12/05/2026
Copy Post
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல ஆலோசகர் டாக்டர் ஓ.வி.ஜி.எல். வீரசேனவும் ( லலீந்திர), மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.ஏ.என். சியம்பலாபிட்டியவும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 9 அன்று GMOA வேலைநிறுத்தம் நடந்தபோது, S. திலக்ஷிகா என்ற கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்தியது.
விசாரணையில் தெரியவந்தாவது, பிரசவ அறையில் இருந்த நோயாளியை பார்க்க மருத்தவர்களுக்கு 6 முறை தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை.அதே நேரத்தில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்ததாக போலியான பதிவுகள் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் செய்திருந்தனர்.
இதனால் அரசு பணிநேரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்தது, கடமையை புறக்கணித்தது, தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது.
என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் DGHS அவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், இடைநீக்க காலத்தில் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், முகவரி மாற்றம் இருந்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி இன்று பேசுபொருளாக இருக்கிறது. குறித்த வைத்தியருக்கு இது ஒன்றும் புதிதல்ல. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இவருடைய காலத்திலேயே அதிக சிசு மரணம் பதிவாகியுள்ளது.
இவரால் பறிபோன பிஞ்சு உயிர்களில் எனது பிள்ளையும் ஒன்று. பத்து மாதம் சுமந்து கனவோடு பிள்ளையை கையில் ஏந்த காத்திருந்த எங்களுக்கு பிள்ளையின் இறந்த உடலத்தையே கையில் ஏந்த நேர்ந்தது. இதற்கு காரணம் இந்த வைத்தியரின் பணத்தாசை தான்.
கடந்த 2020 .12. 14 அன்று எங்கள் பிள்ளை இவர்களுடைய பணத்தாசை க்கும் , அலட்சியத்துக்கும் பலியானாள். இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு , இலங்கை மருத்துவர்கள் சபை என்பன விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்னும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே பேச தயாராக இல்லை. காரணம் கெஞ்சுவார், பேரம் பேசுவார் அல்லது மிரட்டுவார். இவை அனைத்தும் எங்களுக்கும் நடந்தது. அனைத்தையும் கடந்தே எமது மகளுக்கான நீதிக்காக நாங்கள் போராடுகிறோம்.
மேலும், தனது குற்றங்களில் இருந்து தன்னை பாதுகாக்க GMOA (அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ) எனும் தொழிற்சங்கத்தை தனது பாதுகாப்பு கவசமாக பாவிப்பார்.
இந்த நாட்டின் நீதித்துறை மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம் !