Alai TV

Alai TV The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

அல்- இக்பால் வித்தியாலயத்தின் மற்றுமொரு வெற்றி..!18-09-2025  வியாழக்கிழமை  நடைபெற்ற வலயமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட...
19/09/2025

அல்- இக்பால் வித்தியாலயத்தின் மற்றுமொரு வெற்றி..!

18-09-2025 வியாழக்கிழமை நடைபெற்ற வலயமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு (kids athlatic )போட்டியில் காத்தான்குடி மட்/ மம/ அல்-இக்பால் வித்தியாலயம் தரம் 3, தரம் 4 , ஆகிய இரண்டு போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.தரம் 3 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், தரம் 4 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.
இம் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் வழிப்படுத்திய அதிபர் மற்றும் பயிற்றுவிப்பாளர் Mr.JHM.ஷரிஹான் ஆகியோருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றார்கள் பாடசாலை சமூகத்தினர்.

VM.ஹனீபா
(அதிபர்)
மட்/மம/அல்-இக்பால் வித்தியாலயம்
றிஸ்வி நகர்
புதிய காத்தான்குடி.

மஞ்சந்தொடுவாயில் பெரிய வளவு விற்பனைக்கு..!Call : 07796951387.5 பேர்ச் அளவுள்ள 2 வீடு கட்டக்கூடிய பெரிய காணி... இக்காணியி...
19/09/2025

மஞ்சந்தொடுவாயில் பெரிய வளவு விற்பனைக்கு..!

Call : 0779695138

7.5 பேர்ச் அளவுள்ள 2 வீடு கட்டக்கூடிய பெரிய காணி... இக்காணியில் முற்றிலுமாக தகட்டினால் அடைக்கப்பட்ட ஒரு குடிலும் உண்டு.

🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை

🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, குடியிருப்புகள் அதிகமாக உள்ள அமைதியான சுற்றுச்சூழல்.

🏠 60 வருடத்திற்கு மேலான பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.

🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.

🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.

🏠2 வாகனங்களை நிறுத்தும் வசதிகளை கொண்டது. (2 vehicles parking வசதி கொண்டுள்ளது)

இந்த வளவானது பூநொச்சிமுனை தருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்குப் பின்பக்காமாக அமைந்துள்ளது.

*📍காணிக்கு அருகாமையில்*
🕌 மஸ்ஜிதுல் ஹிழ்ர் ஜும்மா பள்ளிவாயல்
🏫மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்யாலயம்..
🕌மத்ரஸா
🏤பாலர் பாடசாலை
🏪சில்லறை கடைகள்


விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

Call : 0779695138

🛑 #இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை காலமானார்.!!ஆப்கானிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் க...
19/09/2025

🛑 #இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை காலமானார்.!!

ஆப்கானிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

19/09/2025

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு துயரச் சம்பவம் - மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் (32) தற்கொலை - உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் சம்பவம்..!

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டி -'ஏ.ஏ. அப்துல்லாஹ்' முதலிடம்!காத்தான்குட...
18/09/2025

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டி -
'ஏ.ஏ. அப்துல்லாஹ்' முதலிடம்!

காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த சைக்கிள் ஓட்டப்போட்டி நேற்று (17) பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

17/09/2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நாளை திறப்பு.

காத்தான்குடியில் "மறுமலர்ச்சி நகரம்" திட்டத்தில் இடம்பெற்ற; சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நிகழ்வு.!!!(எம்.ரி.எம்.யூனுஸ்)உள்...
17/09/2025

காத்தான்குடியில் "மறுமலர்ச்சி நகரம்" திட்டத்தில் இடம்பெற்ற; சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நிகழ்வு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் வளமான நாடும் - அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளின் கீழ் "மறுமலர்ச்சி நகரம்" எனும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தினம் இன்று (17) காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் நகர சபை ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனைகள், தொழு நோய், தலசீமியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்குகள் மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான பயிற்சிகளும் விரிவுரைகளும் துறை சார்ந்தவர்களால் வழங்கப்பட்டதோடு, காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்குகின்ற முன்மாதிரி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பல் வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஸீர் தீன், வைத்தியர் மீரா முகைதீன், நகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாஹிர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பசீர், சுகாதார பரிசோதகர் ரஹ்மத்துல்லாஹ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்கள், பாலர் பாடசாவையின் ஆசிரியைகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இம்மாதம் (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17/09/2025

கிழக்கு இலங்கை ஏராவூரில் சொகுசு பயணத்தேவைகளுக்கு JH Rent a car..!

