Alai TV

Alai TV The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

வீதி போக்குவரத்து பாதுகாப்பு முறை சம்மந்தமாக காத்தான்குடி மத்திய கல்லூரியில் வீதி நாடகம் மற்றும் செயலமர்வு இடம்பெற்றது. ...
30/07/2025

வீதி போக்குவரத்து பாதுகாப்பு முறை சம்மந்தமாக காத்தான்குடி மத்திய கல்லூரியில் வீதி நாடகம் மற்றும் செயலமர்வு இடம்பெற்றது.


ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பிதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது..!வியாபாரி ஒருவரிடம் 40,000/=ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட...
30/07/2025

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பிதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது..!

வியாபாரி ஒருவரிடம் 40,000/=
ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு

ඔක්කම්පිටිය පොලිස් ස්ථානයේ ප්‍රධාන පොලිස් පරීක්ෂකවරයකු අත්අඩංගුවට

முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக்கு..!ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்க...
30/07/2025

முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக்கு..!

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையைப் பெற முடியும்.

NPP நஸீருக்கு புதிய பதவி..!தேசிய மக்கள் கட்சியின் காத்தான்குடிஅமைப்பாளரும் கற்றொழில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்...
29/07/2025

NPP நஸீருக்கு புதிய பதவி..!

தேசிய மக்கள் கட்சியின் காத்தான்குடி
அமைப்பாளரும் கற்றொழில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எம்.ஏ. நஸீர் கூட்டுறவு ஊழியர்கள் ஆணையத்தின் உறுப்பினராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரினால் நியமனம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ  - கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மாநகர சபையினர்..!அலெக்ஸ் அருள்மட...
29/07/2025

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ - கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மாநகர சபையினர்..!

அலெக்ஸ் அருள்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு நாகரசபை தீயணைப்பு படடையினர் குருக்கள்மடம் இராணுவத்தினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறித்த பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் பற்றி தீ பரவத் தொடங்கியதுடன், பனை மரங்கள் மற்றும் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத எரிபொருள் தாங்கி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.

இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர உறுப்பினர்கள்
தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.

🔵 Clean Sri Lanka வேளைத்திட்டத்தின் கீழ் இன்று (29) கல்லடி - நாவலடி கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.ஏற்ப...
29/07/2025

🔵 Clean Sri Lanka வேளைத்திட்டத்தின் கீழ் இன்று (29) கல்லடி - நாவலடி கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஏற்பாடு:
243 Infantry Brigade

பொதுச்சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான சட்டமும் திருட்டும்!1982ம் ஆண்டின் 12ம் இலக்க பொதுச் சொத்துக்களுக்கு ...
29/07/2025

பொதுச்சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான சட்டமும் திருட்டும்!

1982ம் ஆண்டின் 12ம் இலக்க பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டமானது பொதுச்சொத்துக்களை திருடுதல், கொள்ளையடித்தல் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பிலான தண்டனைகள் தொடர்பிலான சட்டமாகும்.

மேற்குறித்த சட்டத்தின் பிரிவு 3 ஆனது பின்வருமாறு குறிப்பிடுகின்றது-

"பொதுச் சொத்து திருட்டு குற்றத்தைச் செய்யும் எந்தவொரு நபரும் ஒரு குற்றத்திற்காகக் குற்றவாளியாகக் கருதப்படுவார். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்திற்குக் குறையாத ஆனால் இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது அந்தக் குற்றம் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பைப் போல மூன்று மடங்கு அபராதமோ, எது அதிகமோ அது விதிக்கப்படும்"

மேலும் மேற்படி சட்டத்தின் பிரிவு 12 ஆனது 'திருட்டு' என்பதற்கான வரைவிலக்கமானது இலங்கை தண்டனைச்சட்டக் கோவையின் திருட்டுக்கான வரைவிலக்கணத்தை ஒத்தது என குறிப்பிடுகின்றது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 366 ஆனது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"ஒருவர், வேறொருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவரின் சம்மதம் இன்றி நாணயமற்ற வகையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்பொருளை நகர்த்துவது 'திருட்டு' என்று சொல்லப்படும்"

எனினும் மேற்படி திருட்டு குற்றத்தைநிரூபிக்க பின்வரும் 5 விடயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும்

1.நேர்மையற்ற (திருடுவதற்கான) எண்ணம் (Dishonest intention)
2.திருடும் பொருள் அசையும் பொருளாக இருத்தல் வேண்டும் (Movable property)
3. குறித்த பொருளானது மற்றொருவரின் உடைமையில் இருத்தல் வேண்டும். (Possession)
4.குறித்த பொருளை மற்றவரின் சம்மதமின்றி எடுத்திருத்தல் ( Absence of consent)
5. பொருளை அசைத்திருத்தல் வேண்டும். (Moving)

மேற்படி 5 விடயங்களும் நிரூபிக்கப்படும் போதே நீதி மன்றம் ஒருவரை குற்றவாளியாக இனங்கானும்.

