Lindula News

Lindula News செய்திகள்

25/02/2026

#நடைமுறை_அரசாங்கத்திலாவது.......

18/02/2026

தேயிலை ஆராய்ச்சி நிலையம் சென் கூம்ஸ் - லெமினியர் பிரிவு பெருந்தோட்ட பொதுமக்கள் தமது சம்பளத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டதோடு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு ஜனாதிபதி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

තේ පර්යේෂණ ආයතනයේ ශාන්ත කුම්බ්ස් - ලැමිනෙයාර් අංශයේ වතු සේවකයින් සතුටින් තම වැටුප් ලබා ගත් අතර විශේෂ යාඥාවල නිරත වෙමින් ජනාධිපතිවරයාට ස්තූති කරමින් තම සතුට පළ කළහ.

நன்றி நவில்தல் விழாவை சிறப்பாக அடையாளப்படுத்திய  நட்பு வட்டம்நுவரெலியா கல்வி வலயம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்  200...
06/02/2026

நன்றி நவில்தல் விழாவை சிறப்பாக அடையாளப்படுத்திய நட்பு வட்டம்

நுவரெலியா கல்வி வலயம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் 2003-2005 வருட க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்களால் நன்றி நவில்தல் விழா 04.02.2026 அன்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது....
க.பொ.த உயர்தரம் கற்பித்த ஆசிரியர்களுக்கான நன்றி நவில்தல் இடம் பெற்றது.இந்நிகழ்வில் ( 2003 - 2005) கலைப் பிரிவு வகுப்பாசிரியராக இருந்த இவ்வருடம் பணி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திரு.விஜயகுமார்,புவியியல் கற்பித்த இன்றைய நு/தலவாக்கலை த.ம.வி அதிபர் ரோகிணி அம்மையார் இந்து நாகரிகம் கற்பித்த ஆசிரியை செல்வி.கல்யாணி பணி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவி முதலியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தொகுதியில் கல்வி கற்றவர்கள் இன்று பிரபல வழக்கறிஞர்கள்,அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,ஆசிரியர்கள்,வணிகர்கள் என பல பதவிகளில் ஜொலிக்கின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மண்ணின் கல்வி துறையில்பல மாணவ  செல்வங்களை உருவாக்குவதில்நல்லாசிரியர் மலையக மக்களின்வாழ்வியல் துன்பங்களை அறிந்தவர்எ...
19/01/2026

மலையக மண்ணின் கல்வி துறையில்
பல மாணவ செல்வங்களை உருவாக்குவதில்
நல்லாசிரியர் மலையக மக்களின்
வாழ்வியல் துன்பங்களை அறிந்தவர்
எமது சமூகத்தின் குரலாய் ஊடக துறையிலும் தன்னுடைய காந்த குரலில்
மலையக மக்களின் வாழ்வியல் விளையாட்டு என எல்லா துறைகளையும்
அலசி ஆராயந்து ஊடக துறையிலே
மிளிர்ந்து கொண்டு கல்வி துறையிலும்
எம் மாணவர்களின் வளர்ச்சியின் ஓளிக்கீற்று இருக்கு
என் அன்பிற்கு மரியாதைக்கு உரிய ஆசான்
சான் சதீஸ் அவர்கள் எத்தினமும்
எதிலும் ரத்தினமாய்
இழங்கி வாழ்க்கையில் வள முடனும்
நல முடனும் இந்த தரணியிலே பிரியமுள்ள
பிரியனின் நா இனித்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் sir

06/01/2026

இசை :- கலைமாமணி சௌந்தராகவனின் பென்டசி இசைக்குழு
வரிகள் : திரு ஷான் சதீஷ்

எங்க சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா..

புலி மேலே ஏறி வரும் மணிகண்டன் ஐயப்பா
வீரத்துக்கு பெயர் போன வீர மணிகண்டனே 2

18 படியேறி சரணம் சரணம் சொல்லியே
வர போறோம் வர போறோம் ஐயப்பா ஐயப்பா -2

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா..
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா..
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா..

