02/06/2026
02.06.2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகக் பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் அண்மையில் இடம்பெற்ற வெசாக் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான அறிக்கை
எமது பீடத்திற்குள் சிங்கள மாணவர்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பாக கரிசனைகளும் விவாதங்களும் எழுந்துள்ளமை எமது கவனத்திற்கு வந்துள்ளது.
வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வானது, மாணவர் ஒன்றியத்தின் அனுமதி மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது. மேலும், தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வை நடத்துவதற்கும் அதன் வெற்றிகரமான செயலாக்கத்தை உறுதி செய்வதற்கும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் தீவிரமாக வழங்கியிருந்தனர். மாணவர்கள் இந்த முக்கியமான மத மற்றும் கலாச்சார நிகழ்வைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில சூழ்நிலைகள் காரணமாக, ஒரு சில தனிநபர்களால் ஒரு வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாசகாரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அதேவேளையில், இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதன் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்துவதற்குச் சில தனிநபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை, தவறானவை மற்றும் நிலவும் உண்மை நிலையைப் பிரதிபலிக்காதவை ஆகும்.
சொத்துக்களை அழிப்பதற்கு எதிராக நாம் நிற்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆதரிக்கும் அதேவேளையில், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஒருசேர நிராகரிக்கிறோம். ஒரு சில தனிநபர்களின் செயல்கள் சமூகங்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்கவோ அல்லது எமது பீட மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் சீர்குலைக்கவோ பயன்படுத்தப்படக் கூடாது.
மாணவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். எமது பீட சமூகத்தை வலுப்படுத்தும் நல்லிணக்கம், மரியாதை மற்றும் சகவாழ்வு ஆகிய விழுமியங்களை நாம் தொடர்ந்து நிலைநாட்டுவோம்.
மாணவர் ஒன்றியம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.