𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔

𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔 தமிழ் பேசும் மக்களின் தணித்துவக்குரல்

📌அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; பிரதேச சபை அறிவிப்பு!READ MORE 👇🏻👇🏻👇🏻வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்...
02/08/2025

📌அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; பிரதேச சபை அறிவிப்பு!

READ MORE 👇🏻👇🏻👇🏻

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகன்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.

இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அதடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபார்சிற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள், குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிசார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

📌மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்புREAD MORE 👇🏻👇🏻👇🏻மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் ப...
02/08/2025

📌மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

READ MORE 👇🏻👇🏻👇🏻

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு அதிகாலைசென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் சென்று பார்வையிட்டு படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸர்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

📌விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?READ MORE 👇🏻👇🏻👇🏻சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலஸ்தீன விவகா...
31/07/2025

📌விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

READ MORE 👇🏻👇🏻👇🏻

சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலஸ்தீன விவகாரமாகும். மனிதநேயம் கொண்டவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு காஸாவின் அழுகுரலாகும்.

பலஸ்தீன விவகாரம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. கள்ளத்தனமாக இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்ட பின்னணியிலிருந்து ஆரம்பமானது.

அன்று அரபு நாடுகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், அக்கிரமத்திற்கும் எதிராகப்போரிட்டு பல இழப்புகளைச் சந்தித்ததை மறந்து விட முடியாது.

கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் காரணமாக இன்றைய சூழலை எவ்வாறு கையாள்வது? என்பதில் அரபுலகு கண்ணுங்கருத்துமாகச் செயற்படுவதைக் காணலாம்.

இச்சூழ்நிலையில் பலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியாவை பலர் விமர்சனம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றுடன் பின்னிணைப்பிணைந்துள்ளதால் சவூதி அரேபியா முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத்திகழ்கின்றது. இரு புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதோடு, இஸ்லாம் வளர்ந்த பிரதேசம், தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் நபி(ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்த பிரதேசம் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்களால் நேசிக்கப்படும் தேசமாக சவூதி அரேபியா உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியா என்ற நாடு உலக முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணைகாட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு சவூதி அரேபியா மீது கொண்டுள்ள நம்பிக்கை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுத்து வருகின்றது.

அதேநேரம், சவூதி தன்னாலான அனைத்து உதவிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளுக்கும் தொடராக வழங்கி வருவதைக் காணலாம்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு பெருமளவு நிதிகளை வழங்கி வருவதும், அங்கு வாழும் முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணையோடு செயற்படுவதும், பிரச்சினைகள் வரும் போது இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களைக்கொடுத்து தீர்வ்களைப் பெற்றுக்கொடுப்பதையும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து காணலாம்.

சில நாடுகளில் கொடுமைகளை அனுபவித்த முஸ்லிம்களுக்கு தன்னுடைய நாட்டுக்குள் தஞ்சம் கொடுத்து சவூதி வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது.

சவூதி அரேபியாவில் காணப்படும் எண்ணெய் வளம் உலகில் முக்கியத்துவம் பெற்றதாகும். சவூதியோடு உறவைப்பலப்படுத்திக்கொள்ளவே உலக நாடுகள் விரும்புகின்றன. முஸ்லிம் நாடுகளில் பலமான நாடாக சவூதி விளங்குவதாலும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிலும் முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு செய்வதிலும் அதிக பங்கு சவூதி அரேபியாவிற்கே இருக்கின்றது.

சவூதியைப்பலவீனப்படுத்த வேண்டுமென்பதில் சவூதியின் வளர்ச்சியைப்பிடிக்காத முஸ்லிம் விரோதச்சக்திகள் சவூதிக்கெதிரான விமர்சனங்களை பூதகரமாக்கி மக்கள் மயப்படுத்துவதில் அன்று தொட்டு இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சவூதியை அழிப்பதற்கு முதல் உலக முஸ்லிம்களின் உள்ளத்திலும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களுக்கெதிரான மனோநிலையினை ஏற்படுத்தி வெறுப்பை உருவாக்கி ஏனைய நாட்டிற்குள் அரபு வசந்தம் என்ற போர்வையில் உள்நுழைந்து அந்த நாடுகளை நாசம் செய்தது போல் சவூதியையும் நாசம் செய்து புனிதஸ்தலங்களையும் துவம்சம் செய்ய வேண்டுமென்ற எண்ணமாகும்.