மண்ணுலக அடியாரை காக்க வரும் ஐயப்பா...
பம்பையின் நாயகனே மகரஜோதி ஐயப்பா....
வேதநெறி நின்றவனே மண்ணுலகின் கந்தரனே..
கற்பூர ஜோதியிலே கருணை காட்டும் ஐயப்பா
அன்னதான நாயகனே அன்புள்ளம் கொண்டவளே
ஐங்கரனின் தம்பியே ஐயம் நீக்கும் ஐயப்பா
எருமேலி சாஸ்தாவே சாகா வரம் பெற்றவனே
மனசுல நின்றவனே உலகாலும் நாயகனே

சங்கடங்கள் தீர்ப்பவனே சந்ததியை காப்பவனே மணிகண்ட தேவனே மணிகுண்டம் அணிந்தவனே
சங்கரனின் சுந்தரனே சாஸ்தாவின் நாயகனே இருமுடிய சுமந்து கொண்டு மகரஜோதி காண்போமே.
பம்பையிலே குளித்துவிட்டு பம்பரமாய் வாரோமே தேகபலம் அளிப்பவனே தேசம் கடந்து வாரோமே
மெட்டெடுத்து சிந்தையிலே நிலைநிறுத்தி பாடிக்கொண்டே
ஜாதி மதம் பார்ப்பதில்லை சரணம் சொல்லி வாரோமே
நெய்வாசம் வீசுதையா எங்கள் குலராசனய்யா கேளுங்கையா கேளுங்கையா கேட்டவரம் தருவான் ஐயா
ஓம் சாமியே...... சரணம் ஐயப்பா

பாடியவர்கள்
திரு மரியதாஸ்
திரு சாந்தகுமார்
திரு ராயர் பன்னீர்செல்வம்
திரு எஸ்.யோகேஸ்வரன்
திரு டி. ஷான் சதீஷ்
திரூ. கே. எஸ். மயில்வாகனம்

பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு  அறிமுக விஜயத்தை மே...
30/12/2025

பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அறிமுக விஜயத்தை மேற்கொண்டனர்

பாகிஸ்தான் லாகூர் ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு விஜயம்
பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (29/12/2025) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு அறிமுக விஜயத்தை மேற்கொண்டனர். டிசம்பர் 23 முதல் 30 வரை கொழும்பில் நடைபெறும் 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த மாணவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஃபஹீம் உல் அஜீஸ் மற்றும் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. மாணவர்களை அன்புடன் வரவேற்ற தூதுவர், விளையாட்டுத் துறையின் ஊடாக பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் தூதுவர்களாக மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். மேலும், அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் – இலங்கை இடையிலான நீண்டகால நட்பு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றை விளக்கும் விரிவான விளக்கக்காட்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், இராஜதந்திரம், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் தூதுவருடன் வெளிப்படையாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த விஜயம் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள தளமாக அமைந்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

29/12/2025

கொட்டகலை பாதுகாப்பு குழுவின் சிறப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்,கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள்

டித்வா சூறாவளி காரணமாக கொட்டகலை ஏந்தும் பிரதேசத்தில் குடியிருப்பு சேதம், உடைமைகள் இழப்பு உள்ளிட்டவையோடு பாடசாலை மாணவர்களின் கற்றல் - உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில் கொட்டகலை பாதுகாப்பின் குழுவின் மற்றும் திம்புள்ள -பத்தனை பொலிஸ் பொறுப்பதிகாரி D.S.V அபேவர்த்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க people's Insurance ன் அனுசரனையில் கொட்டகலை Rich-Ro வரவேற்பு மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் peoples Insurance பிராந்திய நிறைவேற்று முகாமையாளர் திரு தஹாம் கருணாரத்ன, உதவி முகாமையாளர்களான திரு ரங்கன அமரசேன, இசங்க அபேக்கோன், கொட்டகலை மக்கள் பாதுகாப்பு குழு தலைவர் திரு கணேசன் கிரிசாந்த் (கிரி) உப-செயலாளர் திருமதி பெரிய துரை யோகவித்யா,பொருளாளர் திரு கருப்பையா மோகன சந்திரன் உட்பட அதன் நிர்வாக அங்கத்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

කොටගල ආරක්ෂක කමිටුවේ විශේෂ වැඩසටහන යටතේ, පවුල් පනහකට වියළි ආහාර ද්‍රව්‍ය, ඉගෙනුම් හා ඉගැන්වීම් උපකරණ ලබා දෙන ලදී.

