மலையகம் FM

மலையகம் FM மலையக மண்ணில் இருந்து நம்மக்களின், ந?

சாம மலை மல்லிப்பூ சந்தியில் இருந்து காட்மோர் செல்லும் பிரதான வீதி புனரமைப்பு பணி நேற்று ஆரம்பமாகியது.  தேசிய மக்கள் சக்த...
19/09/2025

சாம மலை மல்லிப்பூ சந்தியில் இருந்து காட்மோர் செல்லும் பிரதான வீதி புனரமைப்பு பணி நேற்று ஆரம்பமாகியது.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி , மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தோட்ட மக்கள் ஆகியோர் இதற்கான நிகழ்வில் பங்கேற்றனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

18/09/2025
18/09/2025

உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் சித்தி பெற்ற பல்கலைக்கழகம் தெரி வான மலையக கண்டி மாவட்ட புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களின் அனுபவக் பகிர்வு...

அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23ஆம் திகதி பாடசாலையில் நடத்தப்பட்டு இதில் ...
18/09/2025

அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23ஆம் திகதி பாடசாலையில் நடத்தப்பட்டு இதில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பழைய மாணவர் சங்க தலைவர் அதிபர் திரு விஜயகுமார் அவர்களின் தலைமையில் புதிய பொதுச் செயலாளராக B யோகேஸ்வரன் (2005 O\L Batch) பழைய மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அத்தோடு X ஜோன்சன் (2013 A\L Batch) பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதுமட்டுமின்றி உப தலைவர் இணைச்செயலாளர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பாடசாலையில் பழைய மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் கீழ் வழங்கப்பட்டிருக்கும் தொடரின் மூலம் நீங்கள் பழைய மாணவர் சங்க உத்தியோகபூர்வ Whatsapp தளத்தில் இணைந்து கொள்வதோடு, இதில் சில நிபந்தனைகளும் உண்டு.

அதாவது Whatsapp தளத்தில் குழு இயக்குனர்கள் மட்டுமே செய்திகளை வழங்க முடியும், அதுமட்டுமின்றி உறுப்பினர்கள் குழு இயக்குனர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டுமே பார்வையிட முடியும். ஏனைய குழு உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்களை பார்வையிட முடியாது, ஆகவே அனைத்து குழு உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்கள் பாதுகாக்கப்படுவதோடு ரகசியங்கள் பேணப்படும்.

https://chat.whatsapp.com/I4D2Ezc3aUOCxeWRWAHvT6?mode=ems_copy_c

கம்பளை   குருந்துவத்த நகரத்தில் உள்ள பல வியாபார இடங்களில் பொது சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நேற்று (17)நடத்தினர். இத...
18/09/2025

கம்பளை குருந்துவத்த நகரத்தில் உள்ள பல வியாபார இடங்களில் பொது சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நேற்று (17)நடத்தினர்.

இதன் போது சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் மக்களுக்கு விற்பனைகாக வைத்திருந்த வியாபார நிலையங்கள் மீது பொது சுகாதார ஆய்வாளர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.

க.யோகா

16/09/2025

பொகவந்தலாவில் உறங்கிக்_கொண்டிருந்த நாயின் மீது வெந்நீரை ஊற்றிய நபர்.

பொகவந்தலாவில் கடையொன்றின் முன் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது ஒருவர் வெந்நீரை ஊற்றி நாயை விரட்டும் காட்சி பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த நாய் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அக்கடையை ஒட்டிய பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளரே, நாய் மீது வெந்நீரை ஊற்றியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் லிந்துலை போக்குவரத்து பொலிஸாரின் கவணத்திற்கு!லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை பிரதேச வைத்த...
15/09/2025

நுவரெலியா மாவட்டம் லிந்துலை போக்குவரத்து பொலிஸாரின் கவணத்திற்கு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை பிரதேச வைத்தியசாலை அருகில் தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பல நாட்களாக பிரதான பாதையில் இடைஞ்சலாக பிரதேச வைத்தியசாலை அருகில் தரித்து நிக்கும் லொரியால் பிரதான பாதையில் செல்லும் கணரக வாகனங்களுக்கு இடைஞ்சலாக உள்ளதாக வாகன சாரதிகளும் பொது மக்களும் லிந்துலை போக்குவரத்து பொலிஸாரின் கவணத்திற்கு கொண்டு வருகின்றனர்..