காத்தான்குடி மத்திய கல்லூரியில் "மறுமலர்ச்சி நகரம்"  செயற்திட்டத்தின் கீழ்  மர நடுகை நிகழ்வு.கல்வி, உயர்கல்வி மற்றும் தொ...
16/09/2025

காத்தான்குடி மத்திய கல்லூரியில் "மறுமலர்ச்சி நகரம்" செயற்திட்டத்தின் கீழ் மர நடுகை நிகழ்வு.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற "மறுமலர்ச்சி நகரம்" எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக இன்று (16.09.2025 செவ்வாய்க்கிழமை) மர நடுகை மற்றும் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நிழல் தரும் மற்றும் ஓளடத மரங்கள் நடப்பட்டன.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி AM. ஜவாஹிர் அவர்களும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. S. அரியநாதன், மட்டக்களப்பு வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் திரு. ஜெகநாதன், Room 2 Root உத்தியோகத்தர்களான திருமதி. ஆரிபா, திருமதி. வாணமி ஆகியோரும் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் MIM. தையூப் JP அவர்களும்
காத்தான்குடி மத்திய கல்லூரியின் பிரதி அதிபர்களான AL. சப்ரி, MNM. ,பெளஸான், கல்லூரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பிரிவின் ஆசிரியை திருமதி. V. தவச்சந்திரராஜா மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வருட உலக ஓசோன் தினம் "விஞ்ஞானத்தினூடாக உலகளாவிய செயற்பாட்டிற்கு" எனும் தொனிப் பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று பாடசாலை வளாகத்தில் நடப்பட்ட நிழல் தரும் மற்றும் ஓளடத மரங்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி வார "மறுமலர்ச்சி நகரம்" தேசிய வேலைத்திட்டம்; காத்தான்குடி நகரசபையில் ஆரம்பம்.!!!(எம்.ரி.எம்.யூனுஸ்)உள்ளூராட்...
15/09/2025

உள்ளூராட்சி வார "மறுமலர்ச்சி நகரம்" தேசிய வேலைத்திட்டம்; காத்தான்குடி நகரசபையில் ஆரம்பம்.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் வளமான நாடும் – அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று திங்கட்கிழமை (15) விஷேட நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பழ்ழாஹ் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம் ஜெஸீம் உட்பட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நடமாடும் சேவையில் நகர சபையுடன் தொடர்புடைய பல சேவைகள் இடம்பெற்றதோடு, அவற்றுக்கான உடனடித் தீர்வுகளும் அன்றைய தினமே பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, காத்தான்குடி பிரதேசத்தில், இன்று முதல் (15 ) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21 ) வரை முறையே, நடமாடும் சேவை, சுற்றாடல் மற்றும் மரநடுகை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், வருமானம் மற்றும் மேம்பாடு, இலக்கியம் கல்வி மற்றும் நூலக மேம்பாடு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு அத்துடன் இறுதி நாள் நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் அதிகமான இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்ட –  இரத்ததான நிகழ்வு.!!!(எம்.ரி.எம்.யூனுஸ்)மட்டக்களப்பு போதனா வைத...
14/09/2025

காத்தான்குடியில் அதிகமான இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்ட – இரத்ததான நிகழ்வு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில், காத்தான்குடி தள வைத்தியசாலையுடன் இணைந்து காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் 17ஆவது தடவையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் தேசபந்து எம்.ஐ.எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

காத்தான்குடி தள வைத்யியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் நித்தியா நந்தனா, நகர சபை உறுப்பினர்கள், தாதியர்கள், அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரத்த கொடையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் முகாமில் ஆண்கள்,பெண்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

T81 ரக துப்பாக்கி 2 மகசின்கள் மற்றும் 97 தோட்டாக்களுடன் பெக்கோ சமனின் சகாக்களில் ஒருவர் கைது. இராணுவ உடைகளும் கைப்பற்றப்...
13/09/2025

T81 ரக துப்பாக்கி 2 மகசின்கள் மற்றும் 97 தோட்டாக்களுடன் பெக்கோ சமனின் சகாக்களில் ஒருவர் கைது. இராணுவ உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன..!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category