Ceylon Times

Ceylon Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ceylon Times, Media/News Company, Colombo.

கொமெய்னி கொல்லப்பட்ட செய்தியை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ட்ரம்ப் ஆரம்பத்தில் இதனை அறிவித்திருந்த நிலையில், இஸ...
01/03/2026

கொமெய்னி கொல்லப்பட்ட செய்தியை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ட்ரம்ப் ஆரம்பத்தில் இதனை அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேலிய ஊடகங்களும் அயதுல்லா கொமெய்னி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வந்தன. சற்று முன்னரே ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியது.

டுபாய் விமான நிலையம் தாக்கப்பட்டு ஐந்து பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். குவைட் விமான நிலையமும் ட்ரோன் தாக்குதலை எதிர்கொண்டு...
01/03/2026

டுபாய் விமான நிலையம் தாக்கப்பட்டு ஐந்து பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். குவைட் விமான நிலையமும் ட்ரோன் தாக்குதலை எதிர்கொண்டுளளது. இந்நிலையில் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையம் வெறிச்சோடிப் போயுள்ள காட்சி.

01/03/2026

வெள்ளை மாளிகைக்கு அருகில் கூடிய அமெரிக்க மக்கள், ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வொஷிங்டன் நகரைச் சுற்றிப் பவனி வந்து எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். "போர் வேண்டாம்" என்ற பதாகைகளுடன் சென்றது கவனிக்கத்தக்கது.

இஸ்ரேல் நாட்டவர் உயிருக்குப் பயந்து மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ள காட்சி.
28/02/2026

இஸ்ரேல் நாட்டவர் உயிருக்குப் பயந்து மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ள காட்சி.

இன்று காலை நிகழ்த்தப்பட்ட இஸ்ரேல்- அமெரிக்கத் தாக்குதலினால் தற்போது வரை ஈரானின் மினாப் பெண்கள் பாடசாலையில் கொல்லப்பட்ட ம...
28/02/2026

இன்று காலை நிகழ்த்தப்பட்ட இஸ்ரேல்- அமெரிக்கத் தாக்குதலினால் தற்போது வரை ஈரானின் மினாப் பெண்கள் பாடசாலையில் கொல்லப்பட்ட மாணவர் தொகை 60 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எந்தப் பயமும் தற்போது வரை இல்லை எனவும், கையிருப்பில் தாரளமாக உள்ளதாகவும் பெற்றோலியக் கூட்...
28/02/2026

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எந்தப் பயமும் தற்போது வரை இல்லை எனவும், கையிருப்பில் தாரளமாக உள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவிப்பு. மக்கள் அநாவசியமாகவும், சுயநலத்தோடும் போலி நிலைமைகளை ஏற்படுத்தி, வீணான பிணக்குகளை உருவாக்கத் தேவையில்லை.

28/02/2026

லாஃப் கேஸ் அடங்கிய கப்பலொன்று இன்று இலங்கையை வந்தடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாவனையாளர்களுக்கு இனித் தட்டுப்பாடின்றி விநியோகம் நடக்குமென்றும் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய யுத்த நிலவரம் காரணமாக, இலங்கையின் பல விமான சேவைகள் தள்ளிப் போயும், பாதைகள் மாற்றப்பப்பட்டும் , ரத்தாகியும் உள்ள...
28/02/2026

தற்போதைய யுத்த நிலவரம் காரணமாக, இலங்கையின் பல விமான சேவைகள் தள்ளிப் போயும், பாதைகள் மாற்றப்பப்பட்டும் , ரத்தாகியும் உள்ளன.

உலகின் மிக உயரமான கட்டிடம் புரூஜ் கலீபாவை உடனடியாகக் காலி செய்ய ஐக்கிய அமீரகம் உத்தரவு. அலுவலகங்கள் , அதிகாரிகள் உட்பட வ...
28/02/2026

உலகின் மிக உயரமான கட்டிடம் புரூஜ் கலீபாவை உடனடியாகக் காலி செய்ய ஐக்கிய அமீரகம் உத்தரவு. அலுவலகங்கள் , அதிகாரிகள் உட்பட வணிக நிலையங்களும் கடுகதியில் வெளியேற்றம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்த போது வெள்ளவத்தைப் பள்ளிக்கு அருகே போகும் போது பதட்டமாய் இருக்கிறது என்று எழுதிய சுமந்திர...
28/02/2026

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்த போது வெள்ளவத்தைப் பள்ளிக்கு அருகே போகும் போது பதட்டமாய் இருக்கிறது என்று எழுதிய சுமந்திரனின் அடிவருடி மைந்தன் சிவா என்ற மென் போக்கு முலாம் பூசிய ஈனச் சங்கி கொடூர அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்துப் பதிவு எழுதி இருக்கிறார்.

