨​பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீ...
18/10/2025

🚨 கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கு: அதிரடி கைதுகள் மற்றும் பகீர் தகவல்கள்! 🚨

​பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கில் முக்கியச் சூத்திரதாரியாகக் கருதப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🛑​கைது செய்யப்பட்டவர்கள் யார்?

📌​பொலிஸ் கான்ஸ்டபிள்: அலுத்கம பொலிஸில் கடமையாற்றியவர்.

📌​கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார்: வெலிபன்ன பகுதியில் இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

📌​ஆண் ஒருவர்: தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்.

📌​ஒரு பெண்: மித்தேனிய வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்.

🛑​விசாரணையில் இஷாரா செவ்வந்தி அளித்த முக்கிய வாக்குமூலங்கள்:

📌​அறிமுகம்:

தனது முன்னாள் காதலரான போதைப்பொருள் கடத்தல்காரர் மூலமாகவே பிரதான சூத்திரதாரியான கெஹெல் பத்தர பத்மேயை இஷாரா அறிமுகம் செய்துள்ளார்.

📌​துப்பாக்கிதாரி:

பத்மேதான், துப்பாக்கிதாரியான சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற நபரை இஷாராவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

📌​உத்தரவு:

"எப்படியாவது அவனைக் (துப்பாக்கிதாரியை) கவர்ந்து, அவனை வைத்து வேலையை முடிக்கச்" சொல்லிக் கெஹெல்பாத்தர பத்மே உத்தரவிட்டார்.

📌​பணம் இல்லை:

பத்மேவுடனான நெருங்கிய நட்பின் காரணமாக, இந்தக் கொலைக்குத் தான் எந்தப் பணமும் பெறவில்லை என்றும், துப்பாக்கியை நட்புக்காகவே கொடுத்ததாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

📌​மறைவு இடங்கள்:

கொலை நடந்த பிப். 19 இரவு வெலிபன்னையில் தங்கிய அவர், அதன் பின் ஒன்றரை மாதங்கள் தொடங்கொடவில் ஒரு வீட்டில் மறைந்திருந்தார்.

📌​தப்பித்தல்:

பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் மற்றும் புத்தாண்டு கடமைகளில் ஈடுபட்டிருந்த நாட்களைப் பயன்படுத்தி, ஏப். 13 அன்று மித்தேனியவிற்கும், மே 6 அன்று யாழ்ப்பாணம் நோக்கியும் தப்பிச் சென்றுள்ளார்.

​கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் இஷாரா செவ்வந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

💼 We’re Hiring – Marketing Staff!Passionate about marketing?Join our team and build your career with us!👉 Apply today: 0...
12/10/2025

💼 We’re Hiring – Marketing Staff!
Passionate about marketing?
Join our team and build your career with us!

👉 Apply today: 076 665 9 665

07/09/2025

மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

🛑Lost Passport 🛑 Please Share this msg2025.09.01Grandpass இல் Auto  ஒன்றில் ஏறி ஆவணங்களை Colombo  Darly Road கடை ஒன்றில்...
03/09/2025

🛑Lost Passport 🛑

Please Share this msg
2025.09.01

Grandpass இல் Auto ஒன்றில் ஏறி ஆவணங்களை Colombo Darly Road கடை ஒன்றில் Photo Copy எடுத்து கொழும்பு Zonal க்கு சென்ற போது அங்கு வைத்து எனது Passport காணாமல் போய்விட்டது....

சிலவேளை சென்ற ஆடோவில் விழுந்திருக்கலாம்.
என நினைக்கின்றேன்..

கொழும்பு 12, மாலிகாவத்தை , வெள்ளம்பிட்டி, அலுத்கடை போன்ற பகுதியில் உள்ள ஆடோ டைவராக இருக்கலாம்.

தயவுசெய்து இப்பகுதியில் உள்ளவர்கள் இதனை தெரிந்தவர்களிடம் அறிவித்து முடியுமானால் உங்கள் பிரதேசங்களில் நிகழ இருக்கும் Jumma Day இல் அறிவித்து பெற்றுத்தரக்கூடிய வழி முறைகளை செய்து தரவும் .
குறித்த நபர் முஸ்லிம் என்பதனால் சில வேளை நீங்கள் செய்யும் உதவி எனக்கு எனது Passport இனை பெற்று தர வாய்ப்பாக அமையும்...
JAZAKALLAH HAIRA.

