Asian News

Asian News Welcome to the official page of Asian News.

Watch Asian News anytime and anywhere on https://asiannews.lk/

Our Instagram Page: https://www.instagram.com/asiannews.lk/

Join Through Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KAACFnt4C0j4O4zz8JUe6s

பருவமழைக்கு முன்னர் வடிகான்களை சுத்தப்படுத்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஜுசைல் ஜெசூலி நடவடிக்கை...!!எஸ் ஜே புஹாது த...
20/07/2025

பருவமழைக்கு முன்னர் வடிகான்களை சுத்தப்படுத்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஜுசைல் ஜெசூலி நடவடிக்கை...!!

எஸ் ஜே புஹாது

தேவையறிந்து சேவையாற்றும் நிந்தவூர் மத்திய வட்டார மக்கள் பிரதிநிதி ஜுசைல் ஜெசூலி பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடிகான்களை சுத்தப்படுத்துவது குத்து சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

இதன் ஆரம்ப செயல்பாடாக இன்று 2025.07.20 நிந்தவூர் மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட வடிகான்களின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ அஸ்பர் ஜே பி யின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அவற்றை துப்புரவு செய்யும் பணிகளையும் முன்னெடுக்க உள்ளார்

இவரது முன்மாதிரியான இந்த செயற்பாடு வட்டார மக்களின் பொதுவான பாராட்டை பெற்றுள்ளது.

இது குறித்து நிந்தவூர் பிரதேச சபையின் இளம் உறுப்பினரான ஜுசைல் ஜெசூலி குறிப்பிடுகையில், வரவிருக்கும் பருவ மழையின் போது ஏற்படும் வெள்ள நீரில் இருந்து மக்களைப் பாதுகாக்க இன்று நீர் வடிந்து ஓடும் வடிகான்களை பார்வையிட்டேன்

இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பிரதேச சபை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்...?இனிப்யை விரும்பி சாப்...
20/07/2025

நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்...?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.

பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so Can we avoid

நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி...

"கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் தோல்வியைத் தழுவுமா...?பைஷல் இஸ்மாயில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற "கிளீன் ஸ்ர...
20/07/2025

"கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் தோல்வியைத் தழுவுமா...?

பைஷல் இஸ்மாயில்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தில் மாற்றமொன்றை கொண்டுவராத வரை அத்திட்டம் ஒருபோதும் வெற்றியைத்தராது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

"கிளீன் ஸ்ரீலங்கா" என்பது இலங்கையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் மூலம், நாட்டின் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும், பொது இடங்களில் தூய்மையை பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன், பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் முக்கிய பங்காக இருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பாகும். குறிப்பாக, நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்கவும், திண்மக்கழிவுகளை முறையாக அகற்றி அதனை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதாரமான சூழல் போன்றவற்றை உருவாக்கி பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம், இலங்கை ஒரு தூய்மையான மற்றும் சுகாதாரமான நாடாக உருவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரசும், அரசாங்கமும், இத்திட்டத்தை நாடு முழுவதிலும் மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, நாட்டிலுள்ள மக்கள் அதே தவறினை மீண்டும் மீண்டும் தொடராகச் செய்து வருகின்றனர்.

முதலில் மக்கள் மனதில் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் தொடர்பான மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடத்தில் மாற்றம் வராத வரை இத்திட்டம் ஒருபோதும் வெற்றியைத்தராது.

அதற்காக, "கிளீன் ஸ்ரீலங்கா" தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்குவதுடன், அதை மீறி செயற்படுபவர்களுக்கெதிராக ஒரு இறுக்கமான சட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும்.

அப்போதுதான் இத்திட்டத்தை ஓரளவு வெற்றிகரமாக கொண்டு செல்லமுடியும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் "கிளீன் ஸ்ரீலங்காவைத் தவிர வேறு எந்த விடயங்களையும் எமது நாட்டில் முன்னெடுத்துச் செல்லமுடியாது.

எனவே, அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி செயற்படுமாக இருந்தால் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் 50 சதவீதம் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இல்லையென்றால் முழுமையான தோல்வியை மாத்திரமே தழுவும்.