பல முறை பல முயற்சிகள் நடந்தும் இறைவன் அருளால் அவை முறியடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

தற்போது நீண்ட நாட்களாக பலஸ்தீனத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும் காஸாவின் அழுகுரல்களும் முஸ்லிம் உம்மத்தை மாத்திரமின்றி, மனிதநேயமிக்க மக்களையும் நாடுகளையும் உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கொதித்துப்போயிருக்கும் மக்களின் உணர்வுகளைத்தூண்டி விட்டு சவூதி அரேபியாவுக்கெதிராக திருப்பி விட வேண்டுமென்ற குறிக்கோளில் இஸ்லாத்தின் எதிரிகள் மிகக்கச்சிதமாக ஊடகங்களைப்பயன்படுத்தி உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதோடு, பலஸ்தீன விவகாரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை சவூதி மேற்கொண்டு வரும் அத்தனை முயற்சிகளையும் மூடிமறைத்துச் செயற்படுவதைப் பார்க்கலாம்.

முஸ்லிம்களோடு நட்புறவாடி நயவஞ்சகத்தால் வீழ்த்த நினைக்கும் சில நாடுகள் தங்களை முஸ்லிம்களின் காவலனாக காட்டுவதற்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பலஸ்தீன விவகாரம் உட்பட பல முஸ்லிம் நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் தனது செல்வத்திலிருந்து அதிகளவான கொடை கொடுப்பதும், அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும், அவர்களுக்கான பிரச்சினைகளின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இராஜதந்திர ரீதியில் தலையீடுகளைச் செய்வதிலும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து சர்வதேச ரீதியாக அழுத்தங்களை உருவாக்கி சாதிப்பதிலும் சவூதிக்கு முதன்மை இடமிருக்கிறது. எனவே தான் சவூதியின் பலத்தை குறைப்பதற்கும் பல சக்திகள் திரைமறைவில் காய் நகர்த்துகின்றன.

சவூதி அரேபியா நாடு என்ற அடிப்படையில் தனது குடிமக்களின் எதிர்காலம் தொடர்பாக அதிக கரிசனை காட்டுவதோடு, உலகில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் கரிசனை காட்டுகிறது. உலக விவகாரங்களில் வேறு நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்பட முடியாதென்பது நிதர்சனமான உண்மை.

எந்த நாடும் வேறு நாடுகள் தங்கள் விடயத்தில் தலையீடு செய்வதை விரும்பாது. சர்வதேச ரீதியாகவும் தடைகள் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த விவகாரங்களில் தனது நட்பு நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று சர்வதேச அமைப்புகளின் கவனத்தை குறித்த விடயங்களில் திருப்பி இராஜதந்திர ரீதியான நகர்வுகளினூடாகத்தான் சாதிக்க முடியும்.

பலஸ்தீன விவகாரத்திலும் சவூதியின் செயற்பாடுகளும் பலமான நகர்வுகளாகவே இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு வந்திருப்பதன் பின்னணியில் சவூதியின் வேலைத்திட்டம் இருக்கிறது. பலஸ்தீன மீளெழுச்சியில் நிதி ரீதியாக பெரும் பங்களிப்பையும் தொடராக வழங்கி வருகிறது.

இவ்வாறான மனிதாபிமான உதவிகளை உறவுகளுக்காக வழங்கி வரும் சவூதியின் பணிகளைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் என்ற ரீதியில் மோசமாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.

உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட சமூகமாக நாம் இருந்து விட்டு, விமர்சித்து விட்டுப்போக முடியாது. இவ்வாறான பிழையான விமர்சனங்கள் மற்றவர்களின் மனங்களில் தப்பான எண்ணங்களைத்தோற்றுவிப்பதோடு, எதிரிகள் தங்களின் இலக்கை எம்மூடாக நிறைவேற்றிக் கொள்ளவும் இடங்கொடுக்கக்கூடாது.

ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் ஒவ்வொருவரின் பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நாம் நம்பியிருக்கிறோம்,

இஸ்லாம் இவ்வாறான விவகாரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென வழிகாட்டியிருக்கத்தக்கதாக சில உலமாக்களும் ஏனையவர்களும் தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆரோக்கியமல்ல. அரபுமொழியை அறியாதவர்கள் என்ன நடக்கிறது எனப்புரியாதவர்கள் ஊடகங்களின் தவறான கதைகளை நம்பி விமர்சனம் செய்வது ஆரோக்கியமல்ல என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் சில உலமாக்கள்,அறிஞர்கள் பலஸ்தீன விவகாரம் உட்பட சவூதியின் செயற்பாடுகளையும் அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்,

தவறான புரிதல் ஆபத்தானது என்பதையும் யார் உண்மையான முஸ்லிம்களின் நண்பர்? யார் இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும், அறியாமையின் காரணத்தினால் நன்மை செய்வோருக்கெதிராக மற்றவர்கள் பாவம் செய்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் இவ்விடயங்களைப்பதிவு செய்து கொள்கிறார்கள்.