(நண்கொடையாக 10,000 வழங்கப்படும்)

Passport Name : Mohommadu Yousup Fathima Silmiya

0729622313

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர்சான்றுரைப்படுத்தினார்.அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய ...
03/09/2025

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர்
சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை
சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது
கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து
திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும்
அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
இந்த சட்டம் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையைத் தாபிப்பதற்காகவும்; (44 ஆம்
அத்தியாயமான) குதிரைப் பந்தய ஓட்டத்தின்மீது பந்தயம் பிடித்தல் கட்டளைச்சட்டத்தையும், (46 ஆம்
அத்தியாயமான) சூதாட்டக் கட்டளைச்சட்டத்தையும் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க,
சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தையும் நீக்குவதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்;
அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக
ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம் ஆகும்.
இலங்கையில் பணச்சூதாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்தல், பணச்சூதாட்டச் செயற்பாடுகளுக்கு
தனியான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை
ஸ்தாபித்தல் என்பவற்றுக்கு இந்த சட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தேச
அதிகாரசபை கப்பல்களில் அல்லது கொழும்பு துறைமுக நகரத்தில் ஒன்லைன் மற்றும் கடல்கடந்த
பணச்சூதாட்ட செயற்பாடுகள் தொடர்பில் சட்டரீதியாக அதிகாரமளிக்கக்கூடிய சமூகப் பொறுப்புக்
கோவைகளை வெளியிடுவதற்கும் விரிவான விடயப்பரப்புடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தும்
நிறுவனமாக செயற்படும்.

15/07/2025

Need a house for rent in dematagoda, maradana, borella Narahanpiti 25,000 - 40,000
Urjent
076 665 9 665

🚨காணவில்லை▪︎கண்டி பல் மருத்துவமைனை ஒன்றுக்கு சென்றவர் திரும்பி வரவில்லை!இவர் எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செல்வந்த...
13/07/2025

🚨காணவில்லை▪︎

கண்டி பல் மருத்துவமைனை ஒன்றுக்கு சென்றவர் திரும்பி வரவில்லை!

இவர் எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செல்வந்தமாகவும் வாழ்ந்து வந்த தெல்தோட்டை பகுதியை சேர்ந்த #பாத்திமா_சப்னா எனும் திருமணமான 26 வயது நிரம்பிய இளம் தாய் ஆவார்.

மனைவியை தேடித் தேடி தனது ஆண் குழந்தை ஒன்றுடன் பரிதவித்து நிற்கும் கணவர் பொலிஸ் நிலையத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி பெண் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக
▪︎076 657 5702
▪︎072 657 5702
என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவித்து உதவுங்கள்.

நன்றி.

மனதை கலங்க வைத்த ஒரு பதிவு..💔சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா எனும் ஊரில் ஒரு மணப்பெண் மஃரீப் தொழுகையை முடித்துவிட்டு தனது த...
02/07/2025

மனதை கலங்க வைத்த ஒரு பதிவு..💔
சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா எனும் ஊரில் ஒரு மணப்பெண் மஃரீப் தொழுகையை முடித்துவிட்டு தனது திருமண நிகழ்வுக்காக தன்னை அலங்காரம் செய்து கொண்டால்.
நிகழ்ச்சிக்கு தயாராகி தன் அறையிலிருந்து வெளியேறும் நேரத்தில் இஷாவுடைய அதான் ஒலிப்பதை கேட்டால் மறுபடியும் வுழு செய்திட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண் தன்னுடைய தாயிடம் கேட்டால் உம்மா நான் வுழு செய்துவிட்டு இஷா தொழுதுவிட்டு வருகிறேன் என்று... தாய் அதிர்ச்சி அடைந்தால் என்ன.
விளையாடுகிறாயா... எல்லோரும் வெளியே உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் நீ வுழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும் தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே... நான் அனுமதிக்க மாட்டேன்...நீ இப்பொழுது தொழ வேண்டாம் ஒரு வேளை நீ வுழு செய்து அலங்காரத்தை அழித்துவிட்டால் அவ்வளவுதான் என்று குறிப்பிட்டால்.
அந்த மணப்பெண் தன் தாய்க்கு பதிலளித்தால் உம்மா அல்லாஹ் மீது ஆணையாக நான் வுழு செய்து தொழுகையை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன் என்று.
உம்மா அறிந்து கொள்ளுங்கள்.. நாம் படைத்தவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது... அந்த பெண்ணின் தாய் கூறினால் நீ வுழு செய்து தொழுதுவிட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் அழகாக இருக்கமாட்டாய் உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள் அந்த மணப்பெண் தன்னுடைய தாயை சிரித்த முகத்துடன் பார்த்து கூறினால் என்னுடைய தாயே.
!படைப்பினங்களின் கண்களுக்கு அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கிறீர்கள் ஆனால் தொழுகை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா... என்று கூறிவிட்டு வுழு செய்ய ஆயத்தமானால். பிறகு இஷாவுடைய தொழுகையை நிறைவேற்றும் போது ஸஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்.. தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....இன்ஷா அல்லாஹ் அந்த பெண் அழகிய முகத்தோடு அல்லாஹ்வை சந்தித்து இருப்பாள்... இந்த பெண்ணின் இந்த அழகிய வாழ்க்கையில் ஆயிரம் படிப்பினைகளை தேடலாம்.
ஒரு முஸ்லிம் மரணத்தின் மீது அய்யம் கொள்ள மாட்டான். ஆனால் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட சூழ் நிலையில் மரணம் வரும் என்பதை அஞ்சி வாழ்வான்...
யா அல்லாஹ் 🤲உனக்கு கட்டுப்பட்ட நிலையில் எங்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவாயாக!🤲❤