இந்த மைந்தன் அவுஸ்ரேலியாவில் இருந்து கொண்டு தமிழ்த் தேசியம் பேசும் உருப்படாத உதவாக்க்ரை.தமிழ் மக்களின் வலிகளைப் பேசிப் பேசி காலம் கடத்தி அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தமிழ்த் தேசியப் புரோகிதர்களின் எச்சமான ஈன மைந்தன் சிவாவிற்கு பலஸ்தீனத்தில் கொடூரமாய்க் குழந்தைகளைக் கொன்ற அரக்கர்கள் இந்த யுத்தத்தில் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இது அப்பட்டமான இஸ்லாமிய வெறுபையே காட்டி நிற்கிறது.மைந்தன் சிவா போன்ற புறம்போக்குகள் முஸ்லிம்களுடன் இருக்கும் நீண்ட நாள் இனவெறுப்பை வேறு ஒரு வடிவத்தில் இங்கே வாந்தி எடுக்கிறார்கள். இவர்கள் பேசும் மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் வெறும் கண்துடைப்புக் கோசங்கள் தான் என்பதை அவரது பதிவு உணர்த்துகிறது

மடவளை நியூஸ் என்ற பெயரில் இயங்கும் விபசார ஊடகம் கால வரிசை ஒன்றைப்  போட்டு சுரேஷ் ஸாலே ஸஹ்ரானைச் சந்திக்கவில்லை என்று கூற...
27/02/2026

மடவளை நியூஸ் என்ற பெயரில் இயங்கும் விபசார ஊடகம் கால வரிசை ஒன்றைப் போட்டு சுரேஷ் ஸாலே ஸஹ்ரானைச் சந்திக்கவில்லை என்று கூறி காப்பாற்ற முனைகிறது. மடவளை என்ற ஊத்தை ஊடகம் கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தின் அழுக்குகளைக் கழுவித் துடைத்துக் கொண்டு இருந்தது.இப்போது ராஜபக்சேக்களின் ஏவல் நாய் சுரேஷ் ஸாலேவைக் கழுவுகிறது. ஒரு வருட பூரண விசாரணையின் பின்னணியிலேயே இந்தக் கைது இடம் பெற்றிருப்பதாகப் பொலிஸ் அறிவித்திருக்கும் நிலையில் இந்த மாமா ஊடகம் ஞானசார போல, வீரவன்ச போல ஏன் கொதிப்படைந்து இருக்கிறது என்றுதான் ஆச்சர்யமாய் இருக்கிறது.

இந்த ஊடகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது தேச விரோத சக்திகளின் கூடாரமாக பயங்கரவாதத்திற்கு துணை புரியும் ஒரு ஊடகமாக மாறி இருப்பது கண்கூடு. இபன்கைப் பொலிஸ் மற்றும் புலமாய்வுப் பிரிவுகள் இந்த ஊடகத்தின் மீது விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையின் வாகன விற்பனை 50% வரை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்வதற்காக ஆரம்பக்...
29/12/2025

இலங்கையின் வாகன விற்பனை 50% வரை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்வதற்காக ஆரம்பக் கட்டணத்தைக் கட்டிய பலர்,தற்போது பணத்தை மீளக் கேட்பதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இறக்குமதி செய்த வாகனங்களின் விற்பனையும் கணிசமானளவு குறைந்துள்ளது. விற்பனை நிலையங்களில் மூன்று மாதத்துக்கு மேல் காத்திருக்கும் வாகனங்களுக்கு 3% வரியை அரசு விதித்துள்ளது. இதனை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இறக்குமதிக் கடன் வரியைத் (10%) தாண்டி, நாட்டுக்குள் வந்து, மக்களின் தற்போதைய கஷ்ட காலத்தினால் அசையாமல் இருக்கும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விலக்கு கிடைத்தால், பெரும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Address

Colombo
00100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share