பிரதான பாதையில் அதுவும் வைத்தியசாலை அருகில் பல நாட்களாக எதுக்காக போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஏன் தரித்து வைக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் கவணம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வைத்தியசாலைக்கு நோயாலர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தரித்து நிக்க முடியாது நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

15/09/2025

ரோஜா பாடலை பாடி வைரலாகும் தாத்தா...


Vedio credit to காதலின் காவலன் அஜய்

15/09/2025

ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு இன்று (15.09.2025) சென்ற
இபோச பஸ் சாரதியின் பொறுப்பற்ற செயல்...
தொலைபேசியில் உரையாடியபடியே ஒற்றை கையால் பஸ்ஸை செலுத்தி சென்றுள்ளார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர்வரை அவர் இவ்வாறு பஸ்ஸை செலுத்தி சென்றார் என பயணி ஒருவர் தெரிவித்தார்.

( நாட்டில் வீதி விபத்துகளால் நாளாந்தம் குறைந்தபட்சம் 8 பேராவது பலியாகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. எனவே, பொதுநலன் கருதியே இக்காணொளி பகிரப்படுகின்றது.)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்புறூக்கை சேர்ந்த பிரபாகரன் ஜனனன் என்பவரின் அடையா அட்டை பண்ணப்பை   தவரவிடப்பட்ட...
13/09/2025

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்புறூக்கை சேர்ந்த பிரபாகரன் ஜனனன் என்பவரின் அடையா அட்டை பண்ணப்பை தவரவிடப்பட்ட நிலையில், நேற்று மாலை ஹோல்புறூக் பிரதேசத்தில் வசிக்கும் முகாமில் ராஜா கண்டெடுத்து, பணப்பை அக்கரப்பத்னை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாந்த பண்டாரயிடம் கையளித்தார், குறித்த பொருட்கள் இன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலவாக்கலை, நு/ பெயார்வெல் தமிழ் வித்தியாலயம், 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்திபெற்...
12/09/2025

தலவாக்கலை, நு/ பெயார்வெல் தமிழ் வித்தியாலயம், 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்திபெற்று பாடசாலை வரலாற்றில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. இது பாடசாலை, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

சாதனை படைத்த மாணவர்கள்:

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில், மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளனர். அவர்களின் பெறுபேறுகள் பின்வருமாறு.

• A. கஜீபன் - 167 புள்ளிகள்
• V. அபிலாஷன் - 151 புள்ளிகள்
• C. ஹரிஸ்வர் - 141 புள்ளிகள்

பெறுபேறுகளின் முழுமையான விபரம்

• 132 - 200 புள்ளிகளுக்கு இடையில் மூவர் பெற்றுள்ளனர்.
• 100 - 131 புள்ளிகளுக்கு இடையில் இருவர் பெற்றுள்ளனர்.
• 70 - 99 புள்ளிகளுக்கு இடையில் நால்வர் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் அதிபர் திரு. S. தயாளன் அவர்களின் சிறந்த வழிகாட்டலும், வகுப்பு ஆசிரியர் திருமதி. P. வாசுகி அவர்களின் அயராத உழைப்பும் ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் சித்திபெற்று வந்த நிலையில், இம்முறை மூன்று மாணவர்கள் சித்திபெற்றது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இந்தச் சாதனையை ஏற்படுத்திய மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு பலரும் பாராட்டியுள்ளனர்.

Address

Hatton
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when மலையகம் FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலையகம் FM:

Share

Category

மலையகம் FM

மலையக மண்ணில் இருந்து நம்மக்களின், நமக்கான குரலாய் தரணியெங்கும் 24 மணிநேரமும் ஒலிக்கின்றது மலையகம் FM.

இப்பொழுது இணையத்தினூடாக நீங்களும் கேட்கலாம்.

https://malayagam.lk/