மேலும் தண்டனைச்சட்டக் கோவையின் பிரிவு 22 ஆனது நேர்மையற்ற எண்ணம் (Dishonest intention) தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"ஒருவன் மற்றொருவனுக்கு, அநியாய இலாபம் அடைவதற்காகவும் அல்லது நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவும் உள் எண்ணத்துடன் புரியப்படும் காரியம், அவன் நேர்மையின்றி காரியம் புரிவதாக கொள்ளப்படும் (Dishonestly)"

இருப்பினும், நல்லெண்ணத்துடன் ஒரு பொருளை அபகரிக்கும் செயற்பாட்டில் நேர்மையற்ற எண்ணம் (Dishonest intention) இருக்காது என தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 366 இன் Illustration P இவ்வாறு குறிப்பிடுகின்றது.

"A என்பவர் நல்லெண்ணத்துடன் A யிற்கு சொந்தமான சொத்தினை Z இன் சொத்து என நினைத்து B யின் உடைமையில் இருந்து எடுக்கின்றார். இங்கே A நேர்மையீனமாக எடுக்கவில்லை. அவர் திருடியதாக கொள்ளப்படமாட்டார்.

இது தொடர்பில்
Kadiravel Vs Kader Meedin எனும் வழக்கில்,
அயலவர்கள் பார்த்துக்கொண்டிருக்கத் தக்கதாக மரணித்த பெண்ணின் உடலில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர் நகைகள் சிலதை கழட்டியதாக திருட்டுக் குற்றம் சுமர்த்தப்பட்டிருந்தார்.
இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக மரணித்த பெண் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தர வேண்டிய பணத்திற்கு பாதுகாப்பாகவே நகைகளை கழட்டியதாக தெரிவிக்கப்பட்டபோது சூழ் நிலைகளை ஆராய்ந்த நீதி மன்றமானது குற்றம் சாட்டப்பட்டவருக்கு நேர்மையற்ற எண்ணம் (Dishonest intention) இருக்கவில்லை எனவே அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்தது.

மேலும் திருடப்படுகின்ற பொருளானது ஒருவரின் உடைமையில் இருத்தல் வேண்டுமென்பது முக்கிய கூறாக கருதப்படுகின்றது.

Ekanayaka Vs Silva என்ற வழக்கில் போர் நினைவிடத்தில் (பொது இடம்) கிடந்த மாலையினை எடுத்தமையானது திருட்டு அல்ல இங்கு உரிமையாளரும் இல்லை உடைமையும் இல்லை என நீதி மன்றம் தீர்த்தது.

இங்கு நீதி மன்றங்கள் De facto concept கொள்கையினை இவ்விடயத்தில் பின்பற்றுகின்றன.
அதாவது, ஒருவருக்குச் சொந்தமான மோதிரம் அவரது வீட்டு மேசையில் கிடந்தால் அது அவருடைய உடைமையாகும். அதுவே பிரதான வீதியில் கிடந்தால் அது உடைமை அல்ல.

திருட்டுக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனைச்சட்டக்கோவையின் பிரிவு 377 பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"திருட்டுச் செய்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்"

முகைதீன் சாலி LLB
சட்டத்தரணி,
சிரேஷ்ட உளவள ஆலோசகர்.
26.07.2025

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்  ஆரம்பமானது..!
28/07/2025

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆரம்பமானது..!

28/07/2025

✅👉சற்று முன் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

✔️Arrested

🔵 மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம்; ஓட்டமாவடியில் சோகம்..!✍️ எச்.எம்.எம்.பர்ஸான்மனைவி மரணமடைந்து மூன்று நாட...
27/07/2025

🔵 மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம்; ஓட்டமாவடியில் சோகம்..!

✍️ எச்.எம்.எம்.பர்ஸான்

மனைவி மரணமடைந்து மூன்று நாட்களின் பின்னர் கணவரும் மரணமடைந்த சோகச் சம்பவமொன்று ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - 1 ஆம் வட்டாரம் மஸ்ஜித் கலீபா உமர் வீதியில் வசித்து வந்த ராவியத்தும்மா என்பவர் (25) வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது கணவர் சுலைமை லெப்பை அலியார் என்பவர் (27) ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இந்த தொடர் மரணச் சம்பவம் அந்தக் குடும்பத்திற்கும், பிரதேசத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரிய...
27/07/2025

ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார்.

ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்.

🔵 ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!✍️ எச்.எம்.எம்.பர்ஸான்கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச ...
26/07/2025

🔵 ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!

✍️ எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் கொழும்பு பிரதான வீதி பகுதியில் இன்று சனிக்கிழமை (26) நள்ளிரவு வேளையில் கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவியதால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தை எதிர் கொண்டனர்.

காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் உள் நுழையாமல் விரட்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினர், அகீல் எமெர்ஜன்ஸி பிரிவு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் யானைகள் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.

இந்த துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category