Kurill

Kurill Reed me, watch me,

30/04/2026
🚨 அதிர்ச்சிச் செய்தி - போதைக்காக தாயின் கால்களை உடைத்த கொடூரன்! 😱💔​கேகாலையில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!​போதைப்பொ...
30/04/2026

🚨 அதிர்ச்சிச் செய்தி - போதைக்காக தாயின் கால்களை உடைத்த கொடூரன்! 😱💔
​கேகாலையில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
​போதைப்பொருள் எனும் அரக்கன் ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ள சம்பவம் கேகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ⛈️

​🔹 நடந்தது என்ன?
கேகாலை, தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது தாயிடம் ரூ. 5,000 கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த "போதை அடிமை", அருகில் கிடந்த தடியால் தனது தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்! 🪵💥

​🔹 நிலைகுலைந்த தாய்..
இந்த கொடூர தாக்குதலில் அந்தப் பெண்ணின் இரு கால்களும் முறிந்துள்ளன. தற்போது அவர் கேகாலை பொது மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 🏥🚑

​🔹 தலைமறைவான மகன்..
பெற்ற தாய் என்றும் பாராமல் இந்த கொடூரத்தைச் செய்த அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்! 🚔🏃‍♂️

🔴​போதைப்பொருள் பாவனை ஒரு மனிதனை எந்தளவுக்கு மிருகமாக மாற்றுகிறது என்பதற்கு இது

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பேருந்து விபத்து : 20 பேர் காயம் டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த ...
30/04/2026

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பேருந்து விபத்து : 20 பேர் காயம்

டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

எதிரே வந்த பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

🚨🔥 “பெண் தாதா சிக்கினார்!” – STF அதிரடியில் சிதைந்த போதை வலையமைப்பு! 🕸️⚔️🔴 களுத்துறை – குடா வஸ்கடுவ பகுதியில் அதிர்ச்சி ...
30/04/2026

🚨🔥 “பெண் தாதா சிக்கினார்!” – STF அதிரடியில் சிதைந்த போதை வலையமைப்பு! 🕸️⚔️
🔴 களுத்துறை – குடா வஸ்கடுவ பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!
போதைப்பொருள் வலையமைப்பில் முக்கிய இணைப்பாக செயல்பட்டதாகக் கூறப்படும் “பட்டி அக்கா” என அறியப்படும் பெண்மணி, விசேட அதிரடிப்படை (STF) நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்! 🛑📦
🔴 பின்னணி என்ன? 👇
👩 44 வயதான இந்த பெண், “பொம்புவல நவீன்” எனப்படும் நிழல் தாதாவின் வலையமைப்பில் முக்கிய பாத்திரமாக இருந்ததாக தகவல்.
⚖️ மேலும் “நுவான் இரேஷ் பெர்னாண்டோ” என்பவரின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது!
🔴 சிக்கிய சான்றுகள்... 💰🌿
STF சோதனையில் கைப்பற்றப்பட்டவை:
🚩 2 கிலோ 750 கிராம் உயர்தர கேரளா கஞ்சா 🍀
🚩 ரூ.1,10,000 பணம் 💵
🚩 போதைப்பொருள் எடைபோட பயன்படுத்திய டிஜிட்டல் தராசு ⚖️
🔴 அதிரடி நடவடிக்கை எப்படி நடந்தது? ⚔️
🏠 ஹொரண முகாம் விசேட பிரிவு அதிகாரிகள், ரதனஜோதி மாவத்தையில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு இந்த ரெய்டை வெற்றிகரமாக நிறைவேற்றினர்! 👊💥
🔴 இப்போது நிலைமை... ⚖️
👮‍♂️ கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
👉 சட்டத்தின் வலையில் இருந்து தப்ப முடியாது!
📌 நாட்டை சூழ்ந்துள்ள போதை வலையமைப்புக்கு இது பெரிய எச்சரிக்கை!

எழுததாளர் தீபச்செல்வன் நூல்களுக்கு நடந்தது என்ன?என்ன நடந்தது?-----  சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் தீப...
17/04/2026

எழுததாளர் தீபச்செல்வன் நூல்களுக்கு நடந்தது என்ன?

என்ன நடந்தது?
-----
சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் படைப்புகளை விடுவிப்பது தொடர்பாக கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தீபச்செல்வனுடன் அவருக்கு ஆதரவாக நாங்களும் கலந்துகொண்டோம்.

முதலில் சொல்ல வேண்டியது, ஒரு எழுத்தாளர் தான் எழுதிய படைப்புகள் தொடர்பாக அதிகாரிகள் முன் இப்படி விளக்கமளிக்க நேர்வதே அநீதியாகும். ஆனால் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர் என்ற வகையில் தீபச்செல்வனுக்கு இத்தகைய கலந்துரையாடலுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அந்தக் கலந்துரையாடலில் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதி அமைச்சரும், கலாசார அமைச்சின் செயலாளரும், இலங்கை கலை மன்றம் மற்றும் இலக்கிய உப மன்ற உறுப்பினர்கள் சிலரும், சுங்கப் பணிப்பாளர் நாயகமும் உதவிப் பணிப்பாளர் ஒருவரும் கலந்துகொண்டனர். (கலாசார அமைச்சர் கலந்துரையாடலின் நடுவில் வேறு அலுவல் காரணமாக அதிலிருந்து விலகிச் சென்றார்)

எழுத்தாளர் தீபச்செல்வனின் நான்கு படைப்புகள் குறித்து பிரச்சினை இருப்பதாக சுங்கத் தரப்பில் அறிய முடிந்தது. அதனை விடுவிப்பது குறித்து உறுதியான தீர்மானம் எதுவுமின்றி கலந்துரையாடல் முடிவடைந்தது. எழுத்தாளர் சார்பாக எங்களுக்கு பேச இடம் கிடைத்தது மிகக் குறைந்த நேரமே. அரசு சார்பாகப் பேசிய இலக்கிய மற்றும் கலை மன்றங்களின் உறுப்பினர்கள் இந்தப் படைப்புகள் குறித்து தங்கள் கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதனை சுங்கத்திடம் சமர்ப்பிப்பதாகவும், அதை பகிரங்கப்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தனர். படைப்புகளை விடுவிப்பது குறித்த தீர்மானம் அதன் பின்னரே எடுக்கப்படும். அதற்கும் திகதி எதுவும் அறியக் கிடைக்கவில்லை.

