10/01/2019
#இனவாதிகளின்_முஸ்லிம்களுக்கெதிரான_வெறியாட்டம்_தொடர்ந்த_வண்ணம்.
#ஏறாவூரில்_பதட்டநிலை
————————————————
————————————————
மட்டக்களப்பு பெற்றோலிய கோப்ரேஷனில் பணி புரியும்
ஏறாவூர் ஐயங்கேணியை சேர்ந்த சஹீத் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்வேளை இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்,
இவ்வினவாத தாக்குதல் நேற்று இரவு சவுக்கடி முகத்துவார வீதியில் புற்று நோய் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது,
5 பேர் கொண்ட கும்பலே தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்,
அவரின் தலைப் பகுதியை குறி வைத்தே தாக்குதல் நடந்துள்ளது அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார்
அவரது நெஞ்சுப்குதியும் கட்டையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது,
கீழே விழுந்தவர் வாகனத்தை கை விட்டுவிட்டு அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு எப்படியோ முயற்சி செய்து
முஸ்லிம்களது பிரதேசத்திற்குள் நுழைந்து உதவி கேட்டுள்ளார்
அதன் பிறகே வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் ,
அவரது இருசக்கர வாகனத்தின் ஒரு பகுதியும் எரியூட்டப்பட்டுள்ளது,,
சகோதர சமூகத்தவரின் அரசியல் தலைமைகள் தங்களது சமூகத்தை மென்மேலும் பாரிய படு குழியை நோக்கியே நகர்த்திச் செல்கிறார்கள்,
ஒரு சில இனவாதிகளால் மொத்த சமூகமும் விளைவுகளை
சந்திக்கும் அபாய நிலையின் வெளிப்பாடுதான் இத்தாக்குதல்,
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பாவி ஒருவரின்
உயிரோடு விளையாடியிருக்கிறார்கள்,
விட்டிருந்தால் பைக்கோடு சேர்த்து அவரையும் கொழுத்தியிருப்பார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் பாதுகாத்துவிட்டான்,
மட்டக்களப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான
கௌரவ அலிசாஹிர் மௌலானா , கலாநிதி ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற அரசியல் தலைமைகளுக்கு
தகுந்த பதவிகளும் பொருப்புகளும் கொடுக்கப்பட்டதின் பிறகு இதுபோன்ற இனவாத தாக்குதல் நடைபெறுவதால்
இது அரசியல் பலி வாங்கலே அன்றி வேறில்லை,
பொன்னையன் மயூரனின் தலைமையில் கடந்த 2 ஆம் திகதி கொம்மாதுரையில் வயோதிபருக்கு எதிராக நடந்த மனிதாபிமானமற்ற செயலும்,
கடந்த 6 ஆம் திகதி ஏறாவூர் தும்புத்தொழிற்ச்சாலை வீதியில் மாடு கொண்டுவந்த 3 முஸ்லிம்கள் தாக்கப்பட்டு பணம்,மொபைல் போன் உட்பட களவாடப்பட்ட சம்பவமும்,
நேற்று 8 ஆம் திகதி நடந்த கொலை முயற்ச்சியும்
பாரிய சதித்திட்டத்தினூடாகவே
நடைபெற்றிருக்கிறது,
இவைகளுக்குப் பின்னாள் பாரிய அரசியல் கூலிப்படை ஒன்று செயற்படுகிறது என்பதுதான் உண்மை,
இவ்விரு சம்பவங்களும் முஸ்லிம்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளது
அமைதியாக இருப்பதால் அடங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை
எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை இனவாத பயங்கரவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்,
மயூரனின் தலைமையில் நடந்த ஈனச்செயலையும்
மாடு கொண்டு வந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்
எமது அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாமல் விட்டதன்
விளைவுதான் நேற்றையை கொலை முயற்ச்சி என்பதை யாரும் மறுக்கமுடியாது,
அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் வாய்மூடி இருக்காமல்
இச்சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து
இனவாதிகள் கைது செய்யப்படும் வரை முழு மூச்சாக
செயற்பட வேண்டும்,
இன முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்யும் பயங்கரவாதிகளுக்கு
விடுதலை கிடைக்காத வண்ணம்
தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்....