Alai TV

Alai TV The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள்..!தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் ...
15/10/2025

தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள்..!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில்:

♦670 கிலோகிராம் ஐஸ் (Ice)
♦156 கிலோகிராம் ஹெரோயின் (He**in)
♦12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish)
அடங்குகின்றன.

தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 50 பொதிகள் மீட்கப்பட்டன.

இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.

இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில், மூன்று படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த மூன்று படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

15/10/2025

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல்.

போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளை பலப்படுத்துதல்.

அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல்.

பரந்துபட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

தேசிய ரீதியில் சாதனை படைத்து காத்தான்குடிக்கு பெருமை தேடித்தந்த அயான்.(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)காத்தான்குடி மட்/ ம...
14/10/2025

தேசிய ரீதியில் சாதனை படைத்து காத்தான்குடிக்கு பெருமை தேடித்தந்த அயான்.

(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)

காத்தான்குடி மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை
தரம் 1யில் கல்வி பயிலும் மாணவனாகிய
மொஹம்மட் சஹ்ரான் அயான் அஹமட்
காத்தான்குடியில் இயங்கி வரும்
Sun Rise Academyயின் ஊடாக The American Federation Of Festival Srilanka-2025வினால் Colomboயில் நடாத்தப்பட்ட Public Speach Competition இல் Platinum Medal🥈 உடன் all island public
speaking Finalist க்கு தெரிவு செய்யப்பட்டு,
All island champion Trophyஐ வென்றுள்ளார்.

செவ்வந்தி உட்பட 5 பேர் கைது..!கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” ...
14/10/2025

செவ்வந்தி உட்பட 5 பேர் கைது..!

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சஞ்சீவ குமார சமரரத்னவின் படுகொலை சம்பவத்துடன் தெடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் முதற்தடவையாக காத்தான்குடி Naas Campus ஏற்பாட்டில்,Ai உடன் இணைந்து,✓. Professional Photo Camera✓. Professional...
13/10/2025

இலங்கையில் முதற்தடவையாக காத்தான்குடி Naas Campus ஏற்பாட்டில்,
Ai உடன் இணைந்து,

✓. Professional Photo Camera
✓. Professional Video Camera
✓. Professional Drone Camera
✓. Professional Media
✓. Professional Graphic Design என்பன, மாணவ, மாணவிகள் மற்றும் ஊடக ஆர்வளர்களுக்கான இலவச பயிற்சி அறிமுக நிகழ்வும் தொழில் வழிகாட்டல் அமர்வும் இடம் பெறவுள்ளது.

குறிப்பு:
01. மட்டக்களப்பு மாவட்டத்திற்குற்பட்ட 10ம் தரத்திற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பங்குபற்றவும்.
2. ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் இடம் பெறும்.

இணைந்து கொள்ள விரும்புவர்கள் குழுவில் இணைந்து கொள்ளவும்.

ஆண்கள் மட்டும்,
https://chat.whatsapp.com/Gvz5Vjdjfm50rE086NeSNG?mode=wwc

பெண்கள் மட்டும்,
https://chat.whatsapp.com/KJhHfyROgNSBVVVW5nyZsy?mode=wwc

Naas Campus
Kattankudy.

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..!B.M.பயாஸ் (செய்தியாளர்)காத்தான்குடி மத்திய கல்லூரி...
13/10/2025

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..!

B.M.பயாஸ் (செய்தியாளர்)

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட் கிழமை (13.10.2025) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் மற்றும் அனாதரவற்ற சிறுவர்களின் பராமரிப்பு பற்றிய சரோஜா வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு, பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியம் தொடர்பான ஆலோசனைகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி R.M.I.B.ரத்னாயக்க அவர்களினால் தெளிவூட்டப்பட்டது. சுற்றுச் சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி A.M.M. ஜவாஹிர் அவர்களின் நெரிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 167B, சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்கிசையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கல்கிசை நீதிமன...
13/10/2025

கல்கிசையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கல்கிசை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டுள்ளது .

இந்த விவகாரம் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வழக்கு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10.10.2025 அன்று, கல்கிசை காவல் நிலையம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியை கைது செய்து, 13.10.2025 வரை தடுப்புக்காவலில் வைத்தது.

வழக்கறிஞரின் கார் ஒன்று கல்கிசை நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டபோது ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கல்கிசை காவல் நிலையம் அவரை கைது செய்து 13.10.2025 வரை தடுப்புக்காவலில் வைத்தது.

பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு..!(எம்.பஹத் ஜுனைட்) மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்விப...
12/10/2025

பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு..!

(எம்.பஹத் ஜுனைட்)

மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் மாணவன் எம்.எப்.எம்.பாயிக் சூழலில் கிடைக்கும் கழிவுப்பொருட்களை பயண்படுத்தி குறைவான செலவில் எளிய வடிவிலான நுணுக்குக்காட்டி (microscope) தயாரித்துள்ளார்.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.பரீட் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.எம்.எம்.ஸாகிர் ஆகியோரின் வழிகாட்டலுடன் இக் கண்டுபிடிப்பை இம் மாணவர் மேற்கொண்டுள்ளார்.

இக் கண்டுபிடிப்பின் ஊடாக கல்வி அமைச்சரின் இளம் கண்டுபிடிப்பாளர் ஊக்கப்படுத்தல் திட்டத்தின் ஊடாக ஏனைய பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இம் மாணவனின் எதிர்பார்ப்பாகும்.

12/10/2025

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு..!

B.M.பயாஸ்(செய்தியாளர்)

வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.2025)
காலை 7.00 மணியில் இருந்து 10.00 வரை இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி RMIB. ரத்னாயக்க அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி AM. ஜவாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேசத்தில் போதை ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகநல விடயங்களில் பொலிசாருடன் இணைந்து பொலிஸ் உபதேசக்குழு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ - KR TV Network

📢 பகல் நேர காவலாளி தேவை🕌 புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல்-அக்ஸா)எமது பள்ளிவாயலுக்கு ஒரு பகல் நேர காவலாளி...
11/10/2025

📢 பகல் நேர காவலாளி தேவை

🕌 புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல்-அக்ஸா)

எமது பள்ளிவாயலுக்கு ஒரு பகல் நேர காவலாளி அவசரமாக தேவைப்படுகின்றார்.

👤 தகுதிகள்:

40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

நல்லொழுக்கம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவராக இருத்தல் வேண்டும்.

💰 சம்பளம்:
பேசி தீர்மானிக்கப்படும்.

📞 தொடர்புகளுக்கு:
📱 077-4445122
📱 070-6790990
📱 077-6340977

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூபா 6,00,000 அபராதம்..!கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்...
10/10/2025

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூபா 6,00,000 அபராதம்..!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் நாரஹேன்பிட்ட மாவட்ட அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 70/- ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது.

தண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள், இந்த குற்றத்திற்காக ஐந்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 6,00,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு இன்று..!76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்ட இராணுவத் தளபதி மேஜர...
10/10/2025

இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு இன்று..!

76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ , இலங்கை இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாக்க தொழில் ரீதியாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்ற வேண்டும் என்றும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, போர்வீரர்கள் நினைவு விழா சமீபத்தில் (08) பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது.

அத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் தலைமையில், ஜெய ஸ்ரீ மகா போதி, கிரிவெஹர, கதிர்காம ஆலயம் , ஸ்ரீ தலதா மாளிகை, கோட்டே புனித தோமையர் தேவாலயம், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஆகிய இடங்களில் இராணுவ தினத்தை முன்னிட்டு பல மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category