30/03/2026
மொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை வாழ்க்கையில் இருந்து வர வேண்டும் என்பதே யதார்த்தம்.
ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை என்பது இந்த பஸ் உறுதிப்படுத்துகின்றது.
இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரிக்கு சொந்தமான பஸ். (இதுவொரு தமிழ் பாடசாலை)
தமிழ் மொழி பாடசாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிக பெரிய கேள்வியை எழுப்புகின்றது.
சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் காட்சிப்படுத்தியமை தவறு என நான் கூறவில்லை. கட்டாயம் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பெயர் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும்.
தமிழ் மொழியில் உள்ள எழுத்து ஒன்றை கூட காண முடியாதது... மனதுக்கு வேதனை அளிக்கிறது.
இலங்கையின் மொழி கொள்கைக்கு அமைய 3 மொழிகளிலும் பெயர் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அந்த கொள்கை இந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து... இந்த விடயத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதை விடுத்து, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை சரி செய்யவும்.
சரி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..
Harini Amarasuriya
l l l
l l l