Asian News

Asian News Welcome to the official page of Asian News.
(1)

Watch Asian News anytime and anywhere on https://asiannews.lk/

Our Instagram Page: https://www.instagram.com/asiannews.lk/

Join Through Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KAACFnt4C0j4O4zz8JUe6s

விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நெகிழ்ச்சியான தருணம்
10/05/2026

விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நெகிழ்ச்சியான தருணம்

 #இலங்கை  #ஜனாதிபதி_செயலகத்தை  #பார்வையிட்ட_காஷிபுல்  #உலூம்_அரபுக்  #கல்லூரி_மாணவர்கள்.எஸ் ஜே புஹாது நிந்தவூர் காஷிபுல்...
10/05/2026

#இலங்கை #ஜனாதிபதி_செயலகத்தை #பார்வையிட்ட_காஷிபுல் #உலூம்_அரபுக் #கல்லூரி_மாணவர்கள்.

எஸ் ஜே புஹாது

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள் இலங்கை ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் போது, அரசின் நிர்வாக செயற்பாடுகள், ஜனாதிபதி நிதியம் தொடர்பான பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், சமூக நலத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் சேவை அமைப்புகள் பற்றிய தெளிவான அறிவையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

விஜயத்தின் நிறைவாக, ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த பயனுள்ள விஜயம் மாணவர்களுக்கு அரசின் செயற்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் சிறந்த அனுபவமாக அமைந்தது.

10/05/2026

💥 இன்று முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் "மனைவி வராதது பெரிய விஷயமல்ல, ஆனால் தந்தையிடம் சென்றால் பல ஆதாயங்கள் இருக்கும் என்று தெரிந்தும், அம்மா பக்கம் நிற்கும் விஜய் பிள்ளைகளின் முடிவுதான் ஆச்சரியம்"

10/05/2026

ச.ஜோசப் விஜய் எனும் நான் - அதிர்ந்த நேரு ஸ்டேடியம்

யாழ் வைத்தியசாலைக்கு 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்துவரப்படுகிறதுகடோ கபு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏ...
10/05/2026

யாழ் வைத்தியசாலைக்கு 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்துவரப்படுகிறது

கடோ கபு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய உடனடியாக 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்து வரப்படுவதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்தின் காரணமாக அழவடைந்தது. இதன் காரணமாக போதனா வைத்தியசாலை நோயாளர்களிற்கு வழங்கும் எந்தவொரு சேவையும் பாதிப்படையாது தொடர்ச்சியாக முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேகாலத்தில் தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு என்பவற்றை கண்டறியவதற்காகவும் உடனடியாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து ஓர் விசாரணைக் குழு போதனா வைத்தியசாலைக்கு வரவுள்ளனர்.

இவை அனைத்தும் இடம்பெறும் காலத்தில் போதனா வைத்தியசாலையில் இருந்து நாளை 3 பார ஊர்திகள் கொழும்பு சென்று தேவையான மருந்துப் பொருள்களை ஏற்றிவரவுள்ளது. மத்திய மருந்தகத்தில் இருந்து 5 பார ஊர்தியும் அநுராதபுரம் வைத்தியசாலை வாகனம் ஒன்றுமாக மொத்தம் 9 பார ஊர்திகளில் தேவையான அனைத்து வகை மருந்துகளும் எதிர்வரும் 4 தினங்களிற்குள் எடுத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

இன்றைய வானிலை 2026.05.10இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்பட்ட தளம்பல் நிலையானது விருத்தியடைந்து நாளை...
10/05/2026

இன்றைய வானிலை
2026.05.10

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்பட்ட தளம்பல் நிலையானது விருத்தியடைந்து நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக மாற்றமடைகின்றது. ஆனபடியினால் நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை நாடு முழுவதிலும் வானம் முகில் செறிந்து காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், ஊவா மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
**************************

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம்: சம்மாந்துறை மாணவி மனிதாபிமான முன்மாதிரிதில்சாத் பர்வீஸ், மஜீட் ARMஇன்றைய இளைய ச...
10/05/2026

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம்: சம்மாந்துறை மாணவி மனிதாபிமான முன்மாதிரி

தில்சாத் பர்வீஸ், மஜீட் ARM

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, இரத்ததானம் செய்யத் தகுதியான 18 வயதை அடையும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்து, இன்று தனது முதலாவது இரத்ததானத்தை வழங்கினார்.

மேலும், இரத்ததானத்திற்கு அவசியமான குறைந்தபட்ச 50 கிலோ உடல் எடையை எட்டிய பின்னரே ஆரோக்கியமான முறையில் இரத்ததானத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் பங்கேற்பு குறைவாகக் காணப்படும் இரத்ததான முகாம்களில், சமூகப் பொறுப்புணர்வுடன் முன்வந்து மனிதாபிமான சேவையில் ஈடுபட்ட இம்மாணவியை பலரும் “இளம் சிங்கப்பெண்” என பாராட்டி வருகின்றனர்.