20/07/2025

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! - பிரதமர் அதிரடி அறிவிப்பு

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய "நாட்டார் கலை நயம்” விழா!(எம்.வை. அமீர், எம்.எஸ்.எம்.ஸாகிர்)கிழக்கு மாகாண மக்களின் நாட்டா...
20/07/2025

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய
"நாட்டார் கலை நயம்” விழா!

(எம்.வை. அமீர், எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைய, இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரியக் கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட “நாட்டார் கலை நயம் (Rhythm of Folklore)” என்ற சிறப்பு நிகழ்வு நேற்று (19) சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

டயகோணியா (Diakonia) அனுசரணையில், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF), சமூக அபிவிருத்தி அமையம் (FSD) மற்றும் கெப்ஸோவுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பிராந்தியத்தின் பாரம்பரிய பண்பாட்டு முறைமைகளை பிரதிபலிக்கும் விதத்தில் “நாட்டார் கலை நயம் (Rhythm of Folklore)” நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் இக்கலைகள் தொடர்பாக தொகுக்கப்பட்ட டிஜிட்டல் ஆவணத் தொகுப்புகளும் காண்பிக்கப்பட்டன.

நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சார்பில் சிரேஷ்ட ஆலோசகர் ஏ. என். ஜப்பார், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் லெய்லா உடையார், நிதி உத்தியோகத்தர் குமுதினி பெரேரா மற்றும் பிராந்திய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நாட்டார் கலை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டம் தொடர்பான அறிமுக உரையை FSD இன் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.ஏ. சஜா நிகழ்த்தினார். நாட்டார் கலை சம்பந்தமான அறிமுக உரையை தொல்பொருளியலாளர் மற்றும் மரபுரிமை ஆய்வாளார் கலாநிதி ஏ.ஆர்.எம். ஜெஸ்மில் நிகழ்த்தினார்.
வரவேற்புப் பாடலை சம்மாந்துறை திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் குழுவினர் இசைத்தனர்.
நாட்டார் பாடல்கள் நாட்டாரியல் வித்தகர் எழுகவி அக்கரைப்பற்று எம்.ஐ.எம். ஜலீல் மற்றும் நாட்டார் கலைத்துறை வித்தகர் யூ.எல். ஆதம்பாவா ஆகியோரால் பாடப்பட்டது.

கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் ஆகியோர் உரையாற்றினர்.

சாய்ந்தமருது "மருதூர் கலை மன்ற பொல்லடி" கலைஞர்களின் நிகழ்வு, மட்டக்களப்பு பறங்கியர் கலாசார சங்க கலைஞர்களால் பேகர் பாடலும் மாவடிப்பள்ளி வளர்பிறை முஸ்லிம் பாரம்பரிய கலாசார கலை மன்றம் கலைஞர்களால் சீனடி, சிலம்படி நிகழ்வும் கல்முனை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களால் மீனவர் பாடலும், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களால் விவசாய பாடலும் இசைக்கப்பட்டு, பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.

கெப்ஸோவின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாத் நன்றியுரை நிகழ்த்தியதோடு, நிகழ்வுகளில் பங்குபற்றயவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு ; கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை...!( வி.ரி.சகாதேவராஜா)பயங்கரவாத தடைச் சட்டத்த...
20/07/2025

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு ; கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை...!

( வி.ரி.சகாதேவராஜா)

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம்
கல்முனை மாநகரில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை பகல் கையெழுத்து வேட்டையொன்றை நடாத்தியது.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை நீதி வேண்டும் மற்றும் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தொங்கவிடப்பட்டிருந்தன.

இதன் போது பலரும் தாமாகவே முன்வந்து கையொப்பமிட்டதுடன் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

விமானியாக  சரித்திரத்தில் இடம்பிடித்த தமிழனை வாழ்த்துவோம்....!!விமானியானார் விடத்தல்தீவின் பூர்வீகத்தை கொண்ட அனுஜன். விட...
20/07/2025

விமானியாக சரித்திரத்தில் இடம்பிடித்த தமிழனை வாழ்த்துவோம்....!!

விமானியானார் விடத்தல்தீவின் பூர்வீகத்தை கொண்ட அனுஜன்.