ටිට්වා සුළි කුණාටුව හේතුවෙන්, කොටගල ආශ්‍රිත ප්‍රදේශයේ නිවාස හානි, දේපළ හානි සහ පාසල් සිසුන්ගේ ඉගෙනුම් හා ඉගැන්වීම් උපකරණ වලට හානි සිදු විය.

මෙම තත්ත්වය තුළ, පීපල්ස් ඉන්ෂුවරන්ස් අනුග්‍රහය යටතේ කොටගල ආරක්ෂක කමිටුව සහ දිම්පුල්ල-පතනයි පොලිස් ස්ථානාධිපති ඩී.එස්.වී. අබේවර්ධන මහතාගෙන් එසේ කරන ලෙස ඉල්ලා සිටියේය.

මෙම අවස්ථාවට පීපල්ස් ඉන්ෂුවරන්ස් ප්‍රාදේශීය විධායක කළමනාකරු දහම් කරුණාරත්න මහතා, සහකාර කළමනාකරුවන් වන රංගන අමරසේන මහතා, ඉසංක අබේකෝන් මහතා, කොටගල මහජන ආරක්ෂක කමිටුවේ සභාපති ගනේසන් ක්‍රිෂාන්ත් (ගිරි), නියෝජ්‍ය ලේකම් පෙරිය දුරෙයි යෝගවිද්‍යා මහත්මිය, භාණ්ඩාගාරික කරුප්පිය මෝහන චන්ද්‍රන් මහතා සහ එහි කළමනාකරණ කණ්ඩායමේ තවත් බොහෝ සාමාජිකයින් සහභාගී විය.

26/12/2025

ஸ்ரீ தங்கமயில் தர்மசாஸ்தா யாத்திரை
குழுவினரால் நடத்தப்படும் 10ம் வருட அஞ்சுமலை அழகன் தேரோற்சவம்

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17ம் நாள் (2026.01.01) வியாழக்கிழமை திரயோதசி ரோஹிணி நட்சத்திரம் பிரதோஷம் (காலை 7.59 தொடக்கம் 10.00 வரை ) யோகமும் கூடிய சுப நன்னாளில் தலவாக்கலை தங்கமயில் தர்மசாஸ்தா குழுவின் பத்தாவது வருட ஐயப்பன் இரதோற்சவ பவனி தலவாக்கலை மல்லியப்பு செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் இசை முழங்க நெய்விளக்குகள் மணக்க கருடன் அண்டத்தில் உலாவ கருபண்ணசாமி முருக்கு மீசையுடன் அக்னி சட்டியுடன் வாளேந்தி காவல்புரிய ஐயப்பன் தேர் உற்சவம் வீதிஉலா விழா தலவாக்கலை நகர பிரதான வீதியின் ஊடாக பிரதான முச்சந்தியை கடந்து தங்கமயில் தர்மசாஸ்தா பீடத்தை அடைய உள்ளது.
கிரியாகாலநிகழ்வுகள்
காலை 07:59 தொடக்கம் 10:00 வரை புண்ணியாக வாஜனம் கணபதி ஹோமம் தொடர்ந்து விஷேடதிரவிய ஹோமம் , மகா பூரணாகதி கும்ப உத்தாபணம், வீதி பிரதட்ஷனம் சங்காபிஷேகம் என்பனவோடு
மு.ப 11 மணிக்கு விஷேட தீபாராதணை ஐயப்பனுக்கு ஆனந்த மிகு பஜனை படி பூஜை அன்னதான பூஜை என்பன இடம்பெற்று குருசுவாமியின் நல்லாசியுரையோடு அடியவர்களுக்கு விபூதி பிரசாதம்மும் அன்னதானமும் வழங்கப்படும். “பி.ப 01:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்"
இப்புனித நன்நாளில் அனைவரும் வருகை தந்து அனைத்து பூஜைகளிலும் கலந்து ஐயப்ப சுவாமியின் திருவடி பணிந்து போற்றி வாழ்வில் சகல சம்பத்துக்களும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ திருவருட்கடாஷம் பெற்றுய்யுமாறு இருகரங்குவித்து பணிவாக பக்தியுடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்
சாந்தகுமார் குருசாமி,

ஸ்ரீதங்கமயில் தர்ம சாஸ்தா யாத்திரைக்குழு,
தலவாக்கலை

24/12/2025

அரும்புகள் அமைப்பின் மற்றும் ஒரு மகத்தான பணி ஹப்புதளை நகரில்

"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்,

கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள்
செல்வம் அல்ல.....