அவரது உயரிய மனிதாபிமான செயலைக் கௌரவிக்கும் வகையில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவினரால் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் உயிர் காக்கும் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இம்மாணவியின் செயற்பாடு சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவு தந்த பிற கட்சித் தலைவர்களுடன் தமிழக பொறுப்பு  ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை க...
09/05/2026

த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவு தந்த பிற கட்சித் தலைவர்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்.

வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எட...
09/05/2026

வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கே எ ஹமிட்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்திற்கான தீர்மானத்தை நீடிக்கும் விவாதத்தின் போது அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து வடகிழக்கில் பல தனியார் காணிகள் பாதுகாப்புத் தேவைகளுக்காக பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான காணிகளை தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தி அவற்றை உரிய பொதுமக்களிடம் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அந்தக் காணிகளை பயன்படுத்தி அதற்கான வாடகை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கடுமையான உத்தரவும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திலும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் தனியார் மற்றும் அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்வைத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய விவகாரத்தையும் குறிப்பிட்டார். அதேபோல் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொலிஸ் நிலையமும் பொருத்தமான வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றார்.

அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கான நிரந்தர முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை அரசாங்கம் திட்டமிட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

🏡 பிரதான வீதியில் 17.2 பேர்ச்சஸ் வளவு விற்பனைக்கு!📍 இடம்: அட்டாளைச்சேனை🏢 பிரதேச சபை பிரிவு: அட்டாளைச்சேனை📐 மொத்த பரப்பு:...
09/05/2026

🏡 பிரதான வீதியில் 17.2 பேர்ச்சஸ் வளவு விற்பனைக்கு!

📍 இடம்: அட்டாளைச்சேனை
🏢 பிரதேச சபை பிரிவு: அட்டாளைச்சேனை

📐 மொத்த பரப்பு: 17.2 பேர்ச்சஸ்
📏 அளவு: சுமார் 80 அடி நீளம் × 59 அடி அகலம்

✅ 100% கிரய வளவு — தாய் உறுதி
🚗 பிரதான வீதியில் இருந்து வெறும் 50 மீட்டர் தூரம்
🧱 வளவு முழுவதும் சுவர்/மதில் அடைக்கப்பட்டுள்ளது – 02 வாயிற்கதவுகள் உள்ளன
🏠 2 அறைகள் கொண்ட சிறிய வீடு உள்ளது
📑 அரசு அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரால் முழுமையாக Survey செய்யப்பட்டுள்ளது
📎 (Survey Report & Deed இணைக்கப்பட்டுள்ளது)
🌴 5–6 முழுமையாக காய்க்கும் தென்னை மரங்கள் & 2–3 மாமரங்கள் உள்ளன
🔄 வளவினை சுற்றி வர இரு பக்க பாதைகள் உள்ளன
🏘️ சனநடமாட்டமுள்ள குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது

📍 அருகிலுள்ள முக்கிய இடங்கள்
🕌 150 மீட்டர் – அல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல்
🏥 250 மீட்டர் – MOH அட்டாளைச்சேனை
🌾 250 மீட்டர் – கமநல சேவை நிலையம், அட்டாளைச்சேனை
🏛️ 300 மீட்டர் – Zakki Banquet Hall
🚌 300 மீட்டர் – Fairoos Express
🏭 400 மீட்டர் – அரிசி ஆலைகள்
🎓 400 மீட்டர் – மாவட்ட வேளாண்மை பயிற்சி நிலையம், அட்டாளைச்சேனை
⛽ 850 மீட்டர் – Ceypetco பெட்ரோல் நிலையம்

🏗️ புதிதாக வீடு கட்ட அல்லது தொழில் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானது

💧⚡ நீர் மற்றும் மின்சார வசதி.

💰 விலை: பேசித்தீர்மானிக்கலாம்

📞 CALL / WHATSAPP (உரிமையாளர்): 0771414037

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனம்;பாடுபட்ட அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள்சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலை...
09/05/2026

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனம்;
பாடுபட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனத்துக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாறக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டதை முன்னிட்டு, துஆப் பிரார்த்தனை செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்காக முழு மூச்சாக நின்று உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று (08) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நன்றி கூறி உரையாற்றிய வேளை, இதற்காக அரும்பாடுபட்ட அனைவருக்கும் தமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமது நன்றியுரையில் அவர் மேலும் கூறியதாவது,

மதிப்பிற்குரிய உலமாக்களே, ஊர்பிரமுகர்களே வர்த்தக பெருமக்களே, கல்விமான்களே, மீனவர்களே, அன்புக்குரிய பெரியோர்களே, சகோதரர்களே, இளைஞர்களே மற்றும் எனது பாசத்திற்குரிய மருதூர் மண்ணின் மைந்தர்களே!

வீடுகளில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்பின் ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!

நமது சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!

