Kakai Tv

Kakai Tv சமூக அரசியல் விழுமியங்களுக்கான தளம்
ஆறிலிருந்து அரசியல்வரை பேசுவோம்

09/03/2025
01/03/2025

Ukrainian President Volodymyr Zelenskyy arrived at the White House for a high-stakes meeting with President Donald Trump, as he tried to persuade the White H...

30/01/2025

30/01/2025
வடகிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை நடைபெறுகிற போதும், அரசு கொள்வனவு விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. துரிதமாக நெல் கொள்வனவு நிர்ணய விலையை அறிவிக்கவும்.
வடகிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் நெல் கொள்வனவு நிர்ணய விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது, ஒருவகையான பிராந்திய புறக்கணிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் இதில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். முந்தைய அரசாங்கங்களும் இதே போக்கையே பின்பற்றி, விவசாயிகளுக்கு நீடித்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. மாற்றம் கொண்டுவருவோம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கமும், அதே பழைய நடைமுறையைத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் நிர்ணய விலையை அறிவிக்கத் தாமதிப்பதாலும், அரச நெல் கொள்வனவு சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாமலும் இருப்பதால், ஆரம்பகாலத்தில் அறுவடை செய்யும் விவசாயிகள் அரிசி ஆலை மாபியாக்கள் நிர்ணயிக்கும் மிகக் குறைந்த விலைக்குத் தங்களின் நெல்லை விற்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த நாட்டின் பாரம்பரிய பொருளாதார முதுகெலும்பும் விவசாயமாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும், உலகில் உணவுத் தட்டுப்பாடு நிலவும் இச்சமகாலத்திலும், விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது நம் அனைவருக்கும் கடைமையாகிறது.
எனவே, அரசாங்கம் உடனடியாக நெல் கொள்வனவு விலையை அறிவித்து, கொள்வனவை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இது சம்மந்தமாக அனைத்து அரசியல் சக்திகளும் பாராளுமன்றத்திலும், DCC கூட்டங்களிலும் , பொது வெளியிலும் பேசுமாறும் தயவுடன் வேண்டிக் கொள்கிறோம்.
for INCLUDE
[email protected]

04/01/2025

பீதியை கிளப்பிய புதிய வைரஸ்: சீனா வெளியிட்ட அறிவிப்பு
சீனாவில் (China) பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸை போன்ற ஹுயூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) சீனாவில் பரவி வருகின்ற நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பத் தொடங்கியுள்ளன.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, சீனாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கொரோனா உள்ளிட்ட பல வைரஸ்களைக் கலந்து உருவாக்கப்பட்ட புதிய வைரஸ் என்று அச்சம் நிலவி வருகிறது.
எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் பீதி அடைய வேண்டியசீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், பல நாடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு இப்போது அறிவித்துள்ளன.

எனினும், சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது

இந்த நிலையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவில் பரவும் வைரஸ் குறித்து உலகம் முழுவதும் இப்போது உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NPP அரசு வடகிழக்கை புறக்கணிப்பது  ஏன் ?
21/12/2024

NPP அரசு வடகிழக்கை புறக்கணிப்பது ஏன் ?

கடந்த காலங்களில் சிறுபான்மை காட்சிகள் ஜனாதிபதியின் அதிகாரத்தை செயற்படாமல் தடுத்ததால் , அரசு வடகிழக்கு சிறு.....

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kakai Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share