NewsTamil

NewsTamil NewsTamil, an independent Media Company, headquartered in Sri Lanka's commercial capital of Colombo,

களனி ஆற்றி அண்மித்த பகுதிகளில் பெய்த 300 மில்லி மீற்றர் வரையான கனமழை காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் சிறிய வெள்ளப்பெ...
24/05/2026

களனி ஆற்றி அண்மித்த பகுதிகளில் பெய்த 300 மில்லி மீற்றர் வரையான கனமழை காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களனி ஆற்றின் பெருக்கில் சீதாவாக்கை , தொம்பே, பாதுக்க, ஹோமாகம , பியகம, கடுவல, கொலன்னாவ களனி மற்றும் கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

இதன் காரணமாக களனி ஆற்றின் இருமருங்கிலும் மேற்கூறிய தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு குறித்த வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

Big Breaking EXTREME WEATHER: களனி கங்கையின் இருமருங்கிலுமுள்ள சீதாவக்க, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவெல, கொலன்னா...
22/05/2026

Big Breaking EXTREME WEATHER: களனி கங்கையின் இருமருங்கிலுமுள்ள சீதாவக்க, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவெல, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் - நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு. WhatsApp:

WhatsApp Group Invite

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்துWhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SHதமிழக முதல்வராகப் பதவியேற்ற...
10/05/2026

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து
WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சி.ஜோசப் விஜய், வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (மே.10) காலை 10 மணிக்கு தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.

தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான,வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார்.

*⭕BREAKIG NEWS | விஜய்க்கு முதல் வெளிநாட்டு அரச தலைவராக அனுர வாழ்த்து..!* WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznG...
10/05/2026

*⭕BREAKIG NEWS | விஜய்க்கு முதல் வெளிநாட்டு அரச தலைவராக அனுர வாழ்த்து..!*

WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.*

*இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.*

இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.

வலுவான இந்திய - இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிவிப்பு 2026.05.04 (1447.11.16)WhatsA...
05/05/2026

உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026.05.04 (1447.11.16)
WhatsApp : https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

இலங்கையில் அமுலில் உள்ள 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்படி மிருகங்களை அறுத்தல் மற்றும் மாமிச விற்பனையில் ஈடுபடல் தொடர்பான கட்டுப்பாடானது, குறிப்பாக பௌர்ணமி போயா நாளுக்கு மட்டுமே பொருந்தும். அது மே மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அந்தத் தினத்துக்கு முன்போ அல்லது பின்போ உழ்ஹிய்யா கடமையை செய்வதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை. எனினும், கலாச்சார ரீதியாக வெசாக் காலம் போயா நாளுடன் விரிவுபடுத்தப்படலாம்.

ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்புடைய சமய கிரியைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 23.04.2026ஆம் திகதி கடித மூலமாக அதிமேதகு ஜனாதிபதி, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் முறையாக தொடர்பு கொண்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் மிக முக்கிய முஸ்லிம் பிரதிநிதியான, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அவர்கள் கடந்த 26.04.2026 இல், போயா நாள் தவிர்ந்த பிற நாட்களில் உழ்ஹிய்யா கடமையை செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து சமூகங்களின் மத உரிமைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மதிக்கப்படும் என்றும், அதே சமயம் அமைதியான சகவாழ்வு மற்றும் தேசிய ஒற்றுமை முக்கியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் போயா தினம் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்; அந்தந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி போயா தினம் தவிர்ந்த தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததை ஞாபகப்படுத்துவதுடன், இம்முறையும் உழ்ஹிய்யா கிரியைகளை சுமுகமாக செய்வதற்கு எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறோம்.

எனவே, பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் காலாகாலமாக அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், கௌரவமாகவும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடித்து நமது உயர் கௌரவத்தைக் காத்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான தகவல்களை முஸ்லிம் சமூகத்துக்கு அவ்வப்போது தெரிவிக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம்.



அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

WhatsApp Group Invite

தமிழக சட்டமன்றத்திற்கு இம்முறை 10 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் (MLA) தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். WhatsApp: https://chat.whatsap...
04/05/2026

தமிழக சட்டமன்றத்திற்கு இம்முறை 10 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் (MLA) தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

இவர்களில் ஆறு MLAக்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலும் நான்கு முஸ்லிம் MLAக்கள் தமிழக வெற்றி கழகத்திலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

234 தொகுதிகளில் 115 இடங்களில்தவெக முன்னிலை....WhatsApp  : https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SHதமிழக சட்டமன்ற...
04/05/2026

234 தொகுதிகளில் 115 இடங்களில்
தவெக முன்னிலை....
WhatsApp : https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 115 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து தமிழக வரலாற்றில் புதிய கட்சியொன்று முன்னிலை வகித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, திமுக கூட்டணி 56 இடங்களிலும் அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் தவெக 105 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில்கூட முன்னிலை இல்லை.

இத் தேர்தலில் மொத்தம் 4.61 இலட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது.

"தமிழகமே அதிருது!" - 108 இடங்களில் TVK முன்னிலை! கோட்டையை நோக்கிப் பாயும் தளபதி!WhatsApp: https://chat.whatsapp.com/C2kY...
04/05/2026

"தமிழகமே அதிருது!" - 108 இடங்களில் TVK முன்னிலை! கோட்டையை நோக்கிப் பாயும் தளபதி!

WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

தமிழக சட்டமன்றத் தேர்தல் 11 மணி நிலவரப்படி, விஜய் தலைமையிலான TVK 108 இடங்களில் முன்னிலை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. அதிமுக 71 இடங்களிலும், திமுக 55 இடங்களிலும் உள்ளன. நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை. இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவும் இலங்கையின் ஓர் அழகிய பஸ் தரிப்பிடம்தான்!🚨WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SHஇலங்கையின் கொ...
13/04/2026

இதுவும் இலங்கையின் ஓர் அழகிய பஸ் தரிப்பிடம்தான்!🚨

WhatsApp: https://chat.whatsapp.com/C2kYmJFznGGLpGF6Lw25SH

இலங்கையின் கொட்டாவ பகுதியில் அமைந்துள்ள மாகும்பர பல்துறை போக்குவரத்து மையம் (Makumbura Multimodal Center - MMC) எனப்படும் நாட்டின் முதலாவது அதிநவீன பல்துறை போக்குவரத்து முனையமாகும்.

இந்த திட்டம் 2014ம் ஆண்டு மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம் சுமார் 200 கோடி ரூபாய் (2 பில்லியன்) செலவில் கட்டப்பட்டது. இதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) நிதி உதவி வழங்கியது.

இங்கு பேருந்து மற்றும் இரயில் சேவைகள் ஒரே இடத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது களனி பள்ளத்தாக்கு (Kelani Valley) இரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை போன்ற தென்னிலங்கையின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலை (Expressway) பேருந்துகள் இங்கிருந்து புறப்படுகின்றன. கொழும்பு (138), மாலம்பே (336), மொரகஹஹேன (129) போன்ற இடங்களுக்கான பேருந்துகளும் இங்கிருந்து கிடைக்கின்றன.

குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை, ஏடிஎம் (ATM) வசதிகள், உணவகங்கள், நவீன சுகாதார வசதிகள் மற்றும் இலவச வைஃபை (WiFi) போன்றவை வழங்கப்படுகின்றன.பேருந்து மற்றும் இரயில்களின் வருகையை நேரலையில் காட்டும் டிஜிட்டல் திரைகள் (LED Panels) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்பு வசதிகள் உள்ளன.

இந்த மையம் சூரிய சக்தியைப் (Solar Power) பயன்படுத்தி இயங்குகிறது. இது கொட்டாவ இடைமாறல் (Kottawa Interchange) அருகே அவிசாவளை வீதியில் (High Level Road) அமைந்துள்ளது.

"Park & Ride" வசதி மூலம் பயணிகள் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று, வாகனங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் செல்லும் "Park & Ride" சொகுசு பேருந்து சேவையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இங்கு ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகிலன்!

# NewsTamil

நவீனமயமாக கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்... இன்று திறப்பு
08/04/2026

நவீனமயமாக கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்... இன்று திறப்பு

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when NewsTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsTamil:

Share