நமதூருக்கான தனியான சபை என்ற இலக்கை அடைந்ததற்கு முக்கிய காரணம் நமது மருதூரின் ஒற்றுமையும் ஓரணியில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு தனியான நகரசபை சாய்ந்தமருதுக்கு வேண்டும் என்ற ஒருமித்த கோஷத்தோடு செயற்பட்ட சமூக போராட்டமும், எங்கள் ஒவ்வொருவரினதும் துஆக்களினதும் பிரதிபலனாகும்.

இந்த இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் பெயர்சொல்லி குறிப்பிட வேண்டியவர்கள் மிக அதிகமானவர்கள் இருக்கின்றார்கள்‌. நேர முகாமைத்துவத்தை கருதி முக்கியமான சிலரை ஞாபகப்படுத்துகின்றேன்.

எங்களின் இந்த நகர சபை இலக்கை நோக்கி பயணிக்க சாய்ந்தமருது ஊரை ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப் படுத்தி எங்களுக்கு தலைமை வகித்த சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் மர்ஹும் வை.எம். ஹனீபா சேர் அவர்களின் ஆளுமையையும், செயற்பாட்டையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்.

அதேபோல எங்களின்‌ கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டு சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட பக்கபலமாக இருந்த முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்‌ அவர்கள் செய்த வரலாற்று உதவியை நாங்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன் ஞாபகமூட்டி எங்களது ஊர்மக்கள் அனைவரது சார்பாகவும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது ஊரின் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் சேர் அவர்கள் இந்த சபைக்கான முயற்சியில் மூளையாக செயற்பட்டு நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக வழி நடத்தியதை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு, எமது கௌரவ முன்னாள் மாநகர சபை சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பை நன்றியுடன்‌ நினைவூட்டுகின்றேன்.

இந்த நகரசபை போராட்டத்திற்காக நிதிப் பங்களிப்பு செய்த வர்த்தகர்கள், தனவந்தர்கள் உடல் ரீதியாக பங்களிப்பு செய்த இளைஞர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊர்மக்கள் அனைவருக்கும் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்களது கோடான கோடி நன்றிகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

இந்தப் போராட்டத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து வழக்குகளையும், விசாரணைகளையும், பல இன்னல்களையும் எதிர்கொண்ட இளைஞர்களுக்கு எங்களது நன்றிகளும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஈருலக வெற்றியையும் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

இறுதியாக நமது வர்த்தமானி அறிவித்தல் சட்ட பூர்வமானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சேர் அவர்களுக்கும் முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களுக்கும் நமது ஊர்மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, இந்த உயர் நீதிமன்ற வழக்கிற்காக பண உதவி மற்றும் உடல் உதவி செய்தவர்களுக்கும் நன்றி சொல்வதோடு, இந்த வரலாற்று நீதியை பெற்றுத் தந்த பிரபல சட்டத்தரணிகளுக்கும் எங்களது சாய்ந்தமருது மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சாய்ந்தமருது மக்களாகிய நாம் அரசியலில் கட்சிரீதியாக எந்த அணியில் பிரிந்து இருந்தாலும் எங்கள் அனைவரதும் இலக்கு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றமே!

அந்த வகையில் இந்த நகரசபையின் அடுத்த கட்ட செயற்பாடுகளான எல்லை நிர்ணயம் வட்டாரப் பிரிப்பு போன்ற நகரசபை செயற்பாடுகளுக்கு எமது ஊரின்‌ தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா சேர் அவர்கள் எதிர்காலத்தில் முழு முயற்சி செய்து சாய்ந்தமருது நகர சபையை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

"இறுதியாக,
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. நமது வெற்றி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மிகவும் கண்ணியமான முறையில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி, இந்த வெற்றியை அனுஷ்டிப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சாய்ந்தமருது மண்ணை செழிக்கச் செய்வானாக! இந்தப் புதிய உள்ளூராட்சி சபை மூலம் நமது மக்களின் வாழ்வாதாரமும், உட்கட்டமைப்பும்,கல்வித் தரமும் உயரட்டும். நாம் அனைவரும் கைகோர்த்து, ஒரு பலமான, வளமான சாய்ந்தமருதை உருவாக்குவோம் என்று இந்த புனிதமான பள்ளிவாசல் முன்றலில் நின்று உறுதி ஏற்போம்.
எமது மண்ணின் உரிமை எமது கையில்! வெற்றி நிச்சயம்! அல்லாஹூ அக்பர்! வாழ்க சாய்ந்தமருது! என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஹுதாப் பள்ளிவாசல் பேஷ்இமாம் எம்.எச்.எம். நப்றாஸ் (றஹ்மானி) மேற்கொண்டார்.

இதன்போது சாய்ந்தமருதூர் மக்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து, இனிப்புக்கள் வழங்கி, தமது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

Address

Colombo
32340

Alerts

Be the first to know and let us send you an email when Asian News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian News:

Share