Sooriyan Fm News

Sooriyan Fm News You can now obtain the latest news from anywhere in the world through sooriyan News

You can now obtain the latest news from anywhere in the world through sooriyan News, the internet and sms through its unbiased and comprehensive news reports backed with the reliability of journalists, newscasters and a renowned reporter base.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்...
08/08/2026

ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புப் பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் ஸோல்கத்ர் இந்த நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியைத் திறப்பது ஓமான் நாட்டுடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாமல், தெஹ்ரானின் நிபந்தனைகளை அமெரிக்கா "முழுமையாக ஏற்றுக்கொள்வதைப்" பொறுத்தது என்று ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் பேச்சாளர் சர்தார் மொஹேபி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், நீரிணைப் பகுதியில் மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையையும் முழுமையாக விலக்கிக் கொண்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!அமெரிக்க பாதுகாப்புத் துறை, சீனா ஆதிக்கம் செலுத்தும...
08/08/2026

அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!

அமெரிக்க பாதுகாப்புத் துறை, சீனா ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான அரிய வகை உலோகமான ஸ்கேண்டியம் அகழ்வாராய்ச்சிக்காக அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு 400 மில்லியன் டொலர் நிபந்தனையுடனான கடனுதவியை அறிவித்துள்ளது.

உலகின் முதலாவது முதன்மை ஸ்கேண்டியம் சுரங்கத்தை அமைப்பதற்காகவே அவுஸ்திரேலியாவின் சன்ரைஸ் எனர்ஜி மெட்டல்ஸ் நிறுவனத்திற்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள சைர்ஸ்டன் திட்டத்தின் மூலம் மேலைநாடுகளுக்கான ஸ்கேண்டியம் விநியோகத்தை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்வெளி, பாதுகாப்பு, 5G/6G தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களுக்கு அத்தியாவசியமான இந்த உலோகம், அலுமினியத்தை வலுப்படுத்தவும் வெப்பத்தைத் தாங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சீனா கடந்த ஆண்டு பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான ஸ்கேண்டியம் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததைத் தொடர்ந்தே, அமெரிக்கா மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது.

இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்கேண்டியத்தில் 25 சதவீதத்தை முதற்கட்டமாக 5 ஆண்டுகளுக்கு வாங்குவதற்கு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் மின்கலத் திட்டங்களில் அமெரிக்க அரசு 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதா...
08/08/2026

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முன்னணி துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் காயம் காரணமாக இலங்கை அணி பாரிய தெரிவு சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

காயங்களிலிருந்து மீண்டு வரும் பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் போட்டியில் நிஸ்ஸங்க விளையாடமாட்டார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் முழுத் தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராக நிஷான் மதுஷ்க களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இவர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இலங்கை அணிக்கு பெரும் குழப்பம் நிலவுகிறது.

விக்கெட் காப்பாளர்களாக சதீர சமரவிக்ரம, அஞ்சன பண்டார மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.

லஹிரு உதார அல்லது தினேஷ் சந்திமால் ஆகியோரை விக்கெட் காப்பாளர்களாகப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ ஐரோப்பிய கால்பந்து அமைப்பி...
08/08/2026

பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?

பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், பெண் ஊழியர் ஒருவருக்கு பெருந்தொகை பணத்தை பிரிவுக் கொடையாக வழங்கியதாக வெளியான குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்துள்ளார்.

தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்றும், தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அவதூறு என்றும் அவரின் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எந்தவொரு ஊழியரும் எந்த காலகட்டத்திலும் முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அவரின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட அந்தப் பெண் ஊழியருக்கு வெளியேறும் போது ஊதியமும், உள்ளூர் வணிகப் பள்ளியில் பட்டப்படிப்புக்கான கட்டணமும் வழங்கப்பட்டதை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தனியார் முதலீட்டாளர்களுக்கு ஃபிஃபா போட்டிகளை விற்கும் திட்டம் மற்றும் முறையற்ற நிதி விவகாரங்களால் இன்பான்டினோ கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்.

இன்பான்டினோ மீது தனக்கு "நம்பிக்கையில்லை" என்று ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதோடு, உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.

இதேவேளை கியானி இன்பான்டினோ, அடுத்த மார்ச் மாதம் ரபாத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் நான்காவது மற்றும் இறுதித் தெரிவுக்காக போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணக் கி...
08/08/2026

2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இனி நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே குறித்த அணியால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் நேரடித் தகுதியைப் பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.

1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ச்சியாக 3ஆவது முறையாகத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தகுதிச்சுற்று மூலம் உலகக் கிண்ணத்துக்குத் தெரிவான அந்த அணி, 2023ஆம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி கெலன்ட்ஸ...
08/08/2026

LPL இறுதிப் போட்டி - கிண்ணத்தை வென்றது காலி அணி!

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் காலி அணியின் சார்பில் சரித் அசலங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில் 124 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கமைய 2026ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் காலி கெலன்ட்ஸ் அணி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவ...
08/08/2026

இலங்கையில் உச்சத்தைத் தொட்ட டெங்கு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.

அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

08/08/2026

ஆவா குழுவுக்கு யார் ஆதரவ ? - இயல்பான குற்றங்களா... திட்டமிட்ட தயாரிப்பா?

08/08/2026

ஆபத்தை புறந்தள்ளி.... - ஆபத்தில் உதவும் மருத்துவ கரங்கள் !

Address

35th Floor, East Tower, World Trade Center, Colombo.
Colombo
00100

Alerts

Be the first to know and let us send you an email when Sooriyan Fm News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share