நமக்குத்தெரியாத விடயத்தில் போலியான தகவல்களை நம்பி உண்மைக்குப்புறம்பாகப்பேசுவதை விடுத்து நம்மிடமிருக்கும் பலமான ஆயுதமான துஆவை பலஸ்தீன மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

சவூதியின் ஆட்சியாளர்கள் இன்னும் இவ்விடயங்களில் கரிசனை காட்டுவதற்கு நல்லெண்ணங்களோடு பிரார்த்தனை செய்வோம். அதுவே மிக ஆரோக்கியமான செயலாக இருக்கும்.

சவூதி அரேபியா தன்னாலான தனியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் அதே வேளை, சவூதி அரேபியாவை தலைமையாக, தளமாகக் கொண்டியங்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)” காசா-இஸ்ரேல் மோதல் தொடர்பான விடயங்களை தீவிரமாகக் கையாண்டுவருகிறது.

இஸ்ரேலைக் கடுமையாக கண்டித்து வருவதுடன், காஸாவில் இடம்பெறும் இஸ்ரேலிய நடவடிக்கைகளை "போர்க்குற்றங்கள்" என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் என்றும் முத்திரை குத்தி வருகின்றது.

அத்தோடு, கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராகக்கொண்ட சுதந்திர பலஸ்தீன் மலர வேண்டும். இடம்பெயர்வை நிராகரித்தல் மற்றும் இஸ்ரேலுக்கெதிரான தென்னாப்பிரிக்காவின் ICJ இனப்படுகொலை வழக்கை ஆதரித்தும் வருகின்றது.

அத்துடன், மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மனிதாபிமான உதவி வழங்குமாறு ஏனைய நாடுகளையும் வலியுறுத்துதல், காஸாவின் முற்றுகையை நீக்குதல் மற்றும் பாலஸ்தீன அதிகார சபை நிர்வாகத்தின் கீழான காசாவிற்கு $53 பில்லியன் மதிப்புள்ள அரபு மறுகட்டமைப்புத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளல்.

அத்துடன், இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து அவசரக்கூட்டங்களை நடத்துதல் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற தன்மையை விமர்சித்தல் என கூட்டாகவும் தனியாகவும் சவூதி அரேபியா பல்வேறு பணிகளை பல சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்டு வருவதை மறுதலிக்க முடியாது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (UAE), கத்தார் போன்ற ஏனைய நாடுகளும் தம்மாலான பல்வேறு இராஜதந்திர, மனிதாபிமான முயற்சிகளை, உதவிகளை முன்னெடுத்தே வருகின்றன.

இது அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்கி துதிபாடுவதாக அல்லாமல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கான பதிவாகும்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

📌கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்ற கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.READ MORE 👇🏻👇🏻👇🏻வாழைச்சேனை கோ...
31/07/2025

📌கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்ற கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.

READ MORE 👇🏻👇🏻👇🏻

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரிவுக்கான இவ்வாண்டின் 2வது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இன்று (31/07/2025) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

#கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் MAC.றமீஸா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ், ஆளுநரின் இணைப்பாளர் உமர் கத்தாப் முகம்மது அப்துல்லா, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் HMM. றுவைத், உதவி பிரதேச செயலாளர் A. ஜுமானா ஹஸீன், கணக்காளர் M சஜ்ஜாத்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

31/07/2025

📌கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டதில் குழுத்தலைவர் கந்தசாமி பிரபு இடைநடுவில் ஓட்டம்..

READ MORE 👇🏻👇🏻👇🏻

கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா ஏற்பாட்டில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபு எம்.பி.தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஓட்டமாவடி, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், சமூகமட்ட தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான பிரதேச சபை உறுப்பினர்கள் வாழைச்சேனை மத்தி தொடர்பான காணி விவகாரங்களை பேச ஆரம்பித்த போது அதனை அவர்களை பேச விடாமல் தடுத்து உட்காருமாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உத்தரவிட்ட நிலையில் கூட்டத்தில் குழப்பநிலை தோன்றியது.

மக்களின் பிரச்சினைகள், தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பில் நாங்கள் பேச எடுத்துக்கொள்ளும் போது அதனை பிரபு எம்.பி. தொடர்ந்தும் தட்டிக்கழித்து வந்தார்.

இவ்வாறு அவர் செயற்படுவது மக்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும்.