புத்தளத்தில் உள்ள சுப மார்க்கட் ஒன்றுக்கு விற்றபனை பிரதிநிதிகள் அவசரமாக தேவை ஆர்வம் உள்ளவர்கள் 076 665 9 665 அல்லது What...
26/05/2025

புத்தளத்தில் உள்ள சுப மார்க்கட் ஒன்றுக்கு விற்றபனை பிரதிநிதிகள் அவசரமாக தேவை ஆர்வம் உள்ளவர்கள் 076 665 9 665 அல்லது
WhatsApp. https://wa.me/94766659665 ஊடக தொடர்பு கொள்ளவும்
சாப்பாடு தங்குமிடம் இலவசம்

புத்தளத்தில் உள்ள சுப மார்க்கட் ஒன்றுக்கு விற்றபனை பிரதிநிதிகள் அவசரமாக தேவை ஆர்வம் உள்ளவர்கள் 076 665 9 665 அல்லது What...
24/05/2025

புத்தளத்தில் உள்ள சுப மார்க்கட் ஒன்றுக்கு விற்றபனை பிரதிநிதிகள் அவசரமாக தேவை ஆர்வம் உள்ளவர்கள் 076 665 9 665 அல்லது
WhatsApp. https://wa.me/94766659665 ஊடக தொடர்பு கொள்ளவும்
சாப்பாடு தங்குமிடம் இலவசம்

NPP அலுவலகத்தில் எழுதிக் கொடுக்கப்படுவதை மனனம் செய்து, நாடாளுமன்றில் ஒப்புவிக்கின்ற துரதிஷ்ட நிலையில் புத்தளம் மாவட்ட MP...
23/05/2025