அரும்புகள் அமைப்பு.... தலைநகர் கொழும்பில் ....
தங்கத் தெருவான செட்டியார் தெருவில் ....
10 ஆண்டுகளைக் கடந்தும் பல உன்னத சேவைகளை செய்து வருகின்றது.....

இதில் ஆரம்ப நிலையாக ...
கலஹா தெல்தொட்டை ..
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது ....

இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ....
எம்மோடு நல்லுள்ளம் படைத்த மேலும் பல நண்பர்களை இணைத்துக் கொண்டு ....

மலையகப் பகுதிகளில் பின் தங்கிய பிரதேச பாடசாலைகளை எமது சிரேஷ்ட கல்வித்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு முழு மலையக ரீதியிலான சேவையை முன்னெடுக்கும் நோக்கில் அரும்புகள் அமைப்பு செயல்பட்டது.....

அதில் முதல் கட்டமாக கலஹா பௌலானா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை 2015ம் ஆண்டு எமது அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டதை அடுத்து....

உலக அளவில் ஏற்பட்ட கொரோனா தொற்று எம்மையும் விட்டு வைக்காத நேரத்தில் கூட மனித நேயம் கொண்டு தலைநகரில் உணவு இன்றி தவித்த உறவுகளுக்காக
70 உணவுப் பொதிகளில் ஆரம்பிக்கப்பட்ட உயிர் காக்கும் திட்டத்தின் ஊடாக 10 நாட்களுக்குள் 400 க்கும் அதிகமான பொதிகளை வழங்க வேண்டிய சூழல் எம்மை விட்டு வைக்காத நிலையிலும் எமக்கு கரம் கொடுத்த செட்டியார் தெரு தொழில் அதிபர்களை ஒரு கணமும் மறந்திட வாய்ப்பில்லை

இவ்வாறான சேவைகளை தொடர்ந்து பல கோணங்களில் அரும்புகள் அமைப்பு எம் மக்களுக்காக ஆற்றிய சேவைகளில் ஒரு சிலவற்றை அடையாளப்படுத்துகையில்....

ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பாடசாலை உபகரணங்களை நாடளாவிய வகையில் பின் தங்கிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது

கோவிட் தொற்று காலத்தில் உயிர் காக்கும் திட்டத்தின் சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது மட்டும் அல்லாமல்...
400 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

5 லட்சம் பெறுமதியான 3 சத்திர சிகிச்சைகள் 2020 ம் ஆண்டு செய்து வைக்கப்பட்டது

அரும்புகள் அமைப்பு உருவாக காரணமாக இருந்த செட்டியார் தெருவில் பணிபுரிகின்ற ஒரு சிலரின் திடீர் மரணத்தின் போது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் தொடக்கம் ஒன்றரை லட்சம் வரை சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வழங்கி வைக்கப்பட்டது

தொடர்ந்து

2025 ஆம் ஆண்டு உயர்தரத்தில் தனது கல்வியை தொடர முடியாத மாணவிக்கு மாதாந்த கொடுப்பனவாக 15000ரூபா வீதம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் முகமாக ....
மருத்துவ சிகிச்சை உட்பட பல சத்திர சிகிச்சைகளுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொகையை உயிர் காக்கும் உன்னத திட்டத்திற்காக சமர்ப்பித்திருக்கின்றது

அது மட்டுமல்ல அன்பு உள்ளங்களே ....