நீதியான அரசாங்கம் என்று சொல்பவர்கள் இவ்வாறு எங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் தட்டிக்கழிப்பது வைதனையளிக்கிறது என பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திடீரென கூட்டத்தில் இருந்து பிரபு எம்.பி. எழுந்து செல்லும் போது இதுதானா உங்களுடைய நல்லாட்சி என கேள்விகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEO; KALAIYARUVI TV

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

📌ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவு சங்க வளாகத்தில் நாளாந்த மற்றும் மாதாந்த கட்டணத்தில் பாதுகாப்பான வாகனத் தரிப்பிட வசதி.பத...
30/07/2025

📌ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவு சங்க வளாகத்தில் நாளாந்த மற்றும் மாதாந்த கட்டணத்தில் பாதுகாப்பான வாகனத் தரிப்பிட வசதி.

பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும் 0652257200 | 0770526857



✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

30/07/2025

📌கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு இன்று (30) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரின் செயற்பாடுகள் ரீதியான கருத்துக்களை சபையில் தெரிவித்தபோது...

பாகம் 01

video; Kalaiyaruvi tv



✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

30/07/2025

📌கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு இன்று (30) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரின் ஆற்றிய தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடந்த அமர்வின் கூட்டறிக்கை தொடர்பாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இவ்விடயம் 1 மணித்தியாலம் வரை நீடித்தது...

கடந்த அமர்வின் கூட்டறிக்கை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள்.

பாகம் 01

Video; Kalaiyaruvi tv

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

📌வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய வருடாந்த  (2025) திருச்சடங்கு READ MORE 👇🏻👇🏻👇🏻ஆர...
30/07/2025

📌வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய வருடாந்த (2025) திருச்சடங்கு

READ MORE 👇🏻👇🏻👇🏻

ஆரம்பம் 07/08/2025 வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அருகிலுள்ள கடலில் அம்பாளுக்கு நீர் எடுத்தல் வைபவத்துடன் திருக்கதவு திறக்கப்படும்.

பெரியசடங்கு(பெரியதிருவிழா) 08/08/2025 வெள்ளிக்கிழமை அன்றைய தினம் மாலை 2 மணியளவில் அம்பாளுக்கு நெல்லுக்குற்றுப் பூஜை , கன்னிமார் சடங்கு என்பன இடம்பெற்று அன்றிரவு விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணல் இடம்பெறும்.

நிறைவு 09/08/2025
சனிக்கிழமை காலை திருக்குளுர்த்தி வைபவத்துடனும் தீர்த்தோற்சவத்துடன் சடங்குகள் நிறைவு பெறும்..

திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து கடலோர அன்னையவள் கடலாட்சி அம்மன் திருவருள் பெற்று மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்வோமாக...



✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

📌ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் READ MORE 👇🏻👇🏻👇🏻சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச ச...
30/07/2025

📌ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

READ MORE 👇🏻👇🏻👇🏻

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (30.07.2025) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபீ, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், மாவட்ட தலைமை பொறியியலாளர் ஏ.சாஹீர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கே எ ஹமீட்

📌ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!READ MORE 👇🏻👇🏻👇🏻(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை...
30/07/2025

📌ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

READ MORE 👇🏻👇🏻👇🏻

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த, கூட்டறிக்கையில் சபை உறுப்பினர் கே.பி.எஸ்.ஹமீட் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தவிசாளர் பதவியை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் கூட்டறிக்கையில் உள்வாங்கப்படவில்லை என கருத்து மோதல் இடம்பெற்றது.

இது தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் கருத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முதலாவது அமர்வில் தவிசாளர் பற்றி பேசிய விடயங்களை கூட்டறிக்கையில் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

அனைத்து விடயங்களும் கூட்டறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த விடயம் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படாமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர்.

அதன்பின்னர், குழப்பத்துக்கு மத்தியில் குறித்த விடயங்களை கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்வதென்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

30/07/2025

📌ஓட்டமாவடி தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸின் திடுக்கிடும் தகவல்!

நான் தவிசாளராக வருவதற்கு இறுதி வரை வாய்ப்பு தந்தவர் முன்னாள் அமைச்சர் அமீர் அலிதான்!

நான் இன்னும் அவரது கட்சியில்தான் இருக்கிறேன்.

இந்த அரசியலில் வெளிப்படை மாத்திரம்தான் உங்களுக்குத் தெரியும். உள்ளுக்கு என்ன விடயம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது!

இன்றைய (30) புதன்கிழமை நடைபெற்ற 2 ஆவது சபை அமர்வில் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்த அதிரடித் தகவல்!

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

```https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA```

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share