NPP அலுவலகத்தில் எழுதிக் கொடுக்கப்படுவதை மனனம் செய்து, நாடாளுமன்றில் ஒப்புவிக்கின்ற துரதிஷ்ட நிலையில் புத்தளம் மாவட்ட MP பைசல்!
புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையினை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக மன்னாரில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார். அது தேர்தலுக்கு முன்னதாக இடம்பெறும் என்ற ஒரு செய்தியை சொல்லி இருந்த போதும் அது இடம்பெறவில்லை. தேர்தல் முடிந்து இன்று ஒரு மாதம் கழிந்த நிலையிலும், இதுவரைக்கும் அந்தப் பாதை திறப்பு தொடர்பில், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் எவ்வித நகர்வுகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
நாட்டின் அபிவிருத்தி, நாட்டு மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலேயே தாங்கள் கவனம் செலுத்துவதாக கூறிவரும் தேசிய மக்கள் சக்தி, இதுவரைக்கும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும். குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய காணிகளை கபளீகரம் செய்கின்ற பணியினை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக, அரசியல் தலைமைகள் திறந்தவெளிகளிலும் பாராளுமன்றத்திலும் தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல் அரசியலை செய்கின்ற தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, மீண்டும் மிக மோசமான செயல்பாடுகளை ஆரம்பித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
எதிர்க்கட்சி என்ற வகையில், தேசிய மக்கள் சக்திக்கு ஆலோசனைகள் அல்லது நீங்கள் வாக்குறுதி அளித்தவற்றை செய்யுங்கள் என்று கேட்டால், அதற்கு “உங்களது ஆட்சி காலத்திலேயே எல்லாம் இடம்பெற்றது. ஏன், உங்களது ஆட்சிக் காலத்தில் நீங்கள் இருந்தீர்கள்தானே, இவற்றை செய்து இருக்கலாம் அல்லவா” என்று பேசுகின்ற வெறும் பொம்மைகளாகவே அவர்கள் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றனர்.
புத்தளம், எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையை திறப்பதில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எடுத்த முயற்சிகள், அவற்றை இப்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அறியமாட்டார்கள். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக, இந்த பாதையினை திறப்பதில் ரிஷாட் பதியுதீன் வெற்றிகண்டிருந்தார்.
வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளால் வந்தவர் ரிஷாட். இந்த வகையிலும் முன்னாள் அமைச்சர் என்ற வகையிலும் அவரது பணியை அவர் சரியாகச் செய்தார். ஆனால், அந்தப் பாதை திறப்புக்கு எதிராக, சூழலியலாளர்கள் என்கின்ற பலர் ஒன்று சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பாதையை பயன்படுத்துவதில் தாமத நிலையும் தடங்கல்களும் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்தப் பாதையினை திறப்பதற்கு தேவையான பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றாடல் திணைக்களம் மற்றும் வன பரிபாலனத் திணைக்களத்தின் பிரதிநிதிகளைக்கொண்ட குழுவினர், அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து, இந்தப் பாதையினை மக்கள் போக்குவரத்துக்கு திறந்துகொடுப்பதற்கு இருக்கின்ற சாதக, பாதக நிலைகள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றையும் சமர்பித்தார்கள். இருந்தபோதும், சட்டமா அதிபருடைய இனக்கபாடும் இந்த பாதை திறப்பதற்கு கிடைக்காத நிலையிலையே, நீதிமன்றத்தில் அவை வழக்காகத் தொடர்ந்து நிலுவையில் இருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
இந்தப் பாதையின் வரலாறு தெரியாத, புத்தள மாவட்டத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் அவர்கள், “பாராளுமன்றத்தில் நீங்களும் உறுப்பினராக இருந்தீர்கள், அமைச்சராக இருந்தீர்கள். அந்தப் பதவியில் இருந்தபோது, ஏன் இவற்றை திறக்கவில்லை? இப்பொழுது எங்களிடம் கூறுகிறீர்கள்” என்று கூறுகிறார்.
இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்ற விடயம், NPP என்கின்ற தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் எழுதிக் கொடுக்கப்படுகின்ற அந்த பேப்பரை மனனம் செய்து, அதனை பாராளுமன்றத்தில் ஒப்புவிக்கின்ற துரதிஷ்ட நிலையில், இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது கவலையளிக்கிறது.
ஒரு விடயத்தை பேசுவதற்கு முன்னர், அது தொடர்பில் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளாது, யாரோ கூறியதை வைத்துக்கொண்டு இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஜனநாயகமா?
இந்த மக்களின் தேவைகள் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றபோது, அதற்கு தடை விதிப்பது இந்த ஆளும் அரசாங்கத்தின் வழமையான செயலாகவே இருக்கிறது. வெறும் வாய் பேச்சு மட்டுமே அவர்களது சேவையாக இருப்பதை மக்கள் இன்று காணுகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் ஒரு சிகப்பு எச்சரிக்கையினை வழங்கியிருக்கிறார்கள். பொய்யையும் இயலாதவற்றையும் கூறி, மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகின்ற ஒரு நகர்வுகளை அவர்கள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
இது எவ்வாறாக இருந்தபோதும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எடுத்த முயற்சியின் பலனாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பாதை திறக்கப்பட்டிருந்தமை நினைவுகூறப்பட வேண்டிய ஒரு வரலாறாகும்.
இப்போது, சகல அதிகாரங்களையும்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் இதனை திறந்துகொடுத்து, மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக உதவி செய்வதை விடுத்து, அவற்றை பேசுகின்றவர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சிகொண்டு பேசுவது பொறுத்தமற்றது. தெரிந்த உண்மையினை பேசுவதை விடுத்து, பொறுத்தமில்லாத பேச்சும், சம்பந்தமில்லாதவற்றுக்கு மூக்கை நுழைப்பதும் கண்டிக்கத்தக்காது.
இந்தப் பாதை தொடர்பில், அரசின் இயலாத் தன்மையினை மறைப்பற்கு, இஸ்லாமியருக்கு எதிராக இஸ்லாமியரை பயன்படுத்தும் இந்த ஆட்சியாளரின் திட்டமே, புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது பைசல் மூக்கு நுழைத்த விடயம் காணப்படுகின்றது.
- இர்ஷாட் ரஹ்மதுல்லா

🔴 அநுர அரசின் எம்.பிக்களும் அமைச்சர்களும் அனைத்து பாராளுமன்ற கொடுப்பனவுகளையும் பெற்றுவிட்டனர்! முழுமையான செய்திகளுக்கு 》...
18/04/2025

🔴 அநுர அரசின் எம்.பிக்களும் அமைச்சர்களும் அனைத்து பாராளுமன்ற கொடுப்பனவுகளையும் பெற்றுவிட்டனர்!

முழுமையான செய்திகளுக்கு 》》

https://www.flashnews.lk/2025/04/blog-post_69.html

✅ Follow Us On Our Social Networks
-
✅ விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⤵
📌 Facebook https://facebook.com/flashnewslk
📌 YouTube https://www.youtube.com/
📌 Telegram https://t.me/flashnewslk
📌 Twitter https://twitter.com/flashnewslka
📌 Whatsapp https://chat.whatsapp.com/I1vmXwcHozZGYAk2rQu4cg
📌 whatsapp channel https://whatsapp.com/channel/0029Va4YahJId7nIvpYFYR

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Flash News - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flash News - Tamil:

Share