அண்மையில் எம் தாய் திரு நாட்டை பேரழிவிற்கு உட்படுத்திய திக்வா புயலின் தாக்கம் காரணமாக மண் சரிவு வெள்ள அனாத்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் உயிரிலும் மேலான மலையக உறவுகளுக்காக 7 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான உலர் உணவு பொதிகளுடன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களும் வழங்க கிடைத்தது எமது அமைப்புக்கு கிடைத்த வரமாக நாங்கள் பார்க்கின்றோம்

அதையும் தாண்டி உறவுகளே தூரநோக்கு சிந்தனையுடன் செயல்படும் எமது அமைப்பின் திட்டத்தின் ஒன்றாக

2025 ம் ஆண்டு ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட ஹப்புதளை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்க உறுதுணையாக இருந்த இறையருள் கொன்ற நெஞ்சங்களுக்கு நன்றி

நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் .....

அரும்புகள் அமைப்பு
செட்டியார் தெரு கொழும்பு 11

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு உதவிக்கரம்....ஷான் சதீஷ் -கிழக்கு மாகாணம் கல்வி திணைக்களம் மட்டகளப்பு கல்வி வலயத்தி...
23/12/2025

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு உதவிக்கரம்....

ஷான் சதீஷ் -

கிழக்கு மாகாணம் கல்வி திணைக்களம் மட்டகளப்பு கல்வி வலயத்தின் பேரிடர் நிவாரணப் பணி

பேரிடர் காலப்பகுதியில் கற்றல் சூழல் பாதிப்படைந்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நுவரெலியா கல்வி வலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக "கற்றலுக்கு கரம் கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் நிவாரணப் கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் நுவரெலியா கல்வி பணிமனையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பின்வரும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு நுவரெலியா வலயக்கல்வி பணிப்பாளர் திரு.திசாநாயக்க பிரதிகல்விப்பணிப்பாளர்களான திரு M. கணேஷராஜ், N.கிருபாகரன் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்து அவர்களை வரவேற்றதோடு, இறுதியில் தங்களின் நன்றியை அன்புடன் வெளிக்காட்டினார்கள். எதிர்வரும் காலங்களில் மழை, வெள்ளத்தில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

1.Mr.M.M.
ZDE Batticaloa central

2.Mr.T. Anantharuban
ZDE Kalkudah Zone

3.Mr. R. Nimalaranjan
DDE - Dev
Provincial Department of Education Eastern province

4..Mr.M.H.M.Jabir
DDE(Administration) Kalmunai Zone

5.Mr.N. Nesakajendiran
DDE -Dev Kalkuda Zone

6.Mr.A.I..A.Majeed
DDE Management
Akkarapattu Zone

7.Mr. S. Partheepan
DDE -Tamil
Provincial Department of Education Eastern province

8.Mr.S.Saththithas
ADE -Tamil
Batticaloa west Zone

9.Mr.S.Sunthararajan
Principal
By/Km/ Karaitivu Vipulananda College

10.A.Mugumthan
ADE - Science
Provincial Department of Education Eastern province

11.S.Uthayakumar
ADE - maths
Provincial Department of Education Eastern province

"புரட்சிகர மக்கள் சக்தி " என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது சந்திரசேகரன் மக்கள் முன்னணி.அனுஷா சந்திரசேகரன் தலைமையில் 2020...
23/12/2025

"புரட்சிகர மக்கள் சக்தி " என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது சந்திரசேகரன் மக்கள் முன்னணி.

அனுஷா சந்திரசேகரன் தலைமையில் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற கட்சியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இன்றுவரை தொடர்ந்து சேவைகளை வழங்கி வந்த இந்த கட்சி இனி புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power) என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பில் பின்வருமாரு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் கட்சியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரன் அவர்களது கொள்கைகளை அரசியல் ரீதியாக கொண்டு செல்லும் நோக்குடனேயே நாம் ஆரம்பித்த புதிய கட்சிக்கு "சந்திரசேகரன் மக்கள் முன்னணி " என பெயரிட்டிருந்தோம்.

ஆனாலும் காலப்போக்கில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலும், இன மொழி பேதமின்றி அனைத்து மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஓர் அமைப்பாக நாம் மாறவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இது தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தி கடந்த காலங்களில் எமது பொதுக்குழு கூட்டங்களிலும் கலந்தாலோசித்து மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் எமது கட்சியின் பெயரை "புரட்சிகர மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்கிறோம் என்பதனை பகிரங்கமாக அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.

22/12/2025

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lindula News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share