விடத்தல்தீவு கிராமத்தின் அருள்வாசகம் ( அருள் ) பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ( நீக்கிலஸ் ) ஆகியோரின் புதல்வனுமாகிய அனுஜன் விமானியாக விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.

9/3/1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.

தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ATPL ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து அதிகாரப்பூர்வ ATPL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ATPL என்பது யாதெனில் ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமமாகும்.
இது ஒரு விமானி பெறக்கூடிய அதிகமான தரமான உரிமமாக இருப்பதுடன் இவ் உரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.

விமானியாக சரித்திரத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்த அனுமனுக்கு ஏசியன் நியூஸ் ஊடக வலையமைப்பின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும், தெரிவித்துக் கொள்ளுகின்றோம்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு...!!எஸ் ஜே புஹாது இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ...
20/07/2025

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு...!!

எஸ் ஜே புஹாது

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார்

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (20) சுமூகமான முறையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு விஷயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 வது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

"தூங்கும் இளவரசர்"  அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சௌத்ன் ஜனாசா இன்று நல்லடக்கம்....!!மத்திய கிழக்கு மக்களால் "தூங...
20/07/2025

"தூங்கும் இளவரசர்" அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சௌத்ன் ஜனாசா இன்று நல்லடக்கம்....!!

மத்திய கிழக்கு மக்களால் "தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்பட்ட இளவரசர் அல் வலீத் பின் காலித் பின் தலால் அல் சௌத் ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பிறகு ரியாத்தில் அமைந்துள்ள துர்க்கி பின் அப்துல்லா மஸ்ஜிதில் இடம்பெற உள்ளன.

1990 இல் பிறந்த இளவரசர் அல் வலீத், சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலீத் பின் தலால் அல் சௌத்தின் மூத்த மகனும், கோடீஸ்வர இளவரசர் அல் வலீத் பின் தலாலின் மருமகனுமாவார்.

2005 ம் ஆண்டு லண்டனில் உள்ள இராணுவ கல்லூரியில் இராணுவ கெடட்டாக கல்வி பயின்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட எதிர்பாராத கோரவிபத்தொன்றில் சிக்கிய வலீத் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினாலும் உட்புற இரத்தப்போக்கினாலும் கோமா நிலைக்கு சென்றார்.

அதிநவீன மருத்துவ சிகிச்சை மற்றும் பல வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பு அவர்களின் கடுமையான முயற்சி என பல போராட்டங்கள் இருந்தபோதிலும், கடந்த 20 வருடங்களாக அவர் முழு சுயநினைவைப் பெறவில்லை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, இளவரசர் அல் வலீத் பெரும்பாலும் பதிலளிக்காத கோமா நிலையிலேயே இருந்தார், இருப்பினும் அவ்வப்போது அவரிடம் ஏற்பட்ட தன்னிச்சையான அசைவுகள் குடும்பத்தினர்களுக்கு நம்பிக்கையை அளித்தன. அவரது தந்தை இளவரசர் காலீத் இறைவன் தனது மகனை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் உயிர் காப்பு உபகரணங்களை நீக்குவதற்கான பரிந்துரைகளை பகிரங்கமாக நிராகரித்தார்.
20 வருடங்களின் பின்னர் கோமாவில் இருந்தவாறே அவரின் உயிர் இன்று இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறது.

இளவரசர் வலீதின் ஜனாஸா தொழுகையும் அதனைத்தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கமும் இன்று 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பிறகு ரியாத்தில் அமைந்துள்ள துர்க்கி பின் அப்துல்லா மஸ்ஜிதில் இடம்பெறவிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #...
20/07/2025

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின்
கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணத்துடன் பங்கேற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

அந்த வகையில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கத்தால் அவ்வப்போது நியமிக்கப்படும் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

பல்வேறு பகுதிகளில் மார்க்க வழிகாட்டல்களுக்கு முரணாக அமையாமல் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மார்க்கத்துக்கு முரண்படும் விடயங்களில் மாற்று வழிகளை முன்வைத்து, ஜம்இய்யா பல பரிந்துரைகளை வழங்கியிருப்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.