நேற்றிலிருந்து கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த தீபச்செல்வன் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.

மீண்டும் மீண்டும், எமக்குக் கிடைத்துள்ள பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லைகளை உணர்ந்து கடும் மன அழுத்தத்துடன் நாங்களும் வீடு திரும்பினோம்.

அவ்வளவுதான். எழுதுவதற்கு இன்னும் நிறைய இருந்தாலும் பின்னர் பார்ப்போம்.

மேலதிக விபரங்கள் தீபச்செல்வன் சார்பாக இன்று அங்கு ஒன்றுகூடிய எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவின் பொது நிலைப்பாடு குறித்த அறிக்கையாக பின்னர் வெளியிடப்படும்.

සිදු වූයේ කුමක්ද ?
-----
රේගුවේ රඳවා ගත් දෙමළ ලේඛක දීපචෙල්වන්ගේ කෘති නිදහස් කිරීම සම්බන්ධයෙන් සංස්කෘතික කටයුතු අමාත්‍යංශයේ පැවැත්වූ සාකච්ඡාවකට දීපචෙල්වන් සමග ඔහුට සහයෝගයක් වශයෙන් අපි සහභාගි වුණෙමු.

පළමුවෙන් කිව යුත්තේ ලේඛකයෙකුට තමන් ලියූ කෘති සම්බන්ධයෙන් බලධාරීන් ඉදිරියේ මෙලෙස කරුණු දැක්වීමට සිදුවීම ම අසාධාරණයකි. එහෙත් පීඩිත ජාතියක් නියෝජනය කරන ලේඛකයෙකු වශයෙන් දීපචෙල්වන්ට මෙවැනි සාකච්ඡාවකට එකග වීම හැර වෙනත් විකල්පයක් තිබුණේ නැත.

එම සාකච්ඡාවට සංස්කෘතික කටයුතු ඇමතිවරයා ද නියෝජ්‍ය ඇමති වරයාද , සංස්කෘතික අමාත්‍යංශයේ ලේකම්වරයා ද ලංකා කලා මණ්ඩලයේ සහ සාහිත්‍ය අනුමණ්ඩලයේ සාමාජිකයන් කිහිප දෙනෙකුද රේගු අධ්‍යක්ෂක ජෙනරාල්වරයා සහ සහාකාර අධ්‍යක්ෂකවරයෙකු ද සහභාගි විය. ( සංස්කෘතික ඇමතිවරයා සාකච්ඡාව මගදී වෙනත් රාජකාරියක් සඳහා ඉන් ඉවත් ව ගියේය)

ලේඛක දීපචෙල්වන්ගේ කෘති හතරක් පිළිබඳ ප්‍රශ්න පවතින බව රේගුව පාර්ශවයෙන් දැනගන්නට ලැබුණු අතර එය නිදහස් කිරීම පිළිබඳ නිශ්චිත තීන්දුවකින් තොරව සාකච්ඡාව අවසන් කරන ලදී. ලේඛකයා වෙනුවෙන් අපට කතා කිරීමට ඉඩ ලැබුණේ ඉතා ටික වේලාවකි. රජය වෙනුවෙන් කතා කළ සාහිත්‍ය සහ කලා මණ්ඩලවල සාමාජිකයන් මේ කෘති පිළිබඳව ඔවුන්ගේ අදහස් දක්වන වාර්තාවක් සකස් කර ඇති බවද එය රේගුව වෙත ඉදිරිපත් කරන බව ද එය ප්‍රසිද්ධ කිරීමට අදහසක් නැති බව ද දන්වන ලදී. කෘති නිදහස් කිරීම පිළිබඳ තීන්දුව ගනු ලබනු ඇත්තේ ඉන්පසුවය. ඊට ද දිනයක් දැනගන්නට නොලැබිණි.

ඊයේ සිට කිලිනොච්චියේ සිට පැමිණි දීපචෙල්වන් හිස් අතින් ගෙදර ගියේය.

නැවත නැවතත්, අපට ලැබී ඇති භාෂණයේ සහ ප්‍රකාශනයේ නිදහස පිළිබද සීමා මායිම් දැනගෙන තදබල මානසික විඩාවකින් අපිදු ගෙදර ආවෙමු.

එපමණි. බොහෝ දේ ලිවීමට ඇතත් පසුවට කල් තබමි.

වැඩිදුර විස්තර දීපචෙල්වන් වෙනුවෙන් අද එහි එක්වූ ලේඛක සහ සමාජ ක්‍රියාකාරීන් පිරිසෙහි පොදු ස්ථාවරය පිළිබඳ ප්‍රකාශයක් ලෙස පසුව ඉදිරිපත් කෙරෙනු ඇත.

Kathyana Amarasinghe

Theepachelvan Piratheepan

முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி....!​அண்மையில் வெளியான க.பொ....
03/04/2026

முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி....!

​அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த, மாணவி விஜயரூபன் இசைப்பிரியா அவர்களுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன் அவர்களும், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர்( நல்லூர் வட்டாரம்) திருமதி குலவீரசிங்கம் குணலட்சுமி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

20/03/2026

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share