இத்துடன், முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அண்மையில் ஒரு ஊடகம் ஒன்றில் பேசியபோது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்திற்கு ஜம்இய்யா தடையாக உள்ளது என்று தெரிவித்ததை, அர்த்தமற்றதும் அடிப்படை அற்றதும் எனக் கண்டிக்கின்றோம்.

இது தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முழுமையான நிலைப்பாடு விரைவில் பொது மக்களுக்கு வெளியிடப்படும்.

நன்றி விடியல்

கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டியதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லாவுடன் தமிழரசுக்கட்சி ...
20/07/2025

கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டியதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லாவுடன் தமிழரசுக்கட்சி இணைந்து ஆட்சியமைப்பு...!!

வியப்புக்குரியது என்கிறார் அமீர் அலி...!!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டினார் என ஹிஸ்புல்லாவை விமர்சித்த இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த இடங்களில் அவருடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என விமர்சித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர்அலி.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்று ஊடக மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர்அலி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த பொது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஜக்கிய மக்கள் சக்தி சின்னத்தில் போட்டியிட்டோம்.

இதில் 8 வட்டாரங்களை நாங்கள் வென்றோம். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன் 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும் சுயேச்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் யூன் 16ம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய தினம் எனது கட்சி காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதோ அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன், பிரதி தவிசாளராக அன்சார் தெரிவாக வேண்டுமென கட்சி எடுத்துக் கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்.

இதன்போது தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய தவிசாளராகியுள்ள பைரூஸ் அந்த கூட்டத்திலே தொடர்ந்து கலந்துகொண்டார். காலை 10 மணி தொடக்கம் இடம்பெற்ற அந்த கூட்டத்தை பகல் போசனத்துக்காக அதாவது சபனில் முஸ்லீம்கள் ஒரு தாம்பாளத்திலே 6 பேர் ஒன்றாக இருந்து சாப்பிடும் முறை அந்த முறையில் தற்போதைய பிரதேச சபை தவிசாளரும் இருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரண்டாவது அமர்வில் தெளிவாக பேசினேன். அதில் கட்சி பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டவரை தவிசாளராகவும் ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்வது என தெரிவித்தேன்.

இதன்போது ஒட்டு மொத்தமாக 9 பேரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எனது கையில் பைரூஸ் உட்பட அனைவரும் சத்தியம் செய்துவிட்டு சென்றனர். அதேநேரத்தில் தவிசாளரான பைரூஸ் சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வருகின்றேன் என ஓடோடிச் சென்று அங்கு சென்று அவர்களுக்கு உடன்பாடு தெரிவித்து கட்சி மாறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா தமிழரசுகட்சியுடன் கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றினர். அதில் எனக்கு வியப்பான விடயம், ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிகடை கட்டியது எனவும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த போதும் கூட இலங்கை தமிழரசு கட்சி அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றிய பணியை செய்திருக்கிறார்கள்.

இருந்தபோதும் அப்படியான நிலையில் அவர்கள் உள்ளாந்த ரீதியாக எங்களுடைய கட்சி உறுப்பினராக இருந்த பைரூஸை தவிசாளராக்கி பிரேரணை கொண்டுவந்து ஒரு அருவருப்பான முறையிலே சபையை வழிநடாத்தியுள்ளனர்.

எனவே எங்கள் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதுடன் சத்தியத்தை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கட்சி யாப்புக்கு விரோதமாக தவிசாளராக வந்திருப்பது சட்ட விரோதமானது.

எனவே கட்சியின் ஒழுக்ககாற்று குழு மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அவர் மாத்திரமல்ல நாட்டிலே எங்கள் கட்சிக்குள் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரா ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.

🔴காரைதீவு பிரதேச மக்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ள தவிசாளர் பாஸ்கரன் !🖋️நூருல் ஹுதா உமர்குப்பைகளை கண்ட கண்ட இடங்...
20/07/2025

🔴காரைதீவு பிரதேச மக்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ள தவிசாளர் பாஸ்கரன் !

🖋️நூருல் ஹுதா உமர்

குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் அடிப்படையில் சனிக்கிழமை காரைதீவு - 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன், எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

எனவே, சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம்.

அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். மாறாக, இந்த கேட்டுக்கொள்வதோடு, எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.- என்றார